பதிவுகள் முகப்பு

சக்கரங்கள் நிற்பதில்லை! மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு ! ஒரு பார்வை ! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
நிகழ்வுகள்
23 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாழ்க தமிழ்மொழி! 
வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!
வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும்  அளந்திடும்
வண்மொழி வாழியவே!........ 

மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி சரண்யா மனோசங்கரின் குரலில் தேன் மதுரமாய்  அந்த மண்டபத்தை நிரப்புகிறது! இது மகாகவியின் நினைவு நூற்றாண்டு என்பதை நினைவுபடுத்துகிறது.

இம் மாதம் 19 ஆம் திகதி ஞாயிறு மாலை சரியாக நான்கு மணி. மெல்பனில் பேர்விக்   மூத்த பிரஜைகள் மண்டபத்தில் அந்தக்குரல் ஒலிக்கிறது. மண்டபத்தில் திரண்டிருந்து மக்கள் எழுந்து நின்று சிரம் தாழ்த்தி அமைதியாக செவிமடுக்கின்றனர்.  

நான் எனது கண்களை மெதுவாக நிமிர்த்திப் பார்க்கிறேன். 

மேடையின் வலது பக்கத்தில் முறுக்கிய மீசைக்கூடாக மந்திரப் புன்னகையுடன் என்னை நோக்குகிறது மகாகவி பாரதியின் நேர்கொண்ட அந்தப்  பார்வை. 

மேலும் படிக்க ...

அஞ்சலி: நாம் அறிந்த எஸ்.டி.ஆர் (STR) - யாழ் ராஜா திரையரங்க உரிமையாளர்!

விவரங்கள்
- வ.ந.கி -
சமூகம்
22 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

https://www.youtube.com/watch?v=nRs37ilE3gE

எத்தனையோ திரையரங்குகளில் எத்தனையோ திரைப்படங்களைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் எத்தனைபேருக்கு அத்திரையரங்க உரிமையாளர்களைத் தெரிந்திருக்கும்? ஆனால் இவரை இலங்கைத் தமிழ் மக்கள் பலரும் அறிந்திருந்தார்கள். அவர்தான் யாழ் ராஜா திரையரங்க உரிமையாளர் எஸ்.டி.தியாகராஜா (STR).

இவரைப்பற்றி நான் முதன் முதலில் அறிந்துகொண்டது யாழ் ராஜாவில் 'காவல்காரன்' திரைப்படக் 'கட் அவுட்'டைப்பார்த்தபோது. எம்ஜிஆரின் திரைப்படங்கள் இவருக்கு மிகவும் வசூலை வாரிக்குவித்தன. காவல்காரன் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. எம்ஜிஆரின் நூறாவது திரைப்படமான 'ஒளி விளக்கு' முதலாவது முறையாகத் திரையிட்டபோது 150 நாட்களைக் கடந்து ஓடியது. மீண்டும் திரையிட்டபோதும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. ராஜா திரையரங்கில் காவல்காரன் வெற்றி விழாப் புகைப்படங்கள், கட் அவுட் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கு எந்தத் திரைப்படம் பார்க்கச் சென்றாலும் அவற்றைப் பார்க்காமலிருந்ததில்லை. ராஜா திரையரங்கு இன்னுமொரு விடயத்துக்காகவும் எம் நினைவிலிருக்கும். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும். யாழ் ராஜா திரையரங்குக்கும் அருகிலிருந்த ஒழுங்கை , கே.கே.எஸ் வீதி வரை செல்லும் வீதி, அவ்வீதியில்தான் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களின் மல்லிகை காரியாலயம் அமைந்திருந்தது. அக்காரியாலயத்தைக் குறிப்பிடுகையில் ராஜா தியேட்டரையொட்டிச் செல்லும் ஒழுங்கையில் அமைந்திருந்தது என்பதைக் குறிப்பிட யாரும் மறந்ததில்லை.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து "சிறுகதை எழுதுவது எப்படி?" பயிற்சிப்பட்டறை!  -பவானி தர்மகுலசிங்கம் -

விவரங்கள்
-பவானி தர்மகுலசிங்கம் -
நிகழ்வுகள்
21 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர் வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற செப்ரெம்பர் மாதம் இருபத்தைந்தாம் திகதி சனிக்கிழமை எமது கழகத்தின் இணைய வழிக் கலந்துரையாடல் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரபல எழுத்தாளரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவருமான குரு அரவிந்தன் அவர்களின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்ற பயிற்சிப்பட்டறை இடம் பெற்றது. முதலில் கழகத்தின் தலைவர் திரு. கந்த ஸ்ரீ பஞ்சநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பொருளாளர் திரு. குமரகுரு. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுத்தாளர் குரு அரவிந்தனை அறிமுகம் செய்து வைத்தார்.

அடுத்து ‘கவிஞர்களும் எழுத்தாளராகலாம்’ என்ற தலைப்பில் குரு அரவிந்தன் சிறுகதை எழுவது எப்படி என்பது பற்றியும், ஏன் அதிக மக்களால் சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன என்பது பற்றியும் விளக்கங்களைத் தந்தார். சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி, இன்றைய நவீன சிறுகதைகள் பற்றி உதாரணங்களையும் இலகு நடையில் எடுத்துச் சொன்னார். மேலும் அவர் தனது உரையில் சிறுகதைகள் எவ்வாறு எழுதப்படவேண்டும் எனவும், அவை எவ்வாறு வாசகர் உள்ளங்களைச் சென்றடையும் என்னும் பொருளிலும் பின்வரும் வழி முறைகளை எடுத்துச் சொன்னார்.

மேலும் படிக்க ...

