தொடக்க முதலே விக்னேஸ்வரன் தனது கோரிக்கைகளில் முனைப்பாகவும் தெளிவாகவும் இருந்தார்

மகிந்தாவும் அவரது அமைச்சர்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்கும் தன்னாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவரைக் குறைகூறுகிறார்கள். அவர் அப்படிச் செய்வதையிட்டு யார் முறையிடுகிறார்கள்? அவர் எதைச் செய்வேன் என்று கூறினாரோ அதையே அவர் செய்கிறார். அவர் என்ன சொன்னார்? முதலாவதாக 13 ஆவது திருத்த சட்டத்தில் கணிசமான மாற்றங்களைச் செய்யாவிட்டால் அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றார். அவர் 13 ஏ அல்லது 13 ஏ + இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தீர்வில் எல்எல்ஆர்சி அறிக்கையில் கூறிய பரிந்துரைகள் அல்லது பேராசிரியர் திஸ்சா விதாரண குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டவை உள்ளடக்கப் படவேண்டும் என்றார். இரண்டாவதாக அய்க்கிய இலங்கைக்குள் (தமிழர்களுக்கு) சுயநிருணய உரிமை வேண்டும் என்றார். அது கொடுக்கப் படாவிட்டால் உள்நாட்டிலும் பன்னாட்டு அரங்குகளிலும் அயல்நாட்டு உதவியோடு அல்லது உதவி இல்லாமல் முழுமையான சுயநிருணய உரிமைக்குப் போராடுவேன் என்றார். மூன்றாவதாக பிரபாகரன் ஒரு தமிழ் மாவீரன் என தமிழ்மக்கள் கருதுகிறார்கள் என்றார். முடிவாக மகிந்தா நடத்திய போர் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்றார்.


Ottawa, February 6, 2014 – The Honourable Jason Kenney, Minister for Multiculturalism, issued the following statement after the official launch event for Black History Month at the Canadian War Museum:


Nelson Mandela
[விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் நாள் உரையிது. நவம்பர் 2008 மாவீரர் நாளையொட்டி ஆற்றிய உரையிது. அந்த வகையில் இவ்வுரைக்கு முக்கியத்துவமுண்டு. ஒரு பதிவுக்காக அவ்வுரை மீள்பிரசுரமாகின்றது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முன்னர் பிரிந்திருந்த பல தமிழர் விடுதலை அமைப்புகள் இன்று அரசியல்ரீதியாக ஒன்றுபட்டிருக்கின்றன. அதுபோல் இதுவரை காலமும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடிய, மடிந்த போராளிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு வகையான தாக்குதல்களாலும் மடிந்த மக்கள் ,உள்/புற முரண்பாடுகளுட்பட , அனைவருமே நினைவு கூரப்பட வேண்டும். இதுவரைகாலத் தமிழர்களின் போராட்ட வரலாறு முறையாக, எந்தவிதப் பாரபட்சமுமற்று ஆய்வு செய்யப்பட வேண்டும். அதிலிருந்து பாடங்களைப் படிக்க வேண்டும். மாற்றுக் கருத்துகள் காரணமாகப் படுகொலைசெய்யப்பட்ட அனைவரும் இந்த நினைவு கூரலில் உள்ளடக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒற்றுமைக்கு இது மிகவும் உதவியாகவிருக்கும். தொடர்ந்தும் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் செய்யும் போக்கு கைவிடப்பட வேண்டும். உண்மைகளின் அடிப்படையில் (உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல) அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும். -
கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம். நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









