இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கியமான சஞ்சிகை இது. யாழ்ப்பாணத்தில் 'மறுமலர்ச்சி' சஞ்சிகை அச்சில் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான சஞ்சிகை. அச்சஞ்சிகைதான் எழுத்தாளர்கள் கே.கணேஷ், கே.ராமநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இணைந்து வெளியிட்ட 'பாரதி' சஞ்சிகை. ' 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' நூலை எழுதிய முனைவர்கள் சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் ஆகியோர் இச்சஞ்சிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் அவர்களது ஆய்வு நூலில் இச்சஞ்சிகை பற்றி 'பாரதியில் கட்டுரைகள் வெளிவந்தன' என்று ஒரு வரி மட்டுமே காணப்படுகின்றது. இவர்கள் பாரதியை மறைத்ததற்கு முக்கிய காரணங்களிலொன்றாக நான் கருதுவது இலங்கைத் தமிழிலக்கியத்தில் முற்போக்குத் தமிழிலக்கியத்துக்கு பாரதியாற்றிய பங்களிப்புத்தான். இவர்கள் யாருமே இதுவரையில் இலங்கைத் முற்போக்குத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கிய முன்னோடிகள் பற்றி இதுவரையில் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் எவற்றையும் நானறிய எழுதவில்லை. அந்த அடிப்படையில் இவர்கள் பாரதி சஞ்சிகையின் முக்கியத்துவத்தையும் புறக்கணித்திருக்கலாம் அல்லது மறைத்திருக்கலாம் என்றும் கருதவேண்டியுள்ளது.
இவர்கள் பாரதி சஞ்சிகையின் முக்கியத்துவத்தை மறைத்தாலும் பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் , எழுத்தாளர் நந்தினி சேவியர் மற்றும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா போன்றோர் மறக்கவில்லை. தெளிவத்தை ஜோசப் தினகரனில் 'ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி' என்னும் தலைப்பில் முக்கியமானதோர் ஆய்வுக் கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரை தினகரனில் செப்டம்பர் 1984 - நவம்பர் 1984 வரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையினை எழுத்தாளர் டொமினிக் ஜீவா தொகுத்து மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளியிட்ட "நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்' கட்டுரைகளின் தொகுப்பு நூலில் உள்ளடக்கியுள்ளார்.
இந்நீண்ட கட்டுரையின் ஆரம்பத்தில் பாரதி பற்றிய பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்றினைத் தெளிவத்தை ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார்:
" 'தமிழிலக்கிய வளர்ச்சியும்' என்பது பற்றிய ஒரு வரலாற்று நோக்குக் குறிப்பெழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்." 1946-ல் இச்சங்கம் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தோர் அக்காலத்தில் , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக விருந்த கே.ராமநாதன், கே.கணேஷ் ஆகியோரே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உந்துதலையும் ஆற்றுப் படுத்தலையும் அடிக்கல்லாகக் கொண்டு இந்தியாவில் கே.ஏ.அப்பாஸ் முதலியோரின் தலைமையில் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்று ராமநாதனும் கணேஷம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தனர். (புதுமை இலக்கியம் தேசிய ஒருமைப் பாட்டு மாநாட்டு மலர் - 1975) இதே 1946-ல், இதே கே.கணேஷம், ராமநாதனும் கூட்டாசிரியராக இணைந்து ‘பாரதி' சஞ்சிகையை வெளியிட்டனர்."
இந்நிலையில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் "ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி'" என்று சரியாகவே தனது கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கின்றார். தை 1946 தொடக்கம் ஆகஸ்ட் 1946 வரை மொத்தம் ஐந்து இதழ்கள் (இவற்றில் மூன்று, நான்காவது இதழ்கள் ஒன்றாக பங்குனி - சித்திரை 1946 வெளியாகியது) வெளியாகியுள்ளன. ஐந்தாவது இதழ் ஆகஸ்ட் 1946இல் வெளியானது. பின்னர் இறுதி இதழான ஆறாவது இதழ் மார்கழி -தை 1948இல் வெளியானது.
