அஞ்சலி: பேராசிரியர் க.அன்பழகன் - அவர் ஏன் ஓர் இனமானப் பேராசிரியாராக ஆனார்?
பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மீண்டும் அவரது பழைய நூலொன்றை எடுத்து மின்னல் வேகத்தில் படித்துமுடித்தேன். அந்த நூலை உங்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலமாகவே எனது இரங்கலை பதிய வைக்கலாம் என்று தோன்றுகிறது.
"வளரும் கிளர்ச்சி". - இன்று மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் 1953 இல், திமுகவின் வரலாற்றில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த மும்முனைப் போராட்டம் நடந்த காலத்தில் எழுதிய ஒரு குறுநூல்.
அப்போது திராவிட நாட்டு விடுதலைக்கான வரலாற்றுத் தேவைகளை வலியுறுத்தி பல நூல்கள் எழுதப்பட்டன. அண்ணாவின் பணத்தோட்டம் முதலான நூல்கள் உருவாக்கிய ஒரு கோட்பாட்டுச் சட்டகத்தில், அன்பழகன் எழுதிய - இன்று பலரும் மறந்துபோன - ஒரு நூல்தான் "வளரும் கிளர்ச்சி".
திராவிட நாடு கோரிக்கைக்கான வரலாற்றுத் தேவையை இந்த குறு நூலில் மிகச்சிறப்பாக வரைந்திருப்பார் அன்பழகன்.
1947 க்கு முன் இந்திய விடுதலைப் போராட்டம் உருவான காலத்தை முதலில் குறிப்பிட்டு, எப்படி உலகளாவிய சூழல் மாற்றங்களாலும் இந்தியாவிலுள்ள மக்களின் விடுதலைப் போராட்டத்தாலும் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பதைக் குறிப்பிடும் அன்பழகன், இந்து மதம்சார்ந்த ஆதிக்கத்துக்கு மாறாக பாகிஸ்தான் கோரிக்கை எழுந்ததையும் சுட்டிக்காட்டி 1947 இல் இரண்டு நாடுகள் - பாரதமும் பாகிஸ்தானும் - உருவானதைச் சுட்டிக்காட்டுகிறார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிப் பீடத்தில் படிக்கும் முதலாம் வருட மாணவியைப் 'பகிடிவதை' என்ற பெயரில் பாலியல் வகையிற் கொடுமை செய்து அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் பல்கலைக்கழகத்துள் வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைவிதித்திருப்பதாக இன்று வெளியான இலங்கைப் பத்திரிகையிற் படித்தேன். இந்த முடிவு கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் 'பகிடிவதைக்'கெதிராகப் பதிவிடப்பட்ட பல ஆத்திரமான கண்டனங்களின் பிரதிபலிபு என்று நினைக்கிறேன்.


இன்று (ஜனவரி 27) யூத நாடான இஸ்ரேலிய தலைநகரமான ஜெருசலம் நகரில் நடக்கும் 'ஹிட்லரின் யூத இனஅழிப்பு' ஞாபகார்த்தநாள் தினத்தில் பிரித்தானிய பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 27.1.1945ம் ஆண்டு சோவியத் யூனியப் படையினர் போலந்து நாட்டிலுள்ள ஆஷ்விட்ஷ் என்ற இடத்தில் ஜேர்மனியரால் நடத்தப்பட்ட கொலைக்கூடத்தையடைந்து அங்கிருந்த யூதக் கைதிகளைக் காப்பாற்றிய நாளை நினைவு கூரும் முகமாக இந்த ஒன்று கூடல் நடக்கிறது.
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இலங்கையின் தேசிய கீதத்தை அந்நாட்டில் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









