‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
- அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ ஆற்றிய உரை. -
அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில்; புலம் பெயர் படைப்பிலக்கியங்கள்’ குறித்து பேசுவதற்கு என்னை அழைத்த முனைவர் சௌ.பா. சாலாவாணிஸ்ரீ, தலைவர் முனைவர் பொ. ரமேஷ், முதல்வர் முனைவர் கி.மாரியம்மாள், முனைவர் மா. கர்ணன், மற்றும் மாணவச் செல்வங்கள், பார்வையாளர்கள் அனைவருக்;கும் எனது அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஈழத்தமிழர்களுக்குக் குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களுக்கு லண்டன் ஒரு கனவுத் தேசமாகவே இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கிய மிஷநெறிகளின் உயர்கல்வி செயற்பாடுகளாலும், லண்டன் கனவு நிரந்தரமாகவே அவர்களின் நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஆரம்பகாலங்களில் உயர் கல்வி கற்பதற்காகவும் உயர் தொழில்களை நாடியும் ஈழத்தமிழர்கள் லண்டன் நோக்கிப் புலம்பெயர்ந்திருந்தனர். மருத்துவர்களாகவும், கணக்காளர்களாகவும், உயர்கல்வி சார்ந்தும் இலண்டன் நோக்கிய புலப்பெயர்வுகள் இடம்பெற்றது.
1982ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்பின் அகதிகளாக ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் லண்டனில் தமிழ் பத்திரிகைகளின் தோற்றமும், எழுத்தாளர்களின் பிரவேசமும், புனைகதை ஆக்கங்களும், விமர்சனக் கூட்டங்களும், நூல் வெளியீடுகளும், கலை நிகழ்ச்சிகளும் வாரத்திற்கு இரண்டு முறை என்ற வகையிலாயினும் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமே உள்ளன. இப்பின்னணியிலேயே லண்டனில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்; பற்றி நான் பேச இருக்கிறேன்.
நாவல்; - சிறுகதை – கவிதை - கட்டுரை போன்றவற்றை பிரித்துக் கூறுவது மிகப்பொருத்தாக இருக்கும் என நம்புகிறேன். நாவல் இலக்கியத்தைப் படைத்தவர்கள் மற்றைய இலக்கிய வடிவங்களையும் படைத்திருப்தையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தோடு நேரத்தை மனிதிற்கொண்டு முழுப் பட்டியலையும் இங்கு சொல்வதும் சாத்தியமில்லை. முடிந்தவரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். சில நூல்கள் தவறவிட்டிருக்கலாம் என்று கூறி...



