லண்டனில் எஸ்.அகஸ்தியரின் 20 ஆம் ஆண்டு நிறைவும் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச்சிதறல்’ நூல் வெளியீடும்‘இலங்கையிலும்;, அகஸ்தியர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்து வந்ததின் பின்னரும் அவருடன்  மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்ததையும்; தனது ‘வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டிய தமிழர்கள்’ என்ற தனது நூலுக்கு அகஸ்தியர் அணிந்துரை வழங்கி அதனை நூலாக்கம் பெறுவதற்கு உதவினார் என்றும்’ லண்டன் ஹரோ நகராட்சி  மன்ற உறுப்பினர் மண்டபத்தில் இடம்பெற்ற ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் அகஸ்தியரின் 20ஆம் ஆண்டு நிறைவும், நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ நூல் வெளியீட்டில் உரையாற்றும்போது லண்டன்; புதினம் ராஜகோபால் அவர்கள் தெரிவித்தார். அகஸ்தியரின் துணைவியான நவமணியின் பிரசன்னம் தன்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவதாயும், அகஸ்தியரின் முற்போக்கு எழுத்துக்களுக்கு நவமணி பக்கபலமாகத் திகழ்ந்தாகவும், அவரின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வத்துடன் செயல்படுவதாகவும்’ மேலும் அவர் தெரிவித்தார்.

‘20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அகஸ்தியர் போன்ற சமூக சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கு இலங்கையின் தேசிய பத்திரிகைகள் தயக்கம் காட்டின என்றும் ஆனால் அகஸ்தியர் அவர்கள் தனது பொதுவுடமைக் கொள்கையிலிருந்து தளராமல், பேனாவை வலிமை மிகுந்த ஒரு ஆயுதமாகக்கருதி, மக்களோடு  பின்னிப்பிணைந்த தத்துவங்களை படைப்புகளாக்கி, தொடர்ந்த அவரது எழுத்தாற்றலால் மிகுந்த செல்வாக்கை பெற்றார்’ என்று மூத்த பத்திரிகையாளர் பொன் பாலசுந்தரம் அவர்கள் அகஸ்தியர் பற்றிப்பேசுகையில் தெரிவித்தார். புரட்சிகர எண்ணங்களால் ஆகர்ஷிக்கப்பட்ட அகஸ்தியர் மக்களின் அபிலாசைகளை கருப்பொருளாகக் கொண்ட படைப்புக்களால் ஒரு புதிய மக்கள் யுகத்தை அமைக்க முடியும்; என்பதை வாழ்நாள் பணியாகக் கருதியவர் அகஸ்தியர்’ என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

முற்போக்கு எழுத்தாளரும் மிருதங்கக் கலைஞருமான அகஸ்தியரின் நினைவு விழாவின்போது அவரது பேரனான செல்வன் அகஸ்ரி ஜோகரட்னத்தின் மிருதங்க இசையுடன் செல்வன் பிரவீன் பிரதாபனின் புல்லாங்குழல் இசையும் இணைந்து டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் பல பாடல்களை இசைத்து சபையோயோரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று, மறைந்த கலைஞர்களை நினைவு கூர்ந்தமை இவ்விழாவுக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது.

‘பத்திரிகைக் கடிதம் மூலம் ஏற்பட்ட நவஜோதியின் அறிமுகம் தமது 50 ஆவது திருமண ஆண்டுவிழா விழா தமது குடும்பத்துடன் இடம்பெற்றவேளை தனது சொந்த மகள்போல் வந்து சிறப்புரை ஆற்றிருந்தார். லண்டன் ஜிரிவி தொலைக்காட்சியிலும், வானொலியிலும் தனது சேவைகள் குறித்து நேர்காணல்களை மேற்கொண்ட நவஜோதி துடிதுடிக்கும் ஒரு பெண்ணியல் வாதியாவார். ‘மகரந்தச் சிதறல்’ என்ற இந்த  நூல்மூலம் லண்டன் வாழ் 3;0 பெண் சாதனையாளர்களை ஒரே மேடையில் ஏற்றியுள்ள சாதனையும் அவரின் திறமையையும் ஆளுமையையும் வெள்ளிட மலையாய் எடுத்துக்காட்டுகின்றன’ என்று பேராசியர் கோபன் மகாதேவா தனது வாழ்த்துரையில்; குறிப்பிட்டுப் பேசினார்.  அவரது  தந்தை எஸ்.அகஸ்தியர் குறித்து ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைப் பத்திரிகையில் தான் ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையை எழுதி மிகுந்த வரவேற்பைப்; பெற்றதையும் அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.

