- என் பால்ய காலத்து வாசிப்பனுபவத்தை விபரிக்குமிக்கட்டுரை ஏற்கனவே 'பதிவுகள்' , 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியான கட்டுரைகளிலொன்று. தற்போது மேலும் சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. -

பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....அப்பொழுது நான் வவுனியாவில் என் பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். என் அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுதுதான் நான் எழுத்துலகில் மெல்ல மெல்ல காலடி வைத்துக் கொண்டிருந்தேன். எனது 'பொங்கல்' பற்றிய சிறுவர் கவிதையொன்றினை 'பொங்கலோ பொங்கல்' என்னும் தலைப்பில் சுதந்திரன் தனது பொங்கல் மலரில் பிரசுரித்திருந்தது. உயர்வகுப்பு மாணவர்களுக்காக ஈழநாடு வாரமலர் நடாத்திய 'தீபாவளி இனித்தது' என்னும் கட்டுரைப் போட்டிக்காக ஆறாம் வகுப்பு மாணவனாக நான் இனிக்க இனிக்க எழுதி அனுப்பிய கட்டுரையினைப் பிரசுரிக்கா விட்டாலும் பாராட்டி என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது ஈழநாடு. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம், தினமணிக் கதிர், அம்புலிமாமா, பொம்மை, பேசும்படம், தினமணி, ராணி, ராணிமுத்து, மற்றும் ஈழத்துப் பத்திரிகைகளான சுதந்திரன், ஈழநாடு, அந்தனிசிலின் 'தீப்பொறி' என்று வீடு முழுவதும் பத்திரிகை, சஞ்சிகைகளால் அப்பா நிறைத்து வைத்திருந்தார். அனைத்துச் சஞ்சிகைகளினதும் தீபாவாளி மலர்களையெல்லாம் அப்பா வாங்கியிருந்தார். அவை தவிர பொன்மலர், பால்கன், வேதாள மயாத்மாவின் இந்திரஜால் காமிக்ஸ் எனப் பல்வேறு 'காமிக்ஸ்' வெளியீடுகளையும் அப்பா மறந்திருக்கவில்லை. இவை தவிர ராஜாஜியின் 'வியாசர் விருந்து' (மகாபாரதம்), 'சக்கரவர்த்தித் திருமகன்' (இராமாயணம்), சேக்கிழாரின் பெரியபுராணம், பாரதியார் கவிதைகள் என மேலும் பல நூல்கள். அப்பாவுக்கு இரு பெரும் இதிகாசங்களான 'இராமாயணம்', 'மகாபாரதம்' ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு. அதன் காரணமாகவே எங்களுக்குப் பெயர்களை (கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி, தேவகி) வைத்தபொழுது அவ்விரு இதிகாசங்களிலிருந்தே வைத்ததாக அம்மா கூறியிருந்தார்.  

நான் அம்புலிமாமாக் கதைகளிலிருந்து அன்றைய ஜனரஞ்கக எழுத்தாளச் சிற்பிகளின் படைப்புகளுக்குள் என்னை மெல்ல மெல்ல மூழ்கடிக்கத் தொடங்கியிருந்தேன். அப்பொழுது கல்கியில் தொடராக வெளி வந்து கொண்டிருந்த பொன்னியின் செல்வனின் முதற்பகுதியின் இடைப்பகுதியிலுள்ள ஓர் அத்தியாயத்தின் மூலம் தொடர்கதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அந்த அத்தியாயத்தில் சம்புவரையரின் மகனான கந்தமாறன் முதுகில் குத்தப்பட்டு விடுகின்றான். நண்பனான வந்தியத்தேவன்தான் அதனைச் செய்ததாக அவன் சந்தேகமடைகின்றான். அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஆர்வத்தைத் தூண்டும் மர்ம முடிச்சுகளுடனும், நகைச்சுவையுடனும் கல்கி பொன்னியின் செல்வனைப் படைத்திருந்தார். அந்நாவலில் வரும் வந்தியத்தேவன் பாத்திரம், பூங்குழலி, பாத்திரம், ஆழ்வார்க்கடியான் பாத்திரம், குந்தவை பாத்திரம், வானதி பாத்திரம் இவை எல்லாமே நன்கு வாசிப்பவர்கள் மனதை விட்டகலா வண்ணம் படைக்கப்பட்டிருந்தன. சம்புவரையரின் அரண்மனையில் நடக்கும் முக்கியமானதோர் அரசியல் ஆலோசனைக் கூட்டத்தினை நள்ளிரவில் மறைந்திருந்து