படித்தவர்கள் பலர் பிற நாடுகளில் வாழ்ந்து , தம் பொருள் வளம் பெருக்குவதையே நோக்காகக்கொண்டு வாழ்கையில், இவர் தான் கற்றதை, அறிந்ததைத் தன் மண்ணுக்கு வழங்குவதற்காக வந்தார். தன் மண்ணின் அனர்த்தங்களை எதிர்கொண்டு , சமூக, அரசியல் ரீதியிலும் அவற்றைக் களையத் தன் பங்களிப்பினைச் செய்தார். அதற்கு இவருக்கு எம் மண் கொடுத்த பரிசு? தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு! முடிவு! தானிழைத்த வரலாற்றுத் தவறினை, இவரை நினைவில் வைப்பதன் மூலம் ஓரளவு தீர்த்துக்கொள்கிறது. எந்தக் கல்வி நிலையத்துக்காக இவர் தன் வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்தக் கல்வி நிலையம் இதுவரை இவரை நினைவு கூர்ந்திட என்ன செய்தது? ஒரு சிலை கூட வைத்ததா? நினைவு கூர்ந்ததா? மிகவும் வெட்கக்கேடான விடயமென்னவென்றால் .. இவரிடம் கல்வி கற்றவர்களில் சிலரே இவரின் முடிவுக்கும் காரணமாக இருந்தார்களென்ற தகவல்கள்தாம்.
ஈழத்து இலக்கியத்தோப்பில் வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.
கவிஞர் முத்துலிங்கத்தின் சிந்தையை வசியம் செய்யும் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் குரல், எம்ஜிஆர் & லதாவின் சிறப்பான நடிப்பு , என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லாமே நன்கிணைந்து எனைக் கவர்ந்த கானமிது. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை ஒவ்வொன்றாக இரசித்தவாறே, அவற்றைப் பாடும் பாடகர்களின் குரல்களையும், அபிமான நடிகர்களின் நடிப்பையும் இரசித்துப்பாருங்கள் நிச்சயம் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். இப்பாடலின் பொருளை விளங்கி அமைக்கப்பட்டுள்ள இசை, அதையுணர்ந்து அனுபவித்துப் பாடும் பாடகர்களின் குரலினிமை , விளங்கி நடிக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாமே என்னை ஈர்த்தனவென்பேன்.
தற்போதுள்ள தமிழ் எழுத்தாளர்களில் ஷோபா சக்தியின் எழுத்து மிகவும் வலிமையானது. ஷோபாசக்தி சிறந்த கதைசொல்லி என்றாலும், அவரது படைப்புகளில் பாவிக்கப்படும் மொழியே அக்கதை சொல்லலில் பிரதான பங்கினை வகிக்கின்றது. அந்த வலிமையான மொழியே அப்படைப்புகளில் வரும் பாத்திரங்களை முதல் வாசிப்பிலேயே நீண்ட காலத்துக்கு மறக்க முடியாதபடி செய்து விடுகின்றது. தனிப்பட்டரீதியில் நான் இவ்வகை மொழியின் உபாசகனல்லன். எனக்குத் தெளிந்த நீரோடை போன்ற , சிக்கலான விடயங்களையும் சிந்திக்க வைக்கின்ற எழுத்து நடையே விருப்பத்துக்குரியது. டால்ஸ்டாய், ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளில் பாவிக்கப்பட்டுள்ள மொழி எனக்கு விருப்புக்குரியது. ஷோபா சக்தியின் மொழி எனக்கு யூதரான ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்', வால்டேயரின் 'கண்டிட்', ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' போன்ற நாவல்களில் பாவிக்கப்பட்டுள்ள மொழியினை நினைவு படுத்தும்.
அமுதா போட்டிருந்த செருப்பை ரோட்டில் தேய்த்து கொண்டே அவள் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்த முயன்றாள். கைகளில் பிடித்து நிறுத்தும் பிரேக் இருந்தும் அமுதாவிற்கு கால்களால் நிறுத்துவதே பரிச்சியமான ஒன்று.
மழையிருள் இறுக்கிய வானத்தில் அவ்வப்போது எங்கோ வெட்டிய மின்னலின் ஒளிக்கீறுகள் ஓடி மறைந்து கொண்டிருந்ததைக் கண்டபடி, தோளில் துவாயைக் போர்த்தி குளிரை மறைத்துக்கொண்டு ஜன்னலோரத்தில் வெளிபார்த்து நின்றிருந்தாள் குசுமவதி. தேசத்தின் நிலைபோல, காலநிலையும் நன்னிமித்தம் ஏதுமற்று இருண்டு விறைத்த குளிருக்குள் கிடப்பதாய்ப்பட்டது அவளுக்கு. நான்கு நாட்களாக மழை பெய்துகொண்டிருந்தது. கூதல் காற்று தகரக் கூரையைப் பிய்த்தெறியும் மூர்த்தண்யத்துடன் ஓங்காரமாய் அலைந்தடித்தது.







முன்னுரை


அண்மையில் இவ்வுலகை விட்டு மறைந்த திரு டொமினிக் ஜீவா அவர்கள் இலங்கையின் முற்போக்கு இலக்கியத்துறையில் மிகவும் முக்கியமான ஆளுமைகளில் ஒருத்தராகும். 27.6.1927-ல் பிறந்து 28.1. 2021 மறைந்த மதிப்புக்குரிய எழுத்தாளரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கற் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். இச்சிறு கட்டுரையில அவருடன் எனக்கிருந்த இலக்கிய உறவு தொடக்கம் அவரின் இலக்கியப் பயணத்தின் எனக்குத் தெரிந்த சில விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இன்று அன்னாரின் மறைவுக்கு,உலகம் பரந்த விதத்தில் அஞ்சலி செலுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பத்திரிகைகளில் அவரைப் பற்றிய பல தகவல்கள் இலக்கிய ஆர்வலர்களால் எழுதப் படுகின்றன. 



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









