01
வயிற்றிலடிக்கிற போது
ஒரு கொடிப் போராட்டமும்
ஒரு எதிர்ப்புச் சுலோகமும்
ஒரு பெரும் புரட்சியை
எவ்வாறு நிகழ்த்தும்!
ஒரு துண்டு பாணும்
ஒரு பால்மா பையும்
ஒரு கலன் எரிபொருளும்
இன்னும்
மின்வெட்டும்....
அதை எவ்வாறு நிகழ்த்தும்!
பசியின் நெருப்பிலிருந்து
புரட்சியின் முதல் பொறி
பற்றுகிறதெனின்...
உண்டாறும் காலம் வருகையில்
அதன் சுவாலை என்னவாகும்!
ஒரு புரட்சியை நிகழ்த்தும்
அதிகாரக் கதிரையின் கால்களை
விலை ஏற்றம் அசைக்கும்
என்ற நம்பிக்கையை
எங்கிருந்து பெறுவேன்!
'எதிர்' என்றொரு சொல்லை
எங்கு நடலாம்?
எவ்வாறு வளர்க்கலாம்?
உலகத்தமிழ் உறவுகளுக்கு அன்பின் வணக்கங்கள். சங்க இலக்கியம், வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளை மெய்ப்பிக்கும் இலக்கிய சான்றுகள். இவற்றில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். பழம் இலக்கியங்களை படித்து என்ன ஆகப்போகிறது என நினைப்பவர்கள் சற்றே நேரம் ஒதுக்கி இவ்விலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியலை படித்தர்களானால், அறம், காதல், வீரம் , வணிகம் , தலைமை , ஆளுமை என்பதெல்லாம் என்ன என்பதில் தெளிவான பார்வையை பெறுவார்கள். தெளிவு பிறந்தால் அச்சமூகம் நிச்சயம் சிறந்ததொரு சமூகமாக வளர வாய்ப்புள்ளது. மேலைநாட்டு வாழ்வியலை கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கேனும் நம் பண்டைத்தமிழ் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள காட்டுவோமாக.
இந்த கட்டுரையில் காவிரியின் பெருமையை, அழகை சங்க இலக்கியம் பட்டினப்பாலையின் வழியாக பருகுவோம் வாருங்கள்.
301 வரிகளைக் கொண்டதும் ,வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சமூகவியல் நோக்கர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் மற்றும் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் விருப்பமானதும், பயன்தரத்தக்கதுமான நூல்களில் பட்டினப்பாலையும் ஒன்று. உள்ளதை உள்ளபடியே கண்ணாடி போல காட்டுவது சங்க இலக்கிய நூல்களில் காணப்படும் இயல்பு.
ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று வரும்போது, யாரும் இத்தனை சொற்களுக்குள் சிறுகதை இருக்க வேண்டும் என்று வரையறை செய்வதில்லை. இப்பொழுது வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகி வருகின்றது. பத்திரிகைகள் சஞ்சிகைகள் கூட சிறுகதைகளின் அளவை மட்டுப்படுத்துகின்றன. நீண்ட கதைகளை விரும்புவதில்லை.
கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகள் அளவில் சிறியவை. ஆனால் உள்ளடக்கத்தில் பல அம்சங்களைத் தொட்டு நிற்பவை. அசத்துபவை. `மகிழ்’ வெளியீடாக, இந்த வருடம் (2022) வந்திருக்கும் `நோ போல்’ சிறுகதைத்தொகுதியில் மொத்தம் எட்டுக்கதைகள் இருக்கின்றன. கடந்த பதினாறு வருடங்களில் எட்டுச் சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி, வாசிப்பதும் சினிமா பார்ப்பதும் தனக்கு மிகவும் பிடித்தமானது எனக் குறிப்பிடுகின்றார். கிருஷ்ணமூர்த்தியின் ஆரம்பகாலச் சிறுகதைகளில் இருந்த விடயதானம் தற்போதைய கதைகளில் காணக் கிடைக்கவில்லை. வேல் அன்பன், ஒரு வீடு – இருவேறு உலகம், பசி, சாப்பாடு சிறப்பாக வந்திருக்கின்றன. உயிர் சிறுகதை எழுதப்பட்டுள்ள உத்தி ஏனைய கதைகளில் இருந்து வேறுபடுகின்றது.
நீ பிழையா …?
நான் பிழையா…?
அல்ல
நாம் தாம் பிழையா…?
எல்லாம் பிழைதான்.
பிழையாய்போனோம்
பிழையாய் வாழ்கின்றோம்
தவறுகளை
தட்டிக்கேட்காமல்
தவறுகளோடு சரியாகின்றோம்.
தவறாய்போன
வழியில்
நோ்மை
எவ்விடத்தில்
அறியவே முற்படுகின்றோம்.
