- அன்புடன் சகோதரருக்கு. வணக்கம்! எனது தந்தை எஸ். அகஸ்தியரின் பிறந்த தினத்தை நினைவிருத்தி (29.08.1926 – 08.12.1995) ‘பொறி’ என்ற (1975தாமரை) பிரசுரம் கண்ட அவரது சிறுகதையை அனுப்பி வைக்கின்றேன். நன்றி .  - நவஜோதி -


தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில் மீன் பிடிபாடு குறைந்துவிட்டதென்ற உண்மை, ஒரு சிலருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே தெரிய வந்தது.

இவர்கள் தங்கள் படுப்பு வலைகளைக் கட்டுமரங்களில் சென்று பரவைக் கடலில்தான் விரிப்பார்கள்.

இனிமேல் படுப்பு வலைகளை நம்பிக் கட்டுமரங்களில் சென்று ‘சிறுதொழில்’ செய்ய முடியாதாகையால். ‘எத்தனை காலமாக வாய்வயிற்றைக் கட்டிப் பஞ்சம் பட்டினியோடு சீவிக்கிறது’ என்று தொழிலாளர்கள் வெகு நாட்களாகவே நச்சரிக்கத் தொடங்கியபோதும், அவர்களுக்கு இதிலிருந்து மீளவும் சரியான மார்க்கம் தெரியவில்லை.

ஒரே முழிசாட்டம்தான்.

தாங்களும் தம்பிமுத்துச் சம்மாட்டியைப்போல் இயந்திரப்படகு வாங்கிப் ‘பெருந்தொழிலி’ல் இறங்கவேணுமென்று தொழிலாளர்கள் ஒருநாள் கூடித் திட்டம் போட்டும், அந்தத் திட்டம் இன்றுவரை வெறும் வாய்ப் பேச்சில்தான் கிடக்கிறது.

தங்களின் இந்தக் கையாலாகாத் தனத்தையும் அவர்கள் உணர்ந்துதானிருந்தனர். ஆனால், ‘திட்டமிடுவதன்படி ஏன் இயங்க முடிவதில்லை?’ என்பதைப் புரிந்து கொள்ளச் சிரமமாகவேயிருந்தது.

தற்போதைக்கு ஊர்கூடி ஒரு இயந்திரப் படகென்றாலும் வாங்கித் தங்கள் துறைமுகத்துக்குக் கொண்டு வந்துவிட்டால் தம்பிமுத்துச் சம்மாட்டியின் கொள்ளையையும், தனியாதிக்கத்தையும் ஒழித்துக்கட்டி அவனைச் ‘சமன்படுத்தி’ வைத்துவிடுவதோடு, பின் எந்த அலைகடலையும் எதிர்கொண்டு சமாளித்து ஆழ்கடல் சென்று தாங்கள் தொழில் புரியலாம் என்பது அவர்கள் எண்ணம்.

ஆனால், இந்தத் திட்டத்திற்கு வயது முதிர்ந்த சில ஊர்ப் பெரியவர்கள் குறுக்கே நின்றதால் தாங்க்ள தீட்டும் திட்டங்களை நடைமுறைப் படுத்தவும் அவர்களால் முடியவில்லை.

இதனால், கிழவர்களோடு ‘சச்சரவு’ப் படுவதே இளைஞர்களுக்கு ‘முழுநேர வேலை’ யாகியும் விட்டது.

தம்பிமுத்துச் சம்மாட்டி ‘மிஷின் போட்’ வைத்து ஓடுவதால் கண்ணுக்கெட்டாத தூரக் கடலுக்குச் சென்று ‘பெருந் தொழில்’ செய்ய முடிகிறதென்றும், தங்கள் துண்டு துணுக்கான சிறுசிறு படுப்பு வலைகள் அந்த இயந்திரப் படகுகளால் கீலங்கீலமாகக் கிழிந்து சீரழிந்து போவதோடு, ஆழ் கடலில் கிளைகட்டிக் களம் நாடி வருகின்ற மீன்கள் பரவைக்கடல் தேடி முகம் வைப்பதில்லை யென்றும்- இப்படியே ஒவ்வொன்றாக – புண்ணும் சொல்லிப் புண்ணுக்கு மருந்தும் சொல்வது போல் இளைஞர்கள் பெரியவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள்.

கிழவர்கள் அப்பவும் இளந் தொழிலாளர்கள் கூற்றை மறுத்து விட்டனர்.

