- சும்மா,நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய .நீளத் தொடர். -  கடல்புத்திரன் -


அத்தியாயம் ஒன்று!

குறுநாவல்:  சலோ,சலோ! (1)

அராலிக்கூடாகச் செல்கிற பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக வேலியில்லாமல் திறந்த 'ட'னா வடிவில் முருகமூர்த்திக் கோவில் வளவு, மண்பாதையுடன் செல்கிறது.. வீதியை விட்டு இறங்கியவுடன் சிறிய கோவில்,அதில் யார் இருக்கிறார்கள்?பிள்ளையாரா?துர்க்கை அம்மனா?வைரவரா? யாரோ ஒருவர் செகிருட்டி போல இருக்கிறார்.பனை மரங்களுடன் எதிர்ரா போல் இருக்கிற அமெரிக்கன் மிசன்  தமிழ்க்கலவன் பாடசாலைக் காணி முருகமூர்த்தி வளவை 'ட‌'னாவாக்கியிருக்கிறது. அந்த வளவையும் சேர்த்து விட்டால் அது வளவு,சதுர வளவு தான்.  ஒரு புண்ணியவான், தன் வளவை கோவிலுக்கும் கொடுத்து,முன்னால் சிறிய துண்டை பள்ளிக்கூடத்திற்கும் கொடுத்திருக்கிற வேண்டும். அந்த காலத்தில், யாரோ ஒருவர்? மதசார்ப்பற்ற  ,உயர்ந்த மனிதராக இருந்திருக்கிறார்! அவர் யார்?  தேடினால் அறிய முடியும். அந்த கிராமம் சைக்கிளால் அளந்து விடக் கூடிய தூரம் தான். அராலியும் எல்லா கிராமங்களைப் போல‌ மறைவாக முற்போக்குத் தன்மையையும் கொண்டு தானிருக்கிறது.இவர்களைப் போல,பள்ளிக்கூடத்தில் ஏற்படுற‌ நட்பு தான் அதை வளர்த்துக் கொண்டு வருகிறதோ, என்னவோ பிழை இருக்கிறது?என்கிற மாதிரி கிடக்கிற குழப்பங்கள் எல்லாம் எமக்கென்று ஒரு சுயராட்சியம் ஏற்பட்டவுடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுமோ?

பல பிரச்சனைகளிற்கு பெரும் பெரும் பாறைகளை உருட்டி விட்டு தடை படுத்திக் கொண்டிருக்கிறது போல இருக்கிற‌ பூதங்கள்,ஒரு நாள், இல்லாவிட்டால் ஒரு நாள் தோற்றுப் பின் வாங்கவே போகின்றன. ஏனெனில் ‘தர்மம்’ நம்மவர்களின்(தமிழர்களின்) பக்கமே கிடக்கிறது. இப்படி, நகுலனின் சிந்தனைகள் ஓடுகின்றன‌. ஒன்றை யோசிக்கத் தொடங்கினால்,அதிலே மட்டும் நில்லாமல் மனம் போன போக்கில் எங்கையோ போய் விடுகிறான். 'இப்படி இருக்கிறதாலேதான் கிராமத்தின் வரலாறும் சரியாக‌  தெரியாதவனாக கிடக்கிறேனே !'  அவன்,  தன்னையே சலித்துக் கொண்டான் . .

பிழைகள், அவனிடம் மட்டுமல்ல‌ ,வெளியிலேயும், சமூகத்திலும் கிடக்கின்றன‌. தேவையற்ற லண்டனின் தேம்ஸ்  நதியைப்பற்றியும்,அமெரிக்காவில் ஆதிக் குடிகள் கொடுமையாகக் கொல்லப்பட்டதைப் பற்றியும் தான் தெரிகிறது படிக்கிறது எல்லாம் ....சுய கல்வி முறை துப்பரவாக  கை விடப்\பட்டிருக்கிறது. தாவரங்களைப் பற்றி படித்தாலும் சரி, விலங்குகள் பற்றி படித்தாலும் சரி, இங்குள்ள  எல்லாற்கும்  அழகான‌  பழந்தமிழ்ப்  பெயர்களும் இருக்கின்றன. வேறு மொழிப் பெயர்களாகப் படித்து, அதை நினைவில் வைத்திருப்பதிலேயே பாதிப்பேர் தவறி விடுகிறார்கள் என்று படுகிறது. இப்படியே எல்லாத்தையும் அந்நிய‌ம் புக‌ விட்டு... அந்நிய‌ப்படுத்தி யே விட்டிருக்கிறோம்.

