அந்தக் குழந்தைகள் தப்பியது , தொடர்ந்து 40 நாட்கள் நச்சரவங்கள், கொல்மிருகங்கள் மலிந்த காட்டில் உயிர் பிழைத்தது நாம் நேரில் காணும் அற்புதம். குழந்தைகளின் துணிவு, விடாமுயற்சி, நம்பிக்கை இவையெல்லாம் வியக்கத்தக்கவை. அவர்கள் எதிர்கால வாழ்க்கை வளம், நலம் மிகுந்து சிறக்கட்டும்

ஜூன் 14 சேகுவேரா பிறந்ததினம்.   இலங்கையில் ஜேவிபியினரின் முதற்புரட்சி நடைபெற்றபோது அவர்களைச் சேகுவாராக்கள் என்றுதான் மக்கள் அழைத்தனர். அப்பொழுதுதான் முதன் முதலாக இப்பெயரை அறிந்துகொண்டேன். அப்பொழுதுகூட  எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) என்னும் சேகுவேரா (Che Guevara) பற்றி எதுவுமே அறிந்திருக்கவேயில்லை.

பல ஆண்டுகளின் பின்னரே மார்க்சியம் பற்றி அறிந்தபோது, கியூபா பற்றி அறிந்தபோது சேகுவேரா பற்றியும் அறிந்துகொண்டேன். மருத்துவர், எழுத்தாளர், மானுட விடுதலைப்போராளி எனப் பன்முக ஆளுமைமிக்கவர் சேகுவேரா. மானுட விடுதலைப்போராளியான இவர் அப்போராட்டத்திலேயே தன்னுயிரை இழந்தார்.

அவர் ஒரு மருத்துவர். நினைத்திருந்தால் மிகவும் வளமான, செல்வச் செழிப்பான வாழ்வொன்றை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் அவ்விதம் வாழவில்லை. ஏன்? வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் மானுட சமுதாயத்தில் , வாடும் மக்களின் துயரைத் தீர்க்க நினைத்தார். நினைத்து வாழ்ந்தார். அதற்காகவே தன்னுயிரையும் ஈந்தார். அவர் ஒரு மகா மனிதன்.

'சே' என்றால் உலகம் முழுவதும் அடக்குமுறைகளுக்கெதிராகப் போராடும் மக்களைப் பொறுத்தவரையில் 'தோழமை'க்கான  ஒரு குறியீடும் கூட.  அவர் எப்பொழுதும் அம்மக்களின் தோழனாகவிருப்பார்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R