எழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில்! ' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:
எழுத்தாளர் முருகபூபதியின் 'செங்கோடா செருப்போடு நில்! ' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்:
Ambikaipahan Gulaveerasingam: சிறப்பான பதிவு. சிறிது இடம் கிடைத்துவிட்டால் இப்படித்தான் பல பிதற்றல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மாமியாருடைய சீலை விலகிய கதை. சொல்லவும் முடியவில்லை, பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.
Memon Kavi: இக்காலகட்டத்தில் தேவையான பதிவு. ஜீவா மறைந்ததால் அவரது மீதான அவதூறுகளுக்கான எதிர்வினைகள் வராது என்று நினைப்பவர்களுக்கு ஒரு குறிப்பு. ஜீவா மறைந்தாலும் அவருடன் வாழ்ந்தவர்கள், அவரை புரிந்து கொண்டவர்கள் கணிசமானவர்கள் இயலுமானவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை மறந்து விட கூடாது.
Tam Sivathasan: மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு: அனோஜன் பாலகிருஷ்ணன் எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு ஜீவாவை விமர்சிக்கிறார் என்று கேட்டிருந்தீர்கள். உங்கள் கேள்விக்கான பதில்: பெப்ரவரி 14 அன்று நடந்த கருத்தரங்கில் தேவகாந்தன் குறிப்பிட்ட, 2002 இல் ஊட்டியில் நடந்த சந்திப்பில் ஜெயமோகன் கூறிய கருத்தில் இவ் விடயம் பதிவாக இருக்கிறது. ஜெ.மோ: "மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா பற்றி மு.தளையசிங்கம் இப்படிச் சொன்னதாக என்.கே.மகாலிங்கம் என்னிடம் சொன்னார். அவர் தலித்தாக இருந்த போதிலும் தளையசிங்கம் போராடிய செய்தியையோ, அடிபட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இதழில் போடவில்லை. கைலாசபதி மீதான பயம்தான் காரணம்". இதில் எல்லோரும் 'அவர் சொன்னார்' கேஸ்கள் தான். மூத்த எழுத்தாளர் என்ற வகையில் இவை எல்லாவற்றையும் தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டு. எனக்கு மட்டும் இது எப்படித் தெரியும் என்று தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள். நானும் உங்கள் காலத்தன்தான். 1992 இல் பிறந்தது அனோஜனின் குற்றமில்லை. ஜெயமோகனின் குறிப்பை அவர் வாசித்திருக்கிறார், நீங்கள் வாசிக்கவில்லை என்பதை அறிய ஒருவர் எரிகணை விஞ்ஞானியாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஜீவாவுக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் குறைகளுக்கு அப்பாற்பட்டவர் எனக்கூற வருகிறீர்களா? அல்லது வயது குறைந்தவர் என்பதனால் அனோஜன் அவரை விமர்சிக்கக்கூடாது என்கிறீர்களா? அனோஜனின் கருத்தின்மீது உங்களுக்கு கேள்வி இருப்பதில் தப்பில்லை. ஆனால் அதை அவரது வயதுடனும் அனுபவத்துடனும் இணைத்து எழுதுவதில் எனக்கு உவப்பில்லை. மார்க்ஸை, ஏங்கெல்ஸை, ஃபிராய்டை, ஹெமிங்வேயைப் பற்றி விமர்சிப்பவர்கள் அவர்கள் காலத்தில் பிறந்தவர்களோ வாழ்ந்தவர்களோ அல்ல. ஒரு இலக்கிய ஆளுமையின் தனிப்பட்ட வாழ்க்கை படைப்பில் தெரியவேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அப்படியானால் ஞானி ஏன் கோவிலில் சாமி கும்பிட்டார் என்று கேட்பவர்களுக்கோ, பிரித்தானிய இலக்கிய வட்டத்தில் இருந்த ஒரே ஒரு தமிழ் ஆளுமையான அழகு சுப்பிரமணியம் ஏன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வீதிகளில் வெறியில் விழுந்துகிடந்தார் என்று கேட்பவர்களுக்கோ பதில் இல்லை. அது விவாதத்துக்குரிய விடயம். உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் அதை முன்வைத்த பாங்கில் எனக்கு உவப்பில்லை. எல்லா இலக்கியவாதிகளிலும் செங்கோடர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு அதுவே நல்லதொரு உதாரணம். அனோஜன் கூறியதற்கான ஆதாரம் ஜெயமோகன் பதிவாக 'திண்ணை' யில் வெளிவந்தது. Hard copy (6/11/2002) யாக
என்னிடம் உள்ளது. வேண்டுமானால் அனுப்புகிறேன். ஜெ.மோ. எழுதியதற்காக அது உண்மையாக இருக்கவேண்டுமில்லை எனக் கேள்வி எழுப்புபவர்கள் என்.கே. மகாலிங்கத்திடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். யாருக்காகவும் வாதிடுவதற்காக
இதை நான் எழுதவில்லை. இரண்டாவது செருப்பின்மீது எனக்கு அக்கறையுமில்லை. நன்றி

அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிழம்பிவிடுவான்.
- பதிவுகள் இணைய இதழில் வெளியான 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -' என்னும் கட்டுரைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் எதிர்வினை - பதிவுகள் -

தமிழ் மொழிச் செயற்பாட்டகம் இன்று இலண்டனில் நடாத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய Zoom வழி இணையவெளிக் கருத்தரங்கில் நான் கலந்துகொள்ளவில்லை, ஆனால் இக்கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, எழுத்தாளர் ஷோபா சக்தி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்ததை வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அப்பதிவில் ஷோபாசக்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
கண்டி-கொழும்பு பெருவீதியில் பயணித்திருக்கக் கூடியவர்களுக்கு, கேகாலை தென்பட்டிருக்க முடியுமாயினும், நகரத்திலிருந்து உள்ளே சுமார் பதினைந்து கிமீ தொலைவிலிருந்த அரநாயக்க கிராமம் அந்தச் சாத்தியமும் அற்றிருந்தது. அதுவே ஒரு சிற்றரசாயிருந்த சரித்திரத்தைக் கொண்டிருந்தது. மண்படையும், அதன் மேல் கல் படையும், அதற்கு மேலே இன்னொரு மண்படையுமாய் அந்த மேட்டுப் பூமியின் நிலவியல் அமைந்திருந்ததில், சமாந்தரத்தில் அமைந்திருக்காத வீடுகளைக் கொண்டிருந்தது அது. அது ஒரு கூம்பு வடிவ அடுக்கு வீட்டுத் திட்ட குடியிருப்புப்போல தூரத்திய பார்வைக்குத் தென்பட்டது. நடுப்பகுதியிலிருந்த ஒரு வீட்டிலிருந்து பார்த்தால் பின்னாலிருந்த வீடுகள் மேலேயாய்த் தெரிய, முன்புறத்திலுள்ள வீடுகள் பள்ளத்தில் கிடப்பனவாய்த் தோன்றின. அவற்றின் கூரைகளும், முற்றத்தில் நடமாடும் மனிதர்களின் உருவங்களும்கூட துல்லியமாக காட்சிப்பட்டன. மேலேயுள்ள வீடுகளுக்குச் செல்ல அதற்கென அமைந்த வட்டப் பாதையிருந்தது. அப்பாதையில் அரை மணி நேரத்தில் செல்லும் ஒரு தூரத்தை, குறுக்கு வழியில் பத்தே நிமிஷங்களில் அடைந்துவிட முடியும். மழை பெய்யாத காலங்களில்தான் அது சாத்தியமாயிருந்தது. எங்கேயிருந்து வருகிறதெனத் தெரியாதபடி மழைகாலம் சகல இடங்களிலும் சிற்றாறுகளைத் தோற்றுவித்து, சேற்றுக் குட்டைகளை உண்டாக்கி குறுக்குப் பாதைகளை அழித்துவிடும். அப்போது அவை செந்நிற ஓடைகளாய் ஓடிக்கொண்டிருக்கும். அரநாயக்கவிலிருந்து அசுபினி நீர்வீழ்ச்சியைக் காணமுடியும். அது அரநாயக்க விரித்த காட்சிப் புலத்தின் இன்னொரு அழகு.

- - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) திண்டுக்கல் காந்திக்ராம் பெண்கள் இன்ஸ்டியூட் மாணவிகளுக்கு 8.3.2021ல் ஆற்றிய சொற்பொழிவின் சாரலிலான விளக்கமான கட்டுரை. -

ஆய்வுச்சுருக்கம்
இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை இன்று நகர்ந்துள்ளார். உரும்பராய் கிராமத்தில் செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும் அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாம் தரம் வரையிலும் கற்றபின்னர், யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை தொடர்ந்தார். கணேசலிங்கன் அன்று கற்ற பரமேஸ்வராக்கல்லூரிதான் பின்னாளில் 1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகமாக உருமாறியது. இந்தப்பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தபோது, கணேசலிங்கனின் நாவல்களும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சில வாரங்களுக்கு முன்பு வி.சபேசனின் ‘துணை’ குறும்படம் குறித்து ஒரு சிறு குறிப்பொன்றினை இத்தளத்தில் பதிவிட்டிருந்தேன். அதன்போது சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்த அருந்ததியின் ‘முகம்’ குறித்தும் ஜீவனின் ‘எச்சில் போர்வைகள்’ குறித்தும் சில குறிப்புக்களைத் தொட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அப்போதுதான் எனக்கு இந்த நூல் ஞாபகம் வந்தது. இயக்குனர் அருந்ததியும், யமுனா ராஜேந்திரனும் தொகுத்தளித்த ‘புகலிடத் தமிழ் சினிமா’ என்ற இந்த நூலானது இன்றைய சூழ்நிலையிலும் ஒரு முக்கியமான நூலாக எனக்குப்பட்டது. முக்கியமாக அன்று இந்நூலில் கட்டுரையாளர்கள் வெளிப்படுத்திய புகலிட தமிழ் சினிமாவானது எதிர்நோக்கிய அதே சிக்கல்களையும் சவால்களையும் இன்றைய சமகாலத்திலும் எதிர்நோக்குவதினால் இந்நூல் குறித்து சில கருத்துக்களை பகிர்வதும் அவசியம் என நினைக்கிறேன்.
இன்று செம்மொழியான தமிழ் தொடர்ந்து வாழ்கின்றதென்றால் காரணம் என்ன? நான் குறிப்பிடும் தமிழ் காப்பியங்களில், இலக்கியத்திலுள்ள தமிழ். பிறமொழிச்சொற்களை உள்வாங்கி ,வளமுடன் திகழும் தமிழ். இந்தத்தமிழ் இன்றும் நிலைத்து நிற்கின்றதென்றால் காரணம்..

- "மாலு மற்றும் 1098 (Notch, 1098 ) சுப்ரபாரதிமணீயனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் அன்று கோவை பீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch, 1098 என்ற பெயர்களில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார் 1098 நாவலை மதுரையைச் சார்ந்த பேராசிரியர் வின்செண்ட் மொழிபெயர்த்துள்ளார் இவற்றை டெல்லியைச் சார்ந்த Authours press பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விசாரணை திரைப்படத்தின் மூல கதையாசிரியர் சந்திரகுமார் , பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் செல்வராஜ்,, ஆவணப்பட இயக்குனர் மயன், மொழிபெயர்ப்பாளர் கோவிந்த சாமி உட்பட பலர் நூல்களின் வெளியீட்டில் கலந்து கொண்டார்கள் . பேரா பாலகிருஷ்ணன் மறைந்த கவிஞர் வேனில் கிருஷ்ணமூர்த்தி மறைவை ஒட்டி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாலு - Notch நாவல் மொழிபெயர்ப்பு அனுபவத்தை விவரித்தார் . 1098 நாவலின் மையமான பெண்மைய சிந்தனை மையம் பற்றியும் மொழிபெயர்ப்பு சிறப்பு பற்றியும் விவரித்தார் . சுப்ரபாரதிமணியன் இந்த இரு நாவல்களின் படைப்பு அனுபவங்களை விவரித்தார். பீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரி நிர்வாகிகள் அரவிந்தன் , திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஜாப்பர் நன்றியுரை வழங்கினார். மேற்படி நிகழ்வில் மாலு நாவலை Notch என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமிது." - சுப்ரபாரதிமணியன் - ]
- சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தின் நினைவு தினம் மார்ச் 3 -
மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் கரையிலிருந்து வடக்கே 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கீழடி. மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவைச் சேர்ந்தவர்கள் 2014 தொடங்கி 2017 வரையில் மூன்று கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டனர். பலவகை அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவை திராவிடப் பண்பாட்டை மேலும் செழுமைப்படுத்துவதாக இருந்தமையால் இவ்வாய்வு மேலும் தொடர பலத் தடைகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை இதைக் கையில் எடுத்து 2017 இல் தனது நான்காவது கட்ட ஆய்வை மேற்கொண்டது. அதேபோல 2018 இல் ஐந்தாம் கட்ட ஆய்வும் செம்மையாகச் செய்து முடிக்கப்பட்டது.
மார்ச் மாத ஞானம் சஞ்சிகையில் நூலகர் என்.செல்வராஜா 'ஈழத்து இதழியலில் சுதந்திரனின் வழித்தடம்! விரிவான ஆய்வுக்கான சில குறிப்புகள்' என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையினைப் படித்துப் பார்த்தபோது எனக்கு உண்மையில் அதிர்ச்சியாகவிருந்தது. 1949 - 1952 காலகட்டத்தில் சுதந்திரனின் ஆசிரியப்பீடத்திலிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் பெயரை அங்கு நான் காணவில்லை. ஏன் இந்தத்தவிர்ப்பு? நூலகர் செல்வராஜாதான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.. அ.ந.க.வின் சுதந்திரன் பத்திரிகைக்கான பங்களிப்புப் பற்றிய பல குறிப்புகளை முகநூலிலும் , பதிவுகள் இணைய இதழிலும் பதிவு செய்துள்ளேன். சுதந்திரனில் அவர் எழுதிய படைப்புகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்துள்ளேன். கவீந்திரன், கலையரசன், பண்டிதர் திருமலைராயர், அ.ந.கந்தசாமி ஆகிய பெயர்களில் அ.ந.க.வின் படைப்புகள் சுதந்திரனில் அவர் ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. அதன் பின்னரே அ.ந.க இலங்கைத் தகவற்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பத்தாண்டுகள் (1953 -1963) பணிபுரிந்தார்.அக்காலகட்டத்தில் அவர் தகவற் திணைக்களத்தின் தமிழ்ச் சஞ்சிகையான ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரிய பீடத்திலிருந்தார்.
ஒலியமைப்பினைச் சார்ந்து வரக்கூடிய செய்யுளுறுப்புகளில் ஒன்று வண்ணம் என்பதாகும். பேராசிரியர் இதனை சந்த வேறுபாடு என்று குறிப்பிடுவார். தொல்காப்பியர் வரையறுத்துள்ள செய்யுளுறுப்புகளில் இருபத்தாறாவது உறுப்பாக வண்ணம் உரைக்கப்பட்டுள்ளது. இவ்வண்ணத்தின் வகைகளாக இருபது வகைகளைக் குறிப்பிடுகிறார். உலக வழக்கில் சிந்துப்பாடல்களிலும், நாடகப் பாடல்களிலும் இலக்கியத்தில் சந்த விருத்தங்களிலும் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப்பாடல்களிலும், நூற்றுக்கணக்கான வண்ணங்கள் பயின்று வருகின்றன. உலக வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளிலும் காணப்பெரும் வண்ணங்கள் எழுத்து, சொல், தொடைநலன் என்பவற்றால் அமைவன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வண்ணத்தியல்பு என்னும் நூலினை எழுதியுள்ளார். அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் பயின்று வரும் வண்ணங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