அவதானித்துக் கொண்டிருக்கும் வந்தியத்தேவன், அச்சமயம் மதில்மேலாக எட்டிப்பார்த்து அவற்றைக் கவனிக்கும் ஆழ்வார்க்கடியான், 'அலை கடலும் ஓய்ந்திருக்க, அகக் கடல்தான் பொங்குவதேன' எனப் பாடிக்கொண்டே ஓடத்தை ஓட்டிச் செல்லும் பூங்குழலி, நிதானமும், அறிவும் நிறைந்த குந்தவைப் பிராட்டியார், எதற்கெடுத்தாலும் பயந்து மயங்கும் கொடும்பாளூர் இளவரசி வானதியென இன்றும் கூட மறக்க முடியாத வகையிலான பாத்திரங்கள். நாவலில் வரும் சம்பவங்களைக் கூடச் சுவையாகக் கல்கி விபரித்திருப்பார். ஒரு முறை குடந்தை சோதிடரிடம் குந்தவைப் பிராட்டியாரும் கொடும்பாளூர் இளவரசியும் சோதிடம் கேட்கச் சென்றிருப்பார்கள். அப்பொழுது குந்தவைப் பிராட்டியாருக்குச் சோதிடம் பார்க்கும் சோதிடர் அவளது வருங்காலக் கணவன்பற்றிக் குறிப்பிடும்போது 'கூரையைப் பிய்த்துக் கொண்டும் வருவான்' எனக் குறிப்பிடுவார். அச்சமயம் வழக்கம்போல் ஏதோவொரு சிக்கலுக்குள் மாட்டிகொண்டு வரும் வாணர்குலத்து இளவரசன் வந்தியத்தேவன் அரக்கப் பரக்கப் புயலென சோதிடரின் குடிசைக்குள் நுழைவான். அப்பொழுது சோதிடர் கூறியதையும் அவனது வரவினையும் ஒப்பிட்டு நோக்கி ஆராயும் குந்தவை பிராட்டியாரின் இதழ்களில் மெல்லியதொரு முறுவல் படரும். ஓவியர் வினு அதற்கொரு அழகான ஓவியம் வரைந்திருப்பார். எம்மிதழ்களிலும்புன்னகையினைத் தோற்றுவிக்கும் சம்பவம். இதுபோல் பற்பல சம்பவங்களை அழகாகப் பின்னி அந்நாவலைக் கல்கி படைத்திருந்தார்.
 
'பொன்னியின் செல்வனை'த்தவிர அப்பொழுது நான் விரும்பி வாசித்த ஏனைய படைப்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: பி.வி.ஆரின் 'மணக்கோலம்', 'கூந்தலிலே ஒரு மலர்', ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்', 'பொன் விலங்கு', 'நித்திலவல்லி', அகிலனின் 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி', 'பாவை விளக்கு', சாண்டியல்யனின் 'ராஜமுத்திரை', ஜெகசிற்பியனின் 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்', 'நந்திவர்மன் காதலி', 'மதுராந்தகி'. கலைஞரின் 'ரோமாபுரிப் பாண்டியன்'. உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' இன்னுமொரு மறக்க முடியாத படைப்பு. அதே உமாசந்திரன் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வெளிவந்த இன்னுமொரு நல்லதொரு நாவல் 'முழு நிலா'. அதில்வரும் உப்பிலி நல்லதொரு பாத்திரம். கோபுலுவின் ஓவியங்களுடன் அழகான தொடராக வெளிவந்து கொண்டிருந்த அந்நாவல் என் தந்தையாருக்கு மிகவும் பிடித்தவைகளிலொன்று. இவற்றுடன் ஜெயகாந்தனின் படைப்புகளையும் மறந்திட முடியாது. 'ஆடும் நாற்காழிகள் ஆடுகின்றன்', 'கோகிலா என்ன செய்து விட்டாள்', 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'அக்கினிப் பிரவேசம்', 'ஒரு வீடு பூட்டிக் கிடந்தது' , 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்' என ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் முழுநாவல்களும், சிறுகதைகளும் (முத்திரைக் கதைகளாகவும்), தொடர்கதைகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்த சமயமது. அதே சமயம் தினமணிக் கதிரில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. ஜெயகாந்தனின் 'ஒரு பிடி சோறு' சிறுகதைத் தொகுப்பிலிருந்து 'ஒரு பிடி சோறு', 'பிணக்கு', 'மவுண்ட் ரோடு மைக்கல்', 'டிரெடில்', 'ராசா வந்திட்டாரு' போன்ற கதைகளை தினமணிக் கதிர் மீள்பிரசுரம் செய்திருந்தது. 
