எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் 'இன்ஸான்' பத்திரிகை பற்றிப்பின்வருமாறு பதிவு செய்திருந்தார்:
"1965-1970 காலப் பகுதியில் ' இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. இதனூடாக வெளிப்பட்ட சிறுகதையாளர்களில குறிப்பிடத்தக்க ஒருவர் எம்.பி.எம. நிஸ்வான். ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் ஒரு பத்தோ இருபதோ இன்ஸான் கதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சி கைகூடவில்லை.இன்ஸானோடு சம்பந்தப்பட்ட ஒருசிலரே இன்று எம்மத்தியில் உள்ளனர்.அவர்கள் சந்திக்கும்போது பேசிக் கலைவதைத்தவிர வேறொன்றும் ஆகவில்லை. முஸ்லிம்களின் இலக்கியம் என்பது அனாதை இலக்கியமே என்பதற்கு இதைத்தவிர வேறென்ன அத்தாட்சி வேண்டும்? பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வானின் இரு நூல்களின் வெளியீடு கடந்த 07.04.2018ல் உம்முல் மலீஹா மண்டபத்தில் நடைபெற்றபோது கருத்துரை வழங்குகையில் மேற்படி விடயங்களை எடுத்துக் கூறினேன்."
எழுத்தாளர் அந்தனி ஜீவா 'தினகரன்' (இலங்கை) பத்திரிகையில் எழுத்தாளர்ர் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:
" அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார். "
கலாபூஷணம் மாத்தளை பெ.வடிவேலன் செப்டம்பர் 30, 2012 தினகரன் (இலங்கை) பத்திரிகையில் எழுதிய எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் பற்றிய 'நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே...' கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:
"1965-1968 காலப்பகுதியில் இன்ஸான்” எழுப்பிய அலை ஓசையை மறக்க முடியாது. முஸ்லிம்களின் வரலாறு கலை இலக்கியம் சமூகவியல் போன்றவற்றில் இன்ஸான் ஆற்றிய பணி கால ஓட்டத்தில் கரைந்துவிட முடியாத ஒன்று “இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்கான சோனகத் தமிழ் அழகை வீச்சாகக்கொண்டு அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய பத்திரிகை அது"
ஏ. ஏ. லத்தீப் அவர்களே 'இன்ஸான்' பத்திரிகையையும் நடாத்தியதை மேற்படி கட்டுரையிலுள்ள "நானும் இலக்கிய ஆர்வலர் ஜனாப் நkர் ரியாலும் இன்ஸான் லத்தீஃபை பற்றி பலமணிநேரம் கலந்துரையாடினோம்" என்னும் கூற்று வெளிப்படுத்துக்கின்றது. மேற்படி கட்டுரை எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் பற்றிப் பின்வருமாறு கூறுவது அவரது கலை, இலக்கியப்பங்களிப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது:
" பல புனைப்பெயர்களில் லத்தீஃப் எழுதுவதை ஒரு கலையாக கொண்டிருந்தார். ஏ.ஏ.சுல்தால், அப்துல்லா, காக்கா என்பன சிலவாகும். மூதறிஞர் வ.மி சம்சுதீனை கெளரவ ஆசிரியராகக் கொண்டு தாரகையில் இவர் எழுதிய அத்துல்லா காக்காவின் உளறு பலாய் நெயினா முஹம்மதின் நகைச்சுவை பேனாச் சித்திரங்களான கிச்சடிப்பாளை என்பன அந்த சஞ்சிகை பரபரப்புடன் பேசப்பட்டு விற்பனையாவற்கு பெரும் காலாயின. எ.எ.