சிறுகதை: யானைகளும் மனிதர்களும் - ஜோதிகுமார் -

பாலத்தை கடந்து, கார், குன்று போல் அமைந்திருந்த, மேட்டு நிலத்தில் ஏற தொடங்கிய போது, சூட்டு முள் அசாதாரணமாக உச்சத்தை தொட்டிருந்தது. திடுக்கிட்டேன். காரை வலப்புறமாய் ஒடித்துத் திருப்பினேன். இரு புறமும் காடுகள். வலப்புறமாய், மற்றொரு கார் வாயை பிளந்து கொண்டு நின்றிருந்தது. எனது காரைப் போல சூடேறி இந்த வனாந்தர பிரதேசத்தில் ஆள் அரவமற்று அகப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்ன? அந்த காரின ட்ரைவர் கதவுகளின் ஜன்னல் வழியாக யாருடனோ கதைத்தப்படி நின்றிருந்தான்.
இனி, செய்வதற்கு ஒன்றுமில்லை. இறங்கிய போது, மற்ற காரின் சொந்தக்காரன் என்னிடம் மெதுவாக வந்து என்ன பிரச்சினை என்றான். தண்ணீர் இல்லை என்றேன். பரவாயில்லை. இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது காரில் இருந்து ஒரு பிளாஸ்டிக் போத்தலை இழுத்தெடுத்தான். இந்த ஒரு லீட்டரால் ஆக போவது ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தேன். குறைந்தபட்சம் எனது காருக்கு ஆறு லீட்டர் ஊற்றியாக வேண்டும். அன்புடன் நீட்டிய அவனது உதவிக்கரத்தை மறுத்து, காரில் பின் சீட்டில் இருந்த ஐந்து லீட்டர் கேனை எடுத்து கொண்டு பாலத்தை நோக்கி, வந்த வழியே, அந்த நடுக்காட்டில் நடக்க ஆரம்பித்து விட்டேன்.
வெப்ப அலை வீசும் முன்னரே, விடிய தொடங்கியதும் அக்கரைப்பற்றில் இருந்து, புறப்பட்டு வந்திருந்தேன். அந்த இளங் காலையில் சுகமான காற்று வேறு. ஆனால் இப்போது? வாகனம் எப்போது சூடு பெறத் தொடங்கி இருக்கும்? பாதையின் இருபுறமும் அடர்ந்த காட்டு மரங்கள் அமைதியாக நின்றிருந்தன, அமைதியுடன் பார்த்தப்படி. காற்று வேறு இல்லை. பாலத்தின் அடியே மிக அகலமான, மஞ்சள் நதி ஓடிக் கொண்டிருந்தது. மேல் பிரதேசத்தில், பெய்யும் மழையில், இப்படி கலங்கல் அடைந்து ஓடுவதாக இருக்கலாம். இம் முனையில் ஹ{ம்…ஹ{ம்… இறங்க முடியாது. ஒருவேளை பாதையின் மறுமுனையில் இறங்க கூடிய பாதை ஏதாவது இருக்கலாம். ஆனால் அங்கேயும் இதே கதைத்தான். அப்படி, என்றால் இனி வந்த வழியே நடந்து, பாலத்தின் மறுமுனையை மீண்டும் அடைந்து, காட்டின் வழியாக இறங்கி, காட்டுக்குள் சென்று நதியை அடைந்தாக வேண்டும். ஆம், அங்கே இறங்குவதற்கு வசதிதான். ஆனால், நதியை நோக்கி, காட்டு பிரதேசத்தினுள்ளேயே நடக்க வேண்டும் - அது தண்ணையாக இருந்த போதிலும். பாலத்தின் நடுப்பகுதியை நான் மீண்டும் கடந்து கொண்டிருந்த போது, ஒரு கெப் வாகனம் என்னை கடந்து சென்றது. பின்னால் ஐந்தாறு இளைஞர்கள், நீல நிற, அழுக்கடைந்த யூனிபோர்மில் இருந்தார்கள்.



நீலகிரி படகர்கள் குறிஞ்சி வாழ்வியலை இடையாறாது பின்பற்றி வருபவர்கள். அவர்களை நீலகிரியில் வாழ்கின்ற குறிஞ்சி ஆயர்கள் எனலாம். ‘நாக்கு பெட்டா’ என்று வரையறுத்து வாழ்கின்ற நீலகிரியின் இவர்தம் புழங்குவெளி சிறப்பான கட்டமைப்பினை உடையது. இயற்கை சான்றது. தகவமைப்பின் நுட்பங்களை உட்செறித்தது. காலநிலைக்கேற்பக் காப்பு நிலையைத் தரித்தது. கடும் குளிரினையும், அடர் பனியினையும், அடை மழையினையும் கொண்ட நீலகிரியில் வாழ்வதற்குப் புறப் பாதுகாப்பினைத் தாண்டி, உணர்வுநிலை நீடும் அகப் பாதுகாப்பும் அவசியம். இது, சுற்றத்தால் அமைவது. அவ்வகையில் ‘மதிலு’, ‘அக்க பக்கா’ எனும் படகர்களின் புறம் சார்ந்த தொல்கூறுகளையும், ‘ஏகித்து கட்டோது’ எனும் அகம்சார்ந்த கூறினையும் இக்கட்டுரை ஆய்கிறது. இவை மூன்றும் சங்கக் கூறுகளோடு நெருங்கிய தொடர்புடையது நோக்கத்தகுந்தவை.

மலையக தமிழ் சமூகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது சில பாடசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களிடம் நாடக தயாரிப்பு நெறிமுறைகளும் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாடகத்தில் தயாப்பு முகாமைத்துவ விடயங்களை உட்புகுத்தி காத்திரமான நாடகத்தினூடாக சிறந்த அரங்க நிர்வாகிகளை வெளிக்கொணர முடியும்.
ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.








* கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் 
மகேந்திரன் இரத்தினசபாபதி என்ற முல்லை அமுதன் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், இதழாளர் என பல துறைகளில் கால்பதித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தொடர்ந்து இலண்டனின் காற்றுவெளி இதழை வெளியிட்டு வருகின்றார். இவரது இலக்கியப்பயணம் உலகளாவிய நிலையில் பல படைப்பாளர்களையும் படைப்புகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.


மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.




ஒரு கவிதை தனக்குரிய இலக்கணங்களால் மட்டுமே பெறுமதியினைப் பெறுவதில்லை. மொழிச் செழுமை மிகுந்த சொல்லழகு ஓசை நயம் குறியீடு படிமம் எனும் அணிகலன்களை தனதாக்கி சமூகம் அரசியல் வாழ்வியல் என்ற தளங்களின் ஊடாக உண்மைகளைைக் குறிப்பால் உணர்த்தி, எளிமையும் ஆழமும் கொண்டியங்கும் கவிதைகளே இன்று ரசனைக்குரியனவாக விதந்துரைக்கப் படுகின்றன. 
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “எனது கலாச்சாரக் கூறுகளில் அரிசிச் சோற்றைத் தவிர மற்ற எதையும் நிராகரிக்க முடியும்” என்று சொன்னேன்.