 
பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....அப்பொழுது தினமணிக்கதிரில் வெளிவந்த தொடர்கதைகளில் ஞாபகத்திலுள்ள இன்னுமொரு தொடர்கதை லட்சுமி சுப்ரமணியத்தின் 'பொன் மாலைப் பொழுது'. சோமு என்னுமொரு நடுத்தர வயதுள்ள ஒருவரின் கடந்தகால அனுபவங்களை காதலையுள்ளடக்கி விபரிக்கும் கதையென்று எண்ணுகின்றேன். ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளிவந்திருந்தது. மணியன் அப்பொழுது மிகவும் புகழ்பெற்ற ஜனரஞ்சக எழுத்தாளர். 'இதய வீணை' , 'நெஞசோடு நெஞ்சம்', 'நீரோடை', 'உன்னை ஒன்று கேட்பேன்', 'உண்மை சொல்ல வேண்டும்', 'காதலித்தால் போதுமா' எனப் பல தொடர்களை ஆனந்த விகடன் வெளியிட்டது ஓவியர் மாயாவின் சித்திரங்களுடன். ஆனால் ஏனைய எழுத்தாளர்களைப் போல் இவரது படைப்புகள் இன்றுவரை நின்றுபிடிக்கவில்லை. வெளிவந்த காலத்தில் பரபரப்பூட்டியதோடு சரி. அவரைப் போல் இன்னுமொரு அன்று அதிகமாக எழுதி இன்று மறக்கப்பட்டுவிட்ட  எழுத்தாளர் பி.எம்.கண்ணன். கலைமகளில் வெளிவந்த படைப்புகளில் இன்னும் ஞாபகத்திலுள்ள தொடர்கதைகளாக முக்கோணக் காதலை மையமாக வைத்துப் புனையப்பட்ட 'கடலும் மலையும்', இந்நாவல் கலைமகள் நாவல் போட்டியொன்றில் முதற் பரிசு பெற்ற நாவல்,  பாவை பார்வதி எழுதியது. அந்நாவலில் வரும் சூரி என்னும் பாத்திரப் படைப்பு இன்னும் ஞாபகத்திலுள்ளது. கடலும் மலையும் போன்ற இரு ஆளுமைகளைக் கொண்ட ஆண்களிருவரில் ஒருவரை நாயகி தேர்ந்தெடுப்பது பற்றிய முக்கோணக் காதற்கதை. கலைமகளில் தொடராக இன்னுமொரு நாவல் கல்பனா எழுதி வெளிவந்து கொண்டிருந்தது. 'யுகசந்தி' என்பது அதன் பெயர். ஆற்று வெள்ளப் பெருக்குடன் ஆரம்பமாகும் நாவல் என்பதைத்தவிர தற்போது வேறெதுவும் ஞாபகத்திலில்லை. இன்னுமொரு கலைமகள் நாவல் கே.பி.நீலமணியின் 'புல்லின் இதழ்கள்'. இசையை மையமாக வைத்துப் பின்னப்பட்ட, அப்பொழுது வாசிக்கும்போது மனதை வெகுவாகக் கவர்ந்த நாவலென்பதைத் தவிர வேறுதுவும் ஞாபகத்திலில்லை. ஸ்ரீவேணுகோபலனின் 'நீ நான் நிலா' அப்பொழுது கதிரில் தொடராக வெளிவந்த இன்னுமொரு நாவல். இதுவும் நாயகன், பல பெண்களென விரியுமொரு காதற்கதை. அப்பொழுது தினமணிக்கதிர் இலவச இணைப்பாக வெளிவந்த ஸ்ரீ. வேணுகோபாலனின் 'நடு வழியில் ஒரு ரெயில்' இப்பொழுது வாசித்தாலும் சுவையூட்டுமொரு குறுநாவல். அதில்வரும் அப்பாவி நாயகன், 'பதினாறு வயதினிலே' சப்பாணியையொத்தவன், அவனை விட்டுப் பிரிந்து இன்னுமொருவனுடன் வாழும் அழகேயுருவானவள் மனைவி வசுந்தரா, இப்பாத்திரங்களை உள்ளடக்கிய கதை. நடுவழியில் நின்று விட்ட ரெயிலை 'அப்பாவி' நாயகன் தன் சொந்த அனுவங்களனடிப்படையில் இயங்கச் செய்து பயணிகளைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறான்; அந்த ரெயிலில் பயணிக்கும் அவனது முன்னாள் அழகிய மனைவி 'நீங்கள் எவ்வ்வளவூ பெரியவர்' என்று கூறுவதைக் கேட்டு அந்த அப்பாவி பெருமிதமுறுவதாக முடிவடையும் குறுநாவலது. இன்றும் என் சிந்தையில் ஞாபகமிருப்பதொன்றே அதன் வெற்றி.
 
கு.அழகிரிசாமியின் 'தீராத விளையாட்டு' கல்கியில் தொடராக வெளிவந்த நாவல். கல்பனாவின் ஓவியங்களுடன் தொடராக வந்து பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாவலிது. இதுவுமொரு காதற்கதை. அம்மாவைப் போல் அழகேயுருவான நாயகன். அழகேயுருவான காதலி. ஊரில் நிலபுலன்களைக் கவனிக்கப் பிரயாணம் செய்யும் நாயகன், அழகற்ற பெண்ணொருத்தியை (நிர்மலா) கொள்கை கருதித் திருமணம் செய்து, அது தோல்வியுற்று காதலித்த முன்னாள் காதலியைக் கைப்பற்ற முடியாமல், 'நீ நான் நிலா'வில் வருவதைப் போல் அவளின் தங்கையை மீண்டும் மணப்பதாக முடியும் கதை. இதில்வரும் நிர்மலா பாத்திரம் ஏனோ அகிலனின் சித்திரப்பாவையில் வரும் சுந்தரி பாத்திரத்தை நினைவூட்டும். மேற்படி மூன்று நாவல்களிலும் ('நீ நான் நிலா', 'சித்திரப்பாவை', 'தீராத விளையாட்டு') கதைப் பின்னலில் ஒரு சில ஒற்றுமைகளிருப்பதால் ஒன்றை நினைத்ததும் உடனேயே மற்றவையும் உடனடியாக ஞாபகத்தில் வந்து விடுகின்றன.
