பதிவுகள் முகப்பு

முல்லைஅமுதன் கவிதைகள் இரண்டு!

விவரங்கள்
முல்லைஅமுதன்
கவிதை
25 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.

கதை சொல்லும்போது  உம்  உம் கொட்ட வேண்டும்.
சுவாரஸ்யம் அவருக்கு இருக்காது.
சிறு குறும்புகளெனினும் கைத்தடி
என் முதுகைப் பதம் பார்க்கும்
அக்கா வலிக்கு ஒத்தடம் கொடுப்பாள்.
அம்மா உள்ளுக்குள் அழுவாள்.
அப்பா தன் கண்டிப்பை விடுவதாயில்லை.
அக்காவுக்குத் திருமணம் ஆயிற்று.
கதை சொல்ல முடியவில்லை.
பேரன் கிடைத்தான்.
அவனும் சாதுர்யமாக உம் கொட்டிக் கொண்டே  தூங்குவான்.
அப்பாவுக்கும் உள்ளூர மகிழவே...
ஒருநாள் பேரனிடமிருந்து உம் வரவில்லை.
அவனின் முதுகைப் பதம் பார்த்துவிட்டது கைத்தடி.
அக்கா கோபத்தில் வெளியேறிவிடடாள்.
அம்மா உள்ளுக்குள் அழுது தீர்த்தாள்.
கதைச்செல்ல அப்பாவுக்கு ஆள் கிடைக்கவில்லை.
சுவருடன்,மரங்களுடன்,
பூக்களுடன்
பேசி இறந்துபோனார்.

மேலும் படிக்க ...

ஸ்டெம் கல்வி (Stem-Kalvi)தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் “ஆயிரம் தமிழ் வாசிப்புப் புத்தகங்கள்" செயற்றிட்டம். - கலா ஸ்ரீரஞ்சன் -

விவரங்கள்
- கலா ஸ்ரீரஞ்சன் -
சிறுவர் இலக்கியம்
24 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Website: Stem-Kalvi  | Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது.  ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்களின் வாசிப்பும், வாசிப்புத்திறனும் குறைந்திருப்பதாக அண்மையில் இலங்கையில் யூனிசேப் (UNICEF) நிறுவனம் செய்த ஆய்வொன்று தெரிவித்திருந்தது. இதையடுத்து ஸ்டெம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனம் இதன் அடிப்படையில் புதிதாக இளம் மாணவர்களுக்காக ஒரு வாசிப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.

 இது குறித்து ஸ்டெ ம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கலாநிதி குமாரவேலு கணேசன் பின்வருமாறு குறிப்பிட்டார்.

"அண்மையில் யூனிசேப் நிறுவனத்தால் இலங்கையில் நடாத்தப்பட்ட 3ஆம் வகுப்பு மாணவர்களின் வாசிப்புத்திறன் பற்றிய ஒரு ஆய்வில் தமிழ் பிரதேசங்கள், முக்கியமாக வடமாகாணம், மிகவும் பி ன்தங்கி ய நிலையில் இருந்ததை நாம் எல்லோரும் அவதானித்தோம். வடமாகாணத்தில் 16% ஆன 3ம் வகுப்பு மாணவர்களும், கிழக்கு மாகாணத்தில் 25% ஆன 3ம் வகுப்பு மாணவர்களுமே அவர்களின் வயதுக்கேற்ற வாசிப்புத்திறனைக் கொண்டுள்ளதாக இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 3ம் வகுப்பு தமிழ் மாணவர்களின் வயதிற்கேற்ற வாசிப்புத்திறன் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் மத்திய மாகாணத்தில் 11% ஆகவும், தென் மாகாணத்தில் 5% ஆகவும், ஊவா மாகாணத்தில் 12%ஆகவும், சப்பிரகமுவா மாகாணத்தில் 19% ஆகவும் காணப்படுகின்றது. மேல் மாகாணத்தில் கூட சிங்கள மாணவர்களின் வாசிப்புத்திறன் 52% ஆகக்காணப்படும்போது தமிழ் மாணவர்களின் வாசிப்புத்திறன் 30% ஆகவே காணப்படுகின்றது. இக்குறைபாட்டை கூடிய விரைவில்  நிவர்த்தி செய்யாவிடில் எமது இளம் சமுதாயம்  திறமையாக  வாசிக்க  முடியாத ஒரு  எதிர்கால சந்ததியை  உருவாக்கி விடும்.

மேலும் படிக்க ...

Stem-Kalvi நிறுவனத்தின் "சிறுவர்களுக்கான 1000 புத்தகங்களை உருவாக்கும் திட்டம்'. - தகவல்: ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- தகவல்: ஶ்ரீரஞ்சனி -
நிகழ்வுகள்
24 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூலை வாசிக்க

சிறுவர்களுக்கான 1000 புத்தகங்களை உருவாக்கும் இலக்குடன்  Stem-Kalvi செயற்பட்டு வருகிறது. நீங்களும் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். தொடர்புகொள்வதற்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். இந்தப் புத்தகங்கள் இலவசமானவை, இவற்றை stemkalvi.org/books என்ற வலைத்தளத்தில் பார்வையிடலாம்.  உங்களுக்குத் தெரிந்த சிறுவர்களுடன் சேர்ந்து வாசிக்கலாம். பின்னூட்டமிடலாம்."

மேலும் படிக்க ...

சந்திராயன் 3 இன் வெற்றி மானுட குலத்தின் வெற்றி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அறிவியல்
23 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சந்திரயான் - 3 வெற்றிகரமாகச் சந்திரனின் தென் துருவத்தில்  இறங்கியதன் மூலம் அப்பகுதியில் இறங்கிய முதலாவது நாடு என்னும் பெருமையினை இந்தியா பெற்றுள்ளது. இது இந்தியாவின்  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இசுரோ'வுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. மானுட குலத்துக்கே கிடைத்த வெற்றி. வாழ்த்துகள்.

மேலும் படிக்க ...

ஜெயிலர் திரைப்படமும் , நியாயப்படுத்த முடியாத வன்முறையும்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
22 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் கண்டு எல்லோரும் பிரமித்துக்கிடக்கின்றார்கள். தமிழகத்து மக்கள் எல்லோரும் 'தலைவர்' படமென்று குடும்பம் குடும்பமாகச் செல்கின்றார்களாம்.எனக்கு இம்மக்களின் உளவியலைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
 
ஜெயிலர் படத்தில் தேவையற்ற விதத்தில் வன்முறைக் காட்சிகள் அமைந்துள்ளன. உதாரணத்துக்கு ஒன்று. திரைப்படத்தின் ஆரம்பத்தில் ரஜனிகாந் தன் மகனைக்கொன்று விட்டதாகக் கருதி மூவரை கொலை செய்து விடுகின்றார். ஒருவரைக் கொன்று சாக்கில் தூக்கி வந்து யோகிபாபுவுடன் சேர்ந்து பாலமொன்றிலிருந்து தூக்கி எறிந்து விட்டு இயல்பாக, ஏதோ வெற்றிகரமான காரியத்தைச் செய்து விட்டதைப்போல் செல்கின்றார்கள்.
 
பின்னர் இறுதியில் அதே ரஜனிகாந்த் உயிரோடிருக்கும் தன் மகனை அவனது குற்றங்களுக்காகப் பொலிசில் சரண்டையச் சொல்கின்றார். அவன் மறுக்கின்றான். அவருக்கெதிராகத் திரும்புகின்றான். விளைவு அவனையும் போட்டுத் தள்ளுகின்றார்.  ஏற்கனவே அவன் இறந்து விட்டதாகக் கருதி மூவரைப் போட்டுத்தள்ளிய கொலைக்குற்றவாளி, தன் உயிரைக் காப்பதற்காகத் தன் மகனையே போட்டுத்தள்ளுகின்றார். தலைவரின் இரசிகர்கள் சொல்கின்றார்கள் 'படத்தின் முடிவு சுப்பர். எதிர்பார்க்கவே முடியாது. சூப்பர்' இது எப்படி இருக்கு?
மேலும் படிக்க ...

சு.சமுத்திரத்தின் நெருப்புத் தடயங்கள் புதினம் காட்டும் சமுதாயமும் அதன் பின்புலமும் - முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி -635 752 -

விவரங்கள்
- முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி -635 752 -
ஆய்வு
22 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

புதினமோ, கதையோ, சிறுகதையோ எதுவாயினும் அது, தான் தோன்றிய காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தைப் பற்றியதாக இருக்கும். ‘நெருப்புத் தடயங்கள்’ என்றும் புதினங் காட்டுஞ் சமுதாயம் யாது என்பதையும் அதன் பின்புலம் யாது என்பதையும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கம்.

இலக்கியமும் சமுதாயமும்

இலக்கியங்கள் யாவும் சமுதாயத்தில் நடந்த அல்லது நடக்கின்ற நிகழ்ச்சிகளைச் சுவைபடக் கூறுவனவாகும். சமுதாயத்தின் ஒரு கால கட்டத்தில் நிகழ்ந்த அல்லது நிகழுகின்ற நிகழ்ச்சிகளைக் காட்டும் ஒரு சமுதாயப் படங்காட்டும் கருவி என்று கூடச் சொல்லலாம்.

“மனிதர்கள் வாழ்க்கையில் கண்டவை, அவர்கள் கண்டு அனுபவித்தவை, உடனே கவர்ச்சி ஊட்டுபவை, நிலையாக நின்று கவர்ச்சி ஊட்டுபவை எவையோ, அவைகளைப் பற்றிச் சிந்தித்தவை, சிந்தி;த்து உணர்ந்தவை இவைகளைப் பற்றி அறிவிப்பதே இலக்கியமாகும்”1 என்னும் ஹட்சனின் கூற்று ஈண்டு நினைக்கத்தக்கது.

மனிதன் சமுதாயத்தில் கண்டதையும், அனுபவித்ததையும் வைத்துக் கொண்டே இலக்கியங்கள் படைக்கிறான். ஆகவே, மனிதனையும், சமுதாயத்தையும் அறிய இலக்கியம் நமக்கு உதவுகின்றது. காலத்திற்கேற்றவாறு சமுதாயமும் இலக்கியமும் மாறுகின்றன. சமுதாயமும் இலக்கியத்துள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எனவே, “இலக்கியம் ஒரு சமுதாய நிலையம்”2 என்பார் கூற்று சாலப் பொருந்துவதேயாகும்.

மேலும் படிக்க ...

eKuruvi Steps 2023!

விவரங்கள்
- ekuruvi -
நிகழ்வுகள்
20 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

மேலும் படிக்க ...

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் மூன்று!

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
20 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஓடியே ஒளிவதைத் தவிர்ப்போமே

தவறைச் சுட்டிக் காட்டிட வேண்டுமே.
தப்பைத் தட்டிக் கேட்டிட வேண்டுமே.
இவற்றை செய்யாது இருப்போரே
இவ்வுலகில் அதிகம் பேராவார்.

அறம் பிழைக்குது நாளுமிங்கே.
அதை தடுத்திட வருவாரில்லை.
மறம் கொண்டே இயங்கிடும்
மனிதர் இன்றெம்மிடை இல்லையே.

வீட்டினுள் வீரம்பேசிடுவர் பலர்.
வெளியில் அநீதி கண்டு ஒதுங்கிடுவர்.
நாட்டினில் இவர்போல் பலர் உளதால்
நாளும்பல தப்புகள் நடக்குதுவிங்கு.

அடுத்தவர்க்கு நடக்கும் அநீதி
அதைக் கண்டும்காணாது செல்வர்.
அடுத்தது தமக்கும் நடக்கு மெனவிவர்
அறியாது இருப்பதே கொடுமையடா.

வருமுன் காப்பது முறமையன்றோ.
வந்தபின்அழுதுதானென்ன பயன்?
ஒருமுறை சிந்தித்துப் பார்ப்போமே.
ஓடியே ஒளிவதைத் தவிர்ப்போமே.

மேலும் படிக்க ...

மலையகத் தமிழ் மக்கள் இந்திய வம்சாவழித் தமிழர் என்ற அடையாளத்தை மறுப்பதற்கான காரணிகள்! - சடகோபன் ராமையா -

விவரங்கள்
- சடகோபன் ராமையா -
அரசியல்
19 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மலையக தமிழ் மக்கள் தம்மை இந்தியர்கள் என்று அழைத்துக் கொண்டதால்......

(   அ )   1948ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி  அரசாங்கம் பிரஜா உரிமை பறிப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்து பிரஜா உரிமையையும் வாக்கு உரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர் ஆக்கி அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கே போய்விடவேண்டும் என்று கோஷமிட்டார்கள். இந்திய வம்சாவழி மக்கள் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த நாட்டின் அரசாட்சியை கைப்பற்றி விட கூடும் என்று அச்சம் அப்போது எழுந்தது.

   (  ஆ  )  1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இந்த மக்களின் பத்து பேரில் 7 பேர் இந்தியாவுக்கு  போய்விடவேண்டும் என்று ஒப்பந்தம் செய்து ஏழு இலட்சம் பேரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்கள்.

     (  இ  )    1945ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் கொழும்பு துறைமுகத்தின் மீது குண்டு வீசப்பட்ட போது கொழும்பு புறக்கோட்டை தமிழ் வர்த்தகர்கள் அனைவரும் தமது கடைகளை மூடிவிட்டு பாதுகாப்புக்காக இந்தியா சென்றுவிட்டனர் . இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.  " இவர்கள் இவ்விதம் நெருக்கடியான நேரத்தில் நாட்டை விட்டு ஓடியவர்கள் , நாட்டுப் பற்று அற்றவர்கள் என்றும், அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி விடவேண்டும் என்றும் " அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சராக இருந்தவருமான ஜே. ஆர். ஜெயவர்த்தன பாராளுமன்றில் உரையாற்றியமை பாராளுமன்ற பதிவு புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க ...

கடல் நீலம் - கன்பரா யோகன் -

விவரங்கள்
- கன்பரா யோகன் -
சிறுகதை
19 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                   - ஓவியம் - செயற்கை அறிவு (AI) -

அன்று காலையில் புறப்படும்போது சூரியன் வரவில்லை. என்றாலும் மழை வரும் என்று காலநிலை அறிக்கையில் இருக்கவில்லை. ஆனாலும் வழமையான அதி எச்சரிக்கையுடன் குடையைக் கொண்டு போங்கள் என்று மனைவி தனது மடிக்கக் கூடிய கடல் நீல நிறக் குடையைத் தந்து விட்டாள். நான் மறுத்தும்  கேட்கவில்லை. இப்போதே நீங்கள் ஊகித்திருப்பீர்கள் நான் குடையை மறந்து விட்டு வரப்போகிறேன் என்று.  உண்மைதான். எனவே புதிய திருப்பங்களிலாத  இந்தக் கதையை இப்போதே மூடி வைத்து விட்டாலும் உங்களுக்கு  நேரம் மிச்சம்தான். இலகுவாக மறந்து விட்டு விடக்கூடிய அல்லது  தொலைத்து விடக்கூடிய பொருட்கள்  என்று அகில உலகத்துக்கும் ஒரு கருத்துக்  கணிப்பு நடத்தினால் அதில் முதல் இடத்தில் இருக்கக்கூடியது குடைதான் என்று நினைக்கத் தோன்றுகிறது.  மேகம் மூடிக் கொண்டிருக்க மழை என்று கொண்டு போவோம். பிறகு சூரியன் சிரித்துக் கொண்டே வரும். அன்றைக்கு பஸ் தரிப்பிடத்திற்கு  நடந்த அந்த பதினைந்து நிமிடங்களில் ஒரு துளிதானும் மேலிருந்து விழவில்லை. பிறகு வெய்யில் வந்தாலும் அதுக்கு கொண்டு போன குடையைப் பிடிக்கவும் முடியாது. அதுவும் இந்தக்  குளிர் தேசத்தில் வெயிலை ஆனந்தமாகத் தோலில் அள்ளிக் கொள்ள நினைக்கும் எவரும் வெயிலுக்கு குடை பிடிக்கும் யாரையும் பைத்தியங்கள் என்று எண்ணி விடலாமல்லவா?     

அன்று மாலை வேலை முடிந்து நகரத்தில் பஸ் ஏறியபோது கிட்டத்தட்ட ஆசனங்கள் எல்லாம் நிரம்பியிருந்தன. கொண்டு போயிருந்த நாவலொன்றை காலையிலேயே பஸ்ஸில் யன்னல் வழி வந்த நல்ல காலைச் சூரிய வெளிச்சத்தில் சர சரவென்று பல பக்கங்களை வாசித்து விட்டிருந்தேன்.  இப்போது மிகுதியை இந்த மங்கலான சாயங்கால வெளிச்சத்தில் வாசிப்பது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. கண் பார்வையிலும் சில நாட்களாகப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டு சிறிய சிகிச்சையும் செய்திருந்ததுதான் காரணம்.   

மேலும் படிக்க ...

சிறுகதை: மம்மியுடன் சில சொற்கள் - எட்கர் ஆலன்போ | தமிழில் : முனைவர் இர.மணிமேகலை, இணைப்பேராசிரியர்& தமிழ்த்துறைத்தலைவர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி., பீளமேடு, கோயம்புத்தூர், தமிழகம், இந்தியா. -

விவரங்கள்
- எட்கர் ஆலன்போ | தமிழில் : முனைவர் இர.மணிமேகலை, இணைப்பேராசிரியர்& தமிழ்த்துறைத்தலைவர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி., பீளமேடு, கோயம்புத்தூர், தமிழகம், இந்தியா. -
சிறுகதை
19 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    எட்கர் ஆலன்போ (செயற்கை அறிவு, AI, உருவாக்கிய ஓவியம்) -

முந்தைய நாள் மாலையில் மாநாட்டுக்காகச் செய்த ஏற்பாடுகள் என் நரம்புகளுக்குச் சற்று அதிகம்தான். எனக்கு மிக மோசமாகத் தலையை வலித்தது, தூங்க வேண்டும் போல இருந்தது, மாலையில் வெளியே செல்லலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் முடிவை மாற்றி விட்டேன். அதற்குப் பதிலாக லேசாக இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போகலாம் என்று நினைக்கிறேன். என்னைப்போல் எளிய இரவு உணவு சாப்பிடும் எண்ணம் இல்லை என்று என் மனைவி ஒரு வேளை உங்களிடம் கூறலாம். நான் மூன்று அல்லது நான்கு ‘சீஸ் பை’ சாப்பிட்டு இருக்கலாம். அத்துடன் நிறைய மது அருந்தி இருந்தேன், ஐந்து குப்பிகள். நான் ஏற்றுக் கொள்கிறேன் அது குறைந்த அளவில்லை.

நான் இரவு உணவை உண்டு விட்டு மறுநாள் காலையில் சற்று நேரம் வரை தூங்கலாம் என்ற நம்பிக்கையுடன் உறங்கச் சென்றேன். உடனடியாகத் தூங்கி விட்டேன். ஆனால் நான் நினைத்ததைப்போல் இரவில் நன்றாகத் தூங்க முடியவில் லை. நான் தூங்கி அரை மணி நேரம் ஆகி இருக்காது, முன் கதவிலிருந்து அழைப்பு மணி சத்தமாக ஒலித்தது. யாரோ பொறுமை இல்லாமல் கதவைத் தட்டினார்கள் ஒரு நிமிடம் கழிந்திருக்கும் நான் கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தேன். என் மனைவி மூக்கிற்கு நேராகக் குறிப்புச் சீட்டு ஒன்றை நீட்டினாள். மிகவும் நெருங்கிய மருத்துவ நண்பரான பானனரிடமிருந்து அந்தச் சீட்டு வந்திருந்தது. “நண்பரே என்னை சாந்தியுங்கள்’ என்று அந்தக் குறிப்பு சொன்னது. “எங்களுக்கு உதவுங்கள், எங்களுடைய அதிர்ஷ்டம் அருங்காட்சியகத்தின் இயக்குனர் இறுதியில் பதப்படுத்தப்பட்ட மம்மியைச் சோதித்தறிய எங்களை அனுமதித்திருக்கிறார். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அதைப் பிரிக்க எனக்கு அனுமதி இருக்கிறது. சில நண்பர்கள் மட்டுமே உடனிருப்பார்கள். நீங்களும் தான், நீங்களும் சேர்க்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்றிருந்தது. மம்மி இப்பொழுது என் வீட்டில் இருக்கிறது. இன்று இரவு 11 மணிக்கு நாம் அதைத் திறக்கலாம் என்றும் இருந்தது.

மேலும் படிக்க ...

பாடகி ஜிக்கி நினைவாக.. - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
18 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
பாடகி ஜிக்கியின் நினைவு தினம் ஆகஸ்ட் 16. அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது பாடல். 'கல்யாணப் பரிசு' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இசை ஜிக்கியின் கணவர் ஏ.எம்.ராஜா. நடிப்பு விஜயகுமாரி.  https://www.youtube.com/watch?v=bCmYKKuPJsk

மீளுகை! - முனைவர் இர. மணிமேகலை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்- 641004 தமிழகம், இந்தியா. -

விவரங்கள்
- முனைவர் இர. மணிமேகலை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்- 641004 தமிழகம், இந்தியா. -
கவிதை
17 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அப்பா உலகைப் பிரிந்த நாளதிலிருந்து
எழுதுகோல் தாளுடன் உறவாடவில்லை.
சூரியக்கதிர்கள் வெளியை மஞ்சளாக்க
நிலவின் கதிர்கள் நீலம் காட்ட
காலங்கள் கடந்தன.
குறுந்தாடிச் சகோதரனவன்
நிலவது வட்டம் தோற்கும் அழகின் முகம்
பெண் மொழி பேசுவான்.
பெண் மொழியச் சொல்வான்.
மலர் நிறை தடாகத்தில் துள்ளும் மீன்களது நீச்சலென
மொழி புனையும் பெண்ணெழுத்தைக் காதல்கொள்பவன்.

மேலும் படிக்க ...

ம.ஆச்சின் (தமிழ்நாடு) கவிதைகள் நான்கு!

விவரங்கள்
- ம.ஆச்சின் (தமிழ்நாடு) -
கவிதை
17 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

1.

சமூக நீதிக்  காவலர் கலைஞர்!

திருக்குவளையில் பிறந்தவரே,
திருக்குறளை மீட்டவரே!
பதினான்கு வயதில்  அரசியலில்
புகுந்தவரே. செயற்
பட்டவரே!
திராவிடத்தின் அணையா  விளக்கே!
தமிழரின்  கலங்கரை விளக்கே!
கலைஞருக்குப் பிடித்த கலைஞர்!
காளையரைக், கன்னியரைக்
குழந்தைகளைக் கவர்ந்த கலைஞர்!
கலைஞரின் பேனா,
காகிதத்தில் அலைபாடும்
தானா!

மேலும் படிக்க ...

பயணியின் பார்வையில் – 01 கௌதம புத்தர் எங்கும் இருப்பார் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
16 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பாதுகாப்பு முதலான திரைப்படங்களை இயக்கிய பிரபல இந்திய நெறியாளர் ஏ. பிம்சிங் அவர்கட்கு புத்தர் மீது பேரபிமானம். அதனால், தனது திரைப்படங்களில் புத்தர் சிலையை அடிக்கடி காண்பிப்பார். எம்.ஜி. ஆர் . இரட்டை வேடத்தில் நடித்த குடியிருந்தகோயில்  ( 1968 ) இலங்கையில் வெளியானது. இத்திரைப்படத்திலும்  புத்தர் சிலை வருகிறது.  ஒரு எம்.ஜி.ஆர். படுகாயங்களுடன் ஒரு வீட்டினுள்ளே நுழைந்து பெருங்குரல் எடுத்து ஒரு ஷோகேஸில் ஓங்கித் தட்டுவார். அப்போது அதிலிருந்த சிறிய புத்தர் சிலை ஆட்டம் காணும். அக்காலப்பகுதியில் அந்தக்காட்சியை நீக்கவேண்டும் என்று இலங்கை திரைப்பட தணிக்கை அதிகாரிகள் சொன்னதாக ஒரு தகவலும் இருக்கிறது. சமகாலத்தில் புத்தர் இலங்கையில் பேசுபொருளாகிவிட்டார்.  

மேலும் படிக்க ...

வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
15 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இயற்கையின் பேரழகில் தன்னை இழக்கும் ஒரு கலைஞன் சமகாலத்தில் அறிவுஜீவியாக பேரண்ட இரகசியங்களோடு சார்பியல் பற்றியும் கவி படைக்கையில் நிஜமாகவே ஆச்சரியத்தில் உறையுமொரு வாசகியின் வியப்பு மிகுந்த ரசனைக் குறிப்பிது. நவீன இயற்பியலின் தந்தையான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் நனவுலக மாணவனாக காலவெளி, மானுட இருப்பு, காலம் ,நேரம், பரிமாணம் என அறிவுணர்வின் தேடலுடன் அலையும் இக்கவி, காணும் இடமெங்கும் கண்ணம்மாவுடன் கதை பேசும் மகாகவியின் கனவுலக ரசிகருமாவார்.

 இக் கவிஞரை, 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் கவிதைத் தொகுதியூடாக முறையாக இனம் கண்ட வாசகர் எந்த விதத்திலும் வியப்படையத் தேவையில்லை. வ.ந.கிரிதரன் அவர்களின் இத்தேடல் உணர்வையும், ஏக்கத்தையும் பிரபஞ்சத்தின் மேல் கொண்ட பிரியத்தையும் அவரது படைப்புகளில் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கும்.

இக்கவிதைத் தொகுப்பினை வாசிப்பதற்கு முன் இயற்கை பற்றியும் நவீன இயற்பியல், சார்பியல், அண்டம், குவாண்டம், ஒளியாண்டு பற்றிய எளிய அறிதலையேனும் பெற்றுக் கொண்டால் இப்படைப்பினை வியந்து நோக்கலாம். பிரமிப்பை அடையலாம். இல்லாவிடில் 'நகரத்து மனிதனின் புலம்பலாகவே ' அமைய நேரிடலாம்.

மேலும் படிக்க ...

வடிவேலுவின் மற்றும் ஒரு பரிமாணம் மாமன்னன் ! பயணத்தின் வழியே ஒரு பார்வை! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் நாயகனாகவும் அதிக கவனத்திற்குள்ளான வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை எனது தொடர் வெளிநாட்டு பயணங்களுக்கிடையே பார்த்தேன்.

கடந்த ஜூன் மாதம் ரெட்ஜெயன்ட் மூவிஸின் தயாரிப்பில், மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வடிவேலு ( மாமன்னன் ) பகத்பாஸில் ( ரத்தினவேல் ) உதயநிதி ஸ்டாலின் ( அதிவீரன் ) கீர்த்தி சுரேஷ் ( லீலா ) ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், தமிழ் சமூகத்தில் சமகாலத்தில் பரவலாகப்பேசப்படுகிறது. இத்திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்ற குரலும் எழுந்திருக்கிறது. எனினும் வசூலில் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இதன் கதை சமகாலத்திலும் பேசுபொருளாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம்.

ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் முதலான திரைப்படங்களையும் சாதிப்பிரச்சினையை மையப்படுத்தி எடுத்திருக்கும் மாரி செல்வராஜ், மாமன்னன் திரைப்படம் மூலம் வடிவேலுவின் மற்றும் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காண்பித்துள்ளார்.

மேலும் படிக்க ...

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது!

விவரங்கள்
- தகவல்: பேனா மனோகரன் -
நிகழ்வுகள்
15 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “தென்கிழக்காசியாவின் தமிழ்த் தொல்லியற் சான்றுகள்”

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
15 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

அகிம்சையால் பாரதத் தாய் அடைந்திட்டாள் சுதந்திரத்தை ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
15 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்னுயிரைப் பலர்  ஈந்தார்
ஈன்ற மண்ணை மீட்பதற்கு
பல் கொடுமை அனுபவித்தார்.
பாரதத்தாய் துயர் களைய
காந்தியெனும் மகான் வந்தார்
கை பிடித்தார் அனைவரையும்
சாந்தி சாந்தி என்று
சத்தியத்தை தூக்கி நின்றார்.

கொள்ளை கொண்ட வெள்ளையர்
குமுறி  கனல் கொப்பளித்தார்.
வெள்ளமாய் குருதி மண்ணில்
பெருகுவிட வழி சமைத்தார்.
ஈரமின்றி உயிர் பறித்தார்.
இரக்கமதை மறந்து நின்றார்.
பாரத்தாய் துயர் அறியா
பாதகராய் மாறி நின்றார்.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம்: 'முருகபூபதியின் சினிமா -பார்த்ததும் கேட்டதும்'! 'தகவல்கள் நிறைந்த ஆவணம்'! - ஞா.டிலோசினி -

விவரங்கள்
- ஞா.டிலோசினி -
நூல் அறிமுகம்
13 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் முருகபூபதி அவர்கள் இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். புலம்பெயர் சூழலில் இருந்து பல்துறை சார்ந்து எழுதி வருகின்றார். இவரது நூல்களின் வரிசையில் முப்பதாவது வரவாக சினிமா : பார்த்ததும் கேட்டதும் என்ற கட்டுரை நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் முருகபூபதி, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதையும் பெற்றுள்ளார். அத்துடன் இம்மாதம் ( ஓகஸ்ட் 06 ஆம் திகதி ) பிரான்ஸில் வென்மேரி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றிருக்கிறார். முருகபூபதியின் சினிமா : பார்த்ததும் கேட்டதும் நூலை ஜீவநதி தனது 274 ஆவது வெளியீடாக வரவாக்கியுள்ளது.

இந்நூல் சினிமாவைப் பற்றிய 16 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும், பாதி உண்மையாகிப்போன ஓம்புரி, தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும், கவிதையும் திரைப்படப் பாடல்களும், முள்ளும் மலரும் மகேந்திரன், மனோரமா ஆச்சி, இயக்குநர்களின் ஆளுகைக்குள் அகப்படாத நாகேஷ், இலக்கியத்தினூடே பயணித்த பாலு மகேந்திரா, சிலையாகும் சரித்திரங்கள், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜா, ஈழத்து கலைஞர்களின் பொன்மணி, சினிமாவில் சாயலும் - தழுவலும் - திருட்டும் - எதிர் வினைகளும், பேசாப் பொருளைப் பேசத் துணிந்த திரைப்படம் President Supper Star ஆகிய தலைப்புகளில் 16 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. சினிமா தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனது அனுபவங்களை இக்கட்டுரைகள் மூலம் முருகபூபதி வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: பன்முகத்திறமை மிக்க கலைஞர் ரேலங்கி செல்வராஜா! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
12 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இவர் ஒ ரு சிறந்த ஊடகவியலாளராகவிருந்தவர். சிறந்த நடிகையாக ஒளிர்ந்தவர்; திறமை மிக்க நர்த்தகியாக மிளிர்ந்தவர். இவரதும், இவரது கணவரதும் நினைவு தினம்  ஆக்ஸ்ட் 12. இவர் நடித்த திரைப்படம் இலங்கையில் வெளியான முதலாவது சினிமாஸ்கோப் தமிழ்த்திரைப்படமான 'தெய்வம் தந்த வீடு' அதில் இவர் குமுதினி என்னும் பெயரில் நடித்திருந்தார்.  நடிகர் ஏ.ரகுநாதனுடன் நடித்திருந்தார். இவரது இனிய குரல் இவரைச் சிறந்த வானொலிக் கலைஞராக மின்ன வைத்தது.

அரசியலில் ஒருவர்மேல் ஒருவர்  சேற்றை வாரியிறைப்பார்கள். அதற்காக ஒருவரையொருவர் கொன்று குவிப்பதில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின்போது மாற்றுக்கருத்துள்ளவர்கள் பலர்  படுகொலை செய்யப்பட்டார்கள். இது இலங்கைத்  தமிழர்களுக்கு மட்டும் உரியதொன்றல்ல. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆயுதப்போராட்டங்களில் இவ்வகையான போக்கு நிலவியதைக் காண்கின்றோம்.  இவ்வகையான போக்கே பல நாடுகளில் ஆயுதப்போராட்டங்களின் தோல்விகளுக்கும் முக்கிய காரணங்களிலொன்றாகவிருந்தது.

இவரது கணவர் இவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டார். முன்னாட் போராளிகளிலொருவரான அவர் கொல்லப்பட்டபோது மனைவியுடன் சேர்ந்து 'பயண' வர்த்தக நிறுவனமொன்றினை நடத்திக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட இவர்கள்து பெண் குழந்தைக்கு வயது ஒன்று. இவர்தான் 'தெய்வம் தந்த வீடு' என்னும் இலங்கைத்தமிழ்த்திரைப்படத்தில் குமுதினி என்னும்  பெயரில் நடித்திருந்த ரேலங்கி செல்வராஜா. கொக்குவிலைச் சேர்ந்தவர்.  இவரது கணவரான சின்னத்துரை செல்வராஜா ஓமந்தையைச் சேர்ந்த முன்னாட் போராளி.

மேலும் படிக்க ...

பேராசிரியர் இரா முரளியின் 'சோக்கிரடீஸ் ஸ்டுடியோ' 'யு டியூப்' காணொளிகள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேனாட்டில் அறிவியல் அறிஞர்கள் சாதாரண வாசகர்களுக்காக மிகவும் சிக்கலான அறிவியல் விடயங்கள் பற்றியெல்லாம் மிகவும் எளிமை8யான மொழியில், அனைவரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் நூல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார்கள். உதாரணத்துக்கு ஸ்டீபன் ஹார்கிங்கின் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' நூலைப்பற்றிக்கூறலாம்.  இது போன்றதுதான் பேராசிரியர் இரா. முரளி தனது 'சோக்ககிரடீஸ் ஸ்டுடியோ' 'யு டியூப் சானல்' மூலம் பகிர்ந்து வரும் காணொளிகள்.

மேலும் படிக்க ...

எகிப்தின் கற்சாசனம்! - நோயல் நடேசன் -

விவரங்கள்
- நோயல் நடேசன் -
பயணங்கள்
09 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                 - ரோசற்ரே கற்சாசனம்' (Rosetta stone) -

பாரிஸ் , மட்ரிட், நியுயோரக் எனப் பல இடங்களில் அருங்காட்சியகங்களுக்கு நான் போயிருக்கிறேன். ஆனாலும் அங்கெல்லாம் ஏற்படாத ஒரு அதீத உணர்வு லண்டன் அருங்காட்சியகத்தில் ஏற்பட்டது. அதே நேரத்தில் தனி மரியாதையும் தவிர்க்க முடியவில்லை. முதல் ஏற்பட்ட உணர்வு பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

ஆஸ்திரேலியாவில் பல நாடுகளிலிருந்து பயணிகள் நாட்டினுள் கொண்டு வரும் சட்டமீறிய பொருட்களை பறிமுதல் செய்யும் சுங்க இலாகா, போதைவஸ்துக்கள் மற்றும் உணவு, பாவனை பொருட்களை எரித்துவிட்டு, நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பொது ஏலத்திற்கு விடுவார்கள். அப்படி பொருட்கள் ஏலத்திற்கு விடும் பொருட்களைக் கண்காட்சியாக வைத்து பின் ஏலத்திலிடுவார்கள். அப்படியான இடத்திற்கு விஜயம் செய்த அனுபவம் உங்களுக்கு உள்ளதா? அப்படியானதோர் அனுபவத்தை லண்டன் அருங்காட்சியகத்திற்கு சென்றபோது நான் எதிர்கொண்டேன். உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல வகையான தொல்பொருட்கள் அழகாக அங்கு அடுக்கிவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. நகைச்சுவையல்ல: உண்மை! அனுமதி முற்றிலும் இலவசமே!

அருங்காட்சியககட்டடம் மிகவும் அழகானது. விஸ்தீரமானது. உள்ளே களைத்தவர்கள் இளைப்பாறவும் உணவருந்தவும் இடமுள்ளது. மற்றைய அருங்காட்சியகங்களைப்போல் 'புகைப்படமெடுக்க தடை' போன்ற அறிவிப்புகள் இருக்கவில்லை. உலகத்தில் இதுவரை பிறந்து , வளர்ந்து அழிந்துபோன மானிட சமூகம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு சிருஷ்டிக்கப்பட்ட புது உலகமாக இது எனக்குத் தோன்றியது. உலகத்தின் வரலாற்றை அறிவதற்குச் சிறந்த இடம் வேறு எதுவுமில்லை என உள் உணர்வு சொல்லியது. ஒரு ஆலோசனை: ஒரே நாளில் இவற்றையெல்லாம் பார்க்க முயலவேண்டாம்.

மேலும் படிக்க ...

நூல் வெளியீட்டு விழா: "குவலயம் ஆளும் குடிசார் பொறியியல் " - தகவல்: அகணி சுரேஷ் -

விவரங்கள்
- தகவல்: அகணி சுரேஷ் -
நிகழ்வுகள்
08 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்ற கட்டுரைகள் ...

  1. தினகரன் ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதன் நினைவாக..... - வ.ந.கிரிதரன் -
  2. குறு நாவல் : கிராம விஜயம் - கடல்புத்திரன் -
  3. நோர்வே பயணத்தொடர் (6) : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே - ஶ்ரீரஞ்சனி -
  4. மலையகத்தின் சதுரங்க ஆட்டத்தில் ஒரு புதிய திருப்பு முனை (பகுதி இரண்டு) ! - ஜோதிகுமார் -
  5. செல்வச்சந்நிதியும் சித்தர்களும் - ஒர் ஆரம்ப உசாவல் - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  6. கம்பராமாயணத்தில் கிரகணம் குறித்த பதிவுகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
  7. அஞ்சலி: ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் மறைந்தார்! - குரு அரவிந்தன் -
  8. 'திருக்கைலாய ஞான உலா'வில் செய்திப் பரிமாற்றப் புலப்பாடு - முனைவர். கு.செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி -
  9. ஒரு மொழிமாற்ற நூலும் மெருகேறிய மரபுகளினுடனான அந்நூல் வெளியீடும்! - அவதானி -
  10. கனடா - சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்றுகூடல் - குரு அரவிந்தன் -
  11. ரொறன்ரோவில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு - சுலோச்சனா அருண் -
  12. கிழக்கிலங்கையில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிகழ்ச்சி - முருகபூபதி -
  13. ஆசி.கந்தராஜாவின் 'அகதியின் பேர்ளின் வாசல்' - வ.ந.கிரிதரன் -
  14. பயணத்தொடர்: வட இந்தியப் பயணம் (3) - நடேசன் -
பக்கம் 53 / 115
  • முதல்
  • முந்தைய
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • அடுத்த
  • கடைசி