லண்டனில் எஸ்.அகஸ்தியரின் 20 ஆம் ஆண்டு நிறைவும் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச்சிதறல்’ நூல் வெளியீடும்

 

‘பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாமுகம், குயு வுஏ யில் இடம்பெற்றுவரும் மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியின் மூலம் 400 வரையான நேர்காணல்களை மேற்கொண்டிருந்தார். அதில் 33 பெண்களின் ஆளுமைகளைத் தொகுத்து லண்டன் வாழ் பெண்களின் வரலாற்றுத் தொகுப்பாக 300 பக்கங்களில் வெளியிட்டமை தனிச்சிறப்பாகும். மண்டபம் நிறைந்த பத்திரிகையாளர்கள், ஓவியர்கள் இசை நடனக்; கலைஞர்கள், எழுத்தாளர்கள், வைத்தியர்கள் போன்ற அறிஞர்கள் இவரது கவிதை மற்றும் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஒன்று கூடியமை புதிய நிகழ்வாகும்’ என்று ஊடகவியலாளர் திரு நடாமோகன் தனது சிறப்புரையில் தெரிவித்தார். லண்டனின் முதல் தமிழ் வானொலியான ‘சண்றைஸ்’ மூலமாக செய்திகளை வாசிக்க ஆரம்பித்த நவஜோதி தற்போதைய இணையத் தொலைக்காட்சிவரை பாரிய சவால்களை எதிர்கொண்டு அயராது உழைப்பவர்’ என மேலும் தெரிவித்தார்.

‘லண்டன் கீழைத்தேச நுண்கலை அமைப்பின் பட்டமளிப்பு விழாக்களில் மேடை அறிவிப்பாளராக தன்னை வெளிக்காட்டிய நவஜோதி அந்த அமைப்பின் பரீட்சைகளின்போது மேற்பார்வைப் பணிகளுடன் ஈடுபடுவதுடன், இவ்வருடம் இத்தாலியின் ‘பலர்மோ’ நகரில் இடம்பெற்ற கலைவிழாவில் எமது அமைப்பின் சார்பில் நவஜோதி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்’ என்று ழுநுடீடு அமைப்பின் தலைவி ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் தனதுரையில் தெரிவித்தார்.

‘சிறுவயது முதல்; திரு. அகஸ்தியரின் எழுத்துக்களையும், அவரது புரட்சிகர கருத்துக்களையும் அவதானித்து வந்ததையும், சமூக சீர்திருத்தத்தில் அவர் கொண்ட ஈடுபாடுகளையும், போராட்டங்களையும் நினைவுபடுத்தி இன்று அவரது மகள் நவஜோதி ‘மகரந்தச் சிதறல்’ நூலை வெளியிடுவது பெருமைக்குரியதென’ என்று அகஸ்தியர் பிறந்த இடமான ஆனைக்கோட்டையைப்; பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் சுரேஷ் துரைரட்னம் தனது சிறப்புரையில் தெரிவித்தார்.

 செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம்  மிருதங்கம் , செல்வன்  பிரவீன் பிரதாபன் புல்லாங்குழல் இசையின் போது

[- செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம்  மிருதங்கம் , செல்வன் பிரவீன் பிரதாபன் புல்லாங்குழல் இசையின் போது -]

‘ஹரோ நகரில் கடந்த 20 ஆண்டுகாலமாக வாழ்ந்து பலவிதத்தில் தனது திறமைகளை வெளிப்படுத்திய நவஜோதியை 2015 ஆம் ஆண்டு ஹரோ நகராட்சி மன்றம் அவரை கௌரவித்து விருது வழங்கியபோது, அவ்வாண்டு ஹரோ நகர மேயராக இருந்த எனக்கு பெருமையாக இருந்தது’ என்று திரு சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் தெரிவித்தார்.

‘தன்னலம் கருதாமல் பொதுநலம் விரும்பி 33 லண்டன்வாழ் பெண்களின் நேர்காணல்களை நூலாக்கியிருப்பது மெச்சத்தக்க விடயம். எமது ‘கலா அஞ்சலிக் கலை’க்குழுவை பாராட்டுவதிலும் நவஜோதி முன்நிற்பவர்’ என்று முன்னாள் ஆங்கில பாடசாலையின் ஆசிரியரும், ஹரோவில் தமிழ் பாடசாலைகளை ஆரம்பித்தவர்களில் ஒருவரான புனிதா பேரின்பராஜா தெரிவித்தார்.