 
பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....இவற்றுடன் மீ.ப.சோமுவையும் மறந்து விட முடியாது. அன்றைய காலகட்டத்தில் அவரது அழகான வர்ணனைகளுடன் கூடிய தமிழில் வெளிவந்த 'கடல் கண்ட கனவு', 'நந்தவனம்', 'ரவிசந்திரிகா' ஆகியவற்றையும் குறிப்பிடத்தான் வேண்டும். உண்மையில் மேற்படி நாவல்கள் எமக்கு முற்பட்ட தலைமுறையில் வெளிவந்திருந்தாலும் எம் கைகளில் வாசிக்கக் கிடைத்தன. கொத்தமங்கலம் சுப்புவின் 'பொன்னி வனத்துப் பூங்குயில்' தொடரில் (கல்கியில் வெளிவந்தது) வரும் பொன்னியின் செல்வன் பூங்குழலியையொத்த நாயகி குயிலியின் குறும்புச் சேட்டைகளும் அந்த வயதில் எமக்குச் சிரிப்பை வரவழைத்தன. ஜெகசிற்பியனின் சமூக மற்றும் சரித்திரக் கதைகளைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அவற்றில் 'கிளிஞ்சல் கோபுரத்தில்' வரும் சபலசித்தமும், பொறுப்புணர்வும் மிக்க கதாநாயகனுக்காகக் காலமெல்லாம் காத்திருக்கக் போவதாகக் கூறும் நாயகி சுகுணாவை எண்ணி அச்சமயத்தில் சிறிது கவலைப்பட்டதுமுண்டு. சரித்திரக் நாவல்களில் ஜெகசிற்பியன் பாவிக்கும் அழகிய வர்ணனைகளும் என்னைக் கவர்ந்ததுண்டு. குறிப்பாக 'நந்திவர்மன் காதலி', 'பத்தினிக் கோட்டம்' ஆகிய இரு சரித்திர நாவல்களும் பிடித்தவை. நா.பா.வின் சரித்திர நாவல்களில் வருவதைப் போல் இறுதியில் சோக முடிவினை ஜெகசிற்பியனின் நாவல்களிலும் எதிர்பார்க்கலாம். அன்றைய காலகட்டத்தில் அம்மா பாடசாலையிலிருந்து மு.வ.வின் அனைத்து நாவல்களையும் கொண்டு வந்து வாசிப்பதுண்டு. அச்சமயங்களில் அவற்றை நானும் எடுத்து வாசிப்பேன். இந்த வகையில் 'கரித்துண்டு', 'பெற்ற மனம்'  போன்ற நாவல்களைக் குறிப்பிடலாம். ஆனால் அந்தப் பருவத்தில் மு.வ.வின் 'வேண்டா' போன்ற தூய தமிழச் சொற்கள் எம்வாசிப்பின் ஆர்வத்தை அவ்வப்போது தடைசெய்வதுண்டு.

அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு நாவலாசிரியர் மராட்டி எழுத்தாளரான காண்டேகர். இவரின் நாவல்கள் பலவற்றை கா. ஸ்ரீ. ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கின்றேன். மனோரஞ்சிதம், இரு மனம், புயலும் படகும், வெண் முகில் போன்ற அவரது நாவல்கள் சில இன்னும் ஞாபகத்திலுள்ளன. அவரது நாவல்களில் வரும் 'வாழ்க்கை ஒரு புயல்' என்பதுபோன்ற வசனங்கள் அக்காலத்தில் என்னைக் கவர்ந்தவை. அத்துடன் அவர் கதை சொல்லிச் செல்லும் நடையும் என்னை மிகவும் கவர்ந்த நடை.
 
அப்பொழுதெல்லாம் கல்கி, விகடனில் வரும் தொடர்கதைகளெல்லாம் மிகவும் நீண்டவையாக, குறைந்தது மூன்று பாகங்களையாவது உள்ளடக்கியதாக இருக்கும். கல்கியின் மகன் கி.ராஜேந்திரன் அச்சமயத்தில் பல நீண்ட தொடர்கதைகளைக் கல்கியில் எழுதியுள்ளார். அவற்றில் அவரது 'போர்முனை' எம்மைப் பெரிதும் கவர்ந்த நாவல். அதில் வரும் விதவைப் பாத்திரமான நாயகி தாரா மனதில் நிலைக்கக் கூடியதொரு பாத்திரம். கல்கியின் மகள் ஆனந்தியின் 'மலைச்சாரல் மாதவி' இன்னுமொரு நினைவில் நிற்கும் நாவல். இவர்களைத் தவிர கோமகளின் 'இனிக்கும் நினைவுகள்', செல்வநாயகியின் 'குடைராட்டினம்' (இவையெல்லாம் கல்கியில் வெளிவந்த தொடர்கள்), சிவசங்கரியின் 'எதற்காக', இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்', இந்திரா பார்த்தசாரதியின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன', விந்தனின் 'பாலும் பாவையும்' , அநுத்தம்மாவின் 'கேட்டவரம்', பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்', சேவற்கொடியோனின் 'பேசும் பொற் சித்திரமே' (சேவற்கொடியோன் என்னும் புனைபெயரில் எழுதியவர் எஸ்.எஸ்.வாசனின் குமாரரான எஸ்.பால்சுப்பிரமணியம் என்று அண்மையில்தான் இணையம் மூலம் அறிநதேன்), தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே', பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாப்பாட்டித் தொடர்கள், சாவியின் 'வாஷிங்கடனில் திருமணம்', அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ', 'ரங்கோன் ராதா', கலைஞரின் வெள்ளிக்கிழமை ... எனக் கூறிக்கொண்டே போகலாம்.

