நவீன இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்களிலொருவர் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். கவிஞர் என்று அறியப்பட்டாலும் இவர் கவிதை, கதை, கட்டுரையென இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த எழுத்தாளர்களிலொருவர். சிறப்பான சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி கவிதைகளைப் படைக்கும்  பலர் விடும் முக்கிய தவறு: அவர்கள் தம் உணர்வுகளைக் கவிதைகளாக்குவதில்லை. தம் அறிவினை, புலமையினை வெளிப்படுத்தவே கவிதைகள் எழுதுகின்றார்கள். உணர்வுகளின் வெளிப்பாடாக அவர்கள்தம் கவிதைகள் இல்லாததனால்தான் அவர்கள்தம் கவிதைகள் வாசகர்களின் இதயங்களைத் தொட்டு அவர்கள்தம் இதயங்களில் இடம் பிடிப்பதில்லை. இவர்கள் தம் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் சாதனமாகக் கவிதையெழுதுதலைப் பார்க்கும் போக்கினைக் கைவிட வேண்டும்.

இவ்விதம் கவிதை எழுதுபவர்களுக்கும், அன்று தம் மேதாவிலாசத்தைக் காட்ட மரபுச்சூத்திரத்துக்குள் கவிதைகள் படைத்தவர்களுக்குமிடையில்  வித்தியாசமில்லை. சிறந்த மரபுக் கவிஞர்கள் உள்ளனர்.அவர்கள்தம் கவிதைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. மரபுக்கவிதையின் எதிரியும் நானல்லன். மரபுக்கவிதை படைப்பதாக எண்ணித் தம் புலமையினை வெளிக்காட்டுவதற்காகக் கவிதைகள் படைத்தவர்களையே குறிப்பிடுகின்றேன். அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பதில், புலமையினை வெளிப்படுத்தியவர்கள் அவர்கள். அவர்களைப்போன்றே இன்று வாழும் கவிஞர்கள் பலர் உள்ளனர். இவர்கள் புலமையினைக் காட்ட எழுதும் கவிதைகளைக் குறிப்பிடுகின்றேன். இவர்கள் தம் வாழ்க்கை அனுபவங்கள் விளைவாக எழுந்த, எழக்கூடிய உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகக் கவிதையினைக் கருத வேண்டும். அவ்விதம் கருதியே கவிதைகளை எழுத வேண்டும். அவ்விதம் எழுதினால் இவர்கள்தம் கவிதைகளும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். இவ்விடயத்தில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் வித்தியாசமானவர். தன் வாழ்க்கை அனுபவங்கள் தந்த உணர்வுகளையே கவிதைகளாகப் படைக்கின்றார். அதனால்தான் அவற்றைக் கேட்கையில்யே சிந்தையில் இன்பம் பொங்குகின்றது. எம்மை அவரது கவிதை வரிகள் ஈர்க்கின்றன.

அவரது புகழ்பெற்ற கவிதைகளிலொன்று 'இலையுதிர்கால நினைவுகள்'. முக்கியமான புகலிட அனுபவங்களை விபரிக்கும் கவிதை. கனவு (தமிழகம்) சஞ்சிகையின் 'இலங்கைச் சிறப்பிதழ்' (ஆகஸ்ட் 1991) மலரில் வெளியான கவிதை. இக்கவிதையில் வரும் படிமங்கள் (உருவகங்கள் மற்றும் உவமைகள்) என்னை மிகவும் கவர்ந்தவை. காற்றுக் குதிரைகள், வானிலோர் அகதியான சூரியன், புது அகதி போல் தரையிறங்கும் பழுத்த பேர்ச் இலை, வாழ்விழந்து வசதி பெருக்குகின்ற மனிதச் சருகுகள், ஓயாது இலை உதிர்க்கும் முதுமரமான தாய் நாடு, 'காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையான புகலிடத் தமிழ்க் குடும்பங்கள்.. இவ்விதம் படிமங்கள் மலிந்த நல்லதொரு கவிதை 'இலையுதிர்கால நினைவுகள்'. கவிதையில் வரும் மக்பை என்னும் காக்கையினப் பறவை குளிர்காலம் வந்தபோதும் ஏனைய துருவப் பறவைகளைப்போல் வெப்ப நாடுகள் நாடி மிண்டும் பறக்கவில்லை. கவிஞனோ தன் உயிர் காப்பதற்காக வெப்ப நாட்டிகிருந்து துருவத்துக்கு ஓடி வந்துள்ளான். ஆனால் மக்பை பறவையோ குளிர் வந்தபோதும் ஏனைய பறவைகளைப்போல் வெப்பநாடுகள் நோக்கிப் படையெடுக்காமல் இருக்குமிடத்திலேயே வாழுமொரு பறவை.  அதனால்தான் அப்பறவை இழிவாகக் கவிஞனை நோக்குகின்றது. இக்கவிதையில் வரும் பின்வரும் வரிகள் என்னை மட்டுமல்ல பலரையும் கவர்ந்தவை:

"யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்க்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்"

"பாட்டனார் பண்படுத்தி
பழமரங்கள் நாட்டி வைத்த
தோப்பை அழியவிட்டு
தொலை தேசம் வந்தவன் நான்.
என்னுடைய பேரனுக்காய்
எவன் வைப்பான் பழத் தோட்டம்."

