தமிழகச் சட்ட மன்றத்தேர்தலில் திமுக கூட்டணி இதுவரை வெளியான முடிவுகளின்படி 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியிருக்கின்றார். இத்தேர்தலின் மூலம் ஸ்டாலினின் நீண்டநாட் கனவு நனவாகியிருக்கின்றது. தேர்தலில் அ.தி.மு.க தோற்றாலும் ,வலிமையான எதிர்கட்சியாக உருவாகியிருக்கின்றது. அதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தனது தலைமையைத் தப்ப வைத்துள்ளார்.

தற்போதுள்ள சூழலில் திமுகவின் வெற்றி முக்கியமானது. சூழலின் தேவையும் கூட. ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் தலைமையில் அதிமுக தமிழகத்தையே மோடியின் தலையாட்டும் பொம்மையாக மாற்றி வைத்திருந்தது. தமிழகத்தில் மதவாதக் கட்சிகளை மீண்டும் தலையெடுக்க முண்டுகொடுத்துக்கொண்டிருந்தது. இந்நிலையை மாற்றுவதற்கு ஸ்டாலினின் வெற்றி அவசியமாகவிருந்தது. தமிழகத்தின் சுயமரியாதைக்கு இவ்வெற்றி தேவையாகவிருந்தது. அது கிடைத்திருக்கின்றது. வாழ்த்துகள்.

அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பங்களிப்பாக நான் கருதுவது தமிழகத்தில் மதவாத மூட நம்பிக்கைகளுக்கெதிராக, வர்ணக் கோட்பாடுகளுக்கெதிராக, பகுத்தறிவுக்காக அது ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியைத்தான்.

நாற்பதுகளிலிருந்து கலையின் பல்வேறு வடிவங்களினூடும் (சினிமா, நாடகம், இலக்கியம் என)  பகுத்தறிவுக்காக , சமத்துவத்துகாக, சமநீதிக்காக, மதவாதங்களுக்கெதிராக அது குரல் கொடுத்து வந்தது. அதன் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வை இதுவரை மத்திய அரசியல் கட்சிகளால் அழிக்கவே முடியவில்லை. இதில் தமிழக மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள்.

ஸ்டாலினின் வெற்றி அவரது அரசியல் பாதையில் நீண்ட காலப்பங்களிப்பைக் கொண்டது. நிதானமானது. படிப்படியாக , எவ்வித அவசரமுமற்று, நிதானமாக அடியெடுத்து வைத்து இன்று இந்த வெற்றியைப்பெற்றிருக்கின்றார். இனி நீண்ட காலத்துக்குத் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே நிலைத்து நிற்கப்போகின்றது.

தற்போதுள்ள கொரோனாத் தொற்றுச் சூழலில், அரசியற் சூழலில் தமிழக்துக்குத் தேவை மாற்றம். உறுதியான, சுயமரியாதைமிக்க தமிழ்நாடு இந்திய அரசியலுக்குத் தேவை.  அதனை மக்கள் நன்குணர்ந்து வாக்களித்துள்ளார்கள்.  வாழ்த்துகள்.

தமிழகத் தேர்தல் முடிவுகள்:  https://www.hindutamil.in/ec-results-2021/


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R