'நந்தலாலா' ஜோதிகுமார் பார்வையில் இலங்கை அரசியல் நகர்வுகள்! (பகுதி 2) - எல். ஜோதிகுமார் -

6
ரஜீவ் கொலை விடயங்கள் தொடர்பில் இந்தியா மறந்து விட்டாலும், விக்னேஸ்வரன் ஐயாவை சந்திக்க மோடி அவர்கள் மினக்கெட்டு வந்தபோது, விக்னேஸ்வரன் ஐயா நீட்டிப்பிடித்த பிரேமானந்தாஜீயின் விடுவிப்பு கோரிக்கையை மறப்பது சற்றே கடினமானது.
இப்போக்குகள் வடக்கின் நம்பகதன்மை தொடர்பான ஒரு கேள்விக்குறியை எழுப்புவது சகஜமாகின்றது–அதாவது, இவ் ஈழ அரசியல்வாதிகள், உண்மையில், தம் மக்கள் நலனை பிரதிபலிக்கின்றனரா அல்லது பல்வேறு கையூட்டல்களை பெற்று வெறும் உசுப்பேத்தும் நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுகின்றனரா என்பது இந்தியாவின் கேள்வியானது. இதற்கு ஏற்றாற் போல், முன்னரே குறிப்பிட்ட நேட்டோ அரூஸ் மற்றும் திபாகரன் போன்றோர் முன்வைக்கும் விடயங்கள் மக்கள் சார்பானதாக இல்லாமலும் ஊறு விளைவிப்பதாய் இருப்பதையும் இந்தியா கண்டு கொள்கின்றது.
இவ் வரப்பிரசாதங்கள் மொத்தத்தில், எமது புலம்பெயர் சமூகத்தின் ஒத்தாசையால்தான் நடந்தேறியுள்ளன – அதாவது நாம் வெறும் சந்தேக பேர்வழிகளாக மாறியுள்ளோம் என்பது நிதர்சனமாகின்றது. இப்போக்கினை, மேலும் நிரூபிப்பதாகவே, ராமநாதன் அர்ச்சுனா போன்றோர் தேர்ந்தெடுக்கப்படுவதும் இதற்கு புலம் பெயர் அரசியலின் ஆரவாரமும் உசுப்பேத்தலும் எவ்வாறு களைக்கட்ட உதவின என்பதும் குறிக்கத்தக்கது. இத்தகைய ஓர் குளறுபடியான சூழலில் தான் அர்ச்சுனா மலையகத்துக்கும் இன்று படையெடுக்க எண்ணியுள்ளார் என்ற அவரது அறிவிப்பும் வந்து சேர்கின்றது.


“பத்மாவதி சரித்திரத்தின் முதற்பாகத்தைப் படித்து வந்தோம். கதாசாரத்தையும் அதிலடங்கிய விஷயங்களையும் ஆராயுங்கால் நூலாசிரியரின் கல்வித்திறம் புகழத்தக்கதென நன்கு புலப்படும். அவரது நடை வெகு தெளிவாகவும் சரளமாகவு மிருப்பினும் சிற்சில இடங்களில் ஆங்கிலேய பாஷையின் போக்கை யனுசரித்திருக்கின்றது. இலக்கண விதிக்கு மாறான சில முடிவுகளும் காண்கிறோம். கதைப்போக்கின் தன்மையைப் பார்க்குங்கால் அவர் அதன்பொருட்டு நடந்தவை களை நடந்தவாறே எழுதினாற் போலுமிருக்கிறது. நம்மவர் இடையிடையே பெண்கல்வி முதலிய விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்யப் புகும் விதமானது நம்மனதிற்கு ஒவ்வாததாக விருக்கின்றது. படிப்போர்க்குப் புகட்டக் கருதும் பலவித நீதிகளும் அறங்களும் எள்ளுக்குள் எண்ணெய் போலச் சம்பாஷணையிலிருந்து திரட்டிக் கொள்ளும் படியாக விருத்தலேயியல்பு” (விவேக சிந்தாமணி:ஜுன்:1898)

இலங்கையில் இருந்த காலத்தில் எஸ்கிமோ, நீக்ரோ, செவ்விந்தியர் போன்ற சொற்பதங்களால் அவை குறிப்பிடும் இன மக்களை நாமெல்லாரும் அழைத்து வந்தோம். இங்கு வந்தபின்பும் ஆரம்பத்தில் அவ்விதமே அழைத்து வந்தோம்,. ஆனால் காலப்போக்கில் அப்பெயர்கள் அம்மக்களை இழிவு படுத்தும் , இனத்துவேசம் மிக்க பெயர்கள் என்பதை அறிந்து அவற்றைப் பாவிப்பதை நிறுத்தி விட்டோம். 
மகாகவி பாரதியார் அனைத்துத் துறைகளிலும் சொல், பொருள், வளம், கலை ஆகியவற்றைப் புதிய நோக்கில் தமது படைப்புகளில் தமிழுலக்கு அறிமுகப்படுத்தினார். தாம் வாழ்ந்த முப்பத்தொன்பது ஆண்டுகளில் (1882 - 1921) தமிழ் மொழிக்குப் புதுப்பொலிவையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தினார். இத்தகைய பரிமாணங்களோடு விளங்கிய இக்கவிஞரிடம் காணப்படுகின்ற மற்றொரு வியத்தகு ஆற்றல் வடிவமே கல்வி குறித்து அவர் கொண்டிருந்த சிந்தனைகளாகும்.
16.11.2025, ஞாயிறு வீரகேசரி, தன் முன் பக்கத்திலேயே, பெரிய அளவில், இரு படங்களை வெளியிட்டது. முதலாவது படம்: இந்திய உயர்ஸ்தானிகர் (சந்தோஷ் ஜா சுமந்திரன்-சாணக்கியன் ஆகியோரை சந்தித்து அளவலாவுவது. இரண்டாவது: விடுதலை சிறுத்தைகளின் தலைவரான தொல்.திருமாவளவனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு சந்தித்து ‘சமஷ்டி'யை’ வலியுறுத்துவது. மேற்படி இரு படங்களும், ஒருபுறமிருக்க, ஜேவிபி அரசானது தான் நிறைவேற்ற போவதாய் கூறியுள்ள, புதிய அரசியல் அமைப்பில், 13வது திருத்தத்தை (அதாவது மாகாண சபையினை) உள்ளடக்குவதா அன்றி தூக்கி வீசுவதா என்று தீவிரமாய் சிந்தித்து வரும் இந்நிலையில் ‘சமஷ்டி’ உச்சரிக்கப்படுவது, முக்கியத்துவம் வாய்ந்தது.



பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில் ஒரு முக்கிய ஆளுமை. அவர் ஒரு கவிஞராக மட்டுமன்றி, மொழியியலாளராக, இலக்கியத் திறனாய்வாளராகவும் அறியப்படுகிறார். அவரது கவிதைகள் சமூக அரசியல் விழிப்புணர்வு, மனிதநேயச் சிந்தனைகள், மற்றும் மொழி பற்றிய ஆழ்ந்த பார்வை ஆகியவற்றைத் தாங்கி நிற்கின்றன. அவரது கவிதைகளை மெய்யியல், அழகியல் அடிப்படையில் அலசும் ஆய்வாக இது அமைந்துள்ளது.





“வருணன் மேய பெருமணல் உலகமும்” (தொல்.அகம்.5)

வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியென அயராதுழைத்த இலண்டன் சிவாப்பிள்ளை (சிவகுருநாதபிள்ளை - வயது 83) கம்போடியா - அங்கோர் நகரில் நடைபெற்ற 'கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன்" 1000 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டவேளை> சிந்திப்பதை நிறுத்திக்கொண்டமை அதிர்ச்சியையும் மிகுந்த கவலையையும் தருகிறது. அவரது பூதவுடல் லண்டனுக்கு எடுத்துவரவிருப்பதாகத் தெரியவருகிறது.

“செக்கூரட்ரி.... மதுரையிலயிருந்து வசந்தன் வந்தால், காம்பவுண்டுக்குள்ளை எலவுட்பண்ண வேண்டாம்.... இதோ உங்க ரூம்ல அவன் ட்ரெஸ்சு வெச்சிருக்கிற சூட்கேசை வெச்சிருக்கேன்.... இந்தா பாருங்க, உங்க டேபிள்ள ரூவா ஐயாயிரம் வெச்சிருக்கேன்....
எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் தென் திசையிலிருந்து கிழக்குத் திசையில் அதாவது நோர்வே பக்கம் இருந்தது .நோர்வேயையும் ஐஸ்லாந்தையும் பிரிப்பது அத்திலாந்திக் சமுத்திரம். இதைக் கடந்து தான் வைக்கிங் குழுவினர் அக்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் ஐஸ்லாந்து மட்டுமல்ல, கிறின்லாந்து மற்றும் அமரிக்காவரை சென்றார்கள். ஐஸ்லாந்தில் ஆயிரம் வருடங்கள் முன்பாக குடியேறினார்கள்




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