அரசகாலத்தில் வெளிநாட்டு மருத்துவம்  இங்கிருக்கவில்லை. ஜெர்மனி,சீனாவில்...எல்லாம் இந்திய ஆயுள்வேதத்தின் தொடர்ச்சி இருப்பதாக சொல்லப்படுகிறது. சுதந்திரமடைந்த நாம் ஏன் நம் மொழியிலேயே  படிக்கக் கூடாது. இவை தானே 'ஏ.லெவலி'லே  தாவரவியல் ,விலங்கியல் ‌ பாடங்களையே  சலிப்பேற்றுகின்றன. மற்றவர் படுக்கையறையில் நுழைய அதிகாரம் இல்லாத மாதிரி, மற்றவர் உரிமைகளிலும் நுழைய எவருக்குமே உரிமையும்  இல்லை. முட்டாள் தனமாய், சிறிலங்கா அரசு எல்லாத்திலும் மூக்கை நுழைத்து, நுழைத்து அமைதியை கெடுத்துக் கொண்டே இருக்கிறது.

சுதந்திரத்தின் அருமையைத்  அறியாத பெரும்பான்மையினர், இனவாத, துவேசக் கொள்கைகளை பின் பற்றி,வன்முறைகளை வளர  விட்டு கொண்டே   போகிறார்கள்.
அவர்களிற்கு நாட்டை சரியாய் ஆளத் தெரியவில்லை. சமஸ்டித் தன்மையை ஏற்படுத்தி ஜனநாயகமாவது இருக்கலாம் என்பது புரியவே இல்லை. சுதந்திரம் அடைந்த பிறகும் காலனி முறையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.   மறுபக்கத்தில்,  மாகாண அரசு சுதாரித்துக் கொண்டு ,எப்ப தான் சுயமாக‌ ‘கல்வி’யை தன் கையில் எடுத்து மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறதோ? தெரியவில்லை. தொடர்ந்து... ஒவ்வொன்றாக கவனத்தில் எடுத்து.... ‘ஒரு புரட்சி அல்லவா வேண்டி இருக்கிறது . 
இளைஞர்கள், விடுதலைப் போராட்டம் என  ஈடுபட்டு நிறைய குளறுபடிகளை  செய்து  கொண்டே போகிறார்கள்.

ஒரு 'காலக்கப்பல்'இருந்தால் பல‌ வருசங்களைக் கடந்து பின்னாடி போகக் கூடியதாக இருந்தால்...எவ்வளவு நல்லாய்யிருக்கும்?  விடுதலைக்காய் போராடிய குழுக்கள் தாம் விட்ட பல பிழைகளையும் எல்லாம் களைந்து , மறுபடி நிதானமாகப்  போராடி....ராஜிவ்காந்தியும் சாகாமல்,  கற்பனை  எவ்வளவு  சுக‌மாய்யிருக்கின்றன! சூரியா,இருபத்திநாலு என்ற திரைபடத்தை தேவையில்லாமல் எடுத்து,அதில் கடிகாரம் பின்னோக்கி சுற்றுகிறது. “மிஸ்டர்,படத்தை எடுத்தால் மட்டும் போதாது,அதை நிஜமாக்கவும் வேண்டும்.”

கோவில் ..பார்வைக்கு மறைவாகவே இருக்கிற து.எல்லாக் கோவிலைப் போலவே அதுவும் மதில் சூழவே  கட்டப்பட்டிருக்கிறது.தேர்த் திருவிழாவின் போது,உள் வீதியால் (பிரகாரம்) பிள்ளைத் தண்டில் ...சுற்றி வார சுவாமி, தேர்முட்டிக்கு வந்து தேரில் ஏறி ,வெளி பிரகாரத்தால் சுற்றி வருவது கண் கொள்ளாக் காட்சி. கடவுள் மட்டும் அதிகாரத்தை இழக்காதவராக இருக்கிறார்.     புதிதாய் தேரைச் செய்தவர்கள் எல்லாரும் சுவாமியை தேரில் ஏற்றுவதற்காக படிகளுடன்,உயரத்தில் தளத்துடன் ஒரு மேடையையும் விரைவிலே கட்டி விடுகிறார்கள்.எல்லாச் சாமியும் தேரிலே தான் செல்வது வழக்கம்.அந்தக்கால அரசர் பழக்கம் ,கோயில்களிலே தான் தொடர்கின்றன. உண்மையான  ஜனநாயக ஆட்சிமுறை ஏற்பட்டாலும் அவ்வவ்விடங்களில் இருக்கிற சாமிகளும் அந்தந்த மக்களிற்கு அரசர்கள் தான்.. !

தேர்முட்டியிலிருந்த நகுலன், பார்வைக்கு எட்டியவரைக்கும் விரிந்து கிடக்கிற வயல்களைப் பார்த்தான். அவனுள் குறுக்காலே சிந்தனை ஒன்று ஓடியது அந்தப்  பெரியவர் , தன்னுடைய‌  விவசாயக் காணி ஒன்றைத் தான் அப்படிக் கொடுத்திருக்கிறார். இதற்குப் பக்கத்திலே, சிவன் கோவில்க்  காணிகள் 2,3 பரப்புக்கு மேலே கிடக்கின்றன‌.அவையும் குத்தகைக்கு எடுத்து காலகாலமாக நெற்செய்கை பண்ணப்பட்ட    பள்ளக் காணிகள். தற்போது, அதில்  வறிய மக்கள் குடியேறி,குடியேறி..சிறிய குடியிருப்பாய்யே மாறி விட்டது..

அங்கே, பனைமரத்தில் ஏறி தொழில் செய்கிற சமூகமே இருந்தாலும் எல்லாரும் அந்த தொழில் செய்பவரில்லை.அது ஒரு கலவை.பல்வேறிடத்திலிருந்து. வந்தவர்கள் ,மலையகத்திலிருந்து வந்தவர்கள் கூட மணமுடித்து இருக்கிறார்கள்.அதனால், சிறிதளவு படித்து முன்னேற்றம் அடைகிற போக்கும் காணப்படுகிறது. நகுலனோடு தேர்முட்டியில் இருக்கிற குஞ்சன் அக்குடியிருப்பிலே இருக்கிறவன்.

குஞ்சனுக்கு வட்டமுகம்.அதில் தாடியும் கிடக்கும் சிலவேளைகளில் பீடி, சிகரட் பிடிப்பதால் .உதடு சிறிது கறுத்துக் கிடக்கிறது.ஆனால் அவனுள் ஒரு கலைஞன் இருக்கிறான்.சினிமாப் பாடலை ‘லயம்’ மாறாமல் பாட வல்லவன்.எடுத்தவாக்கிலே எல்லாம் பாடி அசத்த மாட்டான். பாடிப் பாடி பயிற்சி எடுத்தே கடைசியில் பாடி விடுபவன்.அந்த பாட்டுக்கும்  மேசையில் மேளமும் தட்டக்கூடியவன். இவன் முகத்திலிருந்து எதையும் படிப்பது கஸ்டம்.’ தாடி’ அரைவாசியை மறைத்து விடும். அவனுக்கு பக்கத்திலே இருக்கிறவன்  வாப்பா. .வாப்பாவிற்கு அவனுடைய அம்மாவைப் போல நீள முகம். ‘நீள முகத்தவர்கள்’ சிந்திக்கிற பேர்வழிகளாம்..ரேடியோ திருத்துறவன்.அவன் ஆழ்ந்து யோசிக்கிற போது அவன் முகத்திலிருந்து கொஞ்சத்தை படிக்கலாம்.. நகுலன்,சித்திரா ஆசிரியையின் ... அருந்தவப்புதல்வர்களில் ஒருவன்.அவனுக்கு அண்ணன்,அக்கா,தங்கச்சி..எல்லாம் இருக்கிறார்கள். குஞ்சனுக்கு ஒரு அண்ணன் மட்டும் தான்.வாப்பாவிற்கு நகுலனை விட ஏகப்பட்ட சகோதரங்கள். ஆசிரியையின் பிள்ளைகள், படிப்பை முடித்து விட்டால் ஆசிரியர் வேலையைப் போல..ஒரு விதமான‌ கெளரவமான வேலையில் செருகிக் கொள்றது என்ற மாதிரியை உடையவர்கள்.
விடுதலை அமைப்புகள் ஆயுதப் போராட்டத்தை தெரிவு செய்த பிறகு சிங்கள அரசு, இனவாதத்தை அதிகரித்துக் கொண்டு செல்வதால் முந்தியவர்களைப் போல இவர்களால் வேலைகளை துப்பரவாகவே எடுக்க முடியாத‌ நிலமை ஏற்பட‌ நகுலனின் ஒரு நண்பன் ரஞ்சன், ஆசிரியரின் புத்திரனான அவன், கடைசியில், வெளிநாடு...ஒன்றுக்குச் சென்று விட்டான்.   இந்த அரசு, இவர்களை வெளிநாடுகளிற்கு துரத்துவதையே விரும்புகிறது. இவனுக்கு போக எல்லாம் விருப்பமில்லை, இங்குள்ள படிப்பில்... இங்கேயே ஒரு வேலை எடுப்தையே விரும்புகிறான். 

"சொந்த நாடு இல்லை என்றால்....,ஏன் தான் பையித்தியம் பிடித்து அலைகிறோமோ?  தெரியவில்லை.  இங்கே ‌விவசாயம் செய்ய முடியாதா? மீன் பிடிக்க முடியாதா? என்ன‌??? அவற்றின் கழுத்தையும் பிடித்து சட்டங்களால் நசுக்கிற அரசியல்’ நிலவுறது... சோர்வடையச் செய்கிறது தான். இனவாதம் மட்டுமில்லை, எங்கடயவரின் பிற்போக்கு சிந்தனைகளாலும் தள்ளப்பட்டிருக்கிறோம்.அவர்களில் பிழை என்றால், எங்கடயர் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பதும் உண்மை. தவிர‌ , அவர் தம் கொள்கைகளை எம்முள்ளும் புகுத்தி தள்ளி எம்மையும் சோடைகளாக்கி விட்டிருக்கிறார்கள்.

நகுலனுக்கு சே!"என்றிருந்தது. முதலில், நம் அரசியல்வாதிகளிற்கு ஏன் விசாயத்தையும், மீன் பிடியையும் ஜனரஞ்சப்படுத்தனும் என்று தோன்றவில்லை . அவை பொது வான‌ பொருளாதாரதுறை  அனைவரும்  வேலை செய்யக் கூடிய அமைப்புகளாக மாற்றப்பட வேண்டியது அவசியம் எனத் தோன்றவில்லை .கொஞ்சம் ஆழமாக, யோசித்தால் வழிகள் இருக்கவே செய்கின்றன. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை! 

நிலத்தை ஆமிக்காரன் பறித்து வைத்திருக்கிறான்;கடல் புறத்தையும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறான் என்பது உண்மை தான்.ஆனால், சொல்லுறது போல விடுதலைப் போராட்டமும் ஒன்றும் லேசானது இல்லை. அது புதைகுழிகள் மலிந்தவை. பெரிய அரசு, அதில், நம்மைப் பிடித்து தள்ளி விடவே பார்க்கிறது.

ஆனால், நாம், இன்னமும் அடிமையாகி விடவில்லையே, காந்திய வழிகளும் இருக்கின்றனவே! காந்தியம் என்றுமே தோற்றுப் போவதில்லை.ஆனால் நாம் தாம் நம்பிக்கை இழந்து சோர்ந்து போய் நிற்கிறோம். பொதுவாக நாடுகளில் எல்லாம் மூன்று அரசாங்கங்களே இருக்கும்.பயங்கரவாத பூச்சாண்டி காட்ட வெளிக்கிட்ட நாடுகளில் எல்லாம் நாலாவது அரசாங்கமும் கிடக்கிறது. இராணுவ ஆட்சி. சிறிலங்காவிலும், இதே கதை தான்.தமிழரின் மாகாணங்களில் எல்லாம் கொண்டு போய்... இராணுவத்தை .குவித்து விட்டார்கள். தவறான சட்டங்களால்  தமிழர்கள் தினம், தினம் கழுவேற்றப்படுகிறார்கள். இனத்துவேசப் போரை முடிவுக்கு கொண்டு வர வந்த இந்திய தரப்பு, சிமார்ட்டாக இருக்காமல் போனதன் காரணம் தான் புரியவில்லை.பிரித்தானிய,அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்த கலப்பு நிலமையைப் பேண விரும்புகிறதா?

எல்லாருக்குமே மனித வாழ்வே துயரம் நிறைந்தது தான்,எமக்கு அது கொஞ்சம் அதிகமாக பட்டிருக்கிறது. களமும்,வாய்ப்புகளும் இழக்கப்படுற நிலமையில் எங்கை சுற்றி வந்தாலும், சிந்தனை கடைசியில் ஆயுதப் போராட்டமே மாற்றங்களை கொண்டுவர வாய்ப்பானவை என்றதிலே வந்து நிற்கிறது. ஆனால், ஆயுதங்களை எங்கிருந்து பெறப் போகிறார்களாம்? மேலே, கூறப்பட்ட நாடுகளின் கறுப்புச் சந்தையிலிருந்து தானே!சிறிலங்காவில் இனமோதல்கள் இல்லா விட்டால் கூட, இந்த நாடுகள்,ராணுவத்திற்குப் பயிற்சி அளித்தல்,கூட்டு பயிற்சி,நவீனப் படுத்தல்...என ராணுவத்தினுள் கலந்து விடவே செய்வார்கள்.அரசாங்கத்தை விட இங்கே,இவர்களின் பிடி அதனுள் அதிகரிக்கப்படும்..

இவர்களின் பேச்சைக் கேளாத சிங்கள கதாநாயகர்கள் வருகிற போது,அவர்களது அரசாங்கம் கவிழ்க்கப்படும்.  இயக்கங்கள் தோன்றியது ஒன்றும் பிழையும் இல்லை. ஆனால், அதில் விவேகமுள்ள அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. தொடக்கத்திலேயே நம் இளைஞர்கள் ஃபெயில்.! எம்மை துன்பப் படுத்துற அவர்கள் கூட‌ என்ன,‌ சுய‌ துயரங்களிலிருந்து விடுபட்டு விட ப் போவதில்லை.  அவரவர் வாழ்க்கையில் என்ன என்ன துயரங்களை அடைய இருக்கிறார்களோ ? அவர்களிற்கே தெரியாது. அவர்களிற்கு கொம்பு ஒன்றும் முளைத்து விட ப் போவதில்லை . கொம்பு சீவுறதை அவர்கள் கை விட்டு விடுறதே நல்லது.  சதா சலிப்படைந்து கொண்டே கிடக்கிற‌ ‌வாழ்க்கை ! இவன், சுவாரசியத்தை விரும்பியதால் யாழ்பொது நூலகத்தில் இருந்து  மொழிபெயர்ப்பு நாவல்கள்,கதைகளை... எடுத்து வாசிப்பதிலும் சிறிது நாட்டம் செழுத்தினான்.

[தொடரும்]'

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்