2015இல் பேராசிரியர் John Mearsheimer நிகழ்த்திய 'உக்ரைன் ஏன் மேற்குலகத்தின் தவறு? ' என்னும் தலைப்பிலான உரையிது. எவ்வளவு தீர்க்கதரிசனம் மிக்க உரை என்பதை இன்றுள்ள ருஷ்யா-உக்ரைன் பிரச்சினை எடுத்துக் காட்டுகின்றது., யானை பார்த்த குருடர்களாகக் கருத்துகளை எடுத்துரைக்கும் பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்களுக்கிடையில் உண்மையாக யானையை முழுமையாகக் கண்டு கொண்ட மனிதராகப் பேராசிரியரைக் காண்கின்றேன். ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய உரையிது.
 
இன்று உக்ரைனில் ஏற்பட்டுள்ள  நிலைக்கு முழுமுதற்  காரணம் மேற்குலகத்தின் குறிப்பாக அமெரிக்காவின் உக்ரைன் மீதான அணுகுமுறைதான். இவ்வுரையில் அமெரிக்காவின் இவ்விதமான அணுகுமுறை எதனைக் கொண்டு வரும் என்று எச்சரித்தாரோ அது இன்று நடைபெறுவதைக் கண் முன்னால் காண முடிகின்றது. இவ்வுரையில் பேராசிரியர் சுட்டிக்காட்டும் இன்னுமொரு விடயமும் என் கருத்தைக் கவர்ந்தது. அது: மேற்குலகம் எவ்வளவுதான் பொருளாதாரத்தடைகளை விதித்தாலும் ரஷ்யர்கள் அவற்றைப் பொருட்படுத்தமாட்டார்கள். ஏனென்றால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையான அவர்களது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டுள்ளது. பாதுகாப்பா அல்லது பொருளாதாரமா என்று பார்க்கையில் பாதுகாப்பே பிரதானமாகவிருக்கும். உண்மையான கூற்று. அதனால்தான்  இன்று பெரும்பாலானா ருஷ்யர்கள் விளாடிமீர் பூடினின் பின்னால் அணி திரண்டு நிற்கின்றார்கள்.

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R