இலங்கையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிலரை மாண்பு மிகு  ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் விடுவித்திருப்பதற்கு நன்றியும், தெரிவித்து, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு அவர் ஆவனசெய்யவேண்டும் எனக்கோரும் கடிதம் ஒன்றை அவுஸ்திரேலியா வாழ் மூவீனத்தையும் சேர்ந்த இலங்கையர்கள்,  தங்கள் இலங்கை நண்பர்கள் கழகத்தின் ஊடாக  அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த வாரம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நெருக்கடியான நேரத்தில்  ஜனாதிபதியாக தெரிவாகிய  தங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்ற அதே சமயம்,  நீண்ட காலமாக  தடுத்துவைக்கப்பட்டிருந்த  சில அரசியல் கைதிகளை விடுவித்த தங்களது பெருந்தன்மையான நிலப்பாட்டை நம்நாட்டின் அமைதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் வரவேற்கிறோம்.  துரதிரஷ்டவசமாக, சட்டப்படி குற்றப் பத்திரிக்கை வழங்கப்படாமல் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் குற்றவாளிகளா, குற்றம் சுமத்தப்பட்டவர்களா அல்லது இன்னும் குற்றம் சுமத்தப்படாதவர்களா என்பதைப் பொருட்படுத்தாமல்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து  வைக்கப்பட்டுள்ளார்கள்.  அவர்கள் பயங்கரவாத  தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீதான எல்லா நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் கடுமையானது – விரும்பத்தகாதது.  எனினும்  தவிர்க்க முடியாமல்  உருவாக்கப்பட்டது   என்பதை  இலங்கை  அரசு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்றுக்கொண்டது.  குறிப்பிட்ட இந்தச்  சட்டத்தை நீக்க  இலங்கை  அரசு பல முயற்சிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்  மேற்கொண்டு,  ஏற்றுக் கொள்ளக்கூடிய உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கோட்பாட்டிற்கு இணங்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்படவேண்டும். இலங்கை அரசு இன்னமும் இக்கடமையை நிறைவேற்ற தாமதிப்பதனால், , இந்தச்  சட்டம் தொடர்ந்தும் நிறைவேற்றுச் சட்டத்தொகுப்பில் இடம்பெறுகிறது.

இச்சட்டத்தின் கீழ் கைதான பெரும்பாலானவர்களுக்கு எதிராக கிடைக்கும் ஒரே சாட்சியான அவர்களின் விருப்பத்துக்கு மாறாக பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்ட வாக்குமூலமானது நடைமுறையில் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியததாகும்.  அவர்கள் மீதான வழக்கைத் தொடர்வதற்கு  வழக்குகள் தயாராக இல்லாததால்  இவ்வழக்குகளில் அநேகமானவை  ஒத்திப்போடப்பட்டுள்ளன.  அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள  அனைவரும் வெகுகாலமாக காவலில்  இருக்கிறார்கள்.  அவர்களை காவலில் எடுத்த உடனேயே நீதிவிசாரணை மேற்கொண்டிருந்தால்,  அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். காவலில் இருப்பவர்களின் குடும்பத்தினர்,  குடும்பத்திற்காக உழைப்பவரின்றி வெகுகாலமாக துன்பமடைந்துள்ளனர்.  அதிமுக்கியமான  இக்காரணிக்காக கொடுக்கவேண்டிய கவனத்தை  பயங்கரவாத தடைச்சட்டம்  கொடுக்கவில்லை.

குறிப்பிட்ட இந்த பயங்கரவாத  தடைச்சட்டத்தின் கடுமையான  இயல்பைத் தவிர்த்தமையால்தான்,  1971 ஆம் ஆண்டு காலத்தில்   நடந்த உள்நாட்டுக்கிளர்ச்சியில்  கைதானவர்கள்  ( ஜே. வி. பி  )  நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டார்கள். அவர்கள் பின்னர்  பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப் பட்டார்கள்.  ஏன் அதே வழிமுறையை  தற்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கும்  தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கடைப்பிடிக்க முடியவில்லை என்பதை  எம்மால் அறியமுடியவில்லை.  இந்த வழக்குகள் அனைத்தும்   அரசாங்க சட்டமா அதிபர் திணைக்களத்தின்  ஆதிக்கவரம்பின் கீழ் வருவதாக கருதமுடியாது.  மாண்புமிகு சட்டமா அதிபர்,  அரசின் தலைமைச்  சட்ட ஆலோசகராகும்போது, இந்த வழக்குகள் அரசின் பரிமாணத்தைப் பெறுகிறது.  இலங்கையின் தேசிய  இனப்பிரச்சினையானது  குறித்த காலத்தில்  தீர்க்கப்பட்டிருக்குமேயானால்,  காவலில் இருக்கும் அதிகப்படியானோர் இப்போதுள்ள நிலையில் இருந்திருக்க மாட்டார்கள். நாட்டுக்கும் சமூகத்திற்கும்  பலனளிக்கும் குடிமக்களாக இருந்திருப்பார்கள் என்று நியாயமாக சொல்லியிருக்க முடியும்.  எனினும்  ஜனாதிபதியாக வந்த பின்னர் தாங்கள் இந்த அரசியல் கைதிகள் விடயத்தில் காண்பித்திருக்கும் கரிசனையை நாம் வரவேற்கின்றோம்.

எஞ்சியிருக்கும் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில்  தாங்கள் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் எனக் கோருகின்றோம். இதுவிடயத்தில் மேலும் தாமதிக்காமல் இதர தமிழ் அரசியல்  கைதிகளையும்  விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்