ராணிமுத்து பிரசுரம் தொடங்கிய காலகட்டத்தில் வெளியான ஆரம்பகால நாவல்களை அக்காலகட்டத்தில் விரும்பி வாசித்திருக்கின்றேன். அவற்றில் ஜெயகாந்தனின் 'வாழ்க்கை அழைக்கிறது', 'காவல் தெய்வம்' (இத்தொகுதி அவரது 'கருணையினால் அல்ல' குறுநாவலையும் உள்ளடக்கியிருந்தது), சாண்டியல்யனின் 'ஜீவபூமி', ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி', அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ', 'ரங்கோன் ராதா', மாயாவியின் 'வாடாமலர்', மு.வ.வின் 'அந்த நாள்', அநுத்தம்மாவின் 'கேட்டவரம்' , பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்', கலைஞரின் 'வெள்ளிக்கிழமை' , அகிலனின் 'சிநேகிதி', நாரண் துரைக்கண்ணனின் (ஜீவா) 'உயரோவியம்', நா,பா,வின் 'வஞ்சிமாநகரம்' ஆகியவையெல்லாம் ராணிமுத்து பிரசுரங்களாக வெளிவந்த நாவல்கள்தாம்.

பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....குமுதத்தில் வெளியான ஓரிரு அத்தியாயங்களை (பாலூர்ப் பெருந்துறையில் இளைய பல்லவனின் வீர சாகசங்களை விபரிக்கும் ஓவியர் லதாவின் ஓவியங்களுடன் கூடிய) வாசித்துவிட்டு வாசிப்பதற்காகத் தேடி அலைந்த நாவல்களிலொன்று சாண்டிலயனின் 'கடல்புறா'.  'கடல் புறா' என்றதும் எனக்கு ஞாபகத்துக்கு வருமின்னுமொரு விடயம். எனக்கு உறவுக்கார அக்காமார் பலரிருந்தார்கள். அவர்களுக்கு சிநேகிதிகள் பலர். அச்சிநேகிதிமார்களை வீடு கொண்டு சேர்க்கும் 'பாதுகாவலன்' உத்தியோகம் அடிக்கடி எனக்குக் கிடைத்துவிடும்.  இது அக்காலகட்டத்தில் எனக்கொரு வேண்டாத தலையிடி. அச்சிநேகிதி அக்காமார்கள் பலருக்கு நானொரு புத்தகப்பூச்சி என்பது தெரியும். அவர்களிலொருவர் எனக்குக் 'கடல் புறா' நாவலை அடுத்தமுறை வரும்போது தன் உறவுக்கார வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டுவருவதாகக் கூறிக் கூறியே காரியத்தைச் சாதித்துவிடுவார். இறுதிவரை அவர் எனக்குக் 'கடல்புறா'வைக் கொண்டிவந்துதரவில்லை. பின்பு நண்பரொருவரின் நண்பர் வீட்டிலிருந்து 'கடல் புறா' நாவலின் குமுதத்தில் வெளியாகி 'பைண்டு' செய்யப்பட்ட இரண்டாம் பாகத்தொகுதியை எடுத்து வாசித்தேன். ஏனைய பாகங்களை யாழ் நூலகத்திலிருந்து (வானதி பதிப்பாக வெளியான) எடுத்து வாசித்தேன். ஆனால் அக்காலகட்டத்தில் குமுதத்தில் ஓவியர் லதாவின் ஓவியங்களுடன் வெளியான 'கடல் புறா'வை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அண்மையில் இணையம் மூலம் சாத்தியமானபோது 'கடல்புறா'வை வாசிக்கும் ஆர்வம் போய்விட்டிருந்தது. இணையத்தில் ஒருவர் அக்காலகட்டத்தில் குமுதத்தில் வெளியான சாண்டியல்யனின் நாவல்களை ஓவியங்களுடன் பிரதியெடுத்து இணையத்திலிட்டிருந்தார். அவற்றை ஒரு ஞாபகத்துக்காகப் பதிவிறக்கம் செய்து வைத்தேன். அதுபோல் அவர்களுக்கிடையில் நூல்களை வாங்கி விநியோகிப்பதும் நான்தான். உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்', 'அரு.ராமநாதனின் 'குண்டு மல்லிகை' ஆகிய நாவல்களை இவ்விதமான புத்தக விநியோகமொன்றில் அக்காமார் வாசிக்கும் மட்டும் பொறுமை காத்து வாசித்திருக்கின்றேன்.