கனவு இலங்கைச் சிறப்பிதழை வாசிக்க: https://noolaham.net/project/08/788/788.pdf


கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'வசந்த காலம் 1971

ரோகண விஜேவீராசுதந்திரமடைந்த இலங்கையில் தென்னிலங்கையில் நிகழ்ந்த முதல் புரட்சி 71இல் நடைபெற்ற ரோகண விஜேவீரா தலைமையிலான ஜேவியினரின் 'சேகுவேராப் புரட்சி' என்று  கூறப்பட்ட புரட்சி. புரட்சி தோல்வியில் முடிந்தாலும் முக்கியமானதொரு நிகழ்வு.  ஆயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்களைப் பலியெடுத்த புரட்சி. அப்புரட்சியின் குறியீடுகளிலொன்றாக நிற்பது  கதிர்காம அழகி மன்னம்பெரியின் மரணம். 2009இல் நடைபெற்ற யுத்தத்தின் குறீயீடுகளிலொன்றாக எவ்விதம் இசைப்பிரியாவின் மரணம் உள்ளதோ அத்தகையது மன்னம்பெரியாவின் மரணம். மன்னம்பெரியாவின் மரணத்துக்குப் பின்னர் நீதி கிடைத்தது. இசைப்பிரியாவின் மரணத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை.

ஜேவியினரின் புரட்சி நடைபெற்ற காலத்தில் நான் எட்டாம் வகுப்பு  மாணவனாக யாழ் இந்துக் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். உடனடியாக விடுமுறை விட்டார்கள். நீண்டகால விடுமுறை. உடனடியாக வவுனியா திரும்பி விட்டேன். அப்பொழுது வவுனியாவில் வசித்துக் கொண்டிருந்தோம். முதன் முதலாக இராணுவத்தினரைச் சுழல் துப்பாக்கிகளுடன் கண்டது அப்போதுதான். யாழ் நகரசபை மைதானத்தில் வந்திறங்கும் இந்தியக் ஹெலிகாப்டர்களைப் பார்த்திருக்கின்றேன். அவற்றிலிருந்து மடுக்கந்தைப் பகுதியில் மறைந்திருந்த போராளிகள் மீது குண்டுகள் போடுவார்கள். காற்றினூடு அவ்வோசை கேட்பதுண்டு. நாம் எண்ணுவதுண்டு. நினைவிலுள்ளது. புரட்சி தோற்று, நாளுக்குநாள் சரணடையும் இளைஞர்களைப்பற்றிய விபரங்களைத் தாங்கிப் பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன. வாசித்திருக்கின்றோம்.

அப்புரட்சியினைப்பற்றி கவிஞர் ஜெயபாலன் தனது வசந்த காலம் 71 கவிதையினைப் பகிர்ந்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அக்கவிதையில் வரும் பின்வரும் வரிகள் இலங்கைத் தமிழர்களின் ஆயுதபோராட்டக் காலகட்டத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தன:

"எனினும் இலங்கைத் தீவில்
சிங்களக் கிராமப் புறங்களில் மட்டும்
இளைஞர்கள் சில பேர் ஒருவரை ஒருவர்
இரகசியமாகத் தட்டி எழுப்பினர்.
நீண்ட நீண்ட இரவுகள் விழித்து
இருளில் தூங்கும் மக்களுக்காக
மலைகளை அகற்றும்
பரம ரகசியம் பேசிக் கொண்டனர்.
திடீரென அந்த வசந்த நாட்களில்
தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம்
குடியானவரைத் திடுக்கிட வைத்தது.
வீதி மருங்கெலாம் இரத்தப் பூக்கள்"

வசந்த காலம் 1971 (71, වසන්තය )  -  வ.ஐ.ச.ஜெயபாலன் -

காடுகள் பூத்தன,
குயில்கள் பாடின,
எந்த வசந்தமும் போலவே இனிதாய்
எழுபத் தொன்றிலும் வசந்தம் வந்தது.

*
இராமன் ஆளினும் இராவணன் ஆளினும்
ஊர் ஊராக என்றும் போலவே
எந்த ஓரு பெரிய சவால்களுமின்றி
அதே அதே பெரிய குடும்ப ஆதிக்கம்
அந்த வசந்த நாளிலும் தொடர்ந்தது.
சேற்றில் உழல்வதை இயல்பாய்க் கொள்ளும்
எருமைகள் போலச் சொரணைகள் செத்த
விதியே என்னும் கிராமியப் பண்பை
அந்த வசந்த நாட்களில் புதிதாய்
எந்த ஓர் விசயமும் உடலுப்பிடவில்லை
எந்த வசந்த நாட்களும் போலவே
அந்த வசந்த நாட்களும் நடந்தன.

*
எனினும் எனினும் இலங்கைத் தீவில்
சிங்களக் கிராமப் புறங்களில் மட்டும்
இளைஞர்கள் சில பேர் ஒருவரை ஒருவர்
இரகசியமாகத் தட்டி எழுப்பினர்.
நீண்ட நீண்ட இரவுகள் விழித்து
இருளில் தூங்கும் மக்களுக்காக
மலைகளை அகற்றும்
பரம ரகசியம் பேசிக் கொண்டனர்.
திடீரென அந்த வசந்த நாட்களில்
தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம்
குடியானவரைத் திடுக்கிட வைத்தது.
வீதி மருங்கெலாம் இரத்தப் பூக்கள்,

*
இருண்ட அந்தக் கிராமங்கள் தோறும்
எத்தனை எத்தனை இள ஞாயிறுகள்
கரிசல் மண்ணுள் புதைக்கப்பட்டன.

*
குயில்கள் பாட
திருமண ஊர்வலம் போல வந்த
எழுபத் தொன்றின் வசந்த காலம்
ஆந்தைகள் அலற
மரண ஊர்வலமாகக் கழிந்தது.

*
எங்கள் கிராமங்கள்
மண்வளம் மிகுந்தவை
எதைப் புதைத்தாலும்
தோப்பாய் நிறையும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here