எழுத்தாளரும் ‘ நடு ‘ இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் பாரிஸிலிருந்து விடுமுறைக்கு இலங்கைக்கு வந்து திரும்புகையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மாரடைப்பு வந்து மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது. அற்பாயுளில் மறைந்திருக்கும் கோமகனின் இயற்பெயர் இராஜராஜன். சுறுக்கர் என்ற புனைபெயரையும் கொண்டிருந்தவர். சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதிவந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட குரலற்றவரின் குரல் நேர்காணல் தொகுப்பு இலக்கியப்பரப்பில் கவனத்தை பெற்றிருந்தது. கோமகனின் தனிக்கதை, முரண் முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர்.
எழுத்தாளர்கள் அனைவருமே ஒரே நேர்கோட்டில் பயணிக்கமுடியாது. மாற்றுக்கருத்துக்களுடன் போராடும் இயல்புள்ளவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களின் இயல்புகளை நன்கு தெரிந்துகொண்டே தொடர்பாடலை மேற்கொண்டு நேர்காணல் தொகுப்பினை வெளியிடுவதே பெரிய சாதனைதான். அச்சாதனையை குறிப்பிட்ட குரலற்றவரின் குரல் தொகுப்பின் மூலம் நிகழ்த்தியவர் கோமகன்.
எதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு, மலைகள், ஒருபேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல் முதலானஇதழ்கள்,இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். நெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் வரவாக்கியிருப்பவர். சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்த்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப் பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல் முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து 'நடு' என்னும் இணைய இதழையும் வெளியிட்டு வந்தவர். சினிமா சிறப்பிதழ் ,கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ் முதலானவற்றையும் 'நடு' இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது.
“ ஏலி ஏலி லாமா சபக்தானி “ என் தேவனே என் தேவனே… ஏன் என்னை கைவிட்டீர்…? “ யேசு சிலுவையில் அறையப்பட்ட போது உதிர்த்த வார்த்தைகள் . 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக அன்றைய நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதிலும் இழுபறிகள் நிகழ்ந்தன.
தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் அந்த விசாரணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். அதனை அவதானித்தார் சம்பவங்கள் நடந்தவேளையில் நாட்டிலிருக்காத தேசத்தின் அதிபர் மைத்திரியார். உடனே என்ன செய்தார்? “ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேறியவர்கள் “ என்று ஒரு பெரிய குண்டைப் போட்டார். அது தேவாலயங்களில் பாவிக்கப்பட்ட குண்டுகளை விட மிகவும் வலிமையானது. அந்த பொன்னான வாக்கைக்கேட்டதும் சிசிர மெண்டிஸ் தனது ராஜினாமா கடிதத்தை பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொடவிடம் கையளித்துவிட்டு, தனக்கு சுகமில்லை எனச்சொல்லி ஓய்வுக்குச்சென்றார்.
“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை “ என்றும் மற்றும் ஒரு அதிரடிக் குண்டைப்போட்டார் மைத்திரியார். இவ்வாறெல்லாம் அவர் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டே தெரிவுக்குழு பல வாரங்களாக விசாரணை செய்துகொண்டிருந்தது. ஊடகங்களும் அந்த விசாரணை வாக்குமூலங்களுக்காக பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. நாமும் படித்துத் தொலைத்( ந்) து கொண்டிருந்தோம்.
இன்று மிகவும் சாதாரணமாக 'கட்டடக்காடு' , 'காங்ரீட் காடு' போன்ற பதங்களைப் பாவிக்கின்றோம். அண்மையில் வெளியான எனது சிறுகதைத்தொகுதியில் கட்டடக்காடு என்னும் சொற்பதத்துடன் கட்டடக்கூடு என்னும் சொற்பதத்தையும் உள்ளடக்கியிருந்தேன்.
'கட்டடக்காடு; என்னும் சொற்பதத்தைப் பாவித்துத் தமிழில் மேலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கவிஞர் 'காலம்' செல்வம் அருளானந்தம் அவர்களின் கவிதைத்தொகுதியொன்றும் 'கட்டிடக்காடு' (உண்மையில் கட்டடக்காடு என்றிருக்க வேண்டும். பலரும் கட்டடத்தைக் கட்டிடம் என்றே அழைக்கின்றார்கள். வழக்கில் இவ்விதமே பலராலும் அழைக்கப்படுவதால் ஆசியான் பதிப்பகமும், கவிஞர் செல்வமும் அவ்விதமே பாவித்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். கட்டிடம் - கட்டு+ இடம் = கட்டுமிடம். கட்டு + அடம் = கட்டடம். கட்டடம் கட்டுவதற்கான இடமே கட்டிடம். அடம் - அடுக்கு. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதால் கட்டு + அடம் -> கட்டடம் என்றானது.) என்னும் பெயரில் , அமரர் எஸ். சபாலிங்கத்தின் ஆசியான் பதிப்பகத்தின் வெளியீடாக வெளியாகியிருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களில் ஒருவர் என மதிக்கப்பட்ட விற்கன்ஸ்ரைன் பற்றிப் பல்வேறு மொழிகளில் கட்டுரைகளும், ஆய்வுகளும், புனராய்வுகளும் வெளிவந்துகொண்டிருந்த போதிலும் தமிழ் மொழியில் ஆய்வாளர் செ.வே.காசிநாதனின் இத்தகைய ஒரு நூலைப் படிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றது. அவரின் இத்தகைய முயற்;சி மிகுந்த வரவேற்புக்கும், பாராட்டுக்குமுரியதாகும். ஆஸ்திரியாவில் பிறந்த பேராசிரியர் விற்கன்ஸ்ரைன் இங்கிலாந்தில் கேம்ரிஜ் பல்கலைக்கழகத்தில் 1930 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டுவரை மெய்யியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். அளவையியல், கணித அடிப்படைகள் போன்ற கருத்துக்களை சிந்தனை வழிகளில் நின்று அர்த்தம், மொழி, மனம் என்ற ஆய்வு நூலை எழுதியிருந்தார். இருந்தும் அவர் எழுதியவற்றை அவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அதாவது 1953 ஆம் ஆண்டே இரண்டு பாகங்களாக வெளிவந்திருந்தமையை அறியமுடிகிறது.
லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் மெய்யியல்துறைப் பேராசிரியர் டி.டபிள்யூ. ஹம்லின் ( னு.று.ர்யஅடலn) கருத்தரங்குளில் பங்குபற்;றித் தான் பெற்ற அறிவும் அத்துடன் இத்தாலிய நண்பர் பிஎரோ பின்சவுற்றியுடன் (Pநைசழ Piணெயரவi) தான் மேற்கொண்ட எண்ணற்ற உரையாடல்களுமே இத்தகைய ஆய்வு முயற்சியை மேற்கொள்வதற்கு தனக்கு வழிகோலியதாகக் இந்நூலாசிரியர் காசிநாதன் குறிப்பிடுகின்றார். 1973 ஆம் ஆண்டிலிருந்து தான் மேற்கொண்ட ஆய்வுகளின் கட்டுரை வடிவமே இவை என்று குறிப்பிடும் காசிநாதன் 1983ஆம் ஆண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் கற்ற மாணவர்களுக்கு இக்கட்டுரைகள் மூலமே தான் விளக்கம் அளித்ததாகக் கூறுகின்றார்.
ஆய்வுச் சுருக்கம்
சொந்த நாட்டை விட்டு அயல்நாட்டிற்கு வாழ்வாதாரம் தேடிச்செல்லும் நிலை தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் குடும்பத் தலைவன் தமது மனைவி, பிள்ளைகளை விடுத்து வெளிநாடு செல்லும் போது அக்குடும்பங்கள் சமூகத்தாலும், தங்களது சுயத்தேவைகளை நிவர்த்திச் செய்ய பொருளாதாரமின்றி பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். இதனை ‘இன்னல்’ என்ற வார்த்தைகளைக் கொண்டு கட்டமைத்துக் கூறிவிட முடியாது என்பதை “அளம்“ நாவலின் வழி தெளிவாக உணரலாகிறது. பொருளீட்டுதல் என்பது குடும்ப வாழ்க்கைக்கு தேவை என்றே இருப்பினும், அதைவிடத் தேவையானது குடும்பத்தின் மன நிம்மதியும் பாதுகாப்புமாகும். இவற்றை எவ்வளவு பொருளாதாராத்தை ஈட்டிக் கொணர்ந்தும் நிவர்த்தி செய்ய இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொந்த நாட்டில் சுயகௌரவம் பார்த்து உழைக்காமல் கிடைத்த வேலைகளைச் செய்தும், தங்களின் திறமைகளைக் கொண்டு வேலைகளை உருவாக்கியும், பொருள் ஈட்டி வாழ்வது மட்டுமே தங்களது குடும்பத்தையும், நாட்டையும் உயர்த்தும் என்பது அறியலாகிறது.
கலைச்சொல்லாக்கம்
அளம் - உப்பளம்; புலம் - இடம், திசை; கால் நகை - சிலம்பு; வாய்நகை - புன்னகை; சோணாடு – சோழநாடு; புலம் பெயர்தல் - இடம் பெயர்தல் அல்லது சொந்த ஊரை விட்டுச் செல்லுதல்; ஆயா அப்பன் - தாய் தந்தை; கப்பக்காரன் - கப்பலில் சென்று வேலைசெய்பவன்; சீல – சேலை; பச்சி – பறவை; ஆப்பை – கரண்டி; காசி – பணம்; பிராணன் - உயிர் ; வூடு – வீடு; ஆம்புடையான் - கணவன்.
அவனுடைய மனம் குழப்பமாகவே கிடக்கிறது .எழுத்து வேலையில் , ' மனசு இறங்க மாட்டேன் ' என முரண்டு பிடிக்கிறது .தேத்தண்ணீர் ஆற்றுறவன் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும் . , மரதன் ஓடுறவன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் . எழுதுறவனும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் . முகமூடியைப் போட்டு விட்ட நடிகன் பிறகு அதை கழற்றி வைக்க முடியாதல்லவா . அவன் நிறுத்தி விட்டால் , யார் கோகுலனா , அப்படி ஒரு பிறவி இருந்ததா ? புறநாடாக இராது சொந்த நாட்டில் இருந்திருந்தால் , அங்கேயும் சொந்தமாக காணி நிலமும் வேண்டுமய்யா , ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவி நினைவு கூர்ந்து வருவார்கள் .ஒரு மாமரக்கன்றை அல்லது ஒரு முருங்கையை நட்டு விட்டு அது பலன் தருகிற போதெல்லாம் அரூபமாகவும் அவனும் வலம் வந்து கொண்டிருப்பான் . இது கண்டம் விட்டு கண்டம் மாறி பனி விழும் மண்ணிலே இங்குள்ள சிறிதுபனிபிடித்த மக்களிற்கு மத்தியில் ...அடையாளமே இல்லை . தன் இருப்பை மறக்கடிக்கக் கூடாது என்று நம்மாள் , வீட்டிலே அடிக்கடி முறைக்கிறார், திட்டுறார் ....சிந்தித்துப் பாருங்கள்.என்ன செய்வது உலகம் இப்படி தான் இயங்கிறது .எமக்கெல்லாம் ஒரு நல்ல குரு ,வழி நடத்த ஒரு அமைப்பு வந்து அமைவதில்லை . வெளியிலும் அதே தான் நிலமை .
அமெரிக்கத் தலைவர் ' சுப்பர் போல் ' ( கிரிக்கெட் ) வருணையாளர் போல ' ரஸ்யப் போரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் . கனடாத் தலைவர் மூச்சு விடாமல் எஸ் .பி . பாலசுப்பிரமணியம் சினிமா பாட்டு பாடுறது போல , தடை உத்தரவுகளை விதித்துக் கொண்டிருக்கிறார் . ஒரு கொசுறுச் செய்தி , கனடிய தலைவரின் தந்தையார் , சோவியத் ரஸ்யாவிற்கு யாலுவா , சீனாவிற்கு யாலுவா , கியூபாவிற்கும் யாலுவாக இருந்தவர் . நேட்டோ தோழர்கள் பரிகசித்த போதிலும் இருந்தவர் . தற்போதையவர் வாரிசாக இருந்திருந்தால் இந்தப்போரை நிகழ விட்டிருக்க மாட்டார் . உலக வெப்பதிற்கு குரல் கொடுத்தவர் " போரும் ஒரு காபன் பிரச்சனை தான் ! " என்பதை புரிந்து நிறுத்தி இருப்பார் . இனி , இந்த ஜென்மத்தில் இந்த நாடு இவ்விரு பிரச்சனைகள் பற்றிக் கதைத்தால் கை கொட்டிச் சிரிப்பார்கள் .
“புவி அனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்து
தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும்
வசை என்னால் கழிந்த தன்றே”
என்று எட்டயபுரம் மன்னா் வெங்கடேசு ரெட்டப்ப பூபதிக்கு கி.பி.1919 ஆம் ஆண்டில் எழுதிய பாடலில் தன்னைப்பற்றி தன்னம்பிக்கை மேலோங்கும் குரலில் உரைத்த திறம் ஒன்றே போதும் பாரதி பற்றிய அறிமுகத்திற்கு… பாரதியின் தேச பக்தி கருத்துக்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதி-மத-தீண்டாமை எதிர்ப்பும், பெண் விடுதலையும்,தேசம் தழுவிய மனித நேயமும், தமிழ்ப்பற்றும் இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் நமக்கு முழுமையாக வேண்டப்படுகிறது. ஆக காலம் பல கடந்தும் இன்றும் மகாகவியாய், மக்கள் கவியாய்,தேசத்தின் கவியாய் உயா்ந்து நிற்கும் பாரதி தனது உரைநடைதிறத்தாலே நாட்டில் விழிப்புணா்வையும், மொழியிலே புதிய மலா்ச்சியையும் உருவாக்கியவா். அவா் தம் உரைநடைப்படைப்புகள் மானுடா்களுக்கு எங்ஙனம் வாழ்வியல் மதிப்புகளை எளிமையாகவும், உள்ளத்தை நேராகத் தாக்கும்படியான வலிமையான சிந்தனைத் தெளிவுடன் அமைந்துள்ளன என்பதை, “பாரதி தமிழ் வசனத் திரட்டு” என்ற நூலின் தரவுகளை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
முன்னுரை
கழுதை என்று ஒருவரைக் கோபத்தோடு திட்டும் போது அது வசவு வார்த்தையாகவே பயன்படுகின்றது. என்பது உண்மைதான் நாம் தேவையில்லாமல் கழுதையின் பெயரைக் கெடுக்கிறோம். கழுதை நமக்கு எவ்வாறு பயன்படுகிறது. அது சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கிய வரை எவ்வாறு உழைத்து நமக்கு பயனுள்ள விலங்காக உள்ளத்தைப் பற்றியும், கழுதையின் வாழ்விடம், உணவு, விவசாயத்திற்கு எவ்வாறு பயன்பட்டது என்பதையும் இக்கட்டுரை விளக்கிறது.
கழுதை வாழ்விடம்
ஒரு கழுதைக்கு 2-3 ச.மீ வீதம் இடம் தேவைப்படும் கழுதைகளைக் கட்டி வைக்கும் இடம் சுத்தம் மற்றும் சுகாதாரமாக இருக்க வேண்டும். கழுதைக் கொட்டிலில் வெளிச்சம் மற்றும் வடிகால் வசதி இருப்பது மிகவும் அவசியமாகயிருக்கிறது. கழுதைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. அவை ஒவ்வொரு கண்டத்திலும் அமைந்துள்ளன. கழுதைகள் இயற்கையான வாழ்விடங்களைக் கொண்டிருக்கவில்லை. மனிதா்கள் கொண்டு வந்த எந்த இடத்திலும் அவற்றைக் காணலாம்.
கழுதை உணவு
ஆடு மாடுகளைப் போல மேயும் குணமுள்ளது. நார்ச்சத்து மிக்க புல், செடிகள் போன்றவற்றை மேயும், இவற்றை எளிதாகச் செரிக்கும் திறன் கழுதைக்கு இருப்பதால், இதன் எரிசக்தித் தேவை குறைவாகவே இருக்கும். இதன் உடல் எடையில் 1.5 சதவிகீதம் அளவில் உலா் பொருளைத் தீவனமாகத் தர வேண்டும் . மேய்ச்சலுக்குப் போகும் கழுதைகளுக்கு வைக்கோல் மட்டும் தரப்படுகிறது.
நார்ச்சத்து மிகுந்த தீவனங்கள் கழுதைக்கு ஏற்றவையாக இருப்பதால், இதன் சத்துத் தேவையைப் பசும்புல் ஈடு செய்யும், கழுதைக்கு 1-2 கிலோ உளுந்து வீதம் கொடுக்கப்படுகிறது. ஒரு கழுதைக்கு 25 சென்ட் மேய்ச்சல் நிலம் தேவைப்படும் மேய்ச்சலக்குச் செல்லாத கழுதையின் உணவில் 75சதவிகீதம் பசும்புல்லும், 25சதவீதம் உலா் தீவனம் கொடுக்கப்படுகிறது.
“பாருவதி….. இனிக்காலத்தில ஓம்மூஞ்சீல முழிக்கவே கூடாதிண்ணுதான் நெனைச்ச்சுக்கிட்டிருந்தேன்….. என்னபண்ண…. ஊருக்கு நாட்டாமைப் பொறுப்பில இருக்கிறதால, யாருகிட்டயும் மானரோசம் பாக்க முடியாத வெறுவாகெட்ட பொழைப்பாயெல்லா போச்சு ஏம்பாடு… சரிசரி… நம்ம எல்லைச்சாமி கோயில் கொடைக்கு குடும்பத்துக்கு நூத்தியொரு ரூவா குடுத்திடணும்னு ஊர்க் கூட்டத்தில முடிவுபண்ணினது தெரியுமில்லே…. ஒரு வாரமாகியும் துட்டு ஏதும் குடுக்காம இருந்தா என்ன அர்த்தம்….”
கேட்டுக்கிட்டே நாட்டாமை நாச்சிமுத்து ஐயா எங்கவீட்டு குச்சி வாசல் ஓரமா ஒக்காந்துகிட்டாரு.
எங்கம்மா மொகத்த பாக்கவே ரொம்பவும் பாவமா இருந்திச்சு. அழுகை ஒண்ணுதான் வராத கொறை.
“தப்பா நெனையாதீரும் நாட்டாமை ஐயா…. வர்ர வெள்ளிக்கிழமைதான் பீடிக்கடையில சம்பளம் போடுவாங்க…. வாங்கின கையோட குடுத்துப்புடுறேன்…..”
கெஞ்சிற மாதிரி பேசிச்சு எங்கம்மா.
நாட்டாமை நாச்சிமுத்து விடல்ல.
“ ஒன்னய மாதிரி ஆளுங்க கஷ்டப்படக் கூடாதுண்ணுதான், நாம நூத்தி ஒண்ணுண்ணு வரிய பிரிச்சோம்…. இல்லேன்னா போனமாசம் தெற்கு ஊர்க்காரனுக நடத்தின கொடையில, அவங்க போட்ட ஆட்டத்துக்கும், காசைக் கொட்டி ரொம்ப ஜோரா பண்ணின திருவிழாவுக்கும், நாம பதிலுக்குப் பதிலு பண்ணிக் காட்டணும்னு, வீட்டுக்கு வீடு இருநூத்தம்பதோ, முன்னூறோன்னு பிரிச்சிருப்போம்…. பரவாயில்ல…. ஏற்கனவே ஊர்ப்பணம் கொஞ்சம் இருக்கு…. அதையும் போட்டு இந்தத் தடவை நம்ம சாமிக்கு, கொடைய ஜாம்ஜாம்னு நடத்திப்புடலாம்…. பாட்டுக் கச்சேரிக்கெல்லாம் டவுண்லயிருந்து ஆளு வருது…. தெரியுமா…..”
“பாட்டுக் கச்சேரியும், வாண வேடிக்கையும் வெச்சுக் கூத்தடிச்சாத்தான் சாமி வரங்குடுக்குமா ….. காசை கொட்டிக் கரியா ஆக்கித்தான் சாமி கும்பிடணும்னு நெனைக்கீரா நாட்டாமை ஐயா ….”
இப்ப கொஞ்சம் அம்மாகிட்ட துணிவு தெரிஞ்சிச்சு. நாட்டாமை ஐயாக்கு கோவம் வந்திருக்கணும்போல.
“இந்த எடக்குப் பேச்சுத்தான் வேண்டாங்கிறது…. தெற்கு ஊர்க்காரனுகளை விட , நாம ஒண்ணுங் கொறைஞ்சவங்க இல்லைங்கிறத காட்டிக்க, வேற என்னதான் வழி இருக்கு…. மனுசனுக்கு கவுரவம்னு ஒண்ணு இருக்கில்லையா…. இதப்பத்தியெல்லாம் நீ எங்கே நெனைச்சுப் பாக்கப்போறே…. நீ இதுமாதிரி நடந்துக்கப் போயிதான், காளிமுத்து ஒன்னையையும், ஓம் புள்ளைங்க ரெண்டையும் விட்டுப்பிட்டு அவ பின்னாடியே போய்ட்டான்…..”
இன்னும் என்னமோ எல்லாம் பேசினாரு. எங்கம்மா மெதுவாத்தான் பதில் சொல்லிக்கிட்டிருந்திச்சு. ஆனா என்னாலதான் முழுசா புரிஞ்சிக்க முடியல்ல.
தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.
இலங்கைத்தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே இருந்தார்கள். சைவமும் தமிழும் ஒன்றாகவே வளர்ந்தன. அதனால்தான் எந்த வேற்றுமையும் பாராட்டாது, தென்னிந்தியாவில் இந்துக்கள் கடைப்பிடித்தது போலவே, சித்திரைத் திருநாளையே தமிழர்களின் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தைமாதத்தில் உழவர்களின் திருநாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த நடைமுறைகளில் மாற்றங்களைத் திடீரென ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல என்பது நாமறிந்ததே. மேலை நாட்டவரின் வருகையால் இலங்கைத்தமிழ் மக்கள் சிலரிடையே மதமாற்றங்கள் ஆங்காங்கே ஏற்பட்டதால், தமிழர்களில் மதம் மாறிய ஒரு பகுதியினர் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுவதைத் தவிர்த்திருந்தனர். ஆனாலும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் இந்துக்களாக இருந்ததால், அந்த நிகழ்வுகளில் பாரபட்சம் பார்க்காது அவர்களுடன் கலந்து கொண்டனர்.
இராசிச் சக்கரத்தில் உள்ள 12 இராசிகளில் மேச ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாக பண்டைய தமிழர்கள் கருதியதற்குக் காரணம் அவர்கள் இந்துக்களாக இருந்ததுதான். சித்திரை பற்றி சங்க இலக்கிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளன. நெடுநல்வாடை, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சித்திரை பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. தொல்காப்பியத்தில் கார்காலமே தொடக்கமாகக் குறிப்பிடப் பட்டிருப்பதாக நச்சினார்க்கினியர் உரைநடையில் இருந்து அறிய முடிகின்றது. தமிழ் மாதங்கள் எல்லாம் ‘ஐ’ இலும் ‘இ’ யிலும் முடியும் என்பதையும் தொல்காப்பியரே குறிப்பிட்டிருக்கின்றார். இதேபோல தைமாதத்தையும் புதுவருடம் என்று நேரடியாக இலக்கியங்கள் குறிப்பிடவில்லை. இதனால்தான், வடமொழி ஆதிக்கத்தின் காரணமாகத் தென்னிந்திய இந்துக்களாக இருந்த தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். அந்த வழக்கமே இலங்கைத் தமிழர்களிடமும் இருந்தது. இது ஆங்கில நாட்காட்டியில் பொதுவாக ஏப்ரல் 14 ஆம் திகதியைக் குறிக்கும். சில ஆண்டுகளில் ஆங்கில நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதம் 13 ஆம் அல்லது 15 ஆம் திகதியிலும் இடம் பெறுவதுண்டு.
மக்ஸிம் கார்க்கியின் இறுதி நூலான, ‘கிளிம்மின் சரித்திரம்’ எனும் இப்பிரமாண்டமான பேரிலக்கியத்தின் நான்கு தொகுதிகளில், முதல் தொகுதி 1927 இல் வெளிவந்துள்ளது. இரண்டாம் தொகுதி 1928 இலும் மூன்றாம் தொகுதி 1930 இலும் 4ம் தொகுதி 1936 இற்கு பிறகேயும் அச்சேற்றப்பட்டுள்ளது. தன் வாழ்க்கையின் மொத்த சாரத்தை பிழிந்து தரும் நூலாகவும், தான் வாழ்வில் சந்தித்திருக்ககூடிய அனைத்து சவால்களிலும் ஆகப் பெரியதும் பலமிக்கதுமான சவால் என்றும், தன் வாழ்வின் இறுதிச் சாசனம் எனவும் கார்க்கியால் வரையறுக்கப்பட்ட இந்நூல் ஓர் 40 வருட கால ரஷ்ய வாழ்வின் குறுக்கு வெட்டு முகத்தையும், அதன் உக்கிரமான பல்வேறு திருப்பு முனைகளையும், அவற்றை ஓர் ‘நவ’ மனிதன் முகங் கொடுக்கும் விதத்தையும், அன்னியப்பட்ட, பண்பாட்டுக்கு எதிரான ஆனால் மேலோட்டமான பண்பாடு மூலாம் பூசப்பட்ட அவனது அந்தரங்க நகர்வுகளையும் நூல் இனங்காட்ட முனைகின்றது.
மக்கள் சாரிகள் உருவாக்கித் தந்த பிரமித்தியூஸ் போன்ற கட்டறுந்த வரலாற்று கட்டமைப்புகளின் பின், அத்தகைய ஒரு பாத்திரம் நவீன இலக்கியத்திலும் சாத்தியப்படுமா என்பது கார்க்கியின் வாழ்நாள் கேள்வியாக இருந்து வந்துள்ளது. தன் இறுதி காலத்தில் இவ்வரலாற்று பணியை, செய்து முடிக்க வேண்டிய பொறுப்பை வரலாறானது தன்மீதே சுமத்தியுள்ளது என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்கின்றார். பெரிதும் தயக்கத்துடனேயே தன் பேனையை தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர் ஆளாவதை, நூல் குறித்த அவரது குறிப்புகள் தெளிவுற வெளிக்கொணர்கின்றன. ஒரு கட்டத்தில், இப்பொழுது நான் பயப்படுவதெல்லாம் ஒரே ஒரு விடயத்தை பற்றி மாத்திரமே. அதாவது, நான் இந்நூலை எழுதி முடிப்பதற்கு முன் மரணம் என்னை அணுகிவிடுமோ என்ற ஒரே அச்சம் தான். இந்நூலை மனுகுலத்தின் இன்னுமொரு சாதனை என நாம் வகைப்படுத்தலாம் - இதில் உள்ளடங்கும் சாரத்தின் பல்வேறு பரிமாணங்களை சரியாக நாம் கையேந்த முடியுமானால்.
சித்திரையைக் கொண்டாட சிறகடிக்கும் கற்பனைகள்
எத்தனையோ எல்லோரின் மனத்தினிலும் இருக்கின்றன.
அத்தனையும் நிறைவேற அமைந்திடுமா உலகநிலை?
அனைவரது அகங்களிலும் அதுகேள்வி ஆகியிருக்கு.
தைபிறந்த பின்னாலே சந்தோஷம் தருவதாய்
சீரான சித்திரை சிறப்பாக வந்தமையும்.
ஊரெல்லாம் கொண்டாட்டம், உறவெல்லாம் கூடிடுவர்.
தேரோடும் கோவில்களில் திருவிழா சிறந்துவிடும்.
பெண் எப்போதும் ஆணை சார்ந்து வாழ்பவளாகவே இருந்திருக்கிறாள். கடந்த இருபது வருடங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றாலும், எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதனைப் பெண்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள். எனவே அந்த காலகட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை என்றே பார்க்கப்படவேண்டும். இந்த புத்தகம் ஒரு ஆண் எழுதியது என்பது மிகப் பெரும் சிறப்பு. இந்த புத்தகத்திற்கு "யாதுமாகி" என்று மிகப் பொருத்தமான ஒரு பெயரை தெரிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. மிகவும் பொருத்தமான முகப்பு ஓவியம் வரைந்த திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களையும் இங்கே பாராட்டவேண்டும். நூலாசிரியரின் பாட்டி திருமதி தையலம்மா கார்த்திகேசு, மனைவி மாலதி இருவரும் இவர் எழுத்துலகில் தொடர்ந்து பணியாற்ற முக்கிய காரண கர்த்தாக்கள் என்பதை முருகபூபதி நன்றியோடு முன்னுரையில் நினைவு கூறுகிறார்.
இந்நூலில் இடம்பெறும் முதல் பெண்மணி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், ஆறு தசாப்த காலம் தமிழ் எழுத்துலகில் சில முக்கியமான படைப்புக்களை தந்தவர். அவர் களப்பணி ஆற்றி எழுதிய நாவல்கள் பற்றியும், அவரது துயரமான இறுதி நாட்கள் பற்றியும் எழுதியுள்ளார். அடுத்த ஆளுமை அருண். விஜயராணி. 1970 களில் இலங்கை வானொலியில் யாழ்ப்பாண மண்ணின் மொழி வாசனையோடு விசாலாட்சி பாட்டி என்ற தொடரை எழுதி புகழ்பெற்றவர். அங்கதம் தோய்ந்த நடையில் சமூக சீர்திருத்த சிறுகதைகள், நாடகங்கள் எழுதியவர். மத்திய கிழக்கு, லண்டன் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர். அடுத்த ஆளுமை கமலினி செல்வராசன். இயல்பிலேயே கலை இலக்கிய நடன இசை ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தவர். இலங்கை வானொலியில் கணவர் சில்லையூர் எழுதி இயக்கிய நாடகங்கள் பலவற்றில் நடித்தவர். ஆதர கதாவ, கோமாளிகள் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கலை இலக்கிய மேடைகளிலும் தோன்றியவர். கணவர் இறந்த பின்னரும் நெற்றித் திலகத்துடன் வலம் வந்த புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார். கணவரின் மறைவுக்குப் பின் அவரது கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். பலதுறைகளில் மங்காப்புகழுடன் வாழ்ந்த கமலினி 61வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தியையும் இந்த நூலின் வாயிலாக அறிகின்றோம்.
3
சண்முகதாசனின் தலைமையில் இச்செந்தீ மலையக தோட்டங்களின் உள்ளேயும் வெளியேயும் ஆழ ஊடுருவி கொழுந்துவிட்டு எரியத்துவங்கிய காலகட்டம் அக்காலகட்டம். மலையகத்தின் போர்ப் பறைகள், மலையகத்தின் மேற்குறித்த, பத்தாம் பசலி கட்டுவிப்புகளை, ஆட்டம் காண செய்த ஒரு இடியேறு போக்கு அது. இலங்கை முழுவதும் இப்படியாய் சூள் கொண்ட ‘இப்போக்கினை மாற்றவோ என்னவோ’, இத்தகைய ஒரு அரசியல் பின்னணியிலேயே, மேல் குறித்த 1971இன் எழுச்சியும், இலங்கையில் இறக்கிவிடப்படுகின்றது. இதில், யாருமே எதிர்பார்க்காத நிலையில், நாட்டின் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பங்கேற்றதும் அன்றைய ஒரு யதார்த்தம் ஆகியது. இருந்தும், இவ் எழுச்சியின் படுதோல்வியும், கூடவே, பங்கேற்றவர்கள் போக எழுச்சியில் பங்கேற்காத, ஆனால், இடதுசாரி அணிகளை சார்ந்த பெரும்படையினர் - சரியாக கூறினால் - எழுச்சிக்கு எதிரானவர்கள் அல்லது அதனை விமர்சன ரீதியாக ஆழமாக எதிர்க்க தலைப்பட்டவர்கள் கூட- பிரதானமாக, சண்முகதாசனின் இயக்கத்தை சேர்ந்த அநேகர், அது மலையகமாய் இருந்தாலென்ன, வடக்காயிருந்தாலென்ன, அல்லது தெற்காயிருந்தாலென்ன – எதுவாயிருந்தாலும், கொடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளாகியதும் அன்றைய விதிமுறைகளின் பிரதானமான ஒன்றானது.
இதனையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால் எழுச்சியில் பங்கேற்காத இவர்கள் அனைவரும், எழுச்சிக்கு நேரடி எதிரானவர்கள் இவர்கள் என்ற போதிலும், மேற்படி எழுச்சியை பிற்போக்கானது என இவர்கள் வரையரை செய்துக்கொண்டு, வாதிட்டு பரப்புரை செய்துக் கொண்ட போதிலும், “எழுச்சியை” “காரணமாக” வைத்து இவர்களை ஒட்டு மொத்தமாக அடக்கி நிர்மூலமாக்கும் செயற்றிட்டத்தை அரசு இறக்கிவிட்டது - அதில், வெற்றியும் கண்டது.