‘தம்பிமுத்துச் சம்மாட்டி’ பெறும் பணக் காரன்... படகு, தோணி துரவு, தேட்டம் பாட்டம், சாதி சனம் உள்ளவன். அவன் பெரிய திமிங்கலம் விழுங்கி முதலாளி நாங்கள் அன்றன்றாடு தேகம் மாஞ்சு கடல் அடிச்சு உழைக்கிறனாங்கள். அவனோடு மோத முடியாது’ என்று வயது வந்தவர்கள் எடுத்துக்கூற, ‘தங்கள் பலவீனத்;தையும் பயத்தையும் மறைப்பதற்காகவே கிழவர்கள் இப்படி ‘நாயம்’ சொல்லி எங்கள் போராட்டத்தைத் திசை திருப்ப முனைகிறார்கள்’ என்று இளைஞர்கள் நினைத்தனர்.

இந்தக் கோலத்தில் சருமம் ‘இழுபறி’ப்பட்டுக் கொண்டிருந்ததே தவிர. இரு பகுதியார் போட்ட திட்டங்களில் ஒன்றும் கைகூடுவதாயில்லை.

தங்களுக்குள் வெடித்த இந்த முரண்பாட்டைக் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ளாமல், கிழவர்கள் மாத்திரமன்றி, இளந் தொழிலாளர்களுமே தம்பிமுத்துவை எதிர்த்து வழிக்குக் கொண்டுவருகிற சரியான மார்க்கம் தெரியாமல் தத்தளித்தார்கள்.

ஒரு நாள் இளைஞர்கள் கூடி ஊருக்குள் கூட்டம்போட்டு, ’நாங்கள் தனியத் தனியப் பறைஞ்சு ஆகப்போகிது ஒன்றுமில்லை. ஆனபடியால் எல்லாரும் ஒருமிக்கச் சேந்து ஒரு சங்கம் அமைச்சு – அதுக்குக் ‘கடல் தொழிலாளர் சங்க’மெண்டு பேர் வைச்சு – அதன் மூலமாகக் கருமம் ஆற்றுவோம்’ என்று ஆலோசித்தார்கள்.

அதுக்கும் கிழவர்கள் ஒத்து வரவில்லை.

‘தொழிலாளர் சங்கமும் மண்ணாங்கட்டியும், உங்கட போக்கைப் பார்த்தால், நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் செய்துகொண்டு வந்த கட்டுமரத்தொழிலைக் கை விட்டு, மிசினுகளோட மாரடிக்கிறதா? என்று பெரியவர்கள் மறுத்துக்கொண்டே வந்தார்கள்.

என்றாலும், இஞைர்கள் தளரவில்லை. கடற்சாதாளையிற் தேங்கிய கணைமாதிரி தங்கள் ‘பிடி’யை விடாமல் தர்க்க வாதங்களால் கிழவர்களைத் திணறடிக்க வைத்தார்கள்.

‘சா பிணங்களான உங்களுக்கு ‘அறளை’ பேந்திட்டுது. எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு அக்கறையும் இருக்காது. நீங்கள் எப்பவும் பழமை – மரபு பேசியே அநியாயமாகக் காலங்கழிக்கிறனீங்கள். ஆனமட்ட, நாங்கள் செய்யிறதைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டு கிடவுங்கோ’ என்று இளைஞர்கள் ‘நக்கல்’ பண்ண, பெரியவர்களோ, ‘டேய், முந்த நாள் பேஞ்ச மழைக்கு நேத்து முளைச்ச களான்களான உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் இளம் பொடியள், இள ரத்தம் துடிச்சுக்கொண்டு தானிருக்கும். உங்களுக்கு உலக நடபடியள் தெரியாது. ஆனபடியால் எப்பவும் தீவிரமாகத்தான் பேசுவியள். உந்தத் தீவிரப் பேச்சுகள் நடைமுறைக்கு ஒருநாளும் ஒத்துவராது’ என்று இளைஞர்கள் மீது திருப்பித் தாக்கினார்கள்.

இளம் தொழிலாளர்களோ தங்கள் ‘கட்சி’யை விட்டுக் கொடுக்கவேயில்லை. நாளாவட்டத்தில் ஊருக்குள்ளே இளைஞர்களின் கரங்களே மேலோங்கி வந்தன.

இளஞர்கள் போட்ட திட்டத்தின் பிரகாரம் ஒருநாள் மின்னாமல் முழங்காமல் ஊருக்குள்ளே ‘கடற் தொழிலாளர் சங்கம்’ உதயமாகியே விட்டது.

தொழில் தோட்டுப் பாய் ஒரு பக்கமும், சங்கத்து வேலைகள் மறுபக்கமுமாக இளைஞர்களுக்கு இப்போது ஓய்வே இல்லை. போதாக் குறைக்கு ஒரு கிழமைக்கு முன் சோளக்காத்தால் கிழக்கு வாட்டாகப் பெயர்ந்த சூறைக்காற்றின் பேயடிப்பு இன்னும் விட்டபாடாகவில்லை. அதுவேறு இன்னும் கழித்து வாங்கி மூசி அடிக்கிறதால் கடற்கரையோர மெங்கும் ஒரே கண்ட சீருக்கு ‘ஓ’வென்ற விண் கூவல் அலறி இரைச்சல் போடுகிறது. கடலோ அம்மாறு கொண்டு அலையடித்துக் குமுறி எழுந்து கரை விழுங்கிபோல் பொங்கிக்கொண்டிருக்கிறது.

தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கு மேலாகவே குடிசைகளுக்குள் அடங்கிப் போய்க் கிடந்தார்கள். கரைக்குச் சென்று கடல் பக்கம் முகங் கொடுக்கவும் அவர்களால் முடியவில்லை. சுவக்கீன் கிழவன் கெண்டைக் கால்களை உருவி விட்டு, சிக்கராகத் தலைப்பாகைக் கட்டிக்கொண்டு, வீச்சு வலையைக் கைத்தாவாகத் தூக்கியபடி சுடலை ஏறப் பார்த்து நடந்தார்.

‘கிழவன் இவ்வளவு துணிச்சலோடு வெளிக்கிட்டிருக்கே?’ என்று ஏக்கத்தோடு பெண்களும் இளைஞர்களும் கிடுகி வேலிகளாலும், பனை இடுக்குகளாலும், சன்னஞ் சன்னமாக நின்று எட்டிப் பார்த்தார்கள்.

அவர் கடற்கரையைத் தேடியே நெஞ்சு நிமிர்த்திப் போய்க்கொண்டிருந்தார்.

‘இந்தக் கிழவன் சாகப் போகுதே?’

கடற்கரைக்குச் சென்ற கிழவன் நெற்றியைச் சுருக்கி குத்துக்கண் வைத்துக் கடலைப் பார்த்தார்.

‘சீர் வம்பு சரிப்பட்டு வரேல்ல’ என்பதுபோல் அவர் முகம் சுளித்துக்கொண்டது. அந்த வாக்கில் கோயில் முகப்புப் பக்கமாகத் திரும்பி, நெஞ்சில் ஒரு சிலுவை கீறி ‘முணுமுணுப்புச் செபஞ்’ சொல்பவராய் கரையோரமாகத் திரும்பி வந்து, கரையில் இழுத்துப்போட்ட கட்டுமரங்களில் ஒன்றிலே ஏறிக் குடங்கியிருந்த கிழவர், வீச்சு வலையை விரித்துக் கெண்டைக் கால்களில் போட்டு உழாவத் தொடங்கினார்.

‘வரியம் முந்நாற்றியறுபத்தைஞ்சு நாளும் கடலில் புடிச்சு மாஞ்சாலும், ஆனவாக்கில வாய் வயித்துக்கு ஊத்தக் கஞ்சியில்லை. இந்தக் கோசும் காத்தடிக்குது. இதுக்குள்ள பொடியள், ‘மிசின்போட்’ வேண்டி மேலைக் கடலுக்குப் போய் ‘பெருந்தொழில்’ செய்யத் துடிக்கிறாங்கள். ஆண்டவர் அவே அவேக்குத் தக்க மாதிரி அளந்த படியை அன்றன்று அனுபவிக்காமல் இவனுகளுக்கு இப்ப ஆவல் புடிச்சிட்டுது. ‘பணக்காரன் மோட்சம் போவதானால் ஊசியின் காதுக்க ஒட்டகம் புந்த மாதிரி’யெண்டு ஏசுநாதர் சொன்னதையும் பொடியங்கள் அசட்டை பண்ணிப்போட்டுப் பெரிசா ஆசைப்படுறாங்கள். ஆனால் ‘பேராசை பெரும் தரித்திரம்’ என்றெல்லாம் தன் பாட்டில் ‘அறளை’ கொட்டிக்கொண்ட சுவக்கீன் கிழவனுக்கு, சடுதியாக மனசில் ஒரு கிலேசம் தட்டியது.