 
அம்புலிமாமா , கண்ணன், 'வெற்றிமணி', 'கண்மணி' இவற்றையும் குறிப்பிடாமல் விடமுடியாது. இதே சமயம் மர்மக் கதைகளையுயும் நான் விழுந்து விழுந்து வாசிக்க ஆரம்பித்தேன். தமிழ்வாணனின் சங்கர்லால், தமிழ்வாணன் துப்பறியும் கதைகள், சுஜாதாவின் 'நைலான கையிறு' போன்ற கதைகள், 'கத்தி முனையில் இரத்தம்', 'அழகியின் கொலை' போன்ற 'பாக்கற் சைஸ்' துப்பறியும் நாவல்கள் (இவற்றைக் களவாக வாங்கி வாசிப்பேன். அட்டைகளில் அழகிகள் அன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் ஆபாசமான தோற்றங்களுடன் காணப்படுவதால்தான் இந்த பாதுகாப்பேற்பாடு). அன்றைய வயதில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு மர்மக்கதை எழுத்தாளர் நாஞ்சில் பி.டி.சாமி. ராணியில் அவரது தொடர்கதைகள் வெளிவந்தன. நான் வாசித்த இவரது ஒரேயொரு தொடர்கதை ராணியில் வெளிவந்த சிவப்புச்சேலை'. இரண்டாவது அத்தியாயத்திலிருந்தே வாசித்தேன். மாடியிலிருந்து விழுந்து விடும் நாயகின் மரணத்தை மர்மமாக வைத்துப் பின்னப்பட்ட கதை. இவரது இன்னுமொரு ராணியில் வெளிவந்த தொடர்கதை 'அழகியின் ஆவி'. ஆச்சியின் வீட்டிலுள்ள பரணில் கண்டெடுக்கப்பட்ட ராணி இதழ்கள் சிலவற்றில் ஒரு சில அத்தியாயங்களை வாசித்துவிட்டு பல நாட்கள் ஏனைய அத்தியாயங்களுக்காகவும் அலைந்து திரிந்து இறுதியில் ஏமாற்றத்துடன் 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' கதையாக மறந்து விட்ட கதையிது. அடுத்தது கோவி.மணிசேகரனின் 'ராஜசிம்மன் காதலி'. தினத்தந்தியில் ஒரு சில அத்தியாயங்களை வாசித்து விட்டு 'அழகியின் ஆவி'யைப் போல் தேடிச் சோர்ந்து இறுதியில் கைவிட்ட முயற்சி. இப்பொழுதும் கூட அவ்வப்போது நூலகங்களில் கோவியாரின் நூல்களைப் பார்க்கும்போது கண் இலேசாகத் தேடிப்பார்க்கும்.

