திருஞானசம்பந்தர்திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன.  திருஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டு சிவஞானசம்பந்தரானார்.  அன்று முதல் பாடல்கள் பாடிவந்தாh,  இந்நிகழ்வு இறைவன் திருவருளால் நடைபெற்ற ஒன்றாகும்.  சம்பந்தரின் பாடல்கள் அனைத்தும் உயிர்த்தன்மை உடையவை.  ஓதுபவரை ஈடேற்றும் வல்லமை பெற்றது.  இறைவன் அருள் பெற்று அருளிய முதல் பதிகத் திருக்கடைக்காப்பில் ‘திருநெறிய தமிழ் வல்லவர்  தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று கூறுகிறார்.  சம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் மக்கள் பிறப்பிறப்பற்று இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளார்.  அத்தகைய வாழ்வியல் கூறுகளை இங்கு காண்போம்.

திருக்கடைக் காப்பு:
பத்து பத்து பாடல்களால் பாடப்பெறுவது தான் பதிகம் என்று  பெயர் பெறும், சமய இலக்கியங்களில் காரைக்காலம்மையார் இம்முறையைத் தொடங்கி வைக்கிறார்.  அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகங்;கள் இதற்குச் சான்றாகும்.  திருஞானசம்பந்தர் பதிகங்களில் பதினொரு பாடல்கள் அமைந்துள்ளன.  புதினொன்றாவதாக உள்ள பாடலுக்கு திருக்கடைக்காப்பு என்று பெயர்.  இதைப் பதிகப் பயன் என்றும் கூறுவர்.  தம்முடைய பதிகங்களை ஓதுவதால் வரும் நன்மைகளை திருக்கடைக்காப்பில் தெளிவாக விளக்கியுள்ளார்.

பதிகப்பயன்:
திருக்கடைக்காப்பில் பவ்வேறு செய்திகள் கூறப்பட்டிருந்தாலும், அதில் பதிகப் பயனே முக்கிய இடத்தைப் பெறுகிறது.  மக்களிடம் நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக சம்பந்தர் இம்முறையைக் கையாண்டுள்ளார்.  தன்னுடைய பதிகத்தைப் படிப்பதால், பாவம் பழி, துன்பம் இடர்கள் அடையா என்றும், புகழோடு நற்பயன்களைப் பெற்று வாழ்வார்கள் என்றும், வான் ஆள்வர் என்றும், வினைநீக்கம் பெற்று முத்திநிலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

பாவம், பழி, - துன்பம், இடர்கள் அடையா:
பாவமும் பழியும் இப்பிறப்பில் வரக்கூடியது துன்பம் இடர்கள் எல்லாம் முன்வினையின் காரணமாக நமக்கு நேரக்கூடியவையாகும்.  எந்தப் பிறவியில் வந்த தீமைகளாக இருப்பினும் அதற்கு ஒரே மருந்து சம்பந்தரின் பதிகங்களாகும்.  நம்மைப் பாவம் அடையாது என்பதை திருமுதுகுன்றம் பதிகத்தில்

           '……………………………………..இசையோடிவை பத்தும்
          பகரும் மடியவர்கட் கிடர் பாவம் அடையாவே”
   - முதல் திருமுறை பதிகம் - 12

என்று கூறுகிறார்.  இசையோடு கூடிய பாடல்களைப் பாடுபவர்களுக்கு பழியோடு பாவமும் இல்லை என்பதை திருவேட்களம் பதிகத்தில்

                     'பண்ணியல் பாடல் வல்லார்கள்
                     பழியொடு பாவம் இலரே”   
    - முதல் திருமுறை பதிகம் -39

என்றும் கூறுகிறார்.  பாவமும் பழியும் இல்லையானால் புகழும், புண்ணியமும் உள்ளவராய் வாழ்வார்கள் என்பது பெறப்படுகிறது.  நமக்கு வந்துள்ள பாவம் கெடவேண்டும் என்றால் பாடுவதுடன் ஆனந்தமாக ஆடவும் வேண்டும் என்பதை திருக்கச்சியேகம்பம் பதிகத்தில் விளக்குகிறார்.

பழி இல்லை:
திருஞானசம்பந்தர் இறை ஆற்றல் பெற்றும் இவ்வுலகில் வாழ்ந்தார்.  காரணம்  மனித இனம் மேம்படவும், பழிபோகவும,; அன்பவர்களின் வாழ்வு சிறக்கவும் ஆகும்.  இதைத் தம்முடைய குறிக்கோளாகக் கொண்டுள்ளார் என்பதை, வேத நெறி சிறந்து விளங்கவும், வைச நெறி மக்களிடையே பொலிந்து தோன்றவும், இறைவன் மீது பற்றுக் கொண்ட அன்பர்களின் வாழ்வு சிறக்கவும் பணிபுரிவதைக் குறிக்கோளாகக் கொண்டவர் சம்பந்தர் என்று ஆதிபாலசுந்தரன் குறிப்பிடுவார்.

தமக்கு வரும் பழியைப் போக்கிக் கொள்ள பண்ணால் இயன்ற  இந்த அருந்தமிழைப் பாடியும் ஆடியும் போற்றுங்கள் என்று திருவேள்விக்குடிப் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.  திருமுதுகுன்றம் பதிகத்தில்

                '…………………………………….. செந்தமிழ்
               பாடிய அவர் பழியிலரே”
      -  மூன்றாம் திருமுறை பதிகம் - 99

என்று போற்றுகிறார்.

துன்பம் இல்லை:
சம்பந்தர் உலகமக்களின் துயர்களைத் தீர்க்கும் பொருட்டே பதிகங்களை அருளிச் செய்துள்ளார்.  தம்முடைய ஆன்ம விடுதலையை அவர் எப்பொழுதும் விரும்பியதில்லை.  உலக மக்களுக்காகவே உணர்த்துகிறார்.  உங்கள் துயர் தீருமே என்றும் கூறுவதிலிருந்து உணரலாம்.  நமக்கு வரும் துயரங்களில் மிகவும் கொடியது பிறப்பு இறப்புகளாகும். இந்தத் துன்பத்தில் இருந்து மீளவேண்டும,;  சம்பந்தரின் பதிகங்களைப் பாடுவதன் மூலம் நமக்கு இந்நிலை கைகூடும்.  பாடல்களை சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் துன்பம் இல்லை என்பதை திருவிடை மருதூர்ப்பதிகத்தில்

         '…………………………………….. பாடலிவைபத்தும்
     சொல்லுவார்க்கும்; கேட்பார்க்கும்; துயரமில்லை” 
    -இரண்டாம் திருமுறை பதிகம் - 56

என்று கூறுகிறார்.

பிணி இடர்கள் இல்லை:
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் அநாதிகாலமாக நம் உயிரைப் பற்றி நிற்பவையாகும் அம்மலங்கள் அழிந்தால் தான் நமக்கு மேன்மை கிடைக்கும்.  இப்படிப்பட்ட மலங்களை பிணி என்று கூறலாம்.  மேலும் நம் உடலைத் துன்புறுத்தக் கூடிய நோய்களையும் பிணி எனலாம்.  திருக்கலிக்காமூர்ப் பதிகத்தைப் பாடினால் பிணி விலகும்.  இதனை சம்பந்தர்

          'வாழி யெம்மானை வணங்கியேத்த
          மருவா பிணிதானே”
       -  மூன்றாம் திருமுறை பதிகம் - 105

என்று குறிப்பிட்டுள்ளார்.  உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் செல்வம்தான் பற்றுக்கோடாக உள்ளது,  இதன் மூலம் இடர் நேருகிறது.  ஆனால் சம்பந்தரின் பதிகங்களைப் பற்றுக்கோடாகக் கொண்டால் இடர் நேராது, வந்த இடரும் கெட்டுவிடும் என்று கூறியுள்ளார்.

வினைக்கு ஈடாக எடுக்கப்பட்டது மனிதப்பிறவி, வினை ஒழிந்தால் உயிர் உடலில் நிலைத்து நிற்காது என்பது சைவசித்தார்ந்தத்தின் கொள்கையாகும்.  சம்பந்தரின் பாடல்களைப் பாடுவதன் மூலம் பழி, பாவம், துன்பம், வினை ஒழிந்து முத்தி நிலையைப் பெறமுடியும் என்பதை சம்பந்தரின் திருவாக்கிலிருந்தே உணரலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்