பதிவுகள் முகப்பு

(ஏப்ரில் 23 உலக புத்தக தினம்) வ.ந.கிரிதரனின் பாடல் அவரது குரலில் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி வாழு என்று சொன்னால் வாழுவேன்".

விவரங்கள்
- வ.ந,கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி

ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

வாசிக்கப் புத்தகம் இருந்து விட்டால்
வனமும் எனக்குச் சொர்க்க புரிதான்.
யோசிக்க வைப்பதும் புத்தகம் தான்.
யோசிப்பற்ற வாழ்வில் சுவை உண்டா?

ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

புத்தகம் அற்ற உலகம்  எனக்கு
சித்தம் அற்ற வெறும் உடல்தான்.
இத்தரையில் இருப்பதற்கு புத்தகம் அவசியம்.
புத்தகம் அற்ற நிலம் பாழ்நிலமே.

ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

மேலும் படிக்க ...

காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்!! - முனைவர் கு.வளர்மதி -

விவரங்கள்
- முனைவர் கு.வளர்மதி -
சமூகம்
22 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாசிரியர் - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி -


முன்னுரை

இன்றைய உலகில் பெண்களின் பங்கு மகத்தானது. ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வாக்கினை ஏற்ற பல தலைவர்களுள் அண்ணல் காந்தியடிகளும் ஒருவர். பெண்ணைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என திருவள்ளுவரும், வருங்காலம் பெண்ணுடையது தான் என வினோபாஅடிகளும் கூறுகின்றனர். அடிப்படையில் ஆண், பெண் இருவருக்கும் ஆன்மா ஒன்றே. இருவருக்கும் உணர்வுகளும் ஒன்றே. ஒருவர் மற்றவர் உதவியின்றி வாழமுடியாது. ஆண் காலங்காலமாக பெண் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பினும், ஆடவரிடையே தோன்றிய மகான்கள் பெண்ணை ஆணுக்குச் சமமென்றே மதித்திருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தில் காந்தியடிகளின் பங்கு கணிசமானது என்பதை மறைக்க முடியாது. காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

மேலும் படிக்க ...

சுப்ரபாரதிமணியன் அவர்களின் அந்நியர்கள் – நாவல் ஒரு பார்வை! -டாக்டர். சீதாராமசாமி, பேராசிரியர் பிலோமினா கல்லூரி, மைசூரு -

விவரங்கள்
-டாக்டர். சீதாராமசாமி, பேராசிரியர் பிலோமினா கல்லூரி, மைசூரு -
நூல் அறிமுகம்
22 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறந்த நாவலுக்கான எழுத்து அறக்கட்டளையின் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற் சிறப்புடையது இந்த நாவல். அந்நியர்கள் யார் என்ற கேள்வியை பல்வேறு தளங்களில் எழுப்பும் நாவல் இது. இந்த நாவலில் சில முக்கியக் கதாபாத்திரங்களைப் பார்ப்போம். துளசி –+ (ராம்சந்த்) கிஷோர், கணேசன்-+ சத்யா; சுரேஷ்+ கல்பனா- ((துர்காவைக் காப்பாற்றுபவள்) தூயவன் – தம்பி ரங்கராஜன். இவை தவிர சிறு சிறு இடங்களில் வரும் நிறைய கதாபாத்திரங்கள்.


மேற்கண்ட பட்டியலில் மிகவும் தேறாதவன் என்றால் அவன் சுரேஷ்தான்.  பலமுறை கல்பனா அவனைத் திருத்த முயன்றும் முடியாமல் போகிறது.  ஊருக்கு வேலை தேடி வரும் பெண்கள் என்றால் இவனுக்குக் கொண்டாட்டம்தான்.  பனியன் கம்பெனி வைத்திருக்கிறான்.  அதில் ஒரு சமயம் ஒரு கேரள ஆளை நம்பி ஐம்பதாயிரம் இழந்திருக்கிறான்.  வாழ்க்கை போராட்ட மயமானது என்று உணர்ந்தாலும் சிறு பெண்கள் அல்லது அபலைகளாக வருபவர்கள், அல்லது ஏதாவது வேலை தேடி வருபவர்கள் என அவன் கண்ணுக்குத் தெரிந்து பட்டால் வேறு வினையே வேண்டாம்.

பலமுறை கல்பனா வேதனைப் படுகிறாள்.  ஆனால் என்ன பலன். அவளிடத்திலேயே அவன் தாறுமாறாக, இன்னும் எவ்வளவு சிறுமை படுத்த முடியுமோ அப்படி அவளைத் தன் சொற்களால் ஊனமாக்குகிறான்.  ஒருமுறை சுவருக்கு சுண்ணாம்பு பூசுதல் பற்றிய பேச்சு வருகிறது. dசுண்ணாம்பு பூச வில்லையென்றால் அது கேவலமான பொம்பள மாதிரி இருக்கும் என்று கல்பனா சொல்ல, அதற்கு அவன் உன்ன மாதிரியா என்கிறான்.  பேச்சு வலுக்கிறது.

மேலும் படிக்க ...

நெதர்லாந்து அரசியலமைப்பு! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
அரசியல்
22 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


நெதர்லாந்து எந்த வகையான அரசாங்கத்தைக் கொண்டுள்ளது? நெதர்லாந்து அரசியலமைப்பு முடியாட்சியைக் கொண்ட ஒரு பரவலாக்கப்பட்ட அரசியலமைப்பைக் கொண்டது. முக்கியமான சட்டம் மத்திய அரசால் மேலோட்டமாக உருவாக்கப்படுகிறது,

ஆனால் விரிவான விளக்கம் உள்ளூர் அதிகாரிகளுக்கு விடப்படுகிறது. அரசியலமைப்பு முடியாட்சி என்பதில் அரசியலமைப்பில் ராஜாவின் நிலைப்பாடு வகுக்கப்பட்டுள்ளது. ராஜா, அமைச்சர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்குகிறார் என்று அரசியலமைப்பு கூறுகிறது. மன்னர் நெதர்லாந்து இராச்சியத்தின் தலைவராக உள்ளார். ஏப்ரல் 30, 2013 முதல் வில்லெம்-அலெக்சாண்டர் நெதர்லாந்து நாட்டின் ராஜாவாக இருக்கிறார். ஏப்ரல் 27 அன்று நாங்கள் ராஜாவின் பிறந்த நாளை நாடு முழுவதும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளுடன் களிப்புடன் கொண்டாடுவோம். பிற நாடுகளில் வேறுபட்ட அரசியல் அமைப்புகள் உள்ளன, எடுத்துக்காட்டாக குடியரசு.

புகைப்படம் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா, அமலியா, அலெக்ஸியா மற்றும் அரியேன ஆகிய மூன்று மகள்களுடன்.

உதாரணமாக:

மன்னர் நெதர்லாந்தின் பொறுப்பாளரா?

இல்லை, ராஜா அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார், ஆனால் முக்கியமாக ஒரு சடங்கு செயல்பாடு உள்ளது, அதாவது அவர் அரசாங்கத்தின் சார்பாக விருந்தினர்களைப் பெறுகிறார் மற்றும் நாடு முழுவதும் நிறைய வேலைகளைச் செய்கிறார். நாட்டின் பிரதிநிதியாக, அவர் வெளிநாடுகளுக்கு செல்கிறார்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 58: “எஸ். அகஸ்தியர் படைப்புகள் - கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்” - தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
22 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  Join Zoom Meeting  | Meeting ID: 389 072 9245 |  Passcode: 12345    

இலக்கியவெளி நடத்தும் இணையவழி  ஆய்வரங்கு  – 58: “எஸ். அகஸ்தியர்  படைப்புகள் - கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்”  
   
ஒருங்கிணைப்பு:  த. சிவபாலு | நாள்:  சனிக்கிழமை 09-05-2026

நேரம்:  
    இந்திய நேரம் - மாலை 6.30
    இலங்கை நேரம் - மாலை 6.30
    கனடா நேரம் - காலை 9.00
    இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00
    
வழி: ZOOM    

Join Zoom Meeting  | Meeting ID: 389 072 9245 |  Passcode: 12345    

மேலும் படிக்க ...

மினாப் 168: ஒரு நிரந்தரக் கையெழுத்து - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
22 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

(மீமெய்ம்மை வடிவம் - Surrealist High-Modernist Style) 

வானத்தின் நரம்புகளில்
ஒரு இரும்புப் பறவை நுழைகிறது.
அதன் வயிற்றில் 168 ஆத்மாக்கள்—
இலக்கங்களல்ல,
உறையவைக்கப்பட்ட காலத்தின் துளிகள்.

பாஸ்போர்ட்டின் பக்கங்களில்
தேசங்களின் முத்திரைகள் இல்லை;
பதிலாக, உலராத மை தீட்டிய
பிஞ்சு விரல்களின் ரேகைகள்.
ஒவ்வொரு பையிலும்
ஒரு 'நாளை' இருக்கிறது,
அது ஒருபோதும் 'இன்று' ஆக மாறாத
ஒரு அகதிச் சொல்.

இஸ்லாமாபாத்தின் மேசைகள்
வரைபடங்களால் மூச்சுத்திணறுகின்றன.
அங்கே சொற்கள்—
இரத்தம் தோய்ந்த கத்தரிக்கோல்கள்.
அவர்கள் அமைதியைப் பற்றிப் பேசுகிறார்கள்,
ஆனால் அந்த அறையின் ஜன்னல் வழியே
குழந்தைகளின் சிரிப்பு
நட்சத்திரங்களாக உதிர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் கே. பொன்னுத்துரை பவளவிழா!

விவரங்கள்
- தகவல்: கே. பொன்னுத்துரை -
நிகழ்வுகள்
21 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது ஊகம் மட்டுமே: தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2026! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
21 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


தமிழகச் சட்டசபைத் தேர்தல் ஏபரில் 23 நடைபெறவுள்ளது.  இத்தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகளில்  பெரும்பாலானவை திமுகவின் வெற்றியையே எதிர்வு கூறுகின்றன.  இந்நிலையில் தற்போது நிலவும் அரசியல் சூழலின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் பற்றிய என் ஊகத்தை முன் வைக்கின்றேன். 

கடுமையான போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்குமிடையில்தான் நடக்கின்றது. நடிகர் விஜய்யிற்கு வெறித்தனமான , பெரும்பாலும் இள வயதினரான  இரசிகர்களின் ஆதரவு உண்டு.  'நாம் தமிழர்' சீமானுக்கு அவரது உறுதியான தமிழ்த்தேசிய வெளிப்பாடு காரணமாக வாக்காளர்களில் ஒரு குறிப்பிட்ட அளவில் ஆதரவு உன்டு.

அதிமுகவைப் பொறுத்த வரையில் என்னைப் பிரமிப்படைய வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா அணி, செங்கோட்டையன் அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்திருந்த அதிமுக இத்தேர்தலில் காணாமல் போகுமென்று அரசியல் அவதானிகள், ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்த காலகட்டத்தில் திமுகவுக்கு எதிரான பலமான  எதிரியாக அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருப்பது அவரது ஆளுமைக்குக் கிடைத்த  வெற்றி. அவரது பலவீனம் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது மட்டுமல்ல, அதன் அடிவருடிபோல் செயற்படுவது. மோடி அரசு இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் துருப்புச்சீட்டாக வைத்து இவரைத்  தம் கைகளுக்குள் அடக்கி வைத்திருப்பது போல்  தெரிகிறது.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும்: கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe) மறைந்தார்! & நவீனக் கவிஞர்களும், மரபுக் கவிதையும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன் பக்கம்
21 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்னுடைய 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ' ஆய்வு நூல் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் சிங்கள மொழிபெயர்ப்பில் ,. ஆகச பதிப்பக வெளியீடாக வெளியானது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் தொல்லியல் அறிஞரும், தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநருமான கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe)  அவர்கள். என்னை அவருக்குத்  தெரியாது. இருந்தாலும் என் நூலை வாசித்து அதற்கோர் அணிந்துரை எழுதியவர் அவர். அவர் அண்மையில் மறைந்த தகவலினைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சரத் ஆனந்த அவர்கள். அவர் இழப்பால் வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

மேலும் படிக்க ...

புறநானூற்றில் துணைவஞ்சி! - வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் -

விவரங்கள்
- வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் -
ஆய்வு
19 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


கட்டுரையாசிரியர் : வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர்,  காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்  - நெறியாள்கை: முனைவர் சி.சிதம்பரம் -


முன்னுரை:

சங்க இலக்கியங்கள் அகம், புறம் என இரு பகுப்புகளை உடையது. இரண்டு பகுப்பிற்கும் அதற்கென திணை, துறைகள் இலக்கண நூலோரால் வகுக்கப்பட்டுள்ளன. அதனை முதன்மையாகக் கொண்டே எட்டுத்தொகை நூல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ள நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் வஞ்சித்திணையின் கீழ் துணைவஞ்சி என்ற துறையின் பெயரில் ஆறு பாடல்கள் உள்ளன. ஆனால் தற்போதுவரை கிடைக்கப்பெற்றுள்ள புற இலக்கண நூல்கள் எவற்றிலும் துணைவஞ்சி என்னும் இத்துறையானது சுட்டப்பெறவில்லை. இவ்வாய்வுக் கட்டுரை துணைவஞ்சி என்ற புறத்துறையின் விளக்கத்தினையும், எந்த அடிப்படையில் இத்துறை தோன்றியது என்பதையும் விளக்க முற்படுகின்றது.


துணைவஞ்சி - துறைவிளக்கம்

புறநானூற்றிற்கு உரை வரைந்த உ.வே. சாமிநாதையர், துணைவஞ்சி என்பதற்கு "ஒரு துறை, பிறரை வெல்லவாவது கொல்லவாவது துணிந்து நிற்கின்றானொருவனைச் சில கூறிச்சந்தி செய்வித்தல்" 1 என்கிறார். அதாவது போரில் தனது எதிரியை கொன்று வீழ்த்தி அல்லது சிறைபிடித்தாவது வெல்லுவேன் எனக் கோபம் கொண்டு துணிந்து நிற்பவன் ஒருவனை அறிவுரை கூறி தடுத்து நிறுத்துதலாகும். போர் செய்ய விரும்புவனை அறம் குறித்த நன்மொழிகள் கூறி தணித்து, உணரவைத்து போர் நிகழாமல் தடுத்து நிறுத்துவதைக் குறிப்பது துணைவஞ்சி என்ற துறையின் பொருண்மையாக அமைகிறது. துணைவஞ்சி என்ற துறையின் கீழ் புறநானூற்றில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன

மேலும் படிக்க ...

கு.சின்னப்ப பாரதியின் 'சர்க்கரை' புதினத்தில் முதலாளித்துவமும் தொழிலாளர் வர்க்கமும்! - முனைவர் வ.கோபாலகிருஷ்ணன் -

விவரங்கள்
- முனைவர் வ.கோபாலகிருஷ்ணன் -
ஆய்வு
19 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 


கட்டுரையாசிரியர் - முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் - 636005, பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்றது, சேலம், தமிழ்நாடு, இந்தியா. ( Orcid: https://orcid.org/0000-0002-9465-4421) 

முகவுரை

தொழிலாளர்கள் என்போர் சமுதாயத்தில் சிக்கலுக்கு ஆளாக்கப்படக்கூடிய  குழுவினர் ஆவர். இவர்களுடைய நிலை பல ஆண்டுகளாகப் பல விதங்களில் இன்பம், துன்பம், அவலம் போன்ற பல பிரச்சினைகளில் அமைந்துள்ளது. இவற்றைத் தட்டிக்கேட்பதற்காகவும் இவர்களுடைய உரிமைகளுக்குப் போராடவும் தொழில் சங்கங்கள், தொழிலாளர் நல வாரியம் போன்ற பல அமைப்புகள் இருந்தாலும் தொழிலாளர்களுக்குச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை எல்லாம் தீர்ப்பதற்கு அரசியல், தனி நபர் சூழ்ச்சி போன்ற பல தடைகள் இருக்கின்றன. இத்தடைகள் யாவும் தொழிலாளர்களைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்க முடியாமல் போகின்றனர். இந்நிலை  தற்கால இலக்கியங்கள் என்று கருதப்படுகின்ற நாவல் இலக்கியங்களில் பேசப்படுகிறது. அவற்றில் ஒன்றாக கு.சின்னப்ப பாரதி எழுதியுள்ள சர்க்கரை எனும் புதினம் அமைந்துள்ளது. இவற்றிலுள்ள முதலாளித்துவமும் தொழிலாளர் வர்க்க நிலையையும் பற்றிக் காண்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

தொழிலாளர் அறிமுகம்

தொழிலாளர்கள் என்போர் பொருளாதார தேவைக்காகப் பிறரிடம் வேலைப் பார்த்து அவ்வேலைக்கேற்ற ஊதியத்தைப் பெறுபவர்களே ஆவர். இவர்கள் தங்களின் குடும்ப தேவைக்காகவும் எதிர்கால சேமிப்புக்காகவும் உழைத்து வாழக்கூடிய வர்க்கத்தினர் ஆவர். மேலும், “மக்களின் சமூக வாழ்க்கை, நிலத்தை அடிப்படையாக வைத்து அமைகிறது. நிலத்துடனான உடல் உழைப்பு என்பதோடு மட்டுமல்லாது சகமனிதர்கள் உடனான உறவு நிலையைப் பொறுத்தும் சமூக வாழ்க்கை பொருள் உடையதாகிறது. நிலங்கள் பகுக்கப்பட்டு நிலத்தினை அடிப்படை ஆதரமாக வைத்து அமைந்த தொழில் பிரிவுகளும் தோன்றக் காரணமாயிற்று”1 என்ற கூற்றைக் காணும் போது தொழிலாளர்கள் என்போர் உடல் உழைப்பு, குடும்ப பொருளாதாரம் ஆகியவற்றிக்குப் பாடுபடக்கூடிய நிலையில் இருப்பவர்கள்; என்பதை இதன் வழியாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க ...

