குறிஞ்சித்தேன் நாவலில் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள்! - வெ. வளா்மதி, பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளா் -
முன்னுரை
நீலகிரிமலையில் வாழும் மக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்நாவல். அங்கே வழிவழியாய் வாழ்ந்து வரும் படகா் என்ற இன மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களே உருவமெடுத்துள்ளன. இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து வந்த அம்மலைவாழ் மக்களின் வாழ்க்கைப் போக்குகளை, வெளியில் பெருகி வரும் நாகரிக மாற்றங்களும், வணிகமும், தொழில் வளா்ச்சியும் பாதிக்கின்றன. மலையில், காப்பி, தேயிலை பயிரிடும் தொழில்கள் ஏற்படுகின்றன. இவற்றால் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மலைக்கு வெளிப்புற மனிதா்கள் இயல்புகள் மலைவாழ் மனிதரிடையேயும் மெல்லப் பரவுகின்றன. இச்சமூகம், பொருளாதார மாற்றங்களால் படகா் குடும்பத்தில் சிக்கல்கள், அதனால் ஏற்படும் உணா்ச்சிப் போராட்டங்களும் இந்நாவலில் அடிப்படையாக அமைந்துள்ளன.
இக்கட்டுரையில் “குறிஞ்சித்தேன்” நாவல்வழி உதகமண்டலம்(ஊட்டி) வாழ் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள் தொகுத்து ஆராயப்படுகின்றன.
படகா்
குறிஞ்சித்தேன் என்னும் நாவல் மலையில் வாழும் மக்களை மையமாக வைத்து எழுத்தப்பட்டது. நீலகிரி மக்கள் என்றால் நம்மில் பலருக்கும் ஆதிக்குடிகளான தொதவரே நினைவுக்கு வருவார்கள். நீலகிரியைத் தாயமாகக் கொண்டு வாழும் மக்களின் இந்த மலையின் வரலாற்றிற்கும் வளத்திற்கும் பெருமைக்கும் காரணமாக இருப்பவா் இவா்களே எனலாம். பதினெட்டாவது நூற்றாண்டில் மைசூரை அரசாண்ட திப்பு சுல்தான் ஆட்சியின்போது படகா் மைசூரிலிருந்து பண்டியூா்க் காட்டின் வழியாக நீலகிரிக்கு வந்ததாக அறிகிறோம்.

முன்னுரை
- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை -

யாழ்ப்பாணத்தில் நான் பழகக் கிடைத்த நண்பர்களில் புஷ்பராஜன் அபூர்வமானவர். அழகான இளைஞனாக - அமைதியும் தேட லும் வாசிப்பும் மிக்க இலக்கிய ரசிகனாக புஷ்பராஜனும் நானும் ஏ.ஜே.யுமாக யாழ் ரீகர் தியேட்டருக்கு முன்னால் உள்ள தேநீர்க்கடையில் உரையாடிக் கொண்ட நாட்கள் என் மன அடுக்கில் என்றும் தேங்கிக்கிடப்பவை.
பதிவுகள் இணைய இதழ் மற்றும் முகநூலில் தொடரும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் ,தன் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றார் இலண்டனில் வசிக்கும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரான ராகவன்.
எங்கள் தெய்வத் தமிழ் மொழிக்; கல்வியை லண்டன் மாநகரில்,எங்கள் இளம்தமிழ்ச் சிறார்களுக்கு முன்னெடுக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். எங்கள் தமிழ் மொழி மிகவும் நீண்டகால வரலாற்றைக் கொண்ட முதுமொழி.இன்று உலகில் பேசப்படும் கிட்டத்தட்ட 7000 மொழிகளில் முதல் வழிவந்த மூத்த மொழி.மனித இனத்தின் மேன்மைக்குப் பற்பல நூல்களை உலகுக்குத் தந்த மொழி.'எம்மதமுமு; சம்மதமே' என்ற உயரிய தத்துவத்தைக் கொண்டது'.'யாதும் உரோ யாரும் கேளீர்' என்ற அற்புதமான நான்கு வரிகளில் உலகில் நான்கு திசைகளிலுமுள்ளவர்களையும் ஒன்றாய் அணைக்கும் மொழி எங்கள் மொழி.
- தற்போது முகநூலில், பதிவுகளில் இடம் பெறும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் இடம் பெறும் கருத்துகளையிட்டு , எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது கருத்துகளை அனுப்பி வைத்துள்ளார். அவற்றையும் இங்கு பகிர்கின்றோம். - பதிவுகள் -