எழுத்தாளர் நந்தினி சேவியர் தமிழ் இனி 2000 கருத்தரங்கில் சமர்ப்பித்த 'கடந்த நூற்றாண்டின் ஈழத்து மார்க்சிய இலக்கியம்' என்னும் ஆய்வுக்கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
"1946 இல் கே. கணேஸ், கே. ராமநாதன் போன்றவர்களால் வெளியிடப்பெற்ற "பாரதி" எனும் சஞ்சிகையே தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகை என கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர்கள் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாகும். கே. ராமநாதன் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் பத்திரிகையான `தேசாபிமானி'யின் ஆசிரியராகவும் விளங்கினார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தை 1947 இல் உருவாக்கியவர்களும் இவர்களே. `பாரதி' சஞ்சிகையில் அ.ந. கந்தசாமி, அ.செ. முருகானந்தன், கே. கணேஸ், மஹாகவி போன்றவர்கள் எழுதியுள்ளனர்"
பாரதி இதழ்களில் ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடியான எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் ஐந்து படைப்புகள் வெளியாகின. அவற்றின் விபரங்கள் வருமாறு:
சிறுகதைகள்:
1. வழிகாட்டி - தை 1946 பாரதி
2. உதவி வந்தது. - மாசி 1946 பாரதி
"சீனாவின் ஒரு கோடியில் லெயாங் நகரில் நடந்த உண்மைச் சம்பவம் பற்றியது 'உதவி வந்தது'. சீன உள்நாட்டுப் போரில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தைக் கதையாகப் பின்னியுள்ளார் அ.ந.கந்தசாமி" என்று கட்டுரையில் தெளிவத்தை ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.
கவிதைகள் (கவீந்திரன்) என்னும் பெயரில் எழுதியவை:
1. தேயிலைத் தோட்டத்திலே. பாரதி பங்குனி - சித்திரை 1946
"தேயிலைத்தோட்டத்திலே துயரம் தோய வாழும் தொழிலாளத்தாயின் மனதைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை 'தேயிலைத் தோட்டத்திலே'. அ.ந.கந்தசாமி 'கவீந்திரன்' என்னும் பெயரில் இந்தக் கவிதையை எழுதியுள்ளார். லெனினுடன் பழகிய வில்லியம் கலச்சர் எழுதிய 'ஜனநாயகம் என்றால் என்ன?' என்னும் நூலை கவீந்திரன் மொழிபெயர்ப்பில் தமிழில் பாரதி பிரசுரம் வெளியிடப் போவதாக பின் அட்டையில் ஓர் அறிவிப்பு இருக்கிறது. பாரதி பிரசுரம் என்று நூல்கள் வெளியிடும் எண்ணமும் பாரதிக்கு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது." - தெளிவத்தை ஜோசப் ( "ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி'" கட்டுரையில்.)
2. முன்னேற்றச் சேனை - கவிதை - கவீந்திரன் (அ.ந.கந்தசாமி) - ஆகஸ்ட் 1946
"இந்தக் கவிதையின் அழைப்பும் நாம் லேலே கண்ட எழுத்தாளர்களுக்கான பிந்திய அழைப்பும் ஏறத்தாள ஒத்திருக்கின்றன. ஆகவே முற்போக்கு இலக்கியப் பரம்பரைகட்கு அப்போதே பாரதி வித்திட்டிருக்கிறது என்பது புலனாகின்றது. முன்னேற்றச்
சேனையிலே சேர வாருங்கள் என்ற கவிதை மூலம் அழைப்பு விடுத்தவர் அ.ந,.கந்தசாமியேதான். " - தெளிவத்தை ஜோசப் ("ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி'" கட்டுரையில்.)