காலத்தை ஊடறுத்துப் பாயும் நதி – நடேசனின் 'தாத்தாவின் வீடு 'நாவல் - சி. ரமேஸ்

விவரங்கள்
- சி. ரமேஸ்
இலக்கியம்
18 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று மகனாகப் பிறந்த நோயல் சின்னத்தம்பி நடேசன்ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றவர் நோயல் நடேசன், 1984 - 1987 காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்தபோது, தமிழர் மருத்துவ சேவை என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தில் நோயல் நடேசனுடன் மருத்துவரான அவரது மனைவியும் பணியாற்றினார். 1987-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 40 வருடங்கள் விலங்கு மருத்துவராக பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தற்போது மெல்பேர்னில் வசித்து வருகிறார். நோயல் நடேசன் ஏப்ரல் 1984-இல் 'உதயம்' மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு வரை 'உதயம்' பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. 'உதயம்' பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார். 1980-1983 ஜூலை வரையான காலத்தில், இலங்கையின் - மதவாச்சி பகுதியில் மிருக வைத்தியராக பணிபுரிந்த காலப் பின்னணியில் எழுதப்பட்ட நடேசனின் வண்ணாத்திக்குளம் என்ற முதலாவது நாவல் 'மித்ர 'பதிப்பகத்தினால் வெளியானது. இந்நாவல் பின்னர் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.

1980-83 கால கட்டத்திலே இலங்கை மக்களின் வாழ்க்கை முறைகளையும் இலங்கையின் அரசியல் பொருளாதார – சமூக நிலை மாற்றங்களையும் எடுத்துரைக்கும் நாவலே வண்ணாத்திக் குளம்.நடேசன் நாவலில் வரும் பதவியாக்குளம் எனப்படுகின்ற வண்ணாத்திக்குளம் தற்போது. இது ஒரு சிங்களக் குடியேற்றப் பிரதேசமாக மாறிப்போயுள்ளது. நடேசனின் சொந்த அனுபவங்களின் பிரதிபலிப்பே இந்நாவல். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் மிருக வைத்தியர் ஒருவர் தொழில் நிமித்தமாக மதவாச்சி சென்று தான் தங்கியிருக்கும் விடுதியில் கூடவே தங்கியிருக்கும் பதவியாவைச் சேர்ந்த சிங்கள இளைஞனின் தங்கையைக்; கண்டு, காதல் கொண்டு பதிவுத் திருமண மூலம் கணவன் மனைவியாக வாழ முற்படும் போது நாட்டு நிலை அவ்விருவரையும் நேர்ந்து வாழ இடமளிக்காது புலம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது. இதன் வெளிப்பாடே வண்ணாத்திக் குளம்.

மேலும் படிக்க ...

கனடா - ரொறன்ரோவில் நூல் வெளியிட்டு விழா! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
17 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 12-4-2026 கனடாவில் ரொறன்ரோவில் உள்ள இஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் பண்டிதர் ம.செ. அலெக்ஸாந்தர் அரங்கில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், கனடா கவிஞர் கழகம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரான கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை குமரகுரு கணபதிப்பிள்ளை, ஜோதி ஜெயகுமார் ஆகியோர் கொண்டு நடத்தினர். முதலில் மங்கல விளக்கேற்றல், கனடாப்பண், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து ‘அகணி விருதுகள்’ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, சயனிகா சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: "முன்வரலாற்றுக் கால தமிழகம் ; இடம் - மனிதர்கள் - மொழி. அண்மைக் கால உரையாடல்கள்."

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
17 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                            Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

சிறுகதை: கைக்குள்… -பாலமுருகன்.லோ -

விவரங்கள்
-பாலமுருகன்.லோ -
சிறுகதை
15 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜிம்னாஸ்டிக் அரங்கின் உள்ளே ஒளிரும் மின் விளக்குகள் அழகாக அலங்கரித்திருந்தன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு—எல்லாத் திசைகளிலும் இருக்கைகள் அணிவகுத்திருந்தன. அவை கீழிருந்து மேல்நோக்கி படிநிலைகளாக அமைந்திருந்தன.

அரங்கின் மையப்பகுதியில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கேற்ற இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரிவைச் சார்ந்த உபகரணங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. முழு அரங்கும் குளிர்சாதன வசதியுடன் முறையாக இருந்தது.

குளிர் இருந்தாலும், விளையாட்டில் பங்கேற்பவர்களின் முகத்திலும் கைகளிலும் வியர்வைத் துளிகள் காணப்பட்டன. ஆனால் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அந்தக் குளிர் உடலில் ஊசி ஏறுவது போல இருந்தது.

நான்கு திசைகளிலும் பல நாடுகளின் கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அரங்கின் மையப்பகுதியில் இந்தியாவின் கொடி மிகவும் அழகாகவும் பிரம்மாண்டமான முறையிலும் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த அரங்கில் கிழக்கு பகுதியில் வரதனும் மஞ்சுலாவும் அமர்ந்திருந்தனர்.

அரங்கிலிருந்த ரெஃபரியின் விசில் ஒலி கேட்டது. விளையாட்டு வீரர்களின் ஓடும் சப்தம் கேட்டது. மெத்தையில் கால்கள் பதியும் “தப்” சத்தமும், ரிங்ஸின் மெல்லிய “கீச்” சுழற்சி சத்தமும் சேர்ந்து ஒரு சூழலை உருவாக்கின. இவை அனைத்தும் பார்ப்பவர்களின் மனதில் ஏதோ ஒரு உற்சாகத்தை எழுப்பின. அவர்களே விளையாட்டில் பங்கேற்கும் மாதிரி தோன்றச் செய்தது அந்த அரங்கு.

மேலும் படிக்க ...

பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பும் எழுத்தாளர்களுக்கு!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
14 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

பதிவுகளுக்குப் பலர் படைப்புகள் அனுப்புவதால் , எல்லாப் படைப்புகளையும் விரைவாகப் பிரசுரிப்பதில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். நிச்சயம் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பதிவுகள் இணைய இதழில் பிரசுரமாகும்.  அனுப்பிய படைப்புகளை நினைவூட்டிக் கடிதங்கள் அனுப்பத்தேவையில்லை. படைப்புகள் அனுப்பும் அனைவருக்கும் நன்றி.

ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பும்போது  அவற்றின் இறுதியில் உசாத்துணைப் பட்டியலும் இடம் பெறுவது அவசியம். உசாத்துணைப் பட்டியலற்று வரும் படைப்புகள், பதிவுகள் இணைய இதழின் ஏனைய பிரிவுகளில் பொருத்தமானதொன்றில் பிரசுரமாகும்.

இரங்கல் செய்தி - டாக்டர் தி. ஞானசேகரன்! – குரு அரவிந்தன் -

விவரங்கள்
– குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
14 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்து மூத்த படைப்பாளியும், இனிய நண்பருமான தி.ஞானசேகரன் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது (12-4-26) ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும்.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் பிறந்த இவர் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். ஆயுள்வேத வைத்திய கலாநிதியான இவர், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் என்ற மாதாந்த இதழின் முதன்மையாசிரியராகப் பணியாற்றினார். இலக்கியத்திற்காக சாகித்யரத்னா விருது பெற்றவர். ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களை மட்டுமல்ல, புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் வெளியிட்டு அவர்களின் இலக்கிய ஆளுமையை உலகறியச் செய்தவர்.

திரு ஞானசேகரன், திருமதி ஞானம் ஆகியோர் கனடா நாட்டுக்கு வருகை தந்தபோது, அவர்களுடன் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடியிருக்கின்றேன். எங்கள் அழைப்பை ஏற்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்குபற்றி இருந்தார்கள். உதயன் பத்திரிகைக்காக அவரை ஒரு நேர்காணலும் செய்திருந்தேன்.

‘தமிழ் நாட்டில் என்னை அறிந்த அளவிற்கு ஈழத்து வாசகர்கள் என்னை அறிந்திருக்கவில்லை’ என்று சொல்லி, எனது ஆக்கங்களை இலங்கையில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று என்னை ஒருமுறை அழைத்திருந்தார்கள். அதனால் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன்.

மேலும் படிக்க ...

சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
14 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ 
சித்திரைத் திருமகள் சிறப்பாக வந்திடுவாள்
அவளை வரவேற்க ஆனவற்றைச் செய்திடுவோம்
அனைவருமே வாருங்கள் அகமகிழ வரவேற்போம் 

தையினை அடுத்துச் சித்திரை வருகிறது
தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழரது நம்பிக்கை
உழவரை உயர்த்திடும் உன்னதத் திருநாளாய்
உயர்வாக மலருவதே தைப்பொங்கல் திருநாளே

உழவினை உயர்த்தும் உன்னதத் திருநாள்
தையோடு மட்டும் தடைபட்டு நிற்கவில்லை
சித்திரையும் இணைகிறது சிறப்பான உழவோடு
அத்தனையும் பண்பாட்டின் அடித்தளமாய் அமைகிறது

தையிலும் பொங்கல் சித்திரையிலும் பொங்கல்
பொங்கலைப் பொங்கினால் பூரிப்பே கிடைக்கும்
மாவிலை தோரணம் வாசலை அலங்கரிக்கும்
மனமகிழச் சித்திரையை வரவேற்று மகிழுவோம்

பங்குனி தன்பின்னே சித்திரையைக் கூட்டிவரும்
சித்திரை பிறந்தாலே கெட்டிமேளம் ஒலித்துவிடும்
திருமணங்கள் தொடங்கும் திருவிழாத் தொடங்கும்
சிறப்பாக வசந்தம் ஊஞ்சலாய் ஆடிநிற்கும்

மேலும் படிக்க ...

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
13 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலானா 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24 அன்று 'டொரோண்டோ'வில் நடைபெறவுள்ளது. அது பற்றிய ஓராயம் அமைப்பின் அறிவித்தலை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
மேலும் படிக்க ...

ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் - படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
12 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[எழுத்தாளரும், ஞானம் சஞ்சிகையின் பதிப்பாளரும், ஆசிரியருமான திரு.தி.ஞானசேகரனின் மறைவையொட்டி,  எழுத்தாளர் முருகபூபதி ஞானசேகரன் அவர்களின் எண்பதாவது வயதையொட்டிப் பதிவுகள் இணைய  இதழில் அன்று எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள் மீள்பிரசுரமாகின்றன.]

”கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”

இலங்கையிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வானத்தில் பறந்து வரும்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் இறங்கும் தருணத்தில் விமானம் தரைதட்டுவதற்கு முன்னர் அந்த அதிகாலைப்பொழுதின் உள்ளங்கவர் காட்சியை தரிசித்த இலக்கியப்படைப்பாளி ஞானசேகரனின் அன்றைய வர்ணிப்புத்தான் அந்த சூரிய உதயக்காட்சி. அன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில் இலக்கியவானில் ஞானம் கலை, இலக்கிய மாத இதழின் பரிமாணத்துடன் அவருக்கு பேருதயமாகியது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் ஞானசேகரன் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந,கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஞானசேகரன் மறைந்தார் என்னும் செய்தி எதிர்பாராதது. இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர்.  நாவல், சிறுகதை, கட்டுரை (பத்தி  எழுத்துகள், பயணக் கட்டுரைகளுட்பட) ,இதழியல் (ஞானம் சஞ்சிகை), பதிப்புத்துறை (ஞானம் சஞ்சிகையின் சார்பில் பல நூல்கள் வெளியாகியுள்ளன)  என  இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது.