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மு.தளையசிங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. எழுத்தாளராக, சமூக, அரசியற் செயற்பாட்டாளராகச் செயற்பட்டவர்களில் அவருமொருவர். டானியல், அ.ந.கந்தசாமி, மு.தளையசிங்கம் போன்றவர்கள் எழுத்தாளர்களாக இருந்த அதே சமயம் தாம் நம்பிய அரசியல் கோட்பாடுகளுக்காக மக்கள் மத்தியில் இறங்கிச் செயற்பட்டவர்களும் கூட. 
- வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்! எதிர்வினைகளில் சிலவற்றில் பதிவுகள் இணைய இதழ் ஏற்கமுடியாத சொற்பதங்களுள்ளன. அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -
அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிழம்பிவிடுவான்.
- பதிவுகள் இணைய இதழில் வெளியான 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -' என்னும் கட்டுரைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் எதிர்வினை - பதிவுகள் -

தமிழ் மொழிச் செயற்பாட்டகம் இன்று இலண்டனில் நடாத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய Zoom வழி இணையவெளிக் கருத்தரங்கில் நான் கலந்துகொள்ளவில்லை, ஆனால் இக்கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, எழுத்தாளர் ஷோபா சக்தி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்ததை வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அப்பதிவில் ஷோபாசக்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
கண்டி-கொழும்பு பெருவீதியில் பயணித்திருக்கக் கூடியவர்களுக்கு, கேகாலை தென்பட்டிருக்க முடியுமாயினும், நகரத்திலிருந்து உள்ளே சுமார் பதினைந்து கிமீ தொலைவிலிருந்த அரநாயக்க கிராமம் அந்தச் சாத்தியமும் அற்றிருந்தது. அதுவே ஒரு சிற்றரசாயிருந்த சரித்திரத்தைக் கொண்டிருந்தது. மண்படையும், அதன் மேல் கல் படையும், அதற்கு மேலே இன்னொரு மண்படையுமாய் அந்த மேட்டுப் பூமியின் நிலவியல் அமைந்திருந்ததில், சமாந்தரத்தில் அமைந்திருக்காத வீடுகளைக் கொண்டிருந்தது அது. அது ஒரு கூம்பு வடிவ அடுக்கு வீட்டுத் திட்ட குடியிருப்புப்போல தூரத்திய பார்வைக்குத் தென்பட்டது. நடுப்பகுதியிலிருந்த ஒரு வீட்டிலிருந்து பார்த்தால் பின்னாலிருந்த வீடுகள் மேலேயாய்த் தெரிய, முன்புறத்திலுள்ள வீடுகள் பள்ளத்தில் கிடப்பனவாய்த் தோன்றின. அவற்றின் கூரைகளும், முற்றத்தில் நடமாடும் மனிதர்களின் உருவங்களும்கூட துல்லியமாக காட்சிப்பட்டன. மேலேயுள்ள வீடுகளுக்குச் செல்ல அதற்கென அமைந்த வட்டப் பாதையிருந்தது. அப்பாதையில் அரை மணி நேரத்தில் செல்லும் ஒரு தூரத்தை, குறுக்கு வழியில் பத்தே நிமிஷங்களில் அடைந்துவிட முடியும். மழை பெய்யாத காலங்களில்தான் அது சாத்தியமாயிருந்தது. எங்கேயிருந்து வருகிறதெனத் தெரியாதபடி மழைகாலம் சகல இடங்களிலும் சிற்றாறுகளைத் தோற்றுவித்து, சேற்றுக் குட்டைகளை உண்டாக்கி குறுக்குப் பாதைகளை அழித்துவிடும். அப்போது அவை செந்நிற ஓடைகளாய் ஓடிக்கொண்டிருக்கும். அரநாயக்கவிலிருந்து அசுபினி நீர்வீழ்ச்சியைக் காணமுடியும். அது அரநாயக்க விரித்த காட்சிப் புலத்தின் இன்னொரு அழகு.





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