பனங் கூடல்களை ஊடறுத்து ஊர்ப்பக்கம் திரும்பிப் பார்த்தார்.

தொழிலாளர்கள், பெண் புரசுகள், சிறுவர் சிறுமிகள் - தெட்டந்தெறியனாக ஊர்த் தோப்புக்குள்ளே நின்று மிலாந்திக் கொண்டிருந்தார்கள்.

‘இள மட்டப் பொடியங்கள் சங்கத்தைக் கூட்டித்தான் போட்டாங்கள். தம்பிமுத்துச் சம்மாட்டியோட இனிமேல் கொழுவல்தான். அவன் பாவி காசுக்காரன். ஆளும் அழுங்குப் பிடியன். எக்கணம் ஏதன்டையில்தான் வந்து முடியும். எனக்கென்ன, ஆர் பிடிச்சும் மீனாகட்டன்’ என்று கிழவன் ஒரு சவாய்ப் ‘புறுபுறு’த்தார். என்றாலும், கிழவரிடம் எழுந்த ஏதோ ஒரு வாஞ்சை – தான் சார்ந்த வர்க்கத்தில் கொண்ட பாச உணர்வு, தனது இதயத்துள்ளே அருக்கூட்டித் துடிப்பதை அவர் உணர்ந்தாரெனினும், அது இன்னதென்று விவரிக்கத் தெரியாமல் மனசு அழுந்தித் தவித்தார்.

தனது சொல்லைத் தட்டிய இளைஞர்கள் மீது அவர் வசைபாடிய போதும், ‘அவர்களின் கிருத்தியங்கள் சிலவேளை சாத்தியமாகலாம்’ என்றும் கிழவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது.

சண்டை மாருதங்களாள இயந்திரப் படகுகளைத் தனது ஊரவர்கள் கண்ணுக்கு முன்னே – சிறு சிறு கட்டுமரங்களில் அன்றாடம் மாய்ச்சல்படுகிற தனது ஊர்த் தொழிலாளர்கள் பார்த்திருக்க அவர்கள் கண்கள் எதிரே கொண்டுபோய் பெருந்தொழில் நடத்துகின்ற முதலாளி தம்பிமுத்துச் சம்மாட்டியில் இப்போது கிழவனுக்கு ஆத்திரம் பீறிட்டது.

தம்பிமுத்துவின் வீட்டுப் பக்கம் வெறித்துப் பார்த்து வெறுப்போடு ஒரு பாட்டம் செருமிக் காறித் துப்பினார்.

அப்போது மாலைத் திருந்தாதி மணி அடிக்கிற சத்தம் கேட்டது. ‘சடா’ரென்று கெண்டைக்கால்களை மடக்கிக்கொண்டு கோயில் முகப்பைப் பார்த்துவிட்டு, காற்று வீசும் கன்னையில் முகம் திருப்பிப் பெருமூச்சு விட்டார்.
சங்கக் கூட்டத்தாரின் அமர்க்களம்; அப்பொழுது கிழவன் காதுகளில் சாடையாகக் கேட்டது.

‘கடலும் கலங்கித்தானே தெளியும்? ஆனமட்ட நடக்கிற காரியம் நடந்து முடியட்டும்’ என்று தனக்குள் சமாளித்த கிழவன், ‘எழும்பிப்போய், ‘சங்கக் கூட்டத்தில் என்ன பேசுறாங்கள் என்பதைப் பாப்பம்? என்று யோசிக்கலானார்.

அவ்வேளை மேகம் இடிந்து முழங்குவதுபோல் தெற்கே பெருஞ் சத்தம் கேட்டது. முகம் திரும்பிப் பார்த்தார்.

கண்ணுக் கெட்டாத தூரத்திலே தம்பிமுத்துச் சம்மாட்டியின் ஏழு எட்டு இயந்திரப் படகுகள், கடல் உறுமிபோல் இரைந்தெழுந்த வண்ணம், சமுத்திர அலைகளையும் கிழித்துக்கொண்டு வரிசையாகக் கரைநாடி வந்துகொண்டிருந்தன.

கிழவனின் நெஞ்சு உக்கின வலைக்கண்கள் ‘சடக்’கிட்டு அறுந்த மாதிரி ஒரு பாட்டம் குலுங்கி அம்மியது.

என்ன நினைத்தாரோ, ஏதோ ஒரு ஆவேசத்துடன் ‘அவக்’கென்று உன்னி எழுந்து சங்கக் கூட்டத்தைத் தேடி விரைந்தார்.

கிழவன் போய்ச் சேர்வதற்குள் சங்கக் கூட்டம் கலைந்துவிட்டது.

சுவக்கீன் கிழவன் தங்களைத் தேடியே வருகிறார் என்பதைத் தெரிந்தும் அவர்கள் கிழவனுக்காகக் காத்து நிற்கவில்லையாதலால், அவர்கள் தன்னை அசட்டை பண்ணி வெறுப்புக் கொண்டிருப்பதாக யூகித்த கிழவனின் மனசு அவருள் அந்தகாரித்தபோதும், தான் காட்டிய அசமந்தமே இளைஞர்களின் வெறுப்பிற்குக் காரணம் என்று கிழவனுக்குப் புரிந்தது. இருந்தும் கிழவன் அதனைப் பொருட்படுத்ததாமல் வீச்சு வலையை ஒரு பூவரசங் கதியாலில் கொழுவி விட்டு ரோட்டுக்குச் சாய்வாக வந்து நின்று ஒரு வித உரிமை பாராட்டிப் பலமாகக் கத்தினார்.

‘டேய் தம்பிமாரே, எப்பனுக்கு உதில நில்லுங்கோடா’

அவர்கள் ஆங்காங்கே தெட்டத் தெறியனாக நின்றார்கள்.

தன்னுள கிளர்ந்த மன அசத்தையும் பாராமல், தானே அவர்களைத் தேடிப்போய், ‘சங்கத்தில கூட்டம் போட்டுப் பேசினியளே, கடைசியில அது என்னவாய் முடிஞ்சுது!’ என்று ஆவலோடு கேட்டார்.

‘இப்ப ஒரு முடிவும் எடுக்கேல. நாளைக்குத்தான் பேசி ஒரு முடிவு எடுக்கப்போறம்’

‘மெத்தச் சரி, அதுதான் நல்லது. எதுக்கும் ஒரு முடிவு காணத்தான்வேணும். உருவி எடுத்த வாளைக் கீழ போடாதையுங்கோ’ என்றார்.

அவர் முகத்தில் புன்னகை பளிச்சிட்டது.

அடுத்த நாள் சங்கக் கூட்டம் ஊரின் அதே தோப்புக் கடவையில் நடந்தது.

சிறு படுவலைத் தொழில் காறரெல்லாம் ஒன்று முதலாளி தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகளை ஊர்த் துறைமுகத்துக்குப் பக்கத்தில் நங்கூரம்போட வேண்டாமெனக் கேட்பதென்றும், சம்மாட்டி இணங்காவிட்டால் ‘நேரடியாகவே எதிர்த்து’ப் போராடுவதென்றும் தீர்மானமாயிற்று.

சங்கம் இந்தத் தீர்மானத்துக்கு வந்த பின் பெண் புரசுகள், சிறுவர்கள், வயோதிபர்கள் ஆகியோர் மத்தியில் ஒரு வித பதட்டம் நிலவிய போதும், சுவக்கீன் கிழவன் வலு உஷாராகவே காணப்பட்டார்.

‘கலம்பகம் எந்த நேரமெண்டில்லாமல் சடுதியாக வரும்போலிருக்கே. எக்கணம் இதால பெருஞ் சில்லெடுப்புத்தான்’ என்று பெண்கள் மத்தியில் நிலவிய பயம், கடைசியாக அவர்கள் தங்கள் புத்திரர்களுக்குப் போதனை செய்யவே தூண்டியது. இருந்தும், தங்கள் தாய்மார்களுக்கு இளைஞர்கள் சரியாகவும் முறையாகவும் தர்க்க நியாயத்துடன பதிலளித்த விதத்தைச் சுவக்கீன் கிழவன் கண்டபோது உண்மையில் வியந்தே போனார்.

‘அடக்கப்படும், ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்கு அவர்களின் ஒற்றுமையான போராட்டமே சிறந்த வழி’ என்று கூட்டத்தில் தொழிலாளர் உறுதியாகவும், அறுதியாகவும் சொன்ன வார்த்தைகள் சுவக்கீன் கிழவனைச் சொக்க வைத்தன.

திட்டமிட்டால் மீண்டும் ஊர்த் தோப்புக்குள் கடல் தொழிலாளர்களின் சங்கக் கூட்டம் ஆரம்பித்தது.

பகல் இரண்டு மணிக்குத் தொடங்கிய கூட்டம் பொழுது உறைந்து பனைக் கூடலுக்குள் மறைந்து செக்கலாகியும் கறிச்சந்தைபோல் ‘கீச்சு மாச்சு’ப் பட்டது.