புதிய சுவடுகள், குருதி மலை ஆகியவை இலங்கை அரசின் சாகித்திய விருதினையும், லயத்துச் சிறைகள் மத்திய மாகாண அமைச்சின் சாகித்திய விருதினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 'ஞானம்' சஞ்சிகை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய சஞ்சிகை. பலருக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் சஞ்சிகை. அது வெளியிட்ட போர்க்கால இலக்கியச் சிறப்பிதழ், புலம்பெயர் தமிழர் இலக்கியச் சிறப்பிதழ் உட்பட, எழுத்தாள ஆளுமைகள் சிலரின் சிறப்பிதழ்கள் முக்கியமானவை.

மேலும் படிக்க ...

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந,கிரிதரன் -
அறிவியல்
12 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'காலம்' செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த 'வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ' 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றி ,நேரக்கட்டுப்பாடு காரணமாக நான் கூறவிருந்த் எல்லா விடயங்களையும் என்னால் கூற முடியவில்லை. அதனால் கூற விருந்த ஏனைய விடயங்களையும் ஓரளவு முழுமையாக்கி இப்பதிவில் தந்திருக்கின்றேன்.


அறிவியல்  நூல்களின் அவசியம் ஏன்?  அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க,  அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, சிந்தனையைத் தூண்ட, ஏன் என்று கேள்விகளைக்  கேட்கும் ஆற்றலை வளர்க்க,  அறிவியல் தொழில் நுட்பத்தை , அதன் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள  அறிவியல் கட்டுரைகள் , நூல்கள்  எழுதப்பட வேண்டும்.  அறிவு பகிரப்பட வேண்டும்.  அதனைச் சாத்தியமாக்குபவை அறிவியல் எழுத்துகள். 

எனக்கு அறிவியல் துறையில்  வானியல், வானியற்பியல்  மிகவும் பிடிக்கும். என் பால்ய பருவத்தில் , வவுனியாவில், வீட்டு முற்றத்தில் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானைப்பார்த்ததிலிருந்து என் ஆர்வம் தொடங்கியது என்பேன். அக்காலகட்டத்தில் கல்கியில் 'பொன்னியின் செல்வன்'  நாவலும் மீண்டும் தொடராக வெளியாகத்தொடங்கியிருந்தது. ஓவியர் வினுவின் அழகான ஓவியங்களுடன்  வெளியான  நாவலில் அப்போது அடிக்கடி வானில் தோன்றிக்கொண்டிருந்த தூமகேது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் அவ்விதம் குறிப்பிடப்பட்டிருப்பது வால்வெள்ளி  என்பதை அறிந்தேன். நாவல் நடைபெறும் காலத்தில் நடக்கப்போகும் துர்ச்சம்பவமொன்றினை எதிர்வு கூறுவதாகத் தூமகேது சித்திரிக்கப்பட்டிருக்கும். அதே காலகட்டத்தில் கல்கியில் வாண்டுமாமாவின் 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரக்கதையொன்றும் வெளியாகிக்கொண்டிருந்தது.அதில் வரும் தூமகேது பாத்திரமும் பயங்கரமானதோர் ஆளுமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்த பாத்திரம். அதனால் தூமகேது என்னும் பெயரும் எம்மைப் பயப்படுத்துமொரு பெயராக அக்காலகட்டத்திலிருந்தது. அத்துடன் அக்காலகட்டத்தில் அடிவானில் தென்பட்டுக்கொண்டிருந்த வால்வெள்ளியும் நினைவுக்கு வருகின்றது. 

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூலின் 'என்னுரையில்' தன் சிறுவயதில் பூதக்கண்ணாடியுடன் அலைந்து திரிந்த  அனுபவத்தை விபரித்திருப்பார். அதை வாசித்தபோது எனக்குப் பழைய நினைவுகள் மீள் எழுந்தன. கலகி சஞ்சிகையின் அளவில் சிறுவர்களுக்கான  அறிவியல் புத்தகமொன்று 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்னும் பெயரில் அல்லது அது போன்றதொரு பெயரில் வெளியாகியிருந்தது. யாழ்  பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்த நூல்களிலொன்று. பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவில் திரியும் சிறுவனொருவனின் சித்திரம் போன்ற சித்திரங்களுடன் வெளியாகியிருந்த அந்த நூலை அடிக்கடி எடுத்து வாசித்திருக்கின்றேன். மிகவும் எளிய தமிழ்லில் எழுதப்பட்டிருந்த நூலும், சித்திரங்களும் நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்தின.  அதனைக் கலைக்கதிர் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அதை வாசித்து விட்டு , வெங்கட்ரமணன் போல் நானும் பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவு முழுவதும், என்னை ஓர் அறிவியல் அறிஞராகக் கருதிக்கொண்டு அலைந்துதிரிந்தேன். 

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்கு இவ்விதமான ஆர்வத்தை, அவரது பால்ய பருவத்தில்  அறிவியல்பால் தூண்டியது அவருக்கு மாமாவோ , சித்தப்பாவோ கொடுத்த திசையறி கருவி , கொம்பாஸ் என்று வாசித்தது நினைவுக்கு வருகின்றது. 

மேலும் படிக்க ...

நீலகிரி படகர்களின் ‘சுத்துக் கல்லு மொரா’ எனும் கடவுள் முதுமரமும் சங்கக் கூறுகளும்! - முனைவர்.கோ.சுனில்ஜோகி , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை -

விவரங்கள்
முனைவர்.கோ.சுனில்ஜோகி , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை -
ஆய்வு
11 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


தனித்த வாழ்வியலிற்காக யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட படகர்களின் தொல்சடங்குகள் தனித்துவமானவை. சுமய சார்பற்றவை. இவர்களே உருவாக்கிய தொல் பண்பாட்டினைக் கட்டியங் கூறுபவை. இவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வியலின் உறுதிபாடாகத் தொடர்பவை. அந்தச் சடங்குகளில் சில சங்கக் கூறுகளின் தொடர்ச்சியாகத் திகழ்பவை. இன்றும் இவர்களின் இயற்கை வாழ்வின், வழிபாட்டின் எச்சங்களாத் தொடர்கின்றன. அதில், இவர்களின் மரவழிபாடு இன்றியமையானதாகும்.

நீலகிரிக்கே உரிய மரங்களைப் பாதுகாப்பதையும், தமது வாழ்வியல் தகவமைப்பில் பெருந்துணை நல்கியமையும், நமது மூதாதையர்கள் மற்றும் முன்னோர்களின் நம்பிக்கையின் திரட்சியாக விளங்கியமையும், இயற்கைப் பேணலைத் தக்கவைத்து தலைமுறைக் கடத்துதலையும் உட்செறித்த இவர்களின் மரவழிபாட்டில் ‘நேரி’, ‘பிக்கெ’ உள்ளிட்ட மரங்கள் இடம்பெறுகின்றன. அதில் ‘நேரி’ மரத்தினைக் கொண்டமையும் இவ்வழிபாட்டின் தொன்மையினை இக்கட்டுரை விளக்குகின்றது. நேரி மரத்தினைக் கொண்டு நீளும் ‘சுத்து கல்லு மொரா’ எனும் குறிஞ்சி நிலம் சார்ந்த வழக்காறினைச் சங்கக் கூறுகளோடுப் பொருத்தி இக்கட்டுரை ஆய்கின்றது.

படகர்களின் கடவுள் முதுமரம் நேரி - சுத்தக் கல்லு மொரா

ஆதிமுதல், எருமை மந்தை பேணலையும் மலைப்புல வேளாண்மையினையும் தமது வாழ்வியலாகக் கொண்டிருக்கும் படகர்களின் மரபில், பண்பாட்டில் ‘நேரி’ எனும் நாவல் மரம் அடிப்படையானவொன்றாகும். படகர்களின் தாய்மொழியான ‘படுகு’ மொழியில் வழங்கப்படும் ‘நாடு, சீமெ, பெட்டா, அக்க – பக்க, ஊரு, அட்டி’ எனும் அவர்களின் வாழ்க்களப் பரப்பில், ‘அட்டி’ என்பது அம்மக்கள் வாழ்கின்ற ஊராகும். பெரும்பாலும், மலைகளின் கோடுகளிலும், அதன் சரிவினையொட்டியும் அமைந்திருக்கும் இக்குடியிருப்பினை இவர்கள் “அட்டி அணெ” என்று வரையறுப்பதுண்டு. இதில் ‘அணெ’ என்பது மலையில் அமைந்துள்ள புல்வெளியாகும். இதை, இவர்கள் ‘மந்தா’ என்றும் அழைப்பதுண்டு. இந்த இடங்களெல்லாம் நீர்நிலைகளை அடிப்படையாக வைத்தே அமைக்கப்பட்டவையாகும்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல்: குழையல் சோறு! - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ்-
இலக்கியம்
11 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


வேப்ப மரம் பெரும்பாலும் பங்குனி தொடங்கி வைகாசி மாதங்களில் பூக்கும்.நன்றாக வைகாசியில் வேப்பம்பூ  பூத்துக்குலுங்க எங்கள் வீட்டு வேப்பம்பூவில் வடகத்தைத்தட்டிப் பாயில் போட்டுக் காயவைக்க  அப்பாவும், அம்மாவும் தங்களைத் தயார்படுத்துவார்கள். அதுவே அன்று எமக்கு பெரும் செயல்முறையாக இருந்தது.முற்றத்தில் பாய்விரித்து வடகத்தைத் தட்டி பாயில் காயவைக்கும்போது,காற்று புழுதியையும் மண்ணையும் சேர்த்து அள்ளிக்கொண்டு வந்து ஈரப் பதத்திலிருக்கும் வடகத்தில் விழுந்துவிட்டால்போதும்,அந்த வடகங்களை உண்ணவே முடியாது. கர கரவென்று வாய்க்குள் மண்தான் கடிபடும்.ஓரிரு நாட்களின் உழைப்பு முழுவதும் வீணாய்ப்போய்விடும். மனமும் கலங்கும்.காயப்போட்ட இடத்திற்கு நாயோ, பூனையோ,அணிலோ, காகமோ எதுவுமே வந்து கொத்தியோ, மிதித்தோவிடக்கூடாது என்பதற்காகவே பாய்களுக்குப் பக்கத்திலேயே கிளுவம் தடியுடன் அன்று அரைக்காற்சட்டை போட்ட  இளசுகள் நாம் காவலிருந்தோம்.

ஒன்று  தட்டை வடகம், அடுத்தது காம்பு வடகம் என இரண்டு வகையாக எம் வீட்டு வடகங்கள் இருந்தன. காம்பு வடகமானது காலப்போக்கில் காணாமல் போனது.காம்புடன் இருக்கும் பூக்களை, அரைத்துப் பினைந்து குளைத்த உழுந்துக்குள் அப்படியே முழுமையாக தோய்த்து எடுத்துக் காயவைப்போம். காய்ந்ததும் பாக்கு வெட்டியால் துண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்தால் அதுவே காம்பு வடகம்.அது கூடச் சுவைதான். "அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டால், 'காம்பு வடகம் தட்டை வடகம்போல மென்மையாய்  இருக்காது'. காம்பிலிருந்து முழுமையாகப் பூக்களை உருவி எடுத்துச் செய்வது தட்டை வடகம்.விரத நாட்களுக்கு மரக்கறிகளுடன் வடகமும் சேர்ப்பதுகூட நம் பாரம்பரியம்தான்!

இது மட்டுமல்ல,இந்த திட்டம்  முடிய அடுத்ததாய், கூட்டி அள்ளி குப்பைகளை அகற்றியபின் சாணி தெளித்த முற்றத்தில் பாய்விரித்து அடுக்கி மோர் மிளகாய்த் திட்டமும் வெந்து தணியும்.குசினிக்குள்ளே உறிகள் தொங்க, அங்கே பானைகளுக்குள் வெண்ணெயும், தயிரும்,மோரும், பானைக்குள் அடைத்த புளியும் கூடியிருந்து எம்மோடு ஒன்றாய்க் கலந்து பண்பாட்டைக் கட்டிக்காத்த பொற்காலச் சுவடது. இப்படித்தான் எம் வாழ்விருந்தது. வாழ்விற்குள்  எப்போதும் ஓர் நேசமிருந்தது.