'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றிய நினைவுக் குறிப்பு! -  எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
-  எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
21 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் எண்பதுகளில் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' சஞ்சிகைக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான காலாண்டு சஞ்சிகையான 'தீர்த்தக்கரை'சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் எஸ்.நோபட், எல்.ஜோதிகுமார் , எம்.தியாகராம் ஆகியோரிருந்தனர். எஸ்.நோபட் (சூசைப்பிள்ளை நோபட்) டொமினிக், ஜீவன், கேசவன், பிரான்ஸிஸ் சேவியர் மற்றும் கோவிந்தன் என்னும் புனைபெயர்களில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவர். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திலும் இணைந்து போராடிப்பின் அதிலிருந்து பிரிந்து 'தீப்பொறி' அமைப்பில் இயங்கியவர். 'புதியதோர் உலகம்' நூலாசிரியர்.  அண்மையில் ஜோதிகுமார் அவர்களிடம் 'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றியும் எழுதுங்களேன் என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் அனுப்பிய 'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றிய குறிப்பிது.  - வ.ந.கி -


அன்பின் கிரி, தீர்த்தக்கரை தொடர்பில் எழுத கூறியிருந்தீர்கள். புனித நீராடுதுறை, பாவம் கலையும் நீர்த்துறை என்று தீர்த்தக்கரைக்கு தமிழ் விளக்கம் கூறப்படுகின்றது. மேலும், புனித நீர் வைக்கப்படும் சிறு தேங்காய்த்துண்டு அகல் என்றும் கூறப்படுகின்றது. கூடவே தீர்த்தக்கரை என்பதனை பண்டைய ஒரு குருவுடன் சம்பந்தப்படுத்தி ஒரு புராண கதையும் உண்டெனவும் கதைக்கப்படுகின்றது. குறித்த குரு ஆறுகளில் வாசம் செய்யும் வரம் பெற்றவர் என்று கூறப்பட்டாலும், ஆறுகளை வணங்கும் மனிதப் பண்பை மேற்படி கதைகள் உள்ளடக்குவதாக உள்ளது என்பதில் அர்த்தம் உண்டு எனுமாப் போல் படுகின்றது. ஆனால் மேற்படி பெயரை வைக்கும் பொழுது இவை அனைத்தையும் தீர்த்தக்கரை தனது கவனத்தில் கொள்ளவில்லை என்பதை கூறுதல் வேண்டும். கடந்த கால திரைப்பட பாடல் ஒன்று கூட ராமேஸ்வரத்துக்கான புனித யாத்திரையை தீர்த்த யாத்திரை என வரையறை செய்து கொள்வதில் திருப்தியடைந்தாற் போல் இருந்தாலும் இத்தகைய ஒரு கருத்தை ஆசிரிய பீடம் ஒரு காலமும் கருதியதில்லை என்றே கூறுதல் வேண்டும்.

மாறாக இப்பெயரை தேர்வு செய்யும் போது, ஆசிரிய குழாத்தின் மனதில் பாரதியை நோக்கிய ஒரு யாத்திரையாக இது இருக்க கூடும் என்ற எண்ணப்பாடு ஒரு சிறிது அல்லது பல மட்டங்களில் இருந்தது என கூறலாம். அதாவது பாரதி எப்படி தொன்மங்களில் இருந்ததெல்லாம் உள்வாங்கி அவற்றில் பலதையும் நிராகரித்து சிலதை உள்வாங்கி தனது நவீன கால சிந்தனைகளுடன் அவற்றை இணைத்து தன் அழுத்தமான காலடிகளை கட்டுவித்தானோ - அதே அடிப்படையில் ஒரு வரலாற்று பார்வையை கட்டுவிக்கும் அவாவை வெளிப்படுத்தும் அல்லது எதிரொலிக்கும் ஒரு அவாவினை உள்ளடக்கிய பெயராகவும் - அதே வேளை பாரதியின் அழகியலை - அவ் அழகியலில் அடங்கக்கூடிய தார்ப்பரியத்தை சிலாகித்ததின் நேரடி விளைவாகவும் இப்பெயரின் தெரிவு அமைந்து போயிற்று எனலாம்.

மேலும் படிக்க ...

உலகத் தமிழர் நாள் விழா!

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
21 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேர்காணல் பகுதி நான்கு : ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -

விவரங்கள்
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
19 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கேள்வி: சென்றமுறை கதைக்கும் போது,இருள் கவியத் தொடங்கும் மங்கலான மாலைகளில், இயற்கை, தனது Impressionism ஓவியத்தை தீட்டி முடிக்கின்றது என கூறினீர்கள் (உணர்வு நிலை நிற்கும் ஓவியங்களை) - மங்கலான ஒளியில் மலைகளினதும் மரங்களினதும் விளிம்புகள் தெளிவுற தென்படாது, மறைய தொடங்குகையில், மனிதனின் கவிதை மனம் விழிக்க முற்படுகின்றது – இது போலவேதான் Impressionism ஓவியங்களும் உருவெடுக்க தொடங்குகின்றன என்பது போல் கருத்து தெரிவித்திருந்தீர்கள். கூடவே கலைஞன் என்பவன் தனது ஓவியத்தில், தனது கவிதையில் இயற்கையை அல்லது மனிதனை அல்லது வாழ்வை பரிமளித்து காட்ட உரிமை கொண்டவன்தான் என்றும் கூறியிருந்தீர்கள். அதாவது இத்தகைய பரிமளிப்புகள் ஆக்கப்பூர்வமானதாய் இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் இவ் உரிமை அங்கீகரிக்கத்தக்கதே என்றும் கூறியிருந்தீர்கள். இத்தகைய ஒரு பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட மொனே, பிசாரோ, டேகாஸ் போன்ற ஓவியர்களை எப்படி மதிப்பிட்டு கொள்கின்றீர்கள்?

