நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும் முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல்பொதுவாக துறைசார் பாடநூல்கள் தவிர்ந்தவை இலக்கிய நூல்களாகவோ ஆய்வு நூல்களாகவோ அமையும் . இலக்கியம் மனித மெல்லியல்புகளின் வெளிப்பாடு . இதயத்துடன் தொடர்புபட்டது. ஆய்வு அறிவின் தொழிற்பாடு . மூளையுடன் தொடர்புபட்டது . கோபம் , குரோதம் போன்ற தீய இதய வெளிப்பாடுகள் மூளையை மழுங்கடையச் செய்வதால் வேண்டத்தகாத சம்பவங்கள் இடம்பெறும்.  அதுபோல் அறிவு, தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும்போது இன்னல்களிலிருந்து காப்பாற்றப்படுவோம் .அதனால்தான்போலும் ஆரம்பத்தில் சிற்றிலக்கியம் படைப்பவர்கள் அறிவு முதிர்ச்சி ஏற்பட விமர்சனம் ,மதிப்பீடு போன்ற ஆய்வுகளில் ஈடுபடுவர்.

சிற்றிலக்கியம் அகம் சார்ந்தது . ஆய்வு புறம் சார்ந்தது . வெளிதேடல்களுடன் தொடர்புபட்டது . மு .வரதராசன் கரித்துண்டு , கள்ளோ காவியமோ போன்ற பல சிற்றிலக்கியங்களை ஆரம்பத்தில் வெளியிட்டாலும் , மொழி நூல் , மொழி வரலாறு , தமிழ் இலக்கிய வரலாறு போன்ற ஒப்பற்ற ஆய்வு நூல்களை வெளியிட்டபின் எந்த சிற்றிலக்கியமும் படைக்கவில்லை . ஆனால், முருகபூபதி அவர்கள் சிற்றிலக்கியப் பரப்பிற்குள் செயற்பட்டுக்கொண்டே மிகச்சிறந்த ஆய்வு நூலையும் வரவாக்கியுள்ளார் . ஆய்வு என்பது அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவ வேண்டும் . அவ்வகையில் அவர் எழுதியிருக்கும் இலங்கையில் பாரதி எனும் நூல் சிறந்த ஆய்வு நூலாகும் .

இந்த ஆய்வினை அவர் முதலில் இலங்கை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் காலைக்கதிர் பத்திரிகையிலும், அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய இதழிலும் நாற்பது வாரங்கள் தொடராக எழுதினார். பாரதி தொடர்பாக இலங்கையிலிருந்து வெளிவந்த சிற்றேடுகள்  அனைத்தும் ஆக்கங்களை வெளியிட்டன.

இலங்கையில் பலரின் கூட்டு முயற்சியுடன் வெளிவந்த மறுமலர்ச்சி , பூரணி,  அலை , தாயகம் போன்ற பல சிற்றேடுகள் குறுகிய காலப்பகுதியில் தமது ஆயுளை முடித்துக்கொண்டன. இதற்குக் காரணம் எழுத்தாளனின் அவனுக்கே உரிய எழுத்தோர்மம் . அல்லது அவனது ஆணவம். இப்பண்பு தனித்துவமானது. எனினும்  10, 20, 40 ஆண்டுகளைக் கடந்தும்  ஜீவநதி , ஞானம், மல்லிகை முதலான தனிமனித வெளியீடுகள்  தொடர்ந்தும் வெளிவந்தன . மல்லிகை அதன் ஆசிரியராலேயே நிறுத்தப்பட்டது. ஏனைய இரு இதழ்களும் தொடர்ந்து வெளிவருகின்றன. இதற்கும் ஓர்மமே காரணம் . இவ்விதம் இலங்கையில் பாரதி எனும் இந்நூலில் மிக விரிவாக முன்வைக்கப்பட்டுள்ள சிற்றேடுகளின் வரலாறு தனிமுயற்சியே பயனளிக்கும் கூட்டு முயற்சி தோல்வியடையும் என்பதை எழுத்துத்துறையில் இதழ் வெளியீட்டில் ஈடுபடும் இளம்தலைமுறையினருக்கு அறியவைக்கின்றது.