திரைப்பட விமர்சனம்: ஜூன் 1946 பாரதி ஐந்தாவது இதழில்:
" பாரதியுடன் தன்னை இறுகப் பிணைத்துக் கொண்ட அ.ந.கந்தசாமி இந்த இதழில் ஒரு சினிமா விமர்சனம் எழுதியுள்ளார். ‘பெட்டில் ஷிப் பொடம்கின் (பொடம்கின் என்னும் சண்டைக் கப்பல்) என்னும் புரட்சிப் படம் பற்றியது இவ்விமரிசனம். '1925-ல் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கொந்தளிக்கும் கடலில், அநீதியான அதிகாரிகளுக்கெதிராகக் கொதித்தெழும் மாலுமிகளின் புரட்சியைக் காட்டுவது. புழுநெளியும் உணவை உண்ணமாட்டோம். மனிதர் உண்ணக் கூடிய உணவு வேண்டும் என்னும் மாலுமிகளின் ஏகோபித்த போராட்டம், உப்புத் தண்ணீரில் அலசிவிட்டு உண்ணுங்கள்’ என்னும் அதிகாரிகளின் அசட்டை, ஒன்றுபட்ட மாலுமிகள் ஆயுதங்களை அதிகாரிகளுக்கெதிராக உயர்த்தினார்கள். மாலுமிகளின் சொந்தக் கொடி பாய்மர உச்சியில்
ஏறுகிறது. இது படத்தின் ஆரம்பம். ஒடோசோவில் பொது மக்கள் புரட்சிக்கார மாலுமிகளை ஆதரித்து, துறைமுகத்துக்கு வந்து உணவும் உற்சாகமும் அளிக்கிறார்கள். மிலேச்சர் ஜார் மன்னனின் மிருகத்தனம் பட்டாள ரூபத்தில் வந்து மக்கள் மேல்
பாய்கிறது. ஓடெசா துறைமுகத்தின் படி எல்லாம் மக்களின் பிணம். மாலுமிகளைக் கொல்ல கடற்படை மாலுமிகளும் அதிகாரிகளின் அட்டகாசமான சவுக்கடிகளுக்கு ஆளாகிறவர்கள் தானே. 'தோழா சுடாதே சுடுவாயோ?” என்கின்றனர் புரட்சிக்கார
மாலுமிகள். முதலில் திகைத்தாலும் பிறகு ‘தம்மைப் போன்ற அந்த மாலுமிகளுக்காகத் தோழமைக் கரத்தை நீட்டுகின்றனர். கடற்படையின் மாலுமிகள். இதுதான் படக்கதை. உணர்ச்சியைத் தூண்டும் கலைரசம் ததும்பும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மனதை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன. புழு நெழியும் உணவைப் பூதக்கண்ணாடி காட்டும் கோலம், ஜன சமுத்திரத்தை பட்டாளத்தார் சுட்டுத் தள்ளும் பயங்கரம், துறைமுகப்படியில் உருண்டு வரும் தள்ளுவண்டிச் சிறுமியின் பரிதாபம் என்பன உள்ளத்தில் நீங்கா இடம் பெறுகின்றன. இந்தப் படத்துக்கு எத்தனையோ நாடுகளில் தடை விதிக்கப் பட்டிருந்தும் கொழும்பில் ‘பிலிம் கிளாப் மூலம் ஆர்ட்கலரியில் காட்டப்பட்டது. இது சங்கீதம் இல்லாத மெளனப் படம்தான். தகுந்த மண்டபம் திரைவசதி இல்லாத இடத்தில்தான் காட்டப் பட்டது. இருந்தும், மந்திரத்தால் சுட்டுண்டது போல் மனதை ஆகர்ஷிக்கும் சக்தி கொண்ட கலைப் படைப்பு இது. மலர்ந்து வரும் புதுயுகத்தில் சிரஞ்சீவியாய் விளங்கப் போகும் சினிமாக் கலையின் வாடாமல்லிகை இத் திரைப்படம்' என்று எழுதுகிறார் அ.ந.கந்தசாமி." - தெளிவத்தை ஜோசப் ("ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி'" கட்டுரையில்)
மேற்படி பாரதி சஞ்சிகையில் வெளியான அ.ந.கந்தசாமியின் படைப்புகள் அனைத்தும் 'பதிவுகள்' இணைய இதழிலும் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. பாரதி சஞ்சிகையின் பிரதிகளை யாராவது வைத்திருப்பின் அவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முனைவர்கள் சிலர் மறைத்தாலும், இருட்டடிப்பு செய்தாலும் முழுநிலவை மேகங்களால் ஒருபோதுமே மறைத்துவிட முடியாது என்பதற்கொப்ப இலங்கை முற்போக்குத்தமிழ் இலக்கியம் பற்றியும், அதன் முன்னோடிகள் பற்றியும் எழுத்தாளர்களான தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா மற்றும் டொமினிக் ஜீவா போன்றோர் அவ்வப்போது பதிவு செய்துகொண்டுதான் வருகின்றார்கள். அதற்காக தமிழ் இலக்கிய உலகு அவர்களைப்போன்றவர்களுக்கு எப்பொழுதும் நன்றியுடனிருக்கும்.
மேற்படி நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்' தொகுப்பு நூலை வாசிக்க: http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems