புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!புலவர் பார்வதிநாதசிவம் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கோர் இழப்பே. அவரது காணொளியிலான நேர்காணலொன்றினை இணையத்தில் 'யு டியூப்' இல் கேட்டேன். அவரது காணொளி நேரகாணலில் அவர் கூறியுள்ள தகவல்கள் (குறிப்பாக ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகள்) மிகவும் பயனுள்ளவை. ஈழநாடு பற்றிய அவரது கருத்துகள் எனக்கு அன்றைய காலகட்ட நினைவுகளைத் தோற்றுவித்தன. என் எழுத்துலக வாழ்வில் ஈழநாடு சிறுவர் மலர் மிகவும் முக்கியமானது. அதில் கட்டுரைகள், கவிதைகள், குட்டிக்கதை என எனது சிறுவர் காலத்து ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. புலவர் நேர்காணலில் ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகவிருந்த பெருமாள் பற்றிக் கூறியிருந்தார். பெருமாள் வாரமலருக்குப் பொறுப்பாகவிருந்தபோது எனது சிறுகதைகள் , நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள், பழமையின் சின்னங்கள் பேணப்படுதல் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார்.  அன்றைய காலகட்டத்தில் புலவரின் கவிதைகள் போன்ற ஆக்கங்கள் பலவற்றை ஈழநாட்டில் வாசித்ததாக ஞாபகம். அவரை நான் அறிந்து கொண்டதே ஈழநாடு மூலம்தான். அமைதியாகத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்களில் புலவரும் முக்கியமானவர். அவரது மறைவினையொட்டி இணையத்தில் கிடைத்த பிற தளச் செய்திகள் சிலவற்றை, நன்றியுடன், மீள்பிரசுரம் செய்கின்றோம். அவரது படைப்புகளை இணையத்தில் காண முடியவில்லை. அவரது  படைப்புகள்  சேகரிக்கப்பட்டு,  நூலகம்  போன்ற  தளங்களில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதவசியம்.  அத்துடன் அவரது மறைவால் வாடும் அனைவரின் துயரத்திலும்  பங்குகொள்கின்றோம்.

 தமிழ்24நியூஸ்.காம்:  யாழில் தமிழ்ப்புலவர் பாரம்பரியத்தை இன்றுவரை பேணிய புலவர் ம.பார்வதிநாதசிவம் காலமானார்
 
புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் புலவர் பாரம்பரியத்தை இன்றுவரை பேணிய புலவர் ம.பார்வதி நாதசிவத்தின் இழப்பு ஈடுசெய்யப்பட இயலாதது என யாழ்ப்பாண தமிழச் சங்கம் இரங்கல் உரையில் தெரிவித்துள்ளது. இயற்கை எய்திய தமிழ்ப்புலவர் பார்வதி நாதசிவம் 1936 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் மரபுவழித் தமிழ் பேணும் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத்தை பெற்றுக்கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழங்கத்தில் கற்கும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசனைத் தனது ஆதர்ச குருவாகக்கொண்டு பாவேந்தரின் பாணியில் சமூகப் பிரக்ஞையுடன் எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை யாத்தவர் என குறிப்பிட்டுள்ள யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் தனது வாழ்க்கைக் காலத்தில் பத்திரிகை ஆசிரியராக, செவ்விகாணும் வல்லுநராக இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துபவராக பலதரப்பட்ட தமிழியற் பணிகளை நாட்டுக்கு நல்கிய பெருமகனார் என குறிப்பிட்டுள்ளனர்.

புலவரின் பேரனார் உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை, தந்தையார் குருகவி ம.வே.மகாலிங்கசிவம், பெரிய தந்தையார் புலவர் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை, பண்டிதை இ.பத்மாசனி போன்ற ஆளுமைகளின் வழிகாட்டலில் பயணித்தவர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தை இனங்காட்டும் கடைசி வேராக எம்மவரிடையே திகழ்ந்தவர் புலவர் ம.பார்வதி நாதசிவம் எங்கள் மண்ணின் தமிழியல் வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்புக்களை ஆற்றும் களம் இவருக்கு இயல்பாகவே இருந்து வந்துள்ளதுள்ளதாகவும் தமிழச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தமிழப் புலவரின் இறுதிச்சடங்கு இன்று புதன்கிழமை கொக்குவில் நந்தாவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறறது.

நன்றி: http://tamil24news.com/news/?p=47891


தினமணி.காம்: தமிழறிஞர் பார்வதிநாதசிவம் மறைவு!

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் பார்வதிநாதசிவம் தமது 77வது வயதில் நேற்று காலமானார். அவர் பற்றிய இரங்கல் குறிப்பினை தமிழறிஞர் மறவன்புலவு கே.சச்சிதானந்தன் அனுப்பியுள்ளார்.

அந்த இரங்கல் குறிப்பில்,

யாழ்ப்பாணத்தின் தமிழ்ப் புலமை மரபின் வாரிசுகளுள் ஒருவரான புலவர் பார்வதிநாதசிவம். தனது 77ஆவது வயதில் நேற்றுக் காலமானார். புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளாகப் பாதிப்புற்றிருந்தார். கொக்குவில் நந்தாவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் 06.03.2013 பிற்பகல் 2 மணிக்கு ஈமச் சடங்குகள் நடைபெறும்.

பெரும்புலவர் ம.க.வேற்பிள்ளையின் பெயரர் புலவர் பார்வதிநாதசிவம். சிதம்பரம் ஆறுமுகநாவலர் வித்தியாசாலையில் தமிழாசிரியராக இருந்தவர் ம.க.வேற்பிள்ளை. பின்னர் தலைமை ஆசிரியராகி ஓய்வுபெற்றார்.

1930இல் சிதம்பரத்தில் காலமானார்.

ம.க.வேற்பிள்ளையின் மாணவர்களுள் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் முதன்மையானவர். யாழ்ப்பாணம் வந்த தண்டபாணி தேசிகர், மட்டுவிலில் சில ஆண்டுகள் தங்கி இருந்து, ம.க.வேற்பிள்ளையிடம் பாடம் கேட்டவராவார். ம.க.வேற்பிள்ளை புலோலியில் சிவபாதசுந்தரனாரின் உடன்பிறப்பான மகேசுவரியைத் திருமணம் செய்து ஐந்து ஆண்மக்களைப் பெற்றார். இந்து சாதனம் இதழின் ஆசிரியராக இருந்து உலகம் பலவிதம் நெடுந்தொடரை எழுதியவர் மூத்த மகன் ம.வே.திருஞானசம்பந்தம். நெற்றியில் திருநீறும் தலையில் குடுமியும் கையில் பொல்லுமாக அவர் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் வீதி, ஓடை ஓழுங்கைச் சந்திப்பு வீட்டிலிருந்து புறப்பட்டு இந்து சாதனம் அலுவலகம் வருவார். அதே நேரம் நான் அந்த வழியே பள்ளிக்குச் செல்வேன். என் தந்தையாருக்கு ம.க.வேற்பிள்ளையின் ஐந்து ஆண் மக்களும் நல்ல நண்பர்கள். அவ்வழி அவர்களுடன் நானும் பழகும் வாய்ப்புப் பெற்றேன். இவர்களுள் ம.வே.மகாலிங்கசிவம் மூன்றாமவர். மென்மையானவர். மேன்மையானவர். ம.வே.மகாலிங்கசிவத்துக்கு மகன் புலவர் பார்வதிநாதசிவம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பார்வதிநாதசிவம் கற்றபோது பாரதிதாசனை அடிக்கடி சென்று சந்திப்பார். தனது கவிதைகள் எளிமையாக அமைய இவரே காரணம் என்பார் புலவர் பார்வதிநாதசிவம். என்னை ஒத்த வயதினர். சிரித்த முகத்தினர். காற்றடித்தால் விழுந்துவிடுவாரோ என நான் அஞ்சுமளவு மெலிந்த உடல் வாகு அவருக்கு. அவரும் நானும் அன்போடு பழகினோம்.

மட்டுவிலுக்கும் மறவன்புலவுக்கும் இருந்த நெடிய தொடர்பின், இறுக்கமான பிணைப்பின், அன்புக் கொடுக்கல் வாங்கலின் பேணலாக, எங்கள் தலைமுறையில் நாங்கள் இருவரும் திளைத்தோம். அவர் ஒருபொழுதும் எவருக்கும் துன்பம் விளையாதவர். தான் காலமானேன் எனத் தெரிவித்த இன்று எனக்குத் துன்பத்தைத் தந்தார். - என்று தெரிவித்துள்ளார்.

http://dinamani.com/latest_news/article1490439.ece


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்