இதே சமயம் என்னைக் கவர்ந்த சில சித்திரக் கதைகளையும் குறிப்பிடத்தான் வேண்டும். அவற்றில் முக்கியமானது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாடோடியின் 'கிங்கரனும் சங்கரனும்'. எழுத்தாளர் சங்கரன் எவ்விதம் காலனை சந்திக்கின்றார், எவ்விதம் அவரது உயிரை எடுக்க வரும் கிங்கரர்களுடனெல்லாம் உறவாடுகின்றாரென்பதையெல்லாம் விபரிக்கும் சித்திரத் தொடர்கதை. சுவை மிக்க நகைச்சுவைச் சித்திரக்கதை. அன்றைய வயதில் என்னைக் கவர்ந்த இன்னுமொரு முக்கியமானவர் வாண்டுமாமா. என் காலத்துப் படைப்பாளிகளெவரும் வாண்டுமாமாவை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. மிகவும் எளிமையாக, அழகாக, அழகான கண்ணையள்ளும் சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். கல்கியில் சிறுவர்களுக்காகவென்று ஒரு பகுதி 'சிறுவர் விருந்து' என்னும் பெயரில் வெளிவரும். அதனைப் படிப்பதென்றால் அந்த வயதில் எனக்குப் பெருவிருப்பு. இவரது சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன. அவற்றிலொன்று 'ஓநாய்க்கோட்டை'. ஓவியர் வினுவின் அழகான சித்திரங்களுடன் வெளிவந்த அச்சித்திரக்கதையை நானும் என் சகோதரிமாரும், தம்பியும் போட்டிபோட்டுக் கொண்டு வாசிப்போம். அதில்வரும் தூமகேது என்றொரு பாத்திரம் அப்பொழுது எமக்கெல்லாம் பெரிதும் கிலியூட்டிய பாத்திரம். 
 
பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....மேற்படி நூல்களில் பெரும்பாலானவற்றை நான் கரைத்துக் குடித்ததது எனது பத்துக்கும் பதினாறுக்கும் இடைப்பட்ட பிராயத்தில்தான்.  இப்பொழுதும் இவற்றிலேதாவது நூல்களைக் கண்டால் வாங்கிச் சேகரித்து விடுவேன். ஆனால் இன்று இவற்றில் பெரும்பாலானவற்றை வாசித்தால் ஒருசில பக்கங்களுக்குமேல் தொடர்ச்சியாக வாசிக்க முடியாது. ஆனால் அன்றைய என் பால்ய காலத்ததுப் பருவத்தில் என்னை ஆட்டிப் படைத்தவை இவையென்ற வரலாறு இவற்றுக்கு உண்டென்பதால் என் வாழ்க்கைச் சரிதத்தில் தவிர்க்க முடியாததோர் அங்கமாக ஆகிப்போனவை இவை. இவற்றை இன்று என்னால் அன்று போல் வாசிக்க முடியாவிட்டாலும் இவற்றை எண்ணியதும் அல்லது பார்த்ததுமே என் நெஞ்சில் என் பெற்றோருடன், சகோதர சகோதரருடன், அன்றைய நண்பர்களுடன் எந்தவிதக் கவலைகளுமில்லாமல் சிட்டுக்குருவிகளாகச் சிறகடித்த பால்யகாலத்தின் பதிவுகள், 'அழியாத கோலங்கள்' ஞாபகம் வந்துவிடுவதால் இவற்றை என்னால் ஒதுக்க முடியாது. அதே சமயம் அக்காலகட்டத்தில் சனரஞ்சக இதழ்களில் வெளிவந்ததன் காரணமாக ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் போன்றவர்களின் படைப்புகளும் எனக்கு அறிமுகமாகின என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

ஒவ்வொரு படைப்புக்கும் அது வெகுசன படைப்பாகவிருக்கட்டும் அல்லது சிறுவர் இலக்கியமாகவிருக்கட்டும் எதுவென்றாலும் தீவிர இலக்கியத்தைப் போல் அவற்றிற்கும் ஒரு முக்கியத்துவமுண்டு. அவற்றைத் தாண்டித்தான் நாம் அனைவருமே அடுத்தகட்ட வாசிப்புக்கு எம்மைத் தயார்படுத்துகின்றோம். இவையெல்லாம் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத பருவங்கள்; படிக்கட்டுகள். அந்த வகையில் இவ்விதமான சனரஞ்சகப் படைப்புகளுக்கும் எப்பொழுதுமே இலக்கியத்தில் முக்கியத்துவமிருக்கும். இன்று என் வாசிப்பு மேலும் பல படிகளைக் கடந்து சென்று விட்டிருக்கிறது. ஆனால் அதற்கு அடிகோலியவை என் பால்யகாலத்து வாசிப்பனுவங்களே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here