ஆழ்ந்த இரங்கல்: வரலாற்று நாயகன் ஆரொன் புஷ்னெல் (Aaron Bushnell)

அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஆரொன் புஷ்னெல்லுக்கு (Aaron Bushnell) வயது 25. வாஷிங்டனிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் முன்பாக 'சுதந்திர பாலஸ்தீன். நான் இனியும் இன்ப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்' என்று கூறியவாறே தீக்குளித்தார். காயங்களுடன் மருத்துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட இவர் மரணமடைந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்ந்த இரங்கல்.
மரணத்தை எதிர்கொள்ளப்போகிறோமே என்னும் எவ்விதத்தயக்கமும் இல்லாமல், மிகவும் இயல்பாகத் தன் எண்ணங்களை எடுத்துரைத்தவாறே சென்று, மிகவும் இயல்பாகவே தன் மீது எரி திரவத்தை ஊற்றி, நெருப்பைப் பற்றவைத்து , Free Palestine என்று கூறியவாறே அவர் மரணத்தை எதிர்நோக்கினார். எத்துணை மனோதிடமும், மானுட நேயமும் மிக்க மனிதன்!



தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre மண்டபத்தில் ( 1, Karobran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.
தீவிர இலக்கியவாதியும் மின்னிதழாளரும் இருபத்தைந்து நூல்களைத் (மின்னூல்களையும் உள்ளடக்கி) தந்தவருமான வ.ந.கிரிதரனின் அண்மைக்கால நூலான ' வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ' , அழகிய அச்சமைப்போடு 'ஜீவநதி' பிரசுரமாக வெளிவந்துள்ளது.இத்தொகுப்பில் பதிநான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.கவனிப்புக்குரிய படைப்பாளிகள் பற்றியதாகவும் சர்ச்சைக்குரிய தலைப்புக்களைக் கொண்டதாகவும் இருப்பதனால் நிச்சயமாக இலக்கிய வாசகர்களை ஈர்க்கும்.







சிறுகதையொன்றின் கருவும் களமும் காலமும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளரின் மனம் செல்லும் வழியும் மொழியும் , அவரது எழுத்தின் ஊடாக வெளிப்படுகின்ற விதமே அப்படைப்பின் மேலான வாசகரது ஈடுபாட்டை உறுதி செய்கிறது. இலக்கியத்தின் எந்த ரூபத்திலும் எழுத்தாளரின் வெளிப்பாட்டு மொழிதான் வெற்றியைப் பெருமளவில் தீர்மானிக்கிறது. 








குழந்தைகளை அடிப்பது கொடூர வன்முறைச் செயல். காலத்திற்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சக குழந்தை அடிவாங்குவதைக் கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தை யும் மனரீதியாக பாதிப்படையும் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.
புதிதாய் பிறந்த வருடத்தின் ஆரம்பநாளில் பூமராங் எனும் காலாண்டு மின்னிதழ் வெளிவந்திருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இவ்விதழ், முதற்பார்வையிலேயே எமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. அட்டை வடிவமைப்பு இதழை ஆவலோடு புரட்ட வைக்கிறது. 

(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









