சட்டத்தரணியும், எழுத்தாளரும், தமிழ் இலக்கியத் தோட்ட இயக்குநர்களில் ஒருவருமான மனுவல் ஜேசுதாசன் அவர்கள் மறைந்த செய்தியினை அறிந்தேன். பதினாறு ( சிறுகதைத்தொகுதி), 90 நாட்களுள் (நாவல்) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவர்தம் புனைகதைகள் புகலிடத் தமிழர்களின் பல்வகை வாழ்க்கைச் சவால்களை வெளிப்படுத்துபவை.
இவர் சிறந்த நாட்டுக் கூத்துக்கலைஞராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயற்பட்டவர் அத்துடன் விருதுகள் பலவற்றையும் பெற்றவர். இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்.
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









