ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள்- பரமார்த்த குருவும் சீடர்களும் கதை! - என்.கே.மகாலிங்கம் -
ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள் பற்றிய விவாதமொன்று பதிவுகள் இணைய இதழில் 2005-2006 காலப்பகுதியில் நடந்தது. அதில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'காலம்'செல்வம்' , கவிஞர் செழியன் ஆகியோர் பங்கு பற்றினர். அதில் வெளியான கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:
1. ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள்- பரமார்த்த குருவும் சீடர்களும் கதை! - என்.கே.மகாலிங்கம் -
2. டொராண்டோ பத்திரிகைக் கட்டுரைகளுக்கான எதிர்வினை! நன்னூலாரின் ‘ஓட்டைக் குடங்களும், எருமை மாடுகளும், பன்னாடைகளும்’ - என்.கே.மகாலிங்கம் -
3. சீத்தலைச் சாத்தனாரின் சில மாணக்கர்கள்! - என்.கே.மகாலிங்கம் -
4. ரொறொன்ரோ கல்விச்சபைத் தமிழ்பாட நூல்கள்! ‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி வாழியவே’- செல்வம் அருளானந்தம் ('காலம்' சஞ்சிகை ஆசிரியர்) -
5. ரொறொன்ரோ கல்விச்சபைத் தமிழ்பாட நூல்கள்! தமிழையும், தமிழ் தேசியத்தையும் அழிப்பதற்கு திட்டமா? - செழியன் -
6. Report on Tamil Workbooks That were Intended to be Used for International Languages: Tamil Programme under TDSB! - Flaws, Weaknesses, Errors, and Ideology in Them - - N.K.Mahalingam - (Tamil Language Instructor & Steward, CUPE 4400 Unit B)
இவை திஸ்கி எழுத்துருவில் வெளியாகியிருந்தன. இவற்றின் முக்கியத்துவம் கருதி 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றன.
பதிவுகள், மார்கழி 2005 இதழ் 72
ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள்- பரமார்த்த குருவும் சீடர்களும் கதை! - என்.கே.மகாலிங்கம் -தமிழ் மொழி கற்பிக்கும் தமிழ் (ஆரம்ப நிலை) ஆசிரியர்களுக்கு ரொறொன்ரோ கல்விச் சபை சமீபத்தில் தமிழில் அனுப்பப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கை இப்படிச் சொல்கிறது: “பிள்ளைகள் தமிழ் மொழியைச் ‘சரியான’ முறையில் கற்க வேண்டும்... மொழித் திறனை ‘செம்மையான’ முறையில் பெற வேண்டும் என்ற நோக்கோடு தமிழ்ப் பயிற்சி நூல்களை ஆக்கியுள்ளோம்...இது ஒரு வரைவு (Draft) ஆகும்... இந்த நூல் பற்றிய தங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம். தமிழில் ‘தவறாக’ வழங்கி வரும் சில தமிழ்ச் சொற்களுக்குச் ‘சரியான’ தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளோம். ‘தொடக்கத்தில் இருந்தே பிள்ளைகளுக்குச் சரியானதைக் கற்பிக்க வேண்டும். சரியான ‘தமிழ்ச் சொற்கள்’ அழிந்து போகாமல் ‘பாதுகாக்கப்படல்’ வேண்டும் என்ற ‘நோக்குடனேயே’ இவ்வாறு செய்துள்ளோம். தவறான ‘பழக்கத்தில்’ உள்ள சொற்களுக்கு மிகச் சரியான ‘வழக்குகளும்’ கீழே தரப்பட்டுள்ளன.”
என்று சொல் பட்டியல் ஒன்றையும் யாரோ அனுப்பியிருக்கிறார்கள். (மேலேயுள்ள இரட்டை மேற்கோட்குறிக்குள் உள்ள ஒற்றை மேற்கோள் குறிகள் என்னால் இடப்பட்டவை)