ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்! - குரு அரவிந்தன் -

‘இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து’ என்று எப்படிக் கடற்பயணிகள் இலங்கைத்தீவை வர்ணித்தார்களோ அதேபோலத்தான் சுற்றுலாப் பயணிகள் ‘பசுபிக்சமுத்திரத்தின் பரடைஸ்’ என்று இந்தத் தீவுகளை அழைக்கிறார்கள். இந்த ஹவாய் தீவுகள் எரிமலைக் குளம்புகளால் உருவானவை என்பதை நீங்கள் நம்பமறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. சுமார் 2000 மைல்கள் சுற்றாடலில் எந்த நிலப்பரப்பும் இல்லாத ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் 50 வது மாகாணமாக ஆகஸ்ட் மாதம் 1959 ஆண்டு பிரகடனப் படுத்தப்பட்டது. சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக போலிநேஷன் (Polynesian) என்று சொல்லப்படுகின்ற குடும்ப அமைப்பு இங்கே முதலில் உருவானது. முக்கியமாக Samoa, Cook Islands, New Zealand, Easter Island, Hawaii, Tonga, Tuvalu, Wallis and Futuna, Fiji போன்ற இடங்களில் இருந்து கடலில் திசைமாறி வந்து, திரும்பிச் செல்ல வழியில்லாமல் குடியேறியவர்களே இங்குள்ள பழங்குடி மக்களாவார். இங்குள்ள தீவுகளில் சுமார் எட்டுத் தீவுகளே ஓரளவு பெரிய தீவுகளாக, மனிதர் வாழக்கூடியதாக இருக்கின்றன.
1778 ஆம் ஆண்டு ஐரோப்பியரான கப்டன் ஜேம்ஸ் குக் என்ற கடற்பயணிதான் முதன் முதலாக இத்தீவுகளில் கால்பதித்தார். புகழ்பெற்ற பேர்ள்ஹாபர் (Pearl Harbour), உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகள் (Valcano Park), தொலைநோக்கி மையம் (Mauna Kea Summit) இந்துக்கோயில், டோல் அன்னாசிப்பழத் தொழிற்சாலை போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆவலை நிறைவேற்ற பாம்புகளே இல்லாத ஹவாய்க்குப் பயணமானேன். ஹவாயில் உள்ள விமான நிலையத்தை டானியல் கே. இனோஜி சர்வதேச விமான நிலையம் (Daniel K. Inouye International Airport) என்று அழைக்கிறார்கள். சுமார் 22 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இந்த விமானநிலையத்திற்கூடாக வருடாவருடம் பயணிக்கிறார்கள். விமானத்தை விட்டு வெளியே வந்ததும் ஹவாயின் பாரம்பரிய உடையணிந்த, கழுத்திலே பூமாலை அணிந்து, தலையிலே ஒற்றைப்பூ சூடியிருந்த இளம் பெண்கள் எங்களை வரவேற்றார்கள். காதில் விழுந்த முதல் வார்த்தை ‘அலோகா’ என்பதாகும். ‘அலோகா’ ((Aloha) என்றால் வணக்கம், சென்ற இடமெல்லாம் அலோகா சொன்ன போது, எனக்கு ‘அரோகரா’ என்பது போலக் கேட்டது. ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று அதைப்பற்றிப் பின்பு ஆராய்ந்து பார்த்த போது, எங்கள் பண்பாட்டிற்கும் அதற்கும் ஒருவித தொடர்பு இருப்பதை அறிய முடிந்தது.

விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், எமது முன்னைய நிகழ்வில் குறிப்பிட்டிருந்தது போல ஒக்ரோபர் மாதத்தில் விதை குழுமம் நான்கு இணையவழி நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றது. அவற்றின் முதலாவது நிகழ்வாக அரசும் அதிகாரமும் என்னும் தலைப்பில் “அறிதலும் பகிர்தலும் நிகழ்வின் 8வது நிகழ்வு இடம்பெறும்.

புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரை பிள்ளையார்' படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார். ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும் மாற்றங்களை சிறு சம்பவக்குறியீடுகள் மூலம் கோர்த்து கதை புனைந்திருப்பார். இந்து சமயத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வழிபாட்டு முறை மாற்றங்களை நாசுக்காக சொல்வதே அவர் நோக்கம். புதுமைப்பித்தனின் இக் கதையை படிக்கும் போது ஆவணப்படங்களில் இன்று கொட்டிக்கிடக்கும் ' நேரம் தப்பிய படப்பிடிப்பு' (Time-lapse photography) பார்த்த அனுபவம் கிட்டும். 
சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில் உள்ள பைரவி மியூசிக் அக்கடமி கலையகத்தில் மாலை 7:00 மணியளவில் மிகவும் சிறப்பாக வெளியிடப்பெற்றது. கோவிட் -19 கட்டுப்பாடுகளுக்கமைய இருக்கை வசதிகள் போடப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். இரண்டு தடுப்பூசியும் பெற்றுக் கொண்டவர்களே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை கனடா உதயன் ஆசிரியரும், இனிய நந்தவனம் ஆலோசனைக்குழு உறுப்பினருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. இத்தொடரின் இறுதிப்பகுதியிது. இத்தொடர் பற்றிய உங்கள் கருத்துக்ளை எழுதுங்கள். அவை பதிவுகளில் வெளியாகும். - பதிவுகள்.காம் -


- இத்தகவல் இறுதி நேரத்தில் எமக்குக் கிடைக்கப்பெற்றதால் உரிய நேரத்தில் வெளியாகவில்லை. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். நண்பர்களே! உங்கள் அறிவித்தல்களைக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
- தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு நூல் - 2020 இல் இடம் பெற்ற கட்டுரை. -
இசைக்கலைஞர் இனிய நண்பர் வர்ண இராமேஸ்வரன் அவர்களின் மறைவு (செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி 2021) எமக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. எம்முடன் நன்கு பழகிய சில நண்பர்களை, உறவுகளை கொரோனா பேரிடர் காலத்தில் காலன் எம்மிடம் இருந்து திடீரெனப் பிரித்துவிட்டது மட்டுமல்ல, கடந்த சில காலமாக, உறவினர்களின், நண்பர்களின் இறுதிச் சடங்குகளில்கூட பங்குபற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

பொழுது விடிந்தபோது, மனதுக்குள் இனம்புரியாத பரபரப்பு. நேற்று முழுவதும், வாற்சப் வீடியோ காலில் பார்த்துப்,பேசிப்,பழகிய போதிலும் இன்று நேரிலே சந்திக்கப்போகின்ற அனுபவம், புதிதானதுதானே.
விடிந்திருந்த பொழுதும் விடியாததாக, மாசி மாதத்தின் ஊசிப் பனி குத்துகிற ஒரு அதிகாலைவேளையில் படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வேலைகளில் மும்முரமாயிருந்த செம்பவளம் உணர்ந்துகொண்டிருந்தாள். கிழக்குத் திசைக் களர் நிலத்திலிருந்து சூரியன் பனித் திரையைக் கிழித்து பிரகாசமாய்க் காலித்துக்கொண்டிருந்தும் அந்தளவான ஒரு மனமூட்டம் அவளிலிருந்தது. ஏனென்று அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. முன்னனுபவமற்ற ஒரு மந்த உணர்வு.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









