விதை குழுமத்தின் செப்ரம்பர் மாத நிகழ்வுகள்! - விதை குழுமம் -
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், விதை குழுமம் செப்ரம்பர் மாதத்தில் 12, 19, 26 ஆகிய திகதிகளில் தனது நிகழ்வுகளை ஒருங்கிணைக்க இருக்கின்றது. இந்நிகழ்வுகளில் நீங்களும் கலந்துகொள்வதோடு ஆர்வமுள்ளாவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நிகழ்வு 01
அறிமுகமும் உரையாடலும் - நிகழ்வு 03
நூலகங்கள் என்பவை வெறும் கட்டடங்களும் புத்தகங்களும் அல்ல, அவை சமூகத்தின் உயிர்ப்பான ஓர் அங்கமாகவும் சமூக முன்னேற்றத்திற்கான கருவிகளில் ஒன்றாகவும் இருப்பன என்கிற புரிதலை அறிவுறுத்திவரும் மிகச்சிலரில் நூலியலாளர் என். செல்வராஜா முக்கியமான ஒருவர். கிராமிய நூலகங்கள் குறித்தும் சிறுவர் நூலகங்களின் உருவாக்கம் குறித்தும், பட்டியலாக்கம், ஆவணமாக்கல் செயற்பாடுகள், நூலகர்களுக்கான வழிகாட்டல்கள் என்பவை சார்ந்ததுமாக அவரது செயற்பாடுகள் நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்பவை. ஈழத்து நூல்களின் விபரப்பட்டியலான நூல் தேட்டத்தின் 15வது தொகுதி இவ்வாண்டின் ஆரம்பப்பகுதியில் வெளிவந்திருக்கின்றது.
'எங்கட புத்தகங்கள்' வெளியீடாக இவ்வாண்டு வெளிவந்த என். செல்வராஜா அவர்களது “நமக்கென்றொரு பெட்டகம்” என்கிற நூலின் அறிமுகத்துடன் அதன் தொடர்ச்சியாக கிராமிய நூலகங்களின் தேவைகள் குறித்தும் சமூக அபிவிருத்தியில் அவற்றின் வகிபாகம் குறித்ததுமாக விதை குழுமம் ஒருங்கிணைக்கும் ”அறிமுகமும் உரையாடலும்” தொடரின் மூன்றாவது நிகழ்வு நடைபெற இருக்கின்றது.