கடைசியில் இளைஞர்களான தொழிலாளர் பக்கத்துக்கே முடிவு வாசியாகத் தேறியது.

‘முதலில் மனிதாபிமானத்தோடு, நீதியாக, நேரிற் சென்று கேட்கிறது. சம்மாட்டி இணங்காவிட்டால் நேரடிப் போராட்டம்’ என்பது தீர்மானம்.

ஊருக்குள் இத்தனை காலமாக நிலவிய ‘அமைதி’ அன்றைக்குப்பின் ‘இழந்து’ தான் போய்விட்டது.

ஓவ்வொரு இளைஞர்களும், தொழிலாளர்களும் பெண்புரசுகளும் மறுநாள் நிகழப்போகின்ற போர்க் காட்சிகளை மானசீகமாக ‘அதீத கற்பனை’ பண்ணிக்கொண்டிருந்ததால் அன்று இரவு அவர்களுக்குத் தூக்கமே வர மறுத்தது.

‘சம்மாட்டியுடன் நேரடியாகப் போராடுவது’ என்று அவர்கள் எடுத்த முடிவின் எதிரொலி, யாழ்ப்பாணப் பிரதேசம் எங்கும் அடிபட்டது. காக்கைத் தீவுதொட்டு ஆனைக்கோட்டை, நாவாந்துறை, குருநகர், பாஷையூர், கொழும்புத்துறை ஈறாக எவர் வாயிலும் இதே பேச்சுத்தான்.

பொழுது காலித்துக் கொண்டிருந்தது, வழக்கம்போல காலைத் திருந்தாதி மணி கேட்டுத் தொழிலாளர்களும், பெண்களும் குடிசைகளிலிருந்து வெளியே வந்தபோது...

அவர்களின் ஆசனக்கோயில் முகப்புக்கருகே, முதலாளி தம்பிமுத்துச் சம்மாட்டி காரிலிருந்து பவ்வியமாக இறங்கி கோயில் விறாந்தையில் ஏறி நின்று, நாலா தி;க்குகளையும் சுழன்று பார்த்தார்.

‘நேரடிப் போராட்டத்தில் குதிப்பது’ என்று நேற்றுத் தங்கள் சங்கம் எடுத்த முடிவை அறிந்த தம்பிமுத்தச் சம்மாட்டி நன்றாகப் ‘பயந்து’ போய், இப்போது தானாகவே ‘இறங்கி’வந்து தங்கள் காலடியில் சரணடைந்து விட்டார்’ என்று அவர்கள் தங்களுக்குள் அடைந்த பெருமிதமும் குதூகலமும், ‘நாங்கள் அவரைத் தேடிப்போய்க் கதைக்காமலிருக்க, அவரே எங்களை நாடி வந்து கதைக்க வேணும்’ என்ற நினைப்போடிருந்த அவர்களின் மான ரோஷமும் ஆவேஷமாகத் தூண்டியதால் அவர்கள் ஒரே நிலையாக ஆங்காங்கே ‘திடும்’ போடு நின்றார்கள்.

தம்பிமுத்துச் சம்மாட்டியார் அவர்களின் ‘நிலை’யை முற்றாகப் புரிந்து கொண்டதுபோலவே தான் ‘திட்டமிட்டு’ வந்த காரியத்தில் ‘கரிசனை’யாக இருந்தார்.

அவரை மீறி வந்த சிரிப்பை அவர் அடக்கிக்கொண்டே மெதுவாகக் கோயில் படிக்கட்டுகளால் இறங்கி நின்று ஒரே வாக்கில் அவர்களையே நோக்கி நடந்தார்.

இதன் மூலம் ‘சம்மாட்டியின் மானத்தை வாங்கி, அவருக்குச் செம்மையான சாட்டையடி’ கொடுத்து விட்டதாக அவர்கள் தங்களுக்குள் திடும்பிலும் புளுகத்திலும் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘எங்கள் கட்டுமரம் உடையவில்லை: சம்மாட்டியின் கற்பாறைதான் நொறுங்கிவிட்டது’ என்று ‘நக்கல்’ அடித்த ஒரு தீவிர இளம் பொடியனை தம்பிமுத்துச் சம்மாட்டியார் சாடையாக நோட்டம் விட, அதனையடுத்து, இன்னோர் அதி தீவிர இளவட்டங்கள், ‘பாத்தியளா, இப்ப மலை சரிந்ததா, மயிர் ஒடிந்ததா?’ என்று ;கேலி’ பண்ணியதையும் நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டார்.

