இளைஞர்களே! நீங்கள் தடுமாற்றம் இல்லாமல் போராடினால் வெற்றி நிச்சயம்! - பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து ) -

* ஓவியம் - AI
பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.
19 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைவருமே இளையோர் தான். அது மட்டுமல்லாமல்; துடிப்புடன், பயம் என்பதே இல்லாமல் பல எதிர்ப்புகளையும் தாண்டி முழு ஆற்றலுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பவன் இளைஞன். இத்தகைய மனபலத்தையும் ஆற்றலையும் படைத்த இளைஞன் இன்று தன்னை அறியாமலேயே நாகரிகம், வாழ்க்கை சூழ்நிலை போன்ற காரணங்களால் தன்னையே அழித்து, தன் வாழ்வையே கேள்விக்குறியான ஒன்றாக மாற்றி வருகின்றான்.
இளைஞர்கள் தடுமாறும் சூழல்:
இளம் வயது புதிய மாற்றம் ஏற்படும் காலம், பொதுவாக மன அழுத்தமும், கவலையும் நிறைந்த காலம் என ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை விவரிக்கிறது. இளைஞர்களால் பொதுவாக மனஅழுத்தத்தையும், கவலையையும் ஆக்கபூர்வமான விதத்தில் சமாளிக்க முடிவதில்லை. அதற்கான அனுபவம் அவர்களிடம் சிறிதும் இருப்பதில்லை. இந்த நேரங்களில் சரியான வழிநடத்துதல் இல்லை என்றால் இளைஞர்கள் எளிதாக தீய வழிதனில் சென்று விடுவார்கள்.



புலவி என்பது காதலில் ஏற்படும் ஊடல் அல்லது செல்லக் கோபம் ஆகும். இது தம்பதியரிடையே தோன்றும் ஒரு குறுகிய காலப் பிரிவைக் குறிக்கிறது. இந்த ஊடல், கூடலின்பத்தை அதிகரிக்கவும், காதலின் ஆழத்தை மேலும் சிறப்பிக்கவும் உதவுகிறது. திருவள்ளுவர், காமத்துப்பால் கற்பியலில் உள்ள 'புலவி' அதிகாரத்தில், இந்த ஊடலின் நுணுக்கங்களை விவரித்துள்ளார். 
தமிழரது அரசியல் சமூக பண்பாட்டு வரலாறு தொடர்பான முக்கியத்துவம் மிக்க பல நூல்களை வெளியிட்டுவரும் கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை, கடந்த வருடம் (2024) ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலைச் செம்பதிப்பாக வெளியிட்டது. பதிப்பு வரலாற்றில், இதுவரை எட்டுப் பதிப்புகளைக் கண்ட இந்த நூல், திருத்திய செம்பதிப்பு எனும் புதிய பதிப்போடு ஒன்பதாவது பதிப்பினையும் கண்டுள்ளது. மலையக நூற்பதிப்பு வரலாற்றில் இந்த நூல் மாத்திரமே ஒன்பது பதிப்புகளைக் கண்ட நூல். இது ஒரு வரலாற்றுச் சாதனை. மகிழ்வு தரும் விடயமுங்கூட.
எம் மண்ணழகு.




தாகூரின் செல்வாக்கில் இருந்து, மாற்றமுற்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது. ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை அவர் தன் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி கவிதைக்குள் செல்லலாம்:

மலையன் பெற்றோர் யார்? என்பது குறித்த சர்ச்சை மீண்டும் பேசுபொருளாக மாறியது. அந்த ஆண்டின் பிறந்தநாள் விழாவின்போது தான் அது நடந்தது.


2022இல், மகுடம் வெளியீடாக வெளிவந்திருந்த ‘ஒன்றே வேறே’ என்ற என் சிறுகதைத் தொகுதியின் பிரதிகளை எனக்கு அனுப்பும்போது, கிழக்கு மாகாணச் சாகித்தியப் பரிசை 2019இல் தனதாக்கிக்கொண்டிருந்த ‘பரசுராம பூமியின்’ பிரதியொன்றையும் அனுப்பிவைப்பீர்களா என மைக்கல் கொலின் அவர்களைக் கேட்டிருந்தேன். தொன்மங்களை மீளாய்வுக்குட்படுத்தும் படைப்பாக அது இருந்ததால் அதனை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் வந்திருந்தது. ஆனால், அந்தத் தொகுப்புப் பற்றிய என் வாசிப்புப் பகிர்வை எழுதவேண்டுமென்ற எண்ணம் காலஓட்டத்தில் கரைந்துபோயிருந்தது. தற்போது, மூன்று வருடங்களின்பின்பு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருக்கும் நிலையில்தான் அந்த எண்ணத்தைச் செயலாக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.


ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இரமணிதரன் கந்தையா, சித்தார்த்த சே குவேரா என்னும் பெயரில் சிறுகதை, கவிதை எழுதி வருபவர். பதிவுகள் இணையத் தளத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இடம் பெற்ற விவாதத்தளத்தில் திண்ணை தூங்கி என்னும் பெயரில் விவாதங்கள் பலவற்றில் பங்கு பற்றியவர். 
யப்பானில் உள்ள தென் பகுதி தீவான குயிசு (Kyushu) வின் உள்ளே ஒரு சிறிய நகரம் (Dazaifu) சென்றோம். அங்கு ஒரு புராதனமான ஷின்டோ கோவில் உள்ளது. அது காலை நேரம். மக்கள் அதிகமாக வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அங்கு அந்த கோவிலின் முன்பாக நின்று மக்களை வேடிக்கை பார்த்தபடி நின்றபோது, எனக்கு ஒரு வித்தியாசமான காட்சி தரிசனமாகியது. அந்த முன்றிலில் பெரிய நந்தியின் சிலை இருந்தது. அது வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக இந்திய சிவன் கோவில்களில் கருங்கல்லால் நந்தியை பார்த்திருக்கிறேன். அது பார்த்தபோது, நிழலில் இரை மீட்டியபடி இயல்பாக படுத்திருப்பது போன்ற நினைக்கத் தோன்றும். ஆனால், இங்கு பார்த்தபோது இன்னமும் பாரமான வண்டியை இழுத்தபடி செல்லும் களைத்த காளை மாடாகத் தெரிந்தது. உருவாக்கிய கலைஞனின் எண்ணமும் அதுவாகவே இருக்க வேண்டும். அதனது முகம் தனியாக உடலைவிட மினுக்கியது காரணம் , யப்பானிய பள்ளி மாணவர்கள் வரிசையாக வந்து அந்த நந்தியின் முகத்தில் தொடுவதும் முகத்தை வைத்து அதனருகே நின்று படம் எடுப்பதுமாக இருந்தார்கள். அவர்கள் செய்வதில் ஒரு பிரார்த்தனையின் படிமம் தெரிந்தது. எல்லோரும் பாடசாலை சீருடையில் இருந்ததால் 12 வகுப்பில் படிக்கும் இளவயதினர் போலிருந்தார்கள். நந்தி சிலையருகே நாங்கள் செல்வதற்கு சந்தர்ப்பம் தராமல் தொடர்ந்து மாணவர்கள் வரிசையாக வந்தபடியிருந்தனர்.








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