லத்தீஃப் ஒரு சிறுகதை எழுத்தாளர் இவர் படைத்த சிறுகதைகள். மிகச்சிலவே சிறுகதை விடயத்தில் இவர் மெளனியைப் போல் தனது கவிதைக்காக ஜப்பானில் சர்வதேச விருதும் பரிசும் பெற்ற அமரர் கண்டி தலாத்ஓயா கே. களோசின் பாரதி இதழிலும் வீரகேசரியிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. நீதியே நீ கேள்.... என்ற நாவலைப் படைத்தவர் சுபையீர் இளங்கிரன் 1960களில் இளங்கீரன் வெளியிட்ட மரகதம் சஞ்சிகையில் லத்தீஃப்பின் மையத்து சிறுகதை வெளிவந்தது லத்தீஃப் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் படைத்தார். இளங்கீரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஜனவேகம் பத்திரிகையில் விக்கி எனது நாங்கள் தொழிலாளர் வர்க்கம் என்ற சிறுகதையினை பிரசுரிக்க உதவியுள்ளார். லத்தீஃப்பின் மையத்து சிறுகதையில் அவருடைய இறுக்கமான நடையினையும் சம்பவத்தையும் அப்படியே எழுத்தின் ஆற்றலால் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்திவிடும் வல்லமையினையும் பின்வரும் பந்திகள் துல்லியமாக நமக்கு காட்டுகின்றன. “காற்றோட்டமற்ற அந்த ஓலைக் குடிசையைக் கெளவிக் கொண்டிருந்த துர்நாற்றத்தை பெயர்த்தெறிய ஊதுபத்தி, சாம்பிராணி , அத்தர் முதலிய வாசனைத் திரவியங்களில் கூட்டு முன்னணி நிறுவி நடத்திய போட்டி யும் நிசப்தமும் பிரேதத்தின் துர்நாற்றத்துக்கு ஒரு அமானுஷ்ய தன்மையைப் பாய்ச்சின. காதற்ற ஊசியும் உடன் செல்லாத கடை வழி யாத்திரைக்கு மஜீத் நானாவுடைய மையத்து கபன் உடுத்தி சந்தக்கு ஏறி தயாராவதற்கு முன்னரே மையத்தைப் பார்க்க வந்தவர்கள் துர்நாற்றத்தால் சாடப்பட்டு விலகி லேஞ்சிகளால் மூக்கை மூடிய வண்ணம் வெளியே சென்று வம்பளந்து கொண்டிருந்தார்கள். பன்னாமத்துக் கவிராயர் லத்தீஃப்பின் ஆங்கிலக்கவிதைகளைப் பற்றி குறிப்பிடும் போது 1983க்குப் பின் லத்தீஃப் எழுதிய கவிதைகள் பெரும்பாலும் இனப்பாகுபாடு மையாலும் பூசல்களாலும் இந்நாட்டை சாபக்கேடாகப்பிடித்த மானுட அழிவுகளின் சோகத்தைச் சொல்வன என்று குறிப்பிடு கின்றார். லத்தீப் மானுடநேய மிக்க படைப்பாளி, சண்ட மாருதம் புரிந்த சமூகப் போராளி, பத்திரிகை யாளன், முற்போக்கு சிந்தனை யாளன், சிறுகதை எழுத்தா ளன், கவிஞன் மொழிபெயர்ப்பாளன், மறு கைக்கு தெரியாமல் ஏழைக்கு உதவிபுரிந்த கல்விமான். புகழ்பூத்த அரசியல்வாதிகளான எ.சி. எஸ். ஹமீட் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்டி சில்வா, பீட்டர் கென மன் எஸ்.எ. விக்கிரமசிங்க ஆகியோருடன் நெருங்கிய தொடர்பும், தோழமையும் கொண்டிருந்தவர்."

இக்கூற்றுகள் மூலம் "இன்ஸான்" பத்திரிகை , எழுத்தாளர் எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பு தெளிவாகத் தெரிகின்றது.
எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்களிடமும் சிதைந்த நிலையில் 'இன்ஸான்' பத்திரிகைப்பிரதிகள் சில உள்ளதாக அறிவித்திருக்கின்றார். அவை முற்றாகச் சிதைந்து போகும் முன்னர் அலைபேசி மூலம் அவற்றைப்படமெடுத்துப் பதிவு செய்து வைப்பதும் அவசியமானது. அதன் மூலம் அவற்றைப் பாதுகாக்கலாம். எழுத்தாளர் திக்குவல்லை கமால் முகநூலில் பதிவு செய்த இன்ஸான் பத்திரிகையின் பக்கமொன்றினையே இங்கு காண்கின்றீர்கள்.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Wednesday, 10 April 2019 21:51
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems