ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஊடாக பல முற்போக்கு எழுத்தாளர்களை அறிந்துகொண்டேன். அத்துடன் தமிழக முற்போக்கு இலக்கிய இதழ்கள் சரஸ்வதி, தாமரை முதலானவற்றில் எழுதிய படைப்பாளிகள் பற்றியும் தெரிந்துகொண்டேன். அவர்களில் ஒருவரான எச். எம். பி. மொஹிதீன் பற்றி ஜீவா சொன்ன செய்திகள் வியப்பூட்டுவதாக இருந்தது. இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தவர் எனவும், 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த கிளர்ச்சியையடுத்து  கைதாகி சிறைவைக்கப்பட்டிருந்தார் எனவும் ஜீவா சொன்னார். யாழ்ப்பாணம் சிறையில் அக்காலப்பகுதியிலிருந்தவர்களில் ஒருவர்தான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான ரோகண விஜேவீரா.  மற்றவர் எழுத்தாளர் எச். எம். பி. மொஹிதீன்.  ரோகண விஜேவீரா, தென்னிலங்கையில்  சிங்கள இளைஞர்களை எழுச்சிகொள்ளச்செய்து ஆயுதக்கிளர்ச்சியை மேற்கொண்டமைக்காக கைதானவர். ஆனால், மொஹிதீன் எழுத்தாயுதம் ஏந்தியமையால் கைதானவர் என்பதை தெரிந்துகொண்டேன்.  வட கொரியாவின் கிம் இல் சுங் எழுதிய சில புத்தகங்களை மொஹிதீனும்  அவர் மூலமாக அவரது நண்பர்கள் சிலரும் மொழிபெயர்த்தனர்.  1971 ஏப்ரில் கிளர்ச்சிக்கு  வடகொரியாவின் சித்தாந்தங்களும் காரணமாக இருக்கலாம் என அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசின் புலனாய்வுப்பிரிவு தீர்மானித்ததன் விளைவுதான் எச். எம். பி. மொஹிதீனின் சிறைவாசம்.

எச்.எம்.பி. கைதானதும் பல வதந்திகள் உலாவத் தொடங்கின. அவரது விரல் நகங்களில் ஊசிகள் ஏற்றப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. யாழ்ப்பாணம் சிறையிலிருந்து அவர் திடீரென விடுதலையானதுமே முதலில் அவர்  யாழ். கஸ்தூரியார் வீதியில் இயங்கிக்கொண்டிருந்த மல்லிகை காரியாலயத்தில் டொமினிக் ஜீவாவை தேடிச் சென்றார். பின்னர் கொழும்பில் வசித்த தனது மனைவி பிள்ளைகளுக்காக யாழ்ப்பாணம் மாம்பழம் வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.

எச்.எம்.பி. கைதான சமயம்  அவரது மனைவி கர்ப்பிணி. இரக்கமின்றி அவரை சிறை வைத்தது அம்மையாரின் அரசு. எச்.எம்.பி . சிறை மீண்ட பின்பே குழந்தையைப் பார்த்தார். “இது தான் எனது ஜெயில் பரிசு “  என்று அவர்  நண்பர்களுக்கு குழந்தையை அறிமுகப்படுத்தும்போது நாம் நெகிழ்ந்து விடுவோம்.

முதல் முதலில் 1973 ஆம் ஆண்டு  அவரை கொழும்பு சட்டக்கல்லூரியில் பூரணி காலாண்டிதழ் அறிமுகவிழாவில் பார்த்த சமயம்  அவரின் கைவிரல்களைத்தான் தடவிப்பார்த்து நண்பனானேன். அவ்விரல்களில் காயங்களைத் தேடினேன்.  1971 இல் எச். எம்.பி. மொஹிதீன் கைதான சமயம். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளர்   சபையிலிருந்தார். கைதுடன் அந்தப் பதவியும் பறிபோனது. உரத்துப் பேசுவது ,  அட்டகாசமாய் சிரிப்பது எச்.எம்.பி. க்கே உரித்தான  இயல்பு. ஒரு காலத்தில் தீவிர இடதுசாரியாக விளங்கிய எச்.எம்.பி.,  பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். எழுத்து அவருக்கு ஆயுதமாகவே பயன்பட்டது.  ஜெயகாந்தன், ரஷ்ய எழுத்தாளர் விதாலி ஃபுர்ணிக்கா முதலானோரின் அன்புக்கும் இவர் பாத்திரமாகக் காரணம் , ரஷ்யாவின் உக்ரேயின் கவிஞர் தராஸ் செவ் சென்கோவை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் எச்.எம்.பியும் ஒருவர் என்பதுதான்.

எச்.எம்.பி. யின் அரசியல் ,  இலக்கிய வாழ்வு பல தடவைகள் தடம்புரண்டமை விமர்சனத்துக்கும் கவலைக்குமுரியது. அவருக்குக்கிட்டிய பணிப்பாளர் பதவியும் இந்தத் தடம்புரளலுக்குக் காரணமாயிருந்த போதிலும் அப்பதவியையும் அவர் தக்க வைத்துக் கொள்ளத் தவறினார். ரஷ்ய சார்பு கம்யுனிஸ்டாகவும் பின்பு சீன சார்பாளராகவும் மாறிய எச்.எம்.பி 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீமா அம்மையாரின் நண்பரானார். இந்த நட்பு வழங்கிய பதவிதான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் பணி.

சிறை மீண்ட எச்.எம்.பி. முழு நேர எழுத்தாளனாகவும் பத்திரிகையாளனாகவும் மாறினார். மீண்டும் ஸ்ரீமா அம்மையாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அவரது கட்சிப்பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்தார். தினகரனில் அபியுக்தனாகி  பத்தி எழுத்தாளர்களின் வரிசையில் சேர்ந்தார். புதுக்கவிதையாளர்கள் பலர் அறிமுகமாவதற்கும், பலர் கவிதை என்ற பெயரில் கவியுலகத்திற்கு அநியாயம் செய்வதற்கும் இந்த அபியுக்தன் வழிவகுத்தார் என்பதும் கசப்பான உண்மை.

எச்.எம்.பி . சில நூல்களை எழுதியபோதிலும்,  அவரது அறிஞர் அஸீஸ் சில நினைவுகள் நூலே பரபரப்புக்குள்ளானது. அறிஞர் அஸீஸ் சாஹிறாக் கல்லூரியின் முன்னாள் அதிபர். செனட்டர். பல படைப்பாளிகள்,  த்திரிகையாளர்கள்,  கல்விமான்களின் ஆசான். பேராசிரியர் சிவத்தம்பி,  தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன், எச்.எம்.பி . முதலானோரும் அஸீஸின் அபிமானத்துக்குரிய மாணவர்கள். அஸீஸ் மறைந்ததும் அவரது நினைவுகளை தினகரன் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட எச்.எம்.பி. பின்பு அதனை நூலாக்கி வெளியிட்டார். இதற்கு எதிர்வினையாக மேலும் இரண்டு நூல்கள் அக்காலப்பகுதியில் வெளிவந்தன.  துடுக்காகப் பேசுவதிலும் ,  தனது மனதுக்கு சரியெனப் பட்டதை தயங்காமல் சொல்வதிலும் முன்னிற்கும் எச்.எம்.பி. க்கு அவரது பேச்சும் எழுத்துமே எதிரிகளாகிய உண்மையை அவர் பிற்காலத்தில் உணர்ந்தார்.

உண்மைகள் சுடும் ! அவை கசப்பானவை !  எச்.எம்.பி. பல உண்மைகள் சொன்னார். யதார்த்தவாதி வெகுசனவிரோதி என்பதற்கு எங்கள் எச்.எம்.பி.யும் ஒரு உதாரணம். படைப்பாளிகள், பத்திரிகையாளர்களுக்கு அவர் ஒரு பாடம். எச்.எம்.பி. மொஹிதீனுடன் இணைந்து கொழும்பு – குருநாகல் – நீர்கொழும்பு முதலான பிரதேசங்களில் சில இலக்கியக்கூட்டங்களிலும் உரையாற்றியிருக்கின்றேன். மினுவாங்கொடையில் நடந்த கூட்டமொன்றில் அவர் அல்லாமா இக்பால் பற்றி உரையாற்றியபொழுது உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். அதனைப்பார்த்த சபையினரும் அழுதுவிட்டார்கள்.  அவ்வாறு உணர்ச்சிகரமாகப் பேசவல்ல எச்.எம்.பி. பழகுவதற்கு இனிமையானவர். எவருடனும் சகஜமாக பேசுவார். பந்தாக்கள் அற்ற பண்புகள் அவரிடம் இருந்தன. அவர் சொன்ன பல சுவாரஸ்யமான கதைகள் அவரைப் போன்று நெஞ்சில் பதிந்தவை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்