பதில்: மொனே நீண்ட காலம் வாழ்ந்த ஒரு மாபெரும் கலைஞன். 86 வயது வரை தன் ஓவிய பரீட்சார்த்தங்களை முன்னெடுத்தவன். அவனது அடிவைப்புகளில் இருந்தே உணர்வுநிலை ஓவியங்கள் (Impressionism) முதன் முதலாய் உறுதியாக தோற்றம் கொள்ள தொடங்கின என கூறலாம். இவருக்கு பத்து வருட முந்திய கலைஞனான, பிசாரோ (கிட்டத்தட்ட) இவரது சமகாலத்து ஓவியனாக இருந்த போதிலும், அவரும் உணர்வுநிலை ஓவியங்களை படைத்தளித்திருந்த போதிலும், உணர்வு நிலை ஓவியம் என்பது மொனேயுடனேயே உறுதியாய் தன் காலடியை வரலாற்றில் பொறித்தது எனலாம்.

கேள்வி: இவற்றில் மொனேயின் எந்தெந்த ஓவியங்களை அதிமுக்கியமான ஓவியங்களாக கருதுவீர்கள்?
பதில்: ரயில்கள் தொடர்பாய் அவர் வரைந்த ஓவியங்களையும் தேவாலயங்கள் தொடர்பில் அவர் வரைந்த ஓவியங்களையும் நாம் அழுத்தமாக குறிப்பிட்டாக வேண்டும்.

கேள்வி: இவற்றில் முதலில் மொனேயின் ரயில் சம்பந்தமான ஓவியங்களை பற்றி கூறுவீர்களா?
பதில்: மொனே தனது ரயில் ஓவியங்களை 1870களில் வரைந்திருந்தார். 1871 முதல் 1877 வரை “ரயில்” அவரது தலையாய ஓவிய முன்னெடுப்புகளின் கருப்பொருளாக இருந்தது. அத்தகைய ஒரு ஓவிய பயணத்தின் இறுதி கணங்களில், ரயிலின் காட்சிப்படுத்தலை, அவர் பூரணமாக்கினார் எனலாம்.

மேலும் படிக்க ...

ஆஸ்திரேலியாவில் மல்லிகை ஜீவா நினைவு விருது பெறும் கலை, இலக்கிய ஊடகர் யாழ். பாஸ்கர்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உள்ளார்ந்த கலை , இலக்கிய ஆற்றல்களை கொண்டிருப்பவர்கள், தமது தாயகம் விட்டு, வேறு எந்தத் தேசங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியே வருவார்கள். அதற்கு எமது புகலிட தமிழ் கலை, இலக்கிய உலகில் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான யாழ். பாஸ்கர். இவர் இந்தத் துறைகளில் தடம் பதித்து, வளர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் இதழ் ஆசிரியராகவும் மலர்ந்தவர். யாழ்ப்பாணம் கொட்டடியைச்சேர்ந்த இவர், தனது ஆரம்பக்கல்வியை கொட்டடி நமசிவாயா பாடசாலையிலும், நவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலையிலும் பயின்று, பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் இணைந்தார்.

கல்வியை நிறைவுசெய்துகொண்டு, 1984 ஆம் ஆண்டிலேயே கடலைக் கடக்கத் தொடங்கியவர். இவர் ஒரு கிரேக்க கப்பலில் வேலைக்குச்சேர்ந்து சமுத்திரங்கள் பலவற்றை கடந்து பயணித்திருப்பவர். இவர் சென்று திரும்பிய தேசங்களின் பெயர்களே சற்று நீளமானது. கடலோடியாக அமெரிக்கா, மெக்சிக்கோ, ஆர்ஜன்டைனா, நைஜீரியா, போலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி என சுற்றியலைந்துவிட்டு, இறுதியில் 1988 ஆம் ஆண்டளவில் இந்தியாவை வந்தடைந்தவர்.இலங்கையில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த அக்காலப்பகுதியில் தாயகம் திரும்பாமல், கடல் வாழ்க்கை இனிப்போதும் எனக்கருதியதனாலோ என்னவோ, ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு நிரந்தரமாக வந்து சேர்ந்தார்.

யாழ். பாஸ்கர், ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் ம. பாலசிங்கம் அவர்களின் மருமகனும், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் கலா. மோகன், டென்மார்க்கில் வதியும் இலக்கியவாதியும் மொழிபெயர்ப்பாளரும் அரசியல் பிரமுகருமான டென்மார்க் தருமகுலசிங்கம் ஆகியோரின் நெருங்கிய உறவினருமாவார். 1989 நடுப்பகுதியில் எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா மெல்பனில் நடைபெற்ற காலப்பகுதியில், அதில் உரையாற்றுவதற்கு சிட்னியிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் எஸ். பொ. அவர்களினால், எனக்கு அறிமுகமானவர்தான் யாழ். பாஸ்கர்.

மேலும் படிக்க ...

அறிமுகம்: வ.ந.கிரிதரனின் நேரம் - யு டியூப் சானல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
நண்பர்களே! 'வ.ந.கிரிதரனின் நேரம்' என்னும் யு டியூப் 'சான'லொன்றினை ஆரம்பித்துள்ளேன். இதுவரையில் அங்கு 15 காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் பொ.சண்முகநாதன் மறைவு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
16 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தனது எழுத்துகளால் நம்மையெல்லாம் குலுங்கிச் சிரிக்க வைத்த எழுத்தாளர் போனாச்சானா (பொ.சண்முகநாதன்) மறைந்து விட்டார். இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை எழுத்துக்கும் முக்கியத்துவமுண்டு. நகைச்சுவையென்றால் முதலில் நினைவுக்கு வருபவர்களிலிலொருவர் எழுத்தாளர் பொ.சண்முகநாதன். இவரது 'கொழும்புப்பெண்', 'பெண்ணே நீ பெரியவள்தான்' மற்றும் 'வெள்ளரி வண்டி' ஆகியவை முக்கியமான வெளியீடுகள்.