ஒரு கணப் பொழுதுக்குள் நிகழ்ந்த இந்த ‘வேடிக்கை’யில் அவர்கள் தமக்குள் நல்ல ‘குஷி’ யடித்தார்கள் என்றே சம்மாட்டிக்குத் தோன்றிற்று.

இதையெல்லாம் தம்பிமுத்துச் சம்மாட்டியர் ‘பெரிதுபடுத்தாதவர்போல், ஒரு பச்சைக் குழந்தை மாதிரிச் சிரித்துக்கொண்டு, சுவக்கீன் கிழவனையே நாறல் மீனைப் பார்க்கிற கள்ளப் பூனையாட்டம் ‘நுணுக்க’மாகப் பார்த்தார். கண்களைப் பொதுவாகச் சுழற்றிக் கொண்டு சொல்கின்றார்:

‘நீங்கள் என்னோட பறையாட்டியும் எனக்கு உங்கட பிரச்சினை வடிவாகத் தெரியும். அதக்காகத்தான் நீங்கள் வர முந்தி நான் உங்களிட்ட வந்தனான்;’

அனைவர் முகங்களிலும் வியப்புக் குறி படர்ந்தது.

‘இப்படி ஒரு ‘நல்ல மனுஷனை’ என்ன கோதாரியெண்டு எதிர்க்கிறது?’ என்ற முகபாவம் அவர்களில் தேங்கியிருப்பதை உணர்ந்த சம்மாட்டி உற்சாகத்துடன் மேலும் கூறுகின்றார்:

‘இப்ப, உந்த இயந்திரப் படகுகள் நங்கூரம் போட்ட துறைமுகத்துக்குப் பக்கமாக நான் ஒரு தர்மசத்திரம் - ஏழை மீன் பிடித் தொழிலாளர், இளம் பிள்ளையள் தங்கியிருந்து உண்ண, உடுக்க, உறங்க - கோயிலின் பேரால் ஒரு மடம் கட்டப்போறன். அதில எனக்குள்ள உரிமையும் சமத்துவமும் உங்களுக்கும் உண்டு. ஆனபடியால், ஊர் மக்கள் சேர்ந்து இந்த ‘நற்கிருத்தியங்’களில் பங்குகொண்டு நெடுகலும் ஒற்றுமையாக இருப்போம். நாளைக்கு ஊர் கூடி ஆசாரஞ்செய்ய வாருங்கோ’

‘பெரும் பணக்காரன்’ என்ற கர்வமோ, பத்துப் பதினைந்து இயந்திரப் படகுகளைச் சொந்தமாக வைத்தப் பெருந்தொழில் நடத்துகிற ஒரு ‘முதலாளி’ என்ற அகந்தையோ கொள்ளாமல், தாங்கள் நேரடிப் போராட்டத்திற்குத் தயார் பண்ணியதையும் பெரிது படுத்தாமல், பெருந் ‘தயாளகுணத்தோடு தம்பிமுத்துச் சம்மாட்டியார் தங்களைப் பெரிதாக மதித்து’த் தங்களோடு ‘மிகச் சாதாரணமாக’ நின்று – அதுவும் தர்மக் கிருத்தியம், உரிமை, ஒற்றுமை, சமத்துவம், ஆசாரம் பற்றியெல்லாம் சொன்ன பண்பினைக் கவனித்தபோது, சுவக்கீன் கிழவன் என்ன, இளைஞர்களுக்கே முதலாளி தம்பிமுத்துச் சம்மாட்டியில் ‘இரக்கம் - பச்சாத்தாபம் - கருணை’ மேலோங்கிற்று.

குமுறிய கடல் அறையடித்து ஓய்ந்தமாதிரி அவர்கள் சற்றுவேளை மௌனித்து நின்றார்கள்.

அவர்களின் மன நிலையைத் தம்பிமுத்துச் சம்மாட்டி கசடற உணர்ந்து கொண்டதால் அவர் குதூகலமாகச் சிரித்துக்கொண்டு, மறுபாட்டமும் மிக ஆசாரமாகவே சொல்கின்றார்:

‘மறந்து போகாமல் ஒற்றுமையாய் எல்லாரும் எனது வாடிக்கும் வந்து. கோயில் விருந்து சாப்பிட்டு, தர்மக் கிருத்தியத்தில் பங்கு பற்றிவிட்டுத் திரும்புங்கோ’

‘ஓம், கட்டாயம் வரகிறோம்’ என்று வாய் திறந்து அவர்கள் சொன்னபோதும், ஏக முகப்பிரியமான ஆமோதிப்பு அவர்கள் முகங்களில் தேங்கியிருப்பதை முதலாளி தம்பிமுத்துச் சம்மாட்டி தெளிவாகக் கண்டு கொண்டார்.
‘இந்தப் பொறி ஒன்றே பொடியனைப் பிடிக்கப் போதும்’ என்றெழுந்த தனது அக்களிப்பான காந்த முகத்தைக் கூட அவர் காட்டிக்கொள்ளாமல் சாதுபோல் - சாதுர்யமாக நின்றார்.

தொழிலாளர்கள் உருவி எடுத்த ‘போராட்டம்’ என்ற வாளை, தான் கொண்டு வந்த ‘நற்கிருத்தியம்’ என்னும் உறைக்குள்ளே அடக்கிவிட்டதான பெருமிதம் பிரவாகித்து அவர் இதயத்தில் பொங்கியபோதும், அவர் அதனைக் கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல் ஒரு பரம ஏழைபோல் வீதியில் நின்று கோயில் விறாந்தையைப் பக்கத்துக்குச் சைகை காட்டினார்.

ஏலவே வந்து சம்மாட்டியை அங்கே இறக்கிவிட்டு நின்ற அதே கார், அவர்தம் அந்த ஒரு சிறு கை அசைப்போடு அவர் முன்னே வந்து ‘கிரீச்’சிட்டது.

அவரோ மிக மெதுவாக ஏறிக் குந்தினார்.

மின்னல் மாதிரி அவரின் புதுத்துறைமுக வாடிக்குக் கார் விரைந்து கொண்டிருந்தது.

அவர் திட்டத்தினபடி அடுத்தநாள் அவரின் இயந்திரப் படகுகள் நங்கூரம்போட்ட புதிய துறைமுகத்துக்கும், பெரும் தொழில் வளர்ச்சிக்கும், கருமம் கொடுக்க எழுந்தருளிய சத்திரக் கட்டிடத்திற்கான அத்திவாரம் போடுவதற்கு அந்த ஊர்த் தொழிலாளர்களும், இளைஞர்களும், பெண்களும், குஞ்சு குருமான்களுமாக சுவக்கீன் கிழவன் தலைமையில் ‘சிரமதானம்’ செய்ய மிக ஒற்றுமையாகப் புறப்பட்டுப் போனார்கள்.

இருந்தும் என்ன...?

என்றும் அந்தக கடல் குமுறிக் கொந்தளிப்பது போலவே, அன்றுள்ள அப்பத்துக்காக இன்றும் அவர்களின் வயிறுகள் கொதித்துக்கொண்டேயிருக்கின்றன.

இன்னும் விடியவில்லை.

சுவக்கீன் கிழவன் ஒருநாள் முழுதும் கடலில் அலைந்து வலைவீசி இரண்டு கயல்மீன் குஞ்சுகளோடு கரையேறிக் குடிசைக்கு வந்துகொண்டிருந்தார்.

அப்போது கோடையிடி மாதிரிக் கிழவனைக் ‘கிடுக்’காட்டியபடி, வீதியில் உறுமிக்கொண்டு, முதலாளி தம்பிமுத்துச் சம்மாட்டியின் கார், அவர் தம் மாடி வீட்டை நோக்கி விரைந்துகொண்டிருந்தது.

கிழவன் விலகி நின்று ஏக்கத்தோடு, சமுத்திரத்தை ஏறு கண் வைத்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தார்.

தம்பிமுத்துச் சம்மாட்டியாரின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலைக் கிழித்துக்கொண்டு, உறுமி இரைந்து வந்துகொண்டிருக்கின்றன.

ஊர்த் தொழிலாளர்களின் கட்டுமரங்கள், கட்டறுந்து அலைகடலில் மிதந்து, தத்தளித்துக் கொண்டிருந்தன.

‘சம்மாட்டி எங்கட போராட்டத்தைத் திசை திருப்பி ஏமாத்திப் போட்டான். கடைசிவரை இனி விடப்படாது.

சுவக்கீன் கிழவன் கரையில் இழுத்துப்போட்ட ஆமைபோல் பெருமூச்சு விட்டு நடந்தார்.

அவர் நடையில் ஓர் புதிய வேகம் காட்டியது.


* தாமரை 1975

8.8.2022.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here