ஆரம்பத்தில் இலங்கையில் பாரதியின்  புகழ் பரப்பியவர்கள் விபுலானந்த அடிகள் , ப .ஜீவானந்தம் , வ.ராமசாமி என்போராவர் . மயில்வாகனன் எனும் இயற்பெயர் கொண்ட  சுவாமி விபுலானந்தர், ஆரம்பத்தில் இராமகிருஸ்ண இயக்கத்தில் இணைந்திருந்தார். அதன் பொறுப்பிலிருந்த பாடசாலைகளில் முதலாம் வகுப்பு தொடக்கம் எட்டாம் வகுப்புவரை தமிழ்ப் பாடத்தில் பாரதி பாடல்களைச் சேர்த்திருந்தார் . 1932 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதி கற்கை வட்டம்  எனும் அமைப்பை நிறுவியவர். அப்பல்கலைக்கழக வெளியீடுகளிலும் ஆங்கிலத்தில் பாரதி தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு பாரதி புகழ் பரப்பினார்.

கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் உருவாக்கப் பாடுபட்ட  ஜீவானந்தம் அவர்கள், அக் கட்சி  அங்கு தடை செய்யப்பட்டபோது, இலங்கை வந்து இங்கு  தலைமறைவாக வாழ்க்கையை மேற்கொண்டார் . அக்காலகட்டத்தில் பாரதியின் பாடல்களையும் சிந்தனைகளையும் இலங்கையில் இலக்கிய மேடைகளில் முழங்கியவர். மறுமலர்ச்சிச் சிந்தனைகளை பாரதியின் பாடல்கள் மூலமே பரப்பியவர் .அவரின் ஆளுமையால் கவரப்பட்ட மல்லிகை ஆசிரியர் டொமினிக் தனது பெயரை டொமினிக்ஜீவா என மாற்றிக்கொண்டார் .

பாரதியின் நண்பரான ராமசாமி மணிக்கொடி இலக்கிய இதழின்  வரவுக்கு காரணமாக இருந்தவர் . வீரகேசரி நாளிதழின் ஆசிரியராக ஆரம்ப காலங்களில் பணியாற்றி பாரதியின் கருத்துக்களை அதனூடாகப் பரப்பியவர். கொழும்பில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்தவர்.  .அவர் எழுதிய மகாகவி பாரதியார் எனும் நூல் 1944 இல் முதற்பதிப்பைக்கண்டது . பின்னர் பல பதிப்புக்கள் வெளியாகின.

1920 களில் இலங்கைக்கு வந்த கோதண்டராம அய்யர் நடேசையர் புடவை வியாபாரி வேடத்தில் மலையக மக்கள்
மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டில் பரவலாக நாடெங்கும் இவ்வமைப்பால் பாரதி விழா கொண்டாடப்பட்டது.

82-83 காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் நூற்றாண்டு விழாவையும் இவ்வமைப்பு நடத்தியது . இவ்விழாவிற்கு இந்தியாவிலிருந்து பாரதியியல் ஆய்வாளர்களான தொ .மு .சி . ரகுநாதன் , பேராசிரியர் ராமகிருஷ்ணன் , எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

தொ .மு .சி ரகுநாதன், கங்கையும் காவிரியும் , பாரதியும் ஷெல்லியும்  ,பாஞ்சாலி சபதம்:  உறைபொருளும் மறைபொருளும் , பாரதி : காலமும்கருத்தும் , பாரதியும் புரட்சி இயக்கமும் போன்ற பல நூல்களை எழுதியவர். பேராசிரியர் ராமகிருஷ்ணன் பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சிங்களக் கவிஞரான ரத்ன நாணயக்கார,   பாரதியை  தனக்கு அறிய வைத்ததே பேராசிரியர் ராமகிருஷ்ணனே எனக்கூறியுள்ளார்.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அடிநிலை மக்களுக்காக எழுதியவர் . பாரதியின் சிந்தனைகளால் காலம்தோறும் பெண் , காலந்தோறும் பெண்மை , யாதுமாகி நின்றாய் , இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை முதலான பல நூல்களை எழுதியவர் . பாரதியின் வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் பாஞ்சாலிசபதம் பாடிய பாரதி எனும் நூலையும் வரவாக்கினார் .

