கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள். - வ.ந.கிரிதரன் -கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது தமிழ் நாவல் நானறிந்தவரையில் நான் எழுதிய சிறு நாவலான 'மண்ணின் குரல்' நாவலே. இதனைப் பற்றி ஒரு பதிவுக்காகக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த நாவல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய சிறு நாவல். நாற்பது பக்கங்களைக் கொண்டது. இந்நாவலின் முதல் ஆறோ அல்லது  ஏழோ அத்தியாயங்கள் மான்ரியாலிலிருந்து 1984, 1985 காலப்பகுதியில் வெளியான 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியாகின. 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துப் பத்திரிகை அக்காலத்தில் மான்ரியாலில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளையினரின் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியானது, அக்காலகட்டத்தில் கனடாவில் பல்வேறு ஈழ விடுதலைச் சார்ப்பு அமைப்புகளும் இயங்கி வந்தன. இந்தச் சஞ்சிகையை அக்காலகட்டத்தில் ஜெயந்தி, ரஞ்சன், சுந்தரி ஆகிய இளைஞர்களுடன் சேர்ந்து மேலும் சில இளைஞர்கள் நடாத்தி வந்தனர். இந்தக் கையெழுத்துப் பிரதியில் கவிதைகள் சில, கட்டுரைகள் சில மற்றும் 'மண்ணின் குரல்' என்னுமிந்தச் சிறு நாவல் ஆகியவற்றையும் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் வெளியான எனது படைப்புகள் அனைத்தும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை வலியுறுத்துபவையாகவே அமைந்திருந்தன. அதற்காகவே எழுதப்பட்டவை அவை. 'மண்ணின் குரல்' சிறுநாவல் முடிக்கப்பட்டு , 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான கவிதைகள், கட்டுரைகள் சிலவற்றை உள்ளடக்கி 'மண்ணின் குரல்' தொகுப்பு கனடாவில் 4.1.1987 அன்று வெளியானது. கனடாவில் றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சடிக்கப்பட்டு, மங்கை பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.  எனது நாவல்களான 'மண்ணின் குரல்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' , மற்றும் 'கணங்களும் குணங்களும்' ஆகியவை ஒரு தொகுப்பாக 'மண்ணின் குரல்' என்னும் பெயரில் தமிழகத்தில் 1998இல் 'குமரன் பப்ளீஷர்ஸ்' நிறுவனத்தால் வெளியிப்பட்டது.  இரண்டு 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்புகள் என் படைப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ளன. இரண்டு தொகுப்பிலும் உள்ள பொதுவான ஒரே படைப்பு 'மண்ணின் குரல்' நாவல்தான்.

இந்த நாவல்தான் நானறிந்த வரையில் கனடாவில் நூலாக வெளிவந்த முதலாவது தமிழ் நாவல். இந்த நாவலுக்கு முன்னர் வேறெந்த நாவலாவது வெளியாகியிருந்தால் அறிந்தவர்கள் அறியத்தரவும். இந்த நூலுக்கு அட்டைப்படம் வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. ஓவியத்தைச் சிறிது நவீனத்துவபாணியில் வரைந்திருந்தார். இதனையே பின்னர் தமிழகத்தில் வெளியான 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் பயன்படுத்தியிருந்தனர்.

இந்த முதலாவது மண்ணின் குரல் தொகுப்பிலுள்ள மண்ணின் குரல் சிறுநாவலின் அடிப்படைக்கருத்து இதுதான்: இக்கதையின் பிரதான பாத்திரம் அநபாயன். சாதாரண இளைஞான அவன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் எவ்விதம் இணைந்து போராடப் புறப்படுகின்றான்; எவ்விதம் சூழல்கள் அவனை அவ்வாறு போராடத் தள்ளி விடுகின்றன என்பது பற்றியதுதான் நாவலும். அவனது காதலியான சாரதாவின் அக்காவான கமலா டீச்சர் ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் சமயம் அவ்வழியால் வந்த இலங்கை இராணுவத்தினர் சிலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, வீதியின் ஓரத்தே தூக்கி எறியப்பட்டு விடுகின்றாள். அதனால் பாதிக்கப்பட்ட அவள் அவளது காதலான விடுதலைப் போராளியான ஈஸ்வரனுடன் இணைந்து போராடப் புறப்பட்டு விடுகின்றாள். அவ்விதம் செல்லும்போது அவள் ஒரு கடிதமொன்றினையும் எழுதி வைத்துவிட்டுச் செல்கின்றாள். அதிலவள் பின்வருமாறு எழுதியிருப்பாள்:

"தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு நான் கோழையல்ல. வாழ்வினைச் சவாலாக ஏற்கும் பக்குவம் எனக்கு , உங்கள் மகளுக்கு நிறையவேயுண்டு அப்பா. உண்மையில் என்னை அந்தச சம்பவம் பாதித்துத்தான் விட்டது. அந்தப் பாதிப்புடன் தொடர்ந்தும் அதனை அப்படியே ஜீரணித்துக்கொண்டு வாழ்வதற்கு நிச்சயம் முடியவே முடியாது. எமது சமுதாயத்தில் ஏற்கனவே பெண்கள் வெறும் பண்டமாற்றுப் பொருள்களாகத்தான் வாழ்கின்றார்கள். அத்துடன் இப்போது தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவக் காடையரின் காமுக வெறியாட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள். தமிழர்களின் போராட்டத்தில் பெண்களும் ஆண்களுடன் தோளுயர்த்திப் போரிட வேண்டிய தருணம் வந்து விட்டதாகக் கருதுகின்றேன். ஆமாம் அப்பா! எனது தாய் நாட்டு விடுதலைக்கான வேள்வித்தீயினில் குதிப்பதற்கு முடிவு செய்து விட்டேன். உங்கள் மகளைப் பற்றிய கவலையினை இனி விடுங்கள்.

ஈஸ்வரனை எனது வாழ்வில் கணவராக அடைந்து குடியும் குடித்தனமுமாக வாழ்வதற்கு எமது இன்றைய நிலைமை எம்மை அனுமதிக்கவில்லை.  ஆயினும் எமது மக்களின் விடுதலைக்கான போரில் அவருடன் இணைந்து போராடுவதைப் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.

அப்பா! உங்களைப் போன்ற ஒரு தந்தைக்கு ஏற்பட்ட நிலைமை எந்தத் தமிழனிற்கும் ஏற்படக்கூடாதென்றால்.. என்னை நீங்கள் நிச்சயம் வாழ்துவீர்களென்ற நம்பிக்கை  நிறையவேயுண்டு. "

இதன் பின்னர் அநபாயனும் கமலா டீச்சர் வழியில் செல்வதற்கு முடிவு செய்கின்றான். சாரதாவுடன் வரும் அவனது உரையாடல்கள் மூலம் அவனது எண்ணம் வெளிப்படுத்தப்படுகின்றது. உதாரணத்திற்குப் பின்வரும் உரையாடலினைக் குறிப்பிடலாம்:

"சாரதா, விடுதலைப் போரில் ஆண்கள், பெண்களுட்படக் குதிக்க வேண்டிய காலம் தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டு விட்டது. விடுதலைப் போராளிகளுக்கு உறுதுணையாக மக்கள் யாவருமே தங்களால் இயன்ற வகையில்  பங்களிப்புச் செய்ய வேண்டிய வேளை இது. சாரதா, உனக்கு நான் ஒன்று சொல்கிறேன். வெகு விரைவிலேயே உன் அக்காவின் வழியில் செல்வதற்கு நான் முடிவு செய்து விட்டேன்"

"ஆமாம் சாரதா, என்னைப் பொறுத்தவரையில் நானொரு சாதாரண ஆசாபாசங்களைக் கொண்ச சாதாரண மனிதனே. ஆனால் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் சிங்கள இராணுவத்தின் அடக்குமுறைக்கெதிராகப் போரிடாது போனால் நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணிற்குச் செய்ய வேண்டிய பங்களிப்பினின்றும் தவறியவனாவேன். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறக்கும் மண்ணுடனானதொரு கடமை இருக்கவே செய்கிறது. அவனது வாழ்வு அம்மண்ணில் நிலவிடும் சூழ்நிலைகளினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.  அவன் தாயின் முகத்தில் மகிழ்ச்சியினைக் காண வேண்டுமானால் தாய்க்குத் தாயான அவன் பிறந்து தவழ்ந்த மண்ணின் மகிழ்ச்சி நிலவ வேண்டும்.

சாரதா 'எந்த மண்ணில் அநீதியும் அக்கிரமும் தாண்டவமாடுகிறதோ, எந்த மண்ணில் பொய்மை மலிந்து கிடக்கின்றதோ, எந்த மண்ணில் போற்றிட வேண்டிய பெண்மை புழுதியிலே புரண்டு கிடக்கிறதோ, அம்மண்ணில் அமைதியும், இன்பமும் நிலவுவதில்லை. குடும்ப உறவுகள் குலைந்து விடுகின்றன. அம்மண்ணின்  மைந்தர்களின் விழிப்பினாலேயே , விடுதலைப் போரினாலேயே அங்கு நீதி நிலை நிறுத்தப்படுகின்றது.' என்று எனக்குப் பிடித்த பிரபல நாவலாசிரியர் நந்தி தேவன் புனிதப் பயணம் என்ற நாவலில் கூறியிருப்பதுதான் எத்துணை உண்மையானது."

[ இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டத்தில் இருந்த என் மனநிலையினை மேலுள்ள எழுத்து பிரதிபலிக்கும். கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்ட நாவலிது. மேலுள்ள பந்தியில் வரும் 'அம்மண்ணின்  மைந்தர்களின்' என்னும் சொற்களுக்குப் பதிலாக அம்மண்ணின் மக்களினாலேயே என்னும் சொற்களையே பாவித்திருக்க வேண்டும். மைந்தர்கள் என்பது பெண்களை ஒதுக்கி விடுவதால் மேலுள்ள பதம் சரியானதல்ல. அதுபோல் மனிதன், கற்பழிப்பு போன்ற சொற்கள் நாவலில் வந்திருந்தால், அவையும் அடுத்த பதிப்பினில் களையப்பட வேண்டியவை.  ]

விடுதலைப் போராளியும் , கமலா டீச்சரின் காதலனுமான ஈஸ்வரன் சாமியார் வேடத்தில் சுற்றித்திரிகின்றான். அவ்விதமான சமயமொன்றில் அநபாயனுடனும் அவனுக்குத் தொடர்பு ஏற்படுகின்றது. ஈஸ்வரன் அநபாயனை அரசியல் மயப்படுத்துகின்றான். இறுதியில் ஒரு நாள் அவனுடன் அநபாயன் போராட்டத்தில் இணைந்து விடுகின்றான். அவர்களுக்கிடையில் நடைபெறும் உரையாடல்கள் சில வருமாறு:

"ஆகா, அந்தியின் சிவப்பிலும் ஒரு தத்துவமே தெரிகிறது. "

சிந்தனையினின்றும் நீங்கியவனாக அநபாயன் திரும்பினான். எதிரில் சாமியார் நின்றிருந்தார்.

"இரவு என்னும் கொடுங்கோலன் பகலைக் குத்திக் குதறியதன் விளைவோ இந்தச் சிவப்பு.."

என்றபடி அருகிலமர்ந்த சாமியாரையே நோக்கினான் அநபாயன்.

"இவ்வுலகில் வாழ்வே ஒரு போராட்டம்தான். ஒவ்வொரு உயிருமே தனது வாழ்விற்காகப் போராடிக் கொண்டுதானிருக்கிறது. போராட்டமென்பது இயற்கையில் இயல்பாக நியதியாகவே உள்ளது."

மேலும் தொடர்ந்தார்:

"இயற்கையின் முரண்பாடுகளும், போராட்டங்களுமே வரலாற்றை வழி நடாத்திச் செல்கின்றன. ஆதியில் மனிதனின் அகவுலகோ இருண்டு கிடந்தது. அறியாமை அங்கே குடிகொண்டிருந்தது. அவன் தன் அறியாமையின் விளைவாக புற உலகில் நிலவிய முரண்பாடுகளைப் பிழையாகக் கையாண்டதன் விளைவோ... பிரச்சினைகளைச் சிக்கலாக்கியது.  அவனது அறிவு வளர வளர, முரண்பாடுகளை அவன் கையாண்ட விதம், பழைய முரண்பாடுகள் இருந்த இடத்தில்  புதிய முரண்பாடுகளைக் குடியமர்த்தின. இத்தகைய புதிய முரண்பாடுகளை அவன் தீர்க்கையில் மேலும் சில முரண்பாடுகள் உருவாகின.."

இவ்விடத்தில்  அநபாயன் இடை மறித்தான். "ஐயா , முரண்பாடுகள் முரண்பாடுகள்  என்கின்றீர்களே.  அதென்ன முரண்பாடு. எவை எவற்றிற்கிடையிலெல்லாம் முரண்பாடு. விளக்கிவீர்களா?'

இதற்குச் சற்று நேரம் அமைதியாகவிருந்து விட்டுச் சாமியார் தொடர்ந்தார்:

" தம்பி, மனிதனின் அகவுலகை எடுத்துக்கொள்வோம். அவன் மனதில் நல்ல உணர்வுகளுமுள்ளன. அதே சமயம் கெட்ட உணர்வுகளுமுள்ளன. இவையிரண்டும் முரண்பட்ட உணர்வுகளல்லவா? இவைதாம் அகவுலக முரண்பாடுகள்.  இம்முரண்பாடுகளை எவ்வகையில் கையாளுகின்றானென்பதில்தான் அவன் வாழ்வு ஒன்றில் சிறக்கிறது அல்லது சிறுக்கிறது. "

இவ்விதமாகத் தொடரும் உரையாடலில் சாமியார் சமுதாயத்தில் நிலவும் வர்க்க ரீதியிலான, சாதி ரீதியிலான, இனம், மதம், மொழி ரீதியிலான  சமுதாய முரண்பாடுகளை விளக்கிச் செல்வார்.  இவ்வுரையாடல்கள் இந்நாவலின் நோக்கத்தினை வெளிப்படுத்துவன என்பதாலிங்கு குறிப்பிடுகின்றேன்.

அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக இராணுவத்தினர் எதிர்ப்படுகின்றார்கள். துவக்குகளுடன் அவர்களை நோக்கி வரும் அவர்களை ஈஸ்வரன் தனது தோற் 'பைக்கு'ள் மறைத்து வைத்திருந்த 'சப் மெஷின் கன்' மூலம் தாக்கி அழிக்கின்றார். அத்துடன் அநபாயனும் அவருடன் இணைந்து போராடச் சென்று விடுகின்றான்.

மேலுள்ள 'மண்ணின் குரல்' தொகுப்பிலுள்ள இரண்டு கட்டுரைகள்:

1. பாரதி கண்ட சமுதாயமும், தமிழீழமும். ஈழத்தமிழர்களின் உண்மையான விடுதலை தேசிய விடுதலையுடன் வர்க்க விடுதலையும் சேர்ந்தால் மட்டுமே பூரணமாகும் என்பதை வலியுறுத்தும் சிறு கட்டுரை.

2. விடுதலைப் போரும் பெண்களும் - பெண்கள் விடுதலையும் பாரதியும். இதுவும் தேசிய மற்றும் வர்க்க விடுதலையினை வலியுறுத்தும் சிறு கட்டுரை.

இத்தொகுப்பில் 'மாற்றமும் ஏற்றமும்', 'அர்த்தமுண்டே', 'விடிவிற்காய்', 'புல்லின் கதை இது', 'ஒரு காதலிக்கு', 'மண்ணின் மைந்தர்கள்', 'புதுமைப் பெண்', மற்றும் 'பொங்கட்டும் பொங்கட்டும்' ஆகிய கவிதைகளுமுள்ளன. அனைத்துமே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டதினை மையமாகக் கொண்டவை.

இந்தத் தொகுப்பிலுள்ள 'மண்ணின் குரல்' கனடாவின் முதற் தமிழ் நாவல் என்பதைப் பதிவு செய்வதற்காகவே இந்தப் பதிவினைப் பதிவு செய்கின்றேன். இந்த நாவல் ஒரு கருத்தினை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறு நாவல். ஈழத்தமிழ் மக்களுக்கெதிராக இனக்கலவரங்கள், படையினரின் கொடிய அடக்குமுறைகள் ஆகியன கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், கிளர்ந்தெழுந்த தமிழர்களின் விடுதலைப் போராட்ட உணர்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். அதே சமயம் கனடாவிலிருந்து வெளியான முதலாவது நாவலென்று முக்கியத்துவமும் இதற்குண்டு.

இச்சிறுநாவலை நூலகம் தளத்திலுள்ள 'மண்ணின் குரல்' என்னும் எனது நாவல்களின் தொகுப்பிலும் வாசிக்க முடியும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here