இந்தியப் பிரபல எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி நினைவலைகள்..! - வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) -

இலங்கை மக்கள் நன்கறிந்த இந்திய எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி கடந்த 13 -ம் திகதி திங்கட்கிழமை மாலை (13 - 06 - 2022) சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார. இலங்கைப் படைப்பாளிகளையும் வாசகர்களையும் மிகவும் கவர்ந்தவர் சின்னப்பபாரதி. தமிழ் வாசகர்களை மாத்திரமன்றி சிங்கள வாசகர்களையும் கவர்ந்தவர். எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் காலஞ்சென்ற உபாலி லீலாரத்தினாவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் சின்னப்பபாரதியின் நாவல்கள் சில சிங்கள வாசகர்களுக்கு அறிமுகமாகின. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுச் சாதனை படைத்தவை சின்னப்பாரதியின் நாவல்களாகும்.
1935 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் வாழவந்தி பொன்னேரிப்பட்டிக் கிராமத்தி;ல் குப்பண்ணக் கவுண்டர் - பெருமாயி அம்மாள் விவசாயத் தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் சின்னப்பபாரதி. ஆரம்பக் கல்வியை முடித்தபின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்;. கல்லூரியி;ல் டாக்டர் மு. வரதராசனின் மாணவராகப் பயின்றதனால் தமிழ்ப்பற்று மிகப்பெற்று எழுதத் தொடங்கினார். ஆரம்பத்தில் கவிதை எழுதத் தொடங்கியவர் பின்னர் சிறுகதை - நாவல் எழுதும் ஆவல்கொண்டார். ரஷ்ய எழுத்தாளர்கள் - பாரதி ஆகியோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். பாரதிமீது கொண்ட பற்றினால் சின்னப்பன் என்ற பெயரைச் சின்னப்பபாரதி என மாற்றிக்கொண்டார். கல்லூரிக் காலத்தில் மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டவர் மார்க்சிஸப் பாதையை வரித்துக்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்படத் தொடங்கினார். கட்சியில் பல பொறுப்புகளை ஏற்றுச் செயற்பட்டார். நில உச்சவரம்புப் போராட்டத்தில் பங்கெடுத்து 650 கி. மீற்றர் நடைப்பயணம் போனார். இந்திரா பிரதமராக இருந்தவேளை கொண்டுவரப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தின்போது கைதுசெய்யப்பட்ட எழுத்தாளர் இவரெனக் கூறுவர். கட்சியின் வேண்டுகோளை ஏற்று மலைவாழ் மக்கள் மத்தியில் வேலைசெய்தார். விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். பல சந்தர்ப்பங்களில் உயிராபத்தையும் சந்திக்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.





பெற்றிடுவாள் அன்னை பெருதுவப்பார் அப்பா
இன்றைய சூழலில் அடித்தளமக்கள் மற்றும் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வனைத்தும் போராட்டத்தால் மட்டுமே மீட்டெடுக்க முடியுமென்ற அவலநிலையில்தான் இச்சமுதாயம் இருந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் வாழ்வனைத்தும் அநீதிகளையும், தீண்டாமைகளையும் புறக்கணிப்புகளையும் மட்டுமே எதிர்கொள்ளும் மாற்றுப்பாலினத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இன்று ஓரளவேனும் புத்துயிர்ப்பு பெறத்தொடங்கியுள்ளனர் என்று சொன்னால் அம்மாற்றங்களுக்கு நவீனஇலக்கியங்கள் முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன எனலாம். பேடி, அரவாணி, திருநங்கை போன்ற பல்வேறு பெயர்களால் விமர்சனத்துக்குள்ளாகி வரும் மூன்றாம்பாலினர் தங்களுக்கான வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதில் தற்போது பெரும் சிரத்தை எடுத்துவருகின்றனர். இதற்கு இலக்கிய வடிவில் அவர்களும், அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்ட படைப்பாளர்களும் உறுதுணையாக நிற்கின்றனர்.
நான் இருக்கிறேன் ; நீங்கள் இல்லை. பிரெஞ்சுத் தத்துவவாதி ஜீன் போல் சார்த்தரின் புகழ்பெற்ற, Being and Nothingness - ‘இருத்தலும் இன்மையும்’ நூற்பெயர், அர்த்தச் செறிவுடன் அடிக்கடி என் நினைவில் வருகிறது! நீங்கள் இல்லை ; ஆனால், மனவெளியில் உங்களுடன் என் உரையாடல் தொடர்கிறது...





இதே போன்று, கிளிம், மாஸ்கோவை விட்டகன்று, மாகாணத்தில் குடியேறிய பின் சந்திக்க நேரும் பாத்திரங்களில், மற்றுமொரு முக்கிய பாத்திரம் - வெலண்டைன். அதி அற்புதமான சித்திரிப்பு எனலாம். கலைந்த தலை, அலங்கோலமான உடை, உடல் முழுவதும் தூசி, தும்பு, புறாக்களின் எச்சங்கள் - முகம் வேறு பூசணியைப் போல் - கண்களும் பாவமற்று வெறும் கண்ணாடித் துண்டுகளை போல்… “உங்களுக்கு மலர்கள் பிடிக்குமா… ஓ… இங்கே, சுடுகாட்டில் இருக்குமே, அவ்வளவு நிரம்ப மலர்கள்…– கிளிம்மிடம், கூறிக் கொண்டிருப்பான் வெலண்டைன்.
மேற்கே சூரியன் மலையிலிருந்து இறங்கியவுடன் கிழக்கே பௌர்ணமிச் சந்திரன் கீழிருந்து மேல் எழுந்தது. பகல்முழுவதும் வெயிலில் காய்ந்த மரங்கள் சாய்ந்தரம் குளிர்ந்த காற்றுக்கு தலையசைத்து நின்றன. கருப்புக் காடைகள் சிறகுகளை விரித்து வட்டமிட்டு சுற்றிக் கொண்டு கூடுகளை அடைந்தன.


நாட்டுப்புற மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், வரலாறு, அன்றைய நாட்டு நடப்பு ஆகியவற்றை உள்ளது உள்ளபடியே படம் பிடித்துக் காட்டும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியம். மண்ணின் மைந்தர்கள் தம் மனக் கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான உணர்ச்சியின் வெளிப்பாடே நாட்டுப்புற இலக்கியங்கள். இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றால் நாட்டுப்புற இலக்கியம் சமுதாய வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடியெனில் மிகையாகாது. மனிதன் தோன்றிய போதே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன எனக் கூறுவது சரியானதாகும். அத்தகைய நாட்டுப்புற இலக்கியத்தில் பெண்களை பற்றியக் கருத்தாக்கமும் சிந்தனைகளும் எத்தகைய நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வதே இவ்வாய்வின் நோக்காகும்.







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