இம்மூவரும் இலங்கை வந்த சமயத்தில் நாடு பூராகவும் சென்று  ஆய்வரங்குகள் , கருத்தரங்குகள் , எழுத்தாளர் ஒன்றுகூடல்கள் எனப்பல நிகழ்வுகளில் பங்கேற்றனர். இவ்வளவு தகவல்களும் முருகபூபதியின் இலங்கையில் பாரதி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலில் ஒரு பக்கக் கருத்துக்கள் மட்டும் எடுத்துக்காட்டப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில் ஒரு விடயம் தொடர்பான சாதமான , பாதகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, தர்க்கரீதியான சிந்தனைக்கு வழிசமைக்கின்றது.

பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பல சுவாமி என முதலில் அ .ந .கந்தசாமியும் ந .சோமகாந்தனும் இணைந்து 1963 இல் இலங்கை வடபுலத்தில்   வியாபாரிமூலையில் விழா எடுத்துள்ளனர். பேராசிரியர் கைலாசபதி , பேராசிரியர் சிவத்தம்பி , பிரேம்ஜி ஞானசுந்தரன் , ஞானக்குமாரன் , ஞானம் இதழின் ஆசிரியர் தி .ஞானசேகரன் , ச . அம்பிகைபாகன் போன்றோர் பாரதியின் ஞானகுரு அருளம்பலம் சுவாமியே என ஏற்றுள்ளனர் . எனினும் செங்கை ஆழியான் தனது பேரன் ஆறுமுக சுவாமியே பாரதியின் ஞானகுரு என 2004 ஆம் ஆண்டில் வெளியிட்ட .கருத்துக்களும் இந் நூலில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை  வ .வே .சு ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்பதே , இலங்கையில் பாரதி எனும்  இந்நூலை வாசிக்கும்வரை இம்மதிப்பீட்டுக் கட்டுரையாளரின் அறிவு. தனது பிரசுரமான எழுத்தையே திருடி போட்டிகளுக்கு அனுப்பும் சூழ்நிலையில், தான் வாசித்த ஒரு பொது உண்மையான 1905 இல் பாரதி எழுதிய சக்கரவர்த்தினி எனும் சிறுகதையே முதல் சிறுகதை என்பதை  197 ஆவது ஞானம் இதழில் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன் முன்வைத்ததை எடுத்துக்காட்டும் பண்பு எழுத்து நாகரீகத்தைக் காட்டுகின்றது. பாரதிதாசன் சிந்து  இசைக்கு பாரதியே தந்தை எனக் குறிப்பிட்டதை மறுத்து புலோலியூர் மு .கணபதிப்பிள்ளையவர்கள் சிந்து மிகப்பழமையான இசை எனத் தேவாரங்களை எடுத்துக்காட்டியதுடன் பாரதி சிந்து இசைக்கு உயிரூட்டியவர் என்பதை ஏற்றுள்ளார். இந்த அரிய தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

பாரதி தொடர்பாக ஆய்வாளர்களின் பொதுவான  கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களை முன் வைத்த புலவர் இராசாமணி, 
செ .கணேசலிங்கன், டாக்டர் ந . தெய்வசுந்தரம் போன்றோரும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளனர். மேலும் தமிழினி மெல்லச்சாகும் எனப் பாரதியாரே கூறியுள்ளதாக எடுத்துக்காட்டுபவர்களுக்கு, தமிழ்த்தாய் எனும் கவிதையில் பாரதியார் எழுதியிருக்கும்

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த

மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்

என்றந்தப்பேதை உரைத்தான் - ஆ

இந்த வசையெனக் கெய்திடலாமோ

எனும் வரிகள் பதிலாகின்றன.

பாரதியார் எழுதி அச்சு வாகனமேறிய  முதற் கவிதை விவேகபாநு இதழில் வெளியான தனிமையிரக்கம்  ஆகும் , எனினும் அவர் எட்டயபுரம் மன்னனிடம் கல்விக்கு உதவிகேட்டுப் பாடிய கவிதையே பாரதியார் பாடிய முதற்கவிதையாகும் .
இவ்விதம் பாரதி தொடர்பாக பலதர்க்க ரீதியான கருத்துக்களை இந்நூல் முன்வைக்கின்றது . இந்நூலில் ஆறுமுகநாவலர்,  தனிநாயகம் அடிகளார் ஆகியோரைத் தமக்குத் தெரியாது  என்று கூறிய தமிழக பிரபலங்களைச் சுட்டிக் காட்டியதுடன் தொ .மு .சி .ரகுநாதனின் எழுத்துக்கு எதிர்வினையாற்றிய சில்லையூர் செல்வராசனின் கருத்துக்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் பாரதி புகழ் கூறிய முதலாவது அறிஞராக விபுலாநந்த அடிகள் அடிகள் என அறியப்பட்டாலும், அவருடைய காலத்திலேயே புலோலியில் பண்டிதை பத்மாவதி அம்மாள் பாரதி கவிநயம் எனும் நூலை எழுதியது தொடர்பாக  அந்தனி ஜீவா வீரகேசரி ஆண்டுமலரில் எழுதிய விடயமும் இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளது . இவ்விதம் பாரதி தொடர்பாக நாம் இதுவரை அறியாத , அல்லது தவறாக அறிந்துகொண்ட பல விடயங்களுக்கும் இந்நூல் தீர்வைத் தருகின்றது .

பாரதியின் கவிதை உரைநடைக்கு அப்பால் இசையமைப்பாளர் எம் . பி . ஸ்ரீநிவாசன் பாரதீய சங்கீதத்தில் 3000 மாணவர்களை ஒரே சமயத்தில் பெங்களூரில் தனது இசைப் பின்னணியில் பாடவைத்தார் .

இவரின் பாரதீய சங்கீதத்தில் கார்த்திகா கணேசரின் தயாரிப்பில் அரங்காற்றுகை இலங்கையில் இடம்பெற்றது. தமிழ்நாட்டில் சிலோன் விஜயேந்திரனின் பாரதி வரலாற்று நாடகம் எனும் நூல் வெளியிடப்பட்டது. அதே காலப்பகுதியில், இலங்கையில்  சுபைர் இளங்கீரன் எழுதிய மகாகவி பாரதி எனும் நாடகம் அந்தனி ஜீவாவினால் இயக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது . இலங்கை வானொலியில் வ .இராசையா,  சிறுவர் மலர் நிகழ்ச்சியினூடாக சிறுவர்களை  கவிதை உரைநடை , பேச்சு நாடகம் முதலியவற்றில் ஈடுபடுத்தி பாரதி புகழ் பரப்பினார் .

இந்தியாவிற்கு வெளியே ருஷ்யரான வித்தாலி ஃபூர்னிகா , சிங்களவர்களான கே .ஜி .அமரதாச , ரத்ன நாணயக்கார ஆகியோர் பாரதி புகழ் பரப்பியவர்கள் முதலன தகவல்கள் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது .

யாழ் நகரில் 1908 ஆம் ஆண்டு, பாரதி பாஷா வித்தியாலயம் ஆரம்பம்,  அதன்பின்னர் மலையகத்தில் பசறை , தலவாக்கலை ஆகிய இடங்களிலும் பாரதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 90 களில் அவுஸ்ரேலியா மெல்பன் நகரிலும் பாரதி பள்ளி  அமைக்கப்பட்டு  இன்றுவரை தொடர்கின்றது. இவ்வாறு பல தகவல்களை நாம், இலங்கையில் பாரதி ஆய்வு நூலின் வாயிலாக அறிந்துகொள்கின்றோம். இந்நூலில் 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையில்  வெளியான தமிழ் பத்திரிகைகள் , இலக்கிய இதழ்கள் பற்றிய முழு விபரங்களையும்  அறியலாம் .

பாரதியின் பிறப்பு , நண்பர்கள், அவரது வாழ்க்கை இறப்புவரை கொடுக்கப்பட்டுள்ளது. என் கணவர் எனும் தலைப்பில் செல்லம்மாள் பாரதி அவர்கள் திருச்சி வானொலியில் ஆற்றியவுரையையும் இந்நூலில் வாசிக்கலாம்.

இந்நூலில் பல இடங்களில் பாரதியின்  கவிதையின் மூலம் அவரின் தீர்க்கதரிசனத்தை உணரலாம். இளம் எழுத்தாளர்கள் எழுத்துத்துறை தொடர்பான பல முன் அனுபவங்களை  அறிய உதவும் இந்நூல், எழுத்துத் துறையில் ஈடுபடுபவர்களுக்கு , தமிழ் இலக்கிய ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு, தமிழ் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாசிப்பை பொழுதுபோக்காகக் கொண்டவர்களுக்கு மிகப்பயன் உள்ளதாகும். நூலகங்களில் மட்டுமல்ல தமிழ் இலக்கிய ஆய்வுகுறித்து வாசிக்கவிரும்புபவர்களின் இல்லங்களிலும் இருக்கவேண்டிய   பயனுள்ள நூலாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here