தமயந்தி பதிப்பகம் (அச்சுவேலி) வெளியிட்ட 'பெண்ணே நீ பெரியவள்தான்' இவரது நகைச்சுவைக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. வாசித்துப்பாருங்கள். சிரித்து மகிழுங்கள். நூலகம் தளத்தில் இந்நூலினை வாசிக்கலாம். அழகான அட்டைப்பட ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் வி.கனகலிங்கம் (வி.கே). நூலின் தலைப்புக்கேற்ற ஓவியம். பெரிய பெண்ணை அண்ணாந்து பார்க்கும் ஆணின் ஓவியம். அட்டைப்படமே நூலினை வாசிக்க வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.

தரமான நகைச்சுவை இலக்கியம் எவ்விதம் படைக்கப்பட வேண்டுமென்பதற்கு நல்லதோர் உதாரணப்பிரதியாக இத்தொகுதியை என்னால் கருத முடிகின்றது.

மேலும் படிக்க ...

சமாதானத்திற்கான கனேடியர்களின் ஏற்பாட்டில் நூல் வெளியீடும் கருத்துரைகளும்: வரதன் கிருஷ்ணாவின் 'வெந்து தணியாத பூமி' - தகவல்: எல்லாளன் -

விவரங்கள்
- தகவல்: எல்லாளன் -
நிகழ்வுகள்
15 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள் (6) - புதுக்காடு! - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
14 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -


புதுக்காடு

கால் கடுக்க நிற்க தொடங்கினேன். பக்கத்தில் ஒரு மீன் வியாபாரி. மீன் வெட்டும் அகன்ற பலகை தரையில் கிடக்க அதன் மீது மீன் வெட்டும் பெரிய கத்தியும் மீன் செதில்கள் அங்குமிங்குமாயும் ஒட்டிக் கிடக்க - அதனருகே மீன் கொணரும் தனது வட்ட வடிவான வாயகன்ற கூடையை போன்ற அலுமினியத்திலான ஓர் பெரிய பாத்திரம் - இரண்டொரு ஈக்களும் அங்கே ஒன்றாய் மொய்க்க தொடங்கியிருந்தன. அவர் மீன் மீன் என்று கூவியும் அழைக்கவில்லை. தரையில் அமர்ந்து வருவோர் போவோரை என்னைப்போல பராக்கு பார்த்தவாறே இருந்தார். ஒரு வேளை மீன் அவ்வளவையும் விற்று முடித்து விட்டாரோ என்னவோ. நடந்தோரை விட அந்த ஒடுங்கிய பாதையில் விடுமுறை கழிக்க வந்தோரின் வாகனங்கள் அதிகமாக இருந்தது. அவை, அந்த சந்தியில் புழுதியை கிளப்பி பெரும் அசௌகரியத்தை வேறு தந்தது.

நான் ஒருவன் மாத்திரமே அந்த பஸ் தரிப்பிடத்தில் தனியனாக நின்றிருந்தேன், தோளில் தொங்கும் எனது பையோடு. என்னை பார்த்த வாகனங்கள், என்னருகே நிறுத்தி “பாதை விசாரிக்க” முற்பட்டன. முதலில், இரண்டொன்றை கூறத்தொடங்கினேன் - தெரிந்த மட்டும். பிறகு, இந்த தொழில் சரிபடாது என்ற எண்ணம் தோன்ற பாதை ஓரத்தில் இருந்து அகன்று பாதையின் சற்று உட்புறமாய் வந்து ஒளிந்திருந்தாற் போல் நின்று கொண்டேன் - வாகனங்களுக்கு எளிதில் தென்படாதவாறு.

ஓர் அரை மணி நேரம் பஸ்ஸ{க்காக அல்லது ஏதேனும் ஒரு வண்டிக்காக காத்திருந்தப்பின் கேட்டபோது கூறினார்கள். வழமையாக வரும் இன்று வராது. பாதை செப்பனிடப்படுவதால் மாற்று பாதையில் சென்று விடுவார்கள். இறுதியில் அந்த ‘மாற்று பாதையை’ அடைந்த போது, ஓர் இறக்கத்தில், ஒடுங்கிய ஒரு பாதை ஓரமாக சின்னஞ்சிறு வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டிருந்தன.

மேலும் படிக்க ...

(தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (3) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
14 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

3

ஏய்டன் நீலமேகத்தின் சாதீய மனத்திண்மை குறித்து சிந்திப்பதும், அச்சிந்தனைக்கூடு, மனித ‘நம்பிக்கை’ பொறுத்த, பின்வரும் தரிசனங்களுக்கு வந்து சேர்வதாகவும் நாவல் காட்டுவதாய் உள்ளது.

“இவனை ஒரு தாழ்ந்த சாதியினனைத் தொட வைத்தேன் என்றால் நான் வெற்றிபெற்றவனாவேன் அல்லது குறைந்த பட்சம் மனமுடைந்து அழ வைத்தாலாவது வெற்றி பெற்றவனென உணர முடியும்”

“ஒரு போதும் அதற்கான வாய்ப்பை இவன் எனக்கு அளிக்கப் போவதில்லை..”

“ஆம். இவன் மௌனமாக இறப்பான். தன்னுடைய ‘நம்பிக்கைகளுக்காக’ உறுதியாக வதைப்பட்டு அமைதியாக உயிர் துறக்கிற ஓர் புனிதரை போல! புனிதரா? என்ன வேறுபாடு? எல்லாம் நம்பிக்கைதான்…இவன் மிக முட்டாள் தனமான ஒன்றுக்காக, மனித ஆன்மாவுக்கே எதிரான ஒன்றுக்காக இறக்கின்றான். ஆனால் இவன் இப்போது இறக்கும் மனநிலைக்கும் அந்த புனிதரின் மனநிலைக்கும் வேறுபாடு இல்லை. என்ன அபத்தம்” (பக்கம்-74) (அழுத்தம் எம்முடையது)

அதாவது நீலமேகத்தின் சாதீய பார்வையும் ஏய்டனின் சமூக நீதிக்கான பார்வையும், நம்பிக்கை எனும் ஒரே அடிப்படையில் இருந்து எழுவனவாக தர்க்கிக்கப்படுகின்றது.

‘நம்பிக்கை’ என்ற அடிப்படையைக் கொண்டு நோக்கும் போது, இரண்டுமே ஒன்றுதான் என்பதும், இதன் தொடர்ச்சியாக, இக்காரணத்தாலேயே வாழ்வே அபத்தம் என்ற முடிவுக்கு வருதலும் எவ்வளவு தூரம் அபத்தமானது என்பதும் இலகுவில் கண்டுக்கொள்ளக்கூடிய ஒன்று தான்.

அதாவது ‘நம்பிக்கை’ என்ற ஒரு அடிப்படையை வைத்துக் கொண்டு வௌ;வேறான இரண்டு வேறுபட்ட நம்பிக்கைகளை, இவை இரண்டுமே ஏதோ ஒரு வகையில் நம்பிக்கைதாம் எனும் அடிப்படையில் பார்த்து, இவை ‘ஒன்றுதான்’ என முடிப்பதும் அதன் வழியாக, இறுதியில், இக்காரணத்தினாலேயே , இவ்வடிப்படையில், வாழ்வே அபத்தம் எனப் பாடும் பாட்டு இந்திய வரலாற்றில் ‘யாவையும் மாயை’ எனப் பாடப்பட்ட பாடலுக்கு ஒப்பானதேயாகும்.

மேலும் படிக்க ...

சிறுகதை: சுமை  - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
சிறுகதை
14 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.

‘எழுந்திருடா’ பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.

துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். ‘சுள்’ என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.

‘வெளியே வாடா நா..!’ தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்ட போது அவனது குரலை இவனால் இனம் காண முடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.

தள்ளாடியபடியே வெளியே வந்து, அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சப்பாத்துக் கால்களைப் பின் தொடர்ந்தான். இரும்புக் கதவுகள் பல திறந்து, மூடப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் இருந்த அதிகாரி முன் நிறுத்தப் பட்டான். இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து யாரையுமே நிமிர்ந்து பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.

மேலும் படிக்க ...

சிறுகதை: அவிழாப் புதிர்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
சிறுகதை
14 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேக்கு பூனையை பிடிக்காது. தப்பு, தப்பு...... பூனைகளைன்னு மாத்தி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதென்ன..... நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை...

' சீ, நீ ஒரு பதர்'  அப்படின்னு பார்க்கிற மாதிரி ஒரு அலட்சிய பார்வ.... மீசையாம் மீசை.... நார் நாரா உதடுக்கு மேல ஈர்க்கில் போல ... பார்க்கவே சகிக்கல... உற்ற்ற்... உற்ற்ற்  ன்ன எப்பவும் வயிற்றுக்குள்ள இருந்து ஒரு இரைச்சல் சத்தம் வேற. வயிறா இல்ல ஏதாவது பாக்டரியா?
வால் மட்டும் என்னவாம்?  எங்க ஜிம்மிக்கு புசு புசுண்ணு என்னமா  பஞ்சு மாதிரி  சாஃப்டான வாலு.... பாம்புக்கு ஸவெட்டர் போட்டாபல  இருக்கும். பூனையாம் பூன..... ஏதோ திட்டம் போட்டு ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வச்சி தலய மெதுவா திருப்பி பார்த்திட்டு அப்புறம் அலட்சியமா போறப்ப சினிமால  'உன்ன அப்புறமா வந்து கவனிச்கிறேன்னு' வில்லன் சொல்லறாப்பல இருக்கும்.

என்ன.... ஒரே குறையா சொல்றேன் சண்டைக்காரின்னு நினைச்சீங்களோ? மாமா கூட அம்மா கிட்ட இதேதான் சொன்னார்.  "கொண்டு வர்ர எல்லா வரனையும் வேணாம் வேணாம்னு உதைச்சி தள்ளுறா உன் மக. நாம பார்க்கிற பையங்க வேணாமா இல்ல கல்யாணமே வேணமா?  அவளா பாத்து ஒரு டாக்டரையோ, ஐ.ஏ.எஸ் பையனயோ கூட்டிண்டு வரட்டும். ஜாம் ஜாம்னு நடத்தி நானே முன்னால நின்னு தாலிய எடுத்து கொடுக்கிறேன்."

மாமா மீது கோபம் பிச்சுண்டு வரும். டாக்டர் ஐ.ஏ.ஸ் ன்னா என்னா  கொம்பா?

எதிர் வீட்டு கோமதியும்தான் பெரிசா  'டாக்டர் மாப்பிள,  டாக்டர் மாப்பிளன்னு'  பீத்திண்டு  மூஞ்ச திருப்பிண்டு பெங்களூருக்கு குடித்தனம் போனா. எட்டு மாசம் தாங்கல..... தனியா டாக்சில வந்து இறங்கினா.  பாவம்... அழுது அழுது முகமெல்லாம் வீங்கி.... என்ன எழவோ. 'டி..மஞ்சு... கோமதி கத தெரியுமோடி? அவ.....'. அம்மா தொடங்கும் முன்னே 'ஸ்டொப் இட் மா. டோண்ட் டெல் மி' ணு சொல்லி கட் பண்ணிட்டேன். பொம்மனாட்டிக்குள்ள  இருக்திற வலியையும் வேதனையும் ஒரு வேடிக்கையா பார்க்கிற சமூகம்.... நிராகரிக்கப்பட்டவள் அப்படீனு சமூகம் முத்திரை குத்தி மூலயில போட்ட பொம்மையாட்டம்  அவ வாழ்க்கை இப்போ.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் நேரம்: மழையும், நானும்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பர்களே! ஒரு பரீட்சார்த்த முயற்சியாக யு டியூப்பில் ஒரு சானலை ஆரம்பித்துள்ளேன். அதில் முதல் முறையாக ஒரு காணொளியை பதிவேற்றம் செய்துள்ளேன். அவ்வப்போது பல்வேறு விடயங்களைப்பற்றிய என் சிற்றுரைகள் இங்கு இடம் பெறும். என் படைப்புகள் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் இங்கு இடம் பெறும். 

https://www.youtube.com/watch?v=INNoa7GEEAA

மேலும் படிக்க ...

வாசிப்பும் யோசிப்பும் (375) :என் பார்வையில் வரதன் கிருஷ்ணாவின் 'வெந்து தணியாத பூமி' ! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் நண்பர் எல்லாளன் தந்திருந்த நூல்களிலொன்று 'சமாதானத்திற்கான ஶ்ரீலங்கா சார்புக் கனேடியர்கள்' அமைப்பு வெளியிட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், முன்னாட் விடுதலைப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய 'வெந்து தணியாத பூமி' என்னும் சிறு நூல். இந் நூலை வாசித்தபோது ஒன்று புரிந்தது. இது தொட்டிருக்கும் விடயம் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானதொன்று. இது ஆற்றியிருக்கும் பணியும் முக்கியமானது. காலத்தின் தேவை.

நூலாசிரியரான வரதன் கிருஷ்ணாவின் இயற்பெயர் ஆறுமுகம் வரதராஜா. புசல்லாவைத் தேயிலைத் தோட்டமொன்றில் பிறந்து வளர்ந்தவர். சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, சுடர் ஒளி, உதயன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர். பாலகுமார் தலைமையிலான ஈரோஸ் அமைப்பில் இணைந்து இயங்கியவர். பாலகுமார் இவருக்கு வரதன் என்று பெயர் வைத்தார். ஈரோஸ் அமைப்பின் மூத்த போராளிகளில் ஒருவரான கிருஷ்ணா அவர்களின் பெயரை , அவரது மறைவுக்குப்பின்னர் தன் பெயரான வரதனுடன் இணைத்துக்கொண்டார். அதன் காரணமாகவே வரதன் கிருஷ்ணா என்று அழைக்கப்படத்தொடங்கியவர்.

இச்சிறு நூல் விரிவான ஆய்வு நூலல்ல. ஆனால் இத்துறையில் ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் எவரும் படிக்க வேண்டிய நூல்களிலொன்று. கூடவே மலையக மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றை, இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் மலையக மக்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டும் நூல் என்ற வகையிலும் முக்கியமானது.

மேலும் படிக்க ...

என்னை ஆட்கொண்ட மகாகவி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* இங்குள்ள பாரதியார் படம் Tamilebooks. Org வெளியிட்ட 'பாரதியார் கவிதைகள்' மின்னூலின் அட்டையில் இடம் பெற்றிருந்தது. அதனை நன்றியுடன் பாவிக்கின்றேன்.

தமிழ் இலக்கிய உலகில் என்னை ஆட்கொண்டவர்களில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். இவருடனான தொடர்பு ஏற்பட்டபோது எனக்குப் பதினொரு வயது. அப்பா வாங்கித் தந்திருந்த மகாகவி பாரதியார் கவிதைகள் நூலின் மூலம் அத்தொடர்பு ஆரம்பமானது. இன்று வரை அது நீடிக்கின்றது. நான் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும் என் மேசையில் பாரதியாரின் கவிதைத் தொகுப்புமிருக்கும். அவ்வப்போது தொகுப்பைப் பிரித்து ஏதாவதொரு அவரது கவிதையை வாசிப்பது என் வழக்கம். இன்று அந்த மகத்தான மனிதரின் பிறந்தநாள்.

எப்பொழுதுமே நான் பாரதியாரை நினைத்து வியப்பதுண்டு. குறுகிய அவரது வாழ்வில் அவர் சாதித்தவைதாம் எத்தனையெத்தனை!

அவரது கவிதை வரிகள் மானுடரின் குழந்தைப்பருவத்திலிருந்து முதிய பருவம் வரையில் வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியவை. குழந்தைகளுக்கு அவரது வரிகள் இன்பமளிப்பவை. இளம் பருவத்தினருக்கு அவரது கவிதைகள் வடிகால்களாக இருப்பவை. சமுதாயச் சீர்கேடுகளுக்கெதிராக, அந்நிய ஆதிக்கத்துக்கெதிராகப் போராடுபவர்களுக்கு அவரது கவிதைகள் உத்வேகமளிப்பவை. தத்துவ விசாரங்களில் மூழ்கி மானுட இருப்புப் பற்றிச் சிந்திப்பவர்களுக்கு அவரது கவிதைகள் தெளிவையும், தேடல் மீதான ஆர்வத்தை மேலும் தொடர்வதற்கு ஊக்கமளிப்பவை. இயற்கையைச் , சூழலை , சக உயிர்களை நேசிப்பவர்களுக்கு அவரது கவிதைகள் மகிழ்ச்சியைத் தருபவை.

அவரது கவிதை வரிகள் பல மனத்தில் நிலைத்து நிற்கக்கூடியவை. இதுவரை வெளியான தமிழ்ச் சஞ்சிகைகள் பலவற்றின் தாரக மந்திரமாக இருப்பவை அவரது கவிதை வரிகள். திரைப்படங்கள், கலை நிகழ்வுகள், மெல்லிசை, கர்நாடக இசைக்கச்சேரிகள் பலவற்றில் அதிகம் பாடப்பட்டவை அவரது வரிகளாகக்த்தானிருக்க முடியும்.

மேலும் படிக்க ...

மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடு !அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர் யாழ். பாஸ்கருக்கு மல்லிகை ஜீவா நினைவு விருது! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
11 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும் கதைத் தொகுப்பின் கதை ( சிறுகதை ) நடந்தாய் வாழி களனி கங்கை ( கட்டுரை ) பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம் ) நூல்களின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 19 ஆம் திதி ( 19-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில் Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806) மண்டபத்தில் நடைபெறும். மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, திருமதி மேகானந்தா சிவராசாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும். திருமதி சரண்யா மனோசங்கர் தமிழ்வாழ்த்து பாடுவார்.

மேலும் படிக்க ...

தொடர்கதை :ஒரு கல் கரைந்தபோது! (11)    - நெல்லை  வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -

விவரங்கள்
- நெல்லை  வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
நாவல்
11 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(11)

திருமணமாகி மதுரை வந்த நாள்முதல் அடிக்கடி இரவு ஒன்பதுமணிக்கு, எங்கள் பெட்ரூமிலிருந்து அம்மாவிடம், வீடியோ காலில்தான் பேசுவேன். அம்மா தனது பெட்ரூமிலயிருந்து பேசுவாங்க. சிலநாட்களில் சமையல்காரப் பையன் எடுத்துப் பேசுவான். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தானும் பேசத் தவறுவதில்லை.

முக்கியமாக, எனக்கு செயற்கைக்கால் மாட்டியது பற்றியும், முன்புபோல சரளமாக கார் ஓட்டுவதுபற்றியும் தெரிவித்தபோது, அம்மா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தவிர, மீனாட்சி அம்மன் கோவில்முதல் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், அழகர் கோவில்,திருப்பரங்குன்றம், காந்தி மியூசியம், ராஜாஜி பார்க் அனைத்தும் சுற்றுலா சென்றது பற்றியும், வாழ்க்கையில் முதன்முதல் இந்த இடங்களுக்கு போய்வந்த அனுபவம் மறக்க முடியாது என்றும் சொன்னபோது, அம்மா சிரித்துவிட்டாங்க.

“அம்மாடி…. நீ இந்த இடங்களுக்குப் போய்வந்தது சந்தோசம்…. ஆனால், இத்தனை இடத்துக்கும் நீ போனது இத்தோடை மூணாவது தடவை…. அதாவது உங்கப்பாவும், நானும்,குழந்தையாயிருந்த உங்கக்காவைக் கூட்டிக்கிட்டு வர்ரப்ப நீ என்வயித்தில மூணுமாசக் கர்ப்பத்தில இருந்தே…. அடுத்தவாட்டி வர்ரப்போ உனக்கு அஞ்சுவயசு…. உங்க அக்காளும் நீயும் அந்த இடங்கள் பூராவுமே ஓடிவிளையாடி எங்களைப்போட்டு தேடவெச்சு பாடாய் படுத்தியிடுவிய….”

“இத்தனை காலமா ஒருநாளாவது இதைப்பத்தி சொன்னீங்களா…. என்கூடவந்தவங்க இது இப்படி, அது அப்படீன்னு எனக்கு கிளாஸ் எடுத்து விளக்கம் குடுத்தப்போ, ஆமா ஆமா நான் எங்கம்மா அப்பாகூட ஏற்கனவே வந்திருக்கேன்…. இந்த இடத்திலயெல்லாம் ஓடிவிளையாடி என்கால் படாத இடமேயில்லைன்னு பெருமை பேசியிருப்பேனே….”

மேலும் படிக்க ...

தொடர் கதை: கலிங்கு (2012 -1) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
11 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.

முதல் நாள் மதியத்துக்கு மேல் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்ட முப்பத்தொரு பேரும், அதிகாரபூர்வமாக விடுதலையின் திகதியும் நேரமும் அறிவிக்கப்பட்டனர். புனர்வாழ்வுக் காலத்தில் அவர்கள் கற்றிருந்த சிங்கள மொழி அறிவு அவர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு, இன சௌஜன்யம் போன்றவற்றிற்கு உதவியாயிருக்குமெனவும் சொல்லப்பட்டது.

இருட்டு முழுவதும் கலைந்திராத ஒரு பொழுதில் எழுந்து, அதுவரை யார் யாருக்கோ திறந்த ராணுவ காவல் கதவுகள் தனக்காகத் திறக்க சங்கவி காத்திருந்தாள். அது திறக்கும்வரைகூட அது திறக்குமாவென்ற சந்தேகம் அவளிடமிருந்தது. அவள் அறிந்திருந்த தகவலின்படி அவள் இயக்கத்திலிருந்த காலத்தில் அரசாங்க அமைச்சர், ராணுவ மேலதிகாரிகளின் தாக்குதல் குழு ஏதாவதில் அவள் பங்குபற்றியிருந்தாளா என்று அவர்களால் திட்டமாக அறியமுடியாதிருந்தும், இயற்பெயராகவோ இயக்கப் பெயராகவோ சொரூபாவென பெயர் கொண்டிருந்த ஒரு கரும்புலிப் பெண்ணுடன் அவளை அவர்கள் குழப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்ன அந்தத் தாக்குதல் கொழும்பில் நடைபெறவிருந்த காலத்தில் தனக்கு திருமணமாகி குழந்தையை வயிற்றிலே சுமந்துகொண்டிருந்தாளென்ற வாதம் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதாக இருந்தும், ஏனோ அவளை விடுவிக்க தடுப்பு முகாமில் அவள் இரண்டு வருஷங்களைக் கழித்திருந்த நிலையிலும் ராணுவ விசாரணைக் குழு தயக்கம் காட்டிக்கொண்டிருந்தது. இறுதியில் விடுதலையின் நாள் அவளுக்கும் குறிக்கப்பட்டது.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானங்கள்: 'இரண்டு மனம் வேண்டும்' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
09 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படங்களிலொன்று 'வசந்த மாளிகை'. இப்படம் என்னைப்பொறுத்தவரையில் என் பதின்ம வயதுக் காலகட்டத்துக்குக் காவிச் செல்லும் காலக்கப்பல்களிலொன்று. இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத கானங்கள்தாம். திரையிசைத்திலகத்தின் திறமையினை வெளிப்படுத்தும் கானங்கள்.
விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் நிறுவனம் சிவாஜியை வைத்து வெளியிட்ட திரைப்படம்தான் 'வசந்த மாளிகை'. இலங்கையில் மிகப்பெரிய வெற்றியினைப் பெற்ற திரைப்படம். வெலிங்டன், கெப்பிட்டலில் 200 நாட்களைக் கடந்து ஓடியதாக நினைவு. அக்காலகட்டத்தில் இப்படத்தை வெலிங்டன் , கெப்பிட்டல் திரையரங்குகளின் உரிமையாளரான குணரத்தினமும் விஜயா சுரெஷ் கம்பைன்ஸுடன் இணைந்து தயாரித்ததாக வதந்தியொன்றும் நிலவியது. எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை.

மேலும் படிக்க ...

ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (2) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
09 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2

நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களில் ஒன்று ஏய்டன். மற்றது நீலமேகம். மற்றது காத்தவராயன் எனும் தலித் இளைஞன். இடையே ஏய்டனின் தோழி – ஓர் ஆங்கிலோ இந்திய விலைமாது. ஒரு மதகுரு. இன்னும் ஓர் ஆங்கிலேய காலனித்துவ அதிகாரி இப்படியாய் சில பாத்திரங்கள் வந்து போகின்றன, கதையின் தேவை கருதி. இருந்தும், மேலே கூறப்பட்ட மூன்று பாத்திரங்கள் முக்கியமானவை. காரணம் அவை சமூகத்தில் இயங்கும் அரசியலை ஏந்திபிடிக்க வசதி செய்து தருவன.

நாவலில் நீலமேகம் அறிமுகமாகும் காட்சி குறிக்கத்தக்கது:

“சவுக்கடியின் ஒலியும் குளறும் குரல்களும் கேட்கும்… குதிரையில் சவாரி செய்யும் ஏய்டன் திடுக்கிடுகின்றான்…”

“சட்டென்று ஒரு பெண்குரல் வீறிட்டது… மீண்டும் அடியின் ஓசை…” (பக்கம் - 45)

“கீழே இருவர் விழுந்து கிடக்கின்றனர்…நாலைந்து தாவல்களில் அருகே சென்றுவிட்டான் ஏய்டன்… அவர்களில் ஒருவர் பெண்ணென்பதை அப்போதுதான் கவனித்தான்” (பக்கம்-46)

ஏய்டன் விசாரிக்கும் போது நீலமேகம் கூறுகின்றான்:

“இவர்கள் ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்கள்”

“வேலை செய்யவில்லை…ஒளிந்திருக்கின்றார்கள்”

“கீழே கிடந்தவன் உரத்த குரலில் ஏதோ கத்தியபடியே ஏய்டன் காலை பிடிக்க வந்தான். சாட்டைக்காரன் (நீலமேகம்) சாட்டையைச் சுழற்றி அவனை ஓங்கி அடிக்க சாட்டைநாக்கு அவன் கரிய முதுகை நக்கிச் சுழன்றது. அவன் அலறியபடி மண்ணிலேயே விழுந்துவிட்டான். அந்தப் பெண் அலறியபடி அவனை பிடித்தாள்”. (பக்கம்-46)

இப்போது, ஜெயமோகனின் பார்வையில் ஏய்டனின் சமூக நீதிக்கான மனம் விழித்துக் கொள்கின்றது.

“வேண்டாம் எனத் தடுத்து கூறுவான்: நீலமேகம், நீ இவர்களை தண்டிக்க அதிகாரம் உள்ளவன் இல்லை..” (பக்கம் - 47)

“நீல மேகம் பயத்துடன் கைக் கூப்பினான். கூப்பிய கை நடுவே சாட்டை இருந்தது”

மேலும் படிக்க ...

“இலக்கியவெளி” நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 15: “குந்தவையின் சிறுகதைகள்”

விவரங்கள்
- அகில் -
நிகழ்வுகள்
09 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் “மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கம் -2”

விவரங்கள்
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
09 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்!  - தகவல்: ரிஷான் -

விவரங்கள்
- தகவல்: ரிஷான் -
நிகழ்வுகள்
09 டிசம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 03.12.2021 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்புக்கு இரண்டு சாகித்ய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலுக்கான எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் 'அறிமுகம்'.
  2. மறைந்து போன ஈழத் தமிழ் இலக்கிய விடிவெள்ளி! – வீ. பா. கணேசன் -
  3. பேராசிரியர் கைலாசபதியின் நினைவாக .....
  4. ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (1) - ஜோதிகுமார் -
  5. புனைகதை அறிமுகம்: சத்தியம் ! - நடேசன் -
  6. அஞ்சலி: மூத்த முற்போக்குப் படைப்பாளி செ. கணேசலிங்கன் சென்னையில் மறைந்தார்! - முருகபூபதி -
  7. (பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள்! (5): விடுதலை நகர் - ஜோதிகுமார் -
  8. கனடா மகாஜனா பழைய மாணவர்களின் பாராட்டுவிழாவும், இரவு விருந்துபசாரமும்!  - குரு அரவிந்தன் -
  9. பூமிக்கு அருகே வரும் நிரெஸ் விண்கல்லால் பாதிப்பு ஏற்படுமா? - குரு அரவிந்தன் -
  10. ஓவியர் (அமரர்) கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை வாழ்வும் பணிகளும் - காணொளி மெய்நிகரில் வெளியீடு! - முருகபூபதி -
  11. நம்மவர் பேசுகிறார்!
  12. கத்யானா அமரசிங்ஹவின் ‘தரணி’ (நாவல்) பற்றி.. ‘மொழிபெயர்ப்பானது கருத்தைப்போலவே படைப்பாளியின் அடையாளத்தையும் தவற விட்டுவிடக் கூடாது’   - தேவகாந்தன் -
  13. மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல்! - த. நரேஸ் நியூட்டன் -
  14. ‘ஹார்வார்ட்' பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையும், மொழி வளர்ப்பும்’ தமிழ் வளர்ச்சிக்கான இன்னொரு வடிவத்திலான முயற்சியே! - த. நரேஸ் நியூட்டன் -
பக்கம் 87 / 107
  • முதல்
  • முந்தைய
  • 82
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • அடுத்த
  • கடைசி