மேலும் படிக்க ...

அமெரிக்கப் பயணத்தொடர்: மேற்கு அமரிக்கா (3 & 4) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
09 ஏப்ரல் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

அமெரிக்கப் பயணத்தொடர்: மேற்கு அமரிக்கா (3) 

மொன்யூமென்ட் வாலி (Monument Valley) எனப்படும் பகுதி உத்தா, அரிசோனா என்ற இரு மாகாணங்கள் இடையே உள்ள பிரதேசமாகும். தற்போது இந்தப் பிரதேசம் அமெரிக்க ஆதிகுடிகளின் வசம் உள்ளது. அவர்களில் முக்கியமாக நவகோ (Navajo Nation) என்ற ஆதிகுடிகளின் ஆட்சியிலும் தன்னாட்சியிலும் உள்ளது. தற்போது இவர்களே இப்பேகுதியில் வாழும்  பெரிய இனக்கூட்டமாகியுள்ளனர். அவர்களது அனுமதியுடனே மொன்யூமென்ட் வாலிக்கு நாம் செல்ல முடியும்.

இந்த மொன்யூமென்ட் வாலி என்பது மிகவும் பெரிதான கற்கள்,  சிறிய குன்றுகள் போல் பல வடிவங்களில் அமைந்திருக்கும் இடமாகும். ஒவ்வொன்றின் வடிவத்திற்கும் பெயரிட்டு, அவற்றில் அவர்களது தெய்வங்கள் குடியிருப்பதாக நவகோ மக்கள் நம்புகிறார்கள். இதனால் இந்த இடங்கள் புனிதமானவை.

இந்த இடங்களே பல ஹாலிவுட் கவ்போய் படங்களில் வரும் இடங்களாகும். சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ள இந்த பாறைகளில் செப்பு, இரும்பு, யுரேனியம் போன்ற கனிப்பொருட்கள் உள்ளன. அமெரிக்காவில் யுரேனியம் இருந்தும்,  வருடாவரும் 800 மில்லியன் டாலருக்கு ரஸ்சியாவிலிருந்து யுரேனியம் வாங்குவதன் காரணம் என்ன தெரியுமா? இந்த இடம் புனித பிரதேசமாக இருப்பதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

பல உருவங்களில் உயர்ந்து நிற்கும் இந்தப் பாறைகள் ஒருவித உயிருள்ள உருவங்களைப் போன்றே தோன்றுகின்றன. இந்தப் பகுதியின் மேற்பார்வை நவகோ ஆதிவாசிகளிடம் இருப்பதால், அவர்கள் தங்கள் ஜீப்புகளில் எங்களை அழைத்துச் சென்றனர். பல இடங்களை அவர்கள் தங்கள் மூதாதையர்களின் தெய்வ வடிவங்களாகவும், வாழ்க்கையின்  வழிகாட்டிகளாகவும் கருதுகிறார்கள் என்றும் கூறினர். அவர்களின் நம்பிக்கைகள்,  இன்னும் நிறுவனப்படுத்தப்படாதது  வரவேற்கத்தக்கதாய் இருந்தது. நிறுவனமயப்பட்டால் அதை வைத்து ஒரு வர்க்கம்  உருவாகி இருக்கும். அதே வேளையில் இவர்களது இந்த நம்பிக்கையே,  அவர்களுக்கு அரசிடமிருந்து நில உரிமையைப் பெறவும் அதன் பொருளாதாரத்தில் பயன்பெறவும் உதவியுள்ளது. 

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. எமிலியின் ‘கோண்டல்’ எனும் புனைவுலகம்! - முனைவர் பத்மா ஸ்ரீ்தர் (நாங்குநேரி வாசஸ்ரீ்) -
  2. 23-24 வயதுகளில் பாரதியின் வர்க்கச் சிந்தனைகள் (4)! - எல்.ஜோதிகுமார் -
  3. அமெரிக்காவின் மேலாதிக்கப் போரும், உலகளாவிய பொருளாதார வாழ்வியல் நெருக்கடிகளும்: ஒரு புவிசார் அரசியல் பகுப்பாய்வு! - ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -
  4. 'ஈரான் - அமெரிக்க' யுத்தம் பற்றியதோர் அலசல்! - எல். ஜோதிகுமார் -
  5. நீலகிரிப் படகர்களின் தொல்மரபில் சங்கக் கூறுகள் (நாகு – நெலிகோலு – ஒக்கலு)! - முனைவர்.கோ.சுனில்ஜோகி -
  6. 23-24 வயதுகளில் பாரதியின் வர்க்கச் சிந்தனைகள் (3)! - எல்.ஜோதிகுமார் -
  7. தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்! - நடேசன் -
  8. செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இளைய சமூகத்தினரிடையே மின்னணு அடிமையாதலும், மரபு மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவமும்! - பவானி சற்குணசெல்வம் -
  9. எட்டுத்தொகை அக நூல்களில் காணலாகும் வணிகவியல் தொடர்புகள்! - முனைவர் சா. சதீஸ் குமார் -
  10. சிறுகதை: இல்லத்திற்கு அவள் அரசி - தாருணி பாலேசன், அவுஸ்திரேலியா -
  11. நான் பாடகரானால்..... - வ.ந.கிரிதரன் -
  12. கம்பராமாயணத்தில் பல சொல் ஒரு பொருள் – அரசன்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -
  13. 'காலம்' இலக்கிய நிகழ்வு! இரு நூல்களின் அறிமுகமும் , உரையாடலும்! காலம் 63 வெளியீடு!
  14. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “கனடாவில் தமிழ் மரபுக் கவிதைகள் - உள்ளடக்கங்களும் உணர்த்துமுறைகளும்”
பக்கம் 1 / 126
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி