வாசிப்பு அனுபவம் : முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை! இலங்கைத் தலைநகரின் கதையை கூறும் நூல் ! - ஜோதிமணி சிவலிங்கம் -

அவுஸ்திரேலியாவில் முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர். மல்லிகை ஜீவா அவர்களால் அரை நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இலக்கியவாதி, ஊடகவியலாளர். சிறுகதை, நாவல் முதலான துறைகளில் இலங்கையில் இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகள் பெற்றவர். இதுவரையில் 25 நூல்களை எழுதியிருக்கும் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான் நடந்தாய் வாழி களனி கங்கை. இதனை கொழும்பில் குமரன் புத்தக இல்லம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
கிழக்கிலங்கையில் திரு. பூபாலரத்தினம் சீவகன் அவர்கள் வெளியிட்டு வரும் அரங்கம் வார இதழில் வெளியானதே நடந்தாய் வாழி களனி கங்கை தொடர். தற்போது நூலுருப்பெற்றுள்து. கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டிருக்கும் இப்பூவுலகில் இந் நூலானது கடந்து போன காலங்களையும், அக்காலத்தில் நடந்த சம்பவங்களையும் எமது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. அத்துடன் இந்நூலில் இடம்பெற்றுள்ள பல நிகழ்வுகள் நம்மை எமது முந்திய காலத்திற்கும் அழைத்துச் செல்கிறது. உதாரணத்திற்கு வீரகேசரி, லேக் ஹவுஸ் (Lake house) , ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதலான செய்தி ஊடகங்கள் சார்ந்தனவற்றின் வரலாறுகளாகும்.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தலைநகரில் நடந்த பல சம்பவங்களையும் இந்நூல் நினைவுபடுத்துகின்றது. களனி கங்கையின் ஆரம்பப் பெயர் கல்யாணி என்பதையும் நாளடைவில் அது களனி என மாற்றம் அடைந்ததையும் நூலாசிரியர் கூறியுள்ளார். அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த குதிரைப் பந்தயம், சூதாட்டம் பற்றியும் கூறியபோதுதான் அக்காலத்தைய கசினோ பற்றிய வரலாறு புரிந்தது.


நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கக் காலத்தில் பலர் கதைகளைச் சிறுகதையாக்க முயன்றனர். ஆங்கில இலக்கிய வாசிப்பு அவர்களைக் கதை கூறுதல் என்ற மேம்போக்கான மனநிலையிலிருந்து விடுவித்துப் படைப்பூக்க மனநிலைக்குக் கொண்டு செல்லவும் பரிசீலனை செய்யவும் விமர்சிக்கவும் தூண்டுகோலாக இருந்தது. கதை கூறும் முறை எந்தப் புள்ளியில் இலக்கியமாகப் பரிணமிக்கிறது என்ற தேடுதலும் கண்டடைதலும் பெரும் சவாலாக இருந்தது. 'மணிக்கொடி எழுத்தாளர்கள்' என்று பிறகு அடையாளம் காணப்பட்ட அல்லது தங்களை அவ்வாறு எண்ணிக்கொண்ட தொடக்கக் கால எழுத்தாளர்கள் இந்தத் தடுமாற்றத்தில் சிக்கிக் கொள்ளாமல் முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தனர்.
ஜனவரி 19 எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பிறந்தநாள். அவருக்கு எனது தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரைப்பற்றி விகடனின் பேசலாம் யு டியூப் சானலில் எழுத்தாளர் ஜெயமோகனின் 'சங்கச் சித்திரங்கள் எப்படி எழுதினேன்?' என்னும் பெயரில் வெளியான நேர்காணற் காணொளி கண்டேன். அதில் ஜெயமோகன் அ.முத்துலிங்கம் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்:


