கனடா இலக்கியவெளி வெளியிட்ட 'மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்' - குரு அரவிந்தன் -
சென்ற ஞாயிற்றுக்கிழமை 03-12-2023 அன்று மாலை நான்கு மணியளவில் அகில் சாம்பசிவம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இலக்கியவெளி இதழ் குழுவினர் வெளியிட்ட ‘மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்’ வெளியீட்டு விழா ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக் கலாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் மீரா கனி விமலநாதன், தமிழக எழுத்தாளர் முனைவர் கரு முத்தய்யா, எழுத்தாளர் திரு. த. சிவபாலு ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து திரு.த. சிவபாலு அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.
இந்த நிகழ்வுக்குப் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். தலைவர் உரையைத் தொடர்ந்து பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் அடிகளாரின் சிறப்புரை இடம் பெற்றது. கலாநிதி பால. சிவகடாட்சம், கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ், கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா எழுத்தாளர் இணையத் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ், சட்டத்தரணி திரு. சண், ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு. க. சண்முகலிங்கம், பாஸ்டர் எஸ். ஜெயானந்தசோதி, முனைவர் கரு முத்தய்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.