‘புதிய வடிவில் புதிய உத்திகளுடன் இந்த நூலை நவஜோதி வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. முன்னுரையில் நவஜோதி குறிப்பிட்டது போன்று பிரபல அமெரிக்க எழுத்தாளர் ‘மார்க் ருவைன்’ இன் கருத்துப்படி பேசப்படும் வார்த்தை என்பது ஒன்று, எழுதப்படும் வார்த்தை என்பது பிறிதொன்று. பேசப்படும் ஒன்றிற்கு அச்சு ஊடகம் பொருந்தி வராது என்ற கருத்தை முன்வைத்து நவஜோதி பல சிரமங்களுக்கிடையில் இந்நேர்காணல்களை எழுத்து வடிவில்  ஆக்கியது லண்டனில் முதல் தமிழ் பெண் ஆற்றிய புதிய முயற்சி’ என்று நாழிகை ஆசிரியர் மகாலிங்கசிவம் அவர்கள் தனது வெளியீட்டுரையில் தெரிவித்தார்.

‘33 வண்ண மலர்களான பெண்களின் ஆளுமைகளை கண்ணூடாக வெளிப்படுத்தும் செல்வன் அகஸ்ரி ஜோகரட்னத்தின் கைவண்ணத்தில் அமைந்த அட்டைப்படம் பாராட்டுக்குரியது. ஒரு தசாப்தத்துக்குரிய வரலாற்றுப்பதிவாக இந்நூலைப்பார்க்கமுடிகிறது’ என்று நூலை பல கோணங்களிலிருந்த சிறப்பாக விமர்சித்த திருவேணி சதீஸ்குமார் தெரிவித்தார்.

செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம் செல்வன் மிருதங்கம்ää  பிரவீன் பிரதாபன் புல்லாங்குழல் இசையின் போது

பெண்கள் யாவரும் ஆளுமை படைத்தவர்கள். ஆனால் வாழ்வின் துன்பியல்களால் வௌ;வேறு  வழிகளில் தம்மை ஈடுபடுத்தி ஆளுமை மிக்கவர்களாகின்றனர். தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி பாக்கியராஜா, நிர்மலா ராஜசிங்கம், மீனாள் நித்தியானந்தன், உதயகுமாரி பரமலிங்கம் (நிலா), மாதவி சிவலீலன், ராஜேஸ்வரி சிவம் போன்ற இந்நூலின் 33 பெண்கள் பற்றிய முயற்சிகள் போன்றுதற்குரியது என்று’ தோழர் வேலு தனது விமர்சன உரையில் குறிப்பிட்டிருந்தார்.

‘ வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் நேர்காணல்கள் செய்யும்போது சுவையான அனுபவங்களும், சிக்கலான  அனுபவங்களும் ஏற்படுவதுண்டு. ‘மகரந்தச் சிதறல்’ நூலில்  நவஜோதி பற்றி அல்லாமல் லண்டன் வாழ் 33 பெண் ஆளுமைகளை வெளிக் கொண்டுவந்து சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய முயற்சி’ என்று இவ்விழாவிற்கு தலைமை வகுத்த பிரபல ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா தனது தலைமையுரையில் தெரிவித்தார். நிகழ்ச்சி அறிவிப்புக்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் முன்னாள் ஊடகவிலாளரும் வழக்குரைஞருமான திரு. பீற்றர் யேசுதாசன் நிகழ்த்தியிருந்தார். அகஸ்தியரின் பேத்தியான செல்வி சுஜீறா நவஜீவா வரவேற்புப் பாடலை வழங்கியிருந்தார்.

நூலாசிரியர் நவஜோதி ஜோகரட்னம் தனது தந்தை அகஸ்தியரை நினைவிலிருத்தி தனது தாயாரான நவமணி அஸ்தியரை வாழ்த்தி ஏற்புரையை வழங்கியதோடு, திரு. ஜோகரட்னம் சிறப்புடன் நன்றியுரையை வழங்கியிருந்தார். லண்டனின் பல்வேறு நிகழ்வுகளின் மத்தியில், மண்டபம் நிறைந்த பல்கலை அறிஞர்களுடன் பெண் ஆளுமைகள் பலர் கூடுதலாக வருகை தந்திருந்தமை மிகச் சிறப்பாகக் காட்சியளித்தது.

20.12.2016


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்