கொரோனோ பெருந்தொற்று உலகடங்கிலும் உக்கிரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய காலப்பகுதியில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரனையும் அது ஜெர்மனியில் காவுகொண்டுவிட்டது. புங்குடுதீவில் 1965 ஆம் ஆண்டு கணேஷ் – மங்கையற்கரசி தம்பதியரின் புதல்வனாகப்பிறந்த ஜெமினி கெங்காதரன் யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர். 1980 களில் அய்ரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த அவர், 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இணைந்து தேனீ என்ற சிற்றிதழை ஆரம்பித்தார். கலை, இலக்கிய, அரசியல், சமூக அக்கறை சார்ந்த படைப்புகளுக்கு குறிப்பிட்ட இதழ் களம் வழங்கியது. அதனையடுத்து அக்கினி என்ற இதழையும் சிறிதுகாலம் நடத்தினார். அதன்பின்னர் தேனீ இணைய இதழை தொடங்கி தினமும் பல வருடங்களாகப் பதிவேற்றினார். தேனீ இணைய இதழை தனிமனிதராக அர்ப்பணிப்போடு வெளியிட்டு, மாற்றுச்சிந்தனைகளுக்கும் சிறந்த களம் வழங்கினார். கலை, இலக்கியம் மற்றும் அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் களம் வழங்கி, வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே ஏற்றுக்கொண்டவர். தேனீயில் வெளிவரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்றவுணர்வுடன் ஊடக தர்மத்தை பின்பற்றி, பாரதூரமான விமர்சனங்கள் வரும்போது அவற்றை உரியவர்களுக்கே அனுப்பி அவர்களின் கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றினார்.
வெள்ளையானையின் சித்தரிப்பின்படி, பஞ்சங்கள் சூழ்ந்த நிலையில், அவலங்களும் கொடுமைகளும் கண்முன்னே விரிய ஒரு வகையில், கூடவேஷெல்லியின் தாக்கத்தாலோ என்னவோ, சமூக நீதிக்கான உள்ளுணர்வு ஏய்டனை மேலே கூறியவாறெல்லாம், தடுமாறவைக்க, காத்தவராயன் தன் “கருணை அரசியலோடு” வந்து சேர்கின்றான். காத்தவராயனின் மேற்படி கருணை அரசியலால், இறுதியில், இந்தியாவின் முதல் வேலை நிறுத்தமும் ஐஸ் ஹவுசில் வந்து சேர்ந்ததாய் நாவல் விபரிக்கின்றது. வேலை நிறுத்தங்களை, அதன்போது வேகம் பெறும் மனித நடத்தைகளை, அங்கே ஒன்றிணையும் திரள்களின் தோழமைகளை ஒன்றிணையும் திரட்சியின் தியாகங்களை, விவரிக்கும் நவீனங்களை இலக்கிய பாரம்பரியம் அறியும். ஆனால் திரு.ஜெயமோகன் அவர்கள் முன்நிறுத்தும் வேலைநிறுத்தம் சற்று வித்தியாசமானதாகவே அரங்கேறுகின்றது. வேலை நிறுத்தத்தை ஒழுங்கமைக்கும் தலித்திய வீரன் காத்தவராயன், வேலை நிறுத்தத்தை, கருணையின் அடிப்படையில் கட்டுவிக்க முனைகின்றான்.
பாயில் சரிகிற இரவுகளில், ‘அப்பனே முருகா!’ என்று ஆசுவாசத்துடன் படுக்கிற காலமொன்று இருந்ததை பரஞ்சோதி கண்டிருக்கிறாள். அது வெகுகாலத்துக்கு முந்தி. அம்மாச்சிபோல் அந்தளவு ஆசுவாசமாகத் தூங்கச் சரிந்த வேறெவரையும் தன் வாழ்நாளில் அவள் கண்டதில்லை. ‘அப்பனே, சன்னதியானே!’ என்று அவள் முனகிச் சரியும்போது, அந்த ஒலியலைகளால் உலகமே நிறைந்து பனைவெளிக் காற்றும், தள்ளியிருந்த விரிகடல் அலையும்கூட அடங்கித் தோன்றும். அக்கணத்திலிருந்து விடியும் முன் வரும் எக் கணத்திலும், எருது வாகனமேறி யமதர்மன் வந்துவீசக்கூடிய பாசக் கயிற்றில் மிக இலகுவாக தன் உயிரைக் கழற்றிக் கொளுவிவிடும் நிறைவாழ்வின் பூரணம் அவளில் இருந்தது. விடிந்தெழுந்தால்தான் அன்றைய கடமைகள் பாரமாகும். அன்றைய நாளின் பூர்த்தி, அன்றைய வாழ்வின் பூர்த்தியாய் ஆசை, அவா, அவதி யாவுமறுத்து விரிந்திருந்த காலம் அது.


“ வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம் சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான்.
(ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினர்.)


* ‘சிதரால் திருச்சாரணத்து மலை’ சமணப்பள்ளி – ஆசிரியர் டாக்டர் சிவ.விவேகானந்தன் , வெளியீடு காவ்யா, விலை – 300
மாலை வெயில் திண்ணையில் விழுந்திருந்தது. சின்னப்பா திண்ணையில் ஏற்றி வைத்திருந்த சைக்கிளை படியால் இறக்கி முற்றத்தில் நிற்பாட்டி விட்டு பெடலுக்கு மேலே V வடிவில் சந்திக்கும் உலோகத் தண்டுகளுக்கிடையில் அமுக்கி வைத்திருந்த அழுக்குத் துணியை எடுத்து துடைக்கத் தொடங்கினான். வாயில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது.





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









