Minnette De Silvaஇலங்கையின் பயிற்றுவிக்கப்பட்ட முதலாவது  பெண் கட்டடக்கலைஞர் மின்னட் டி சில்வா உலகின் கவனத்துக்குள்ளாகிய முக்கியமான பெண் கட்டடக்கலைஞர். சுதந்திரமடைந்த இலங்கையின் கட்டடக்கலையின் முன்னோடியாகவும் கருதப்படுபவர்.  1948இல் முடிக்குரிய பிரித்தானிய கட்டடக்கலை நிறுவனத்தின் (Royal Institute of British Architects - RIBA)(தோழராகத் (Associate) தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டுப் பெண் என்னும் பெருமையும் இவருக்குண்டு. உலகக் கட்டடக்கலைத் துறையில் இவரது முன்னோடிப்பங்களிப்பு 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' ('regional modernism for the tropics') என்னும் கட்டடக்கலைப்போக்கிலாகும்.

பெப்ருவரி 1, 1918இல் கண்டியில் பெளத்தச் சிங்களத் தந்தைக்கும் (ஜோர்ஜ் ஈ.டி,சில்வா), கிறித்தவ பேர்கர் தாய்க்கும் (ஆக்னெஸ் நெல்) பிறந்த கலப்பினக் குழந்தை இவர். தந்தையார் பிரபல்யமான கண்டிய  அரசியல்வாதி.  இலங்கைத் தேசியக் காங்கிரஸின் தலைவராகவும், அரசில் உடல்நலத்துறை அமைச்சராகவும்  விளங்கியவர். இவரது குடும்பத்தில் மூன்று குழந்தைகள்.  மின்னட் டி சில்வாவே கடைசிக்குழந்தை. இவரது சகோதரி அனில் டி சில்வா ஒரு கலை விமர்சகரும் , வரலாற்றாய்வாளராகவும் விளங்கியவர். சகோதரரான ஃப்ரெடெரிக் டி சில்வா வழக்கறிஞர். கண்டியின் முதல்வராகவும் விளங்கியவர். பின்னர் இலங்கைப்பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அவர் பிரான்சுக்கான இலங்கைத்தூதுவராகவும் பின்னாளில் பதவி வகித்தார்.

மின்னட் டி சில்வாவின் முக்கியமான பங்களிப்புகளாகக் கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பு, கட்டடக்கலை வரலாற்று ஆய்வுப்பங்களிப்பு, இதழியற் பங்களிப்பு , சமூக, அரசியற் பங்களிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இங்கிலாந்தில் புனித  மேரிக் கல்லூரியில் படிப்பை முடித்துக்கொண்டு திரும்பிய மின்னட் டி சில்வா கொழும்பில் கட்டடக்கலைத்துறையில் பயிற்சியைப்பெற முடியாததால் , பம்பாயிலுள்ள 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்வதற்காகச் சென்றார். ஆனால் அவர் மெட்ரிகுலேசன் சித்தியடையாததால்  அவர் ஆரம்பத்தில் பம்பாயை மையமாகக்கொண்டியங்கிய  மிஸ்ட்ரி & பெட்வர் (Mistri and Bhedwar) என்னும் நிறுவனத்தில் கலைத்துறையில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அங்கு பயிற்சி பெறுகையில் பெரின் மிஸ்ட்ரி (Perin Mistry)  மற்றும் அவரது நண்பரான மினூவுடன் (Minoo) நட்பையேற்படுத்தி கட்டடக்கலையினைப் போதிக்கும்  கல்வி நிறுவனமொன்றில் பிரத்தியேக வகுப்புகளைக் கட்டடக்கலைத்துறையிலெடுத்தார். இதன் பின்னரே 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத்தொடர்ந்தார்.

அங்கு அவர் கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் கலாச்சார, அரசியல் துறைகளில் ஈடுபாடுள்ள வட்டமொன்றில் இணைந்து செயலாற்றினார். அவ்வட்டத்தில் எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், சிதார் வாத்தியக் கலைஞரான ரவிசங்கர் ஆகியோரும் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களுடன் மினட் டி சில்வாவுக்கும் நட்பு உருவானது. அக்குழு வெளியிட்ட சஞ்சிகையான 'மார்க்' (Marg)) இதழின் , கட்டடக்கலைக்கான ஆசிரியராக மின்ட டி சில்வா பங்காற்றினார். நவீனக் கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பிரதான விடயங்களாகக்கொண்டு வெளியான இதழ் மார்க் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்காலகட்டம் இந்தியாவின் சுதந்திரப்போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த காலகட்டம். மகாத்மா காந்தியின் போதனைகளால் நடத்தப்பட்ட பாத யாத்திரையொன்றினுள் கலந்துகொண்டதற்காகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த கல்வி நிலையத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பாத யாத்திரையில் கலந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்காததன் காரணமாகவே அவர் அவ்வாறு வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து , பெங்களூரில் வசித்து வந்த கட்டடக்கலைஞரும், நகரத்திட்டமிடல் வல்லுநருமான ஓட்டொ கொனிஸ்பேர்கர்  (  Otto Koenigsberger) என்பவரின் கட்டடக்கலை நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு பணியாற்றுகையில் பீகாரில் நிறைவேற்றுவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 'டாடா உருக்கு நகரத் திட்ட'த்துகாக முன்னுருவாக்கப்பட்ட வீடுகளுக்கான (Prefabricated house)வடிவமைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

பின்னர் இலங்கைக்குத் தற்காலிகப் பயணமொன்றின்போது சென்றிருக்கையில் , அப்போது இலங்கையின் ஆளுநராகவிருந்த ஹேர்வால்ட் ராம்ஸ்பொதமைச்  (Herwald Ramsbotham) சந்திக்கின்றார்.  அவர் இவரது கட்டடக்கலைத்துறைத் திறமையினை இனங்காண்கின்றார். இங்கிலாந்தின் கல்விக்குழுத்தலைவராகவுமிருந்த அவர் அப்பதவியைப்பாவித்து, கட்டடக்கலைச் சங்கம் மினட் டி சில்வா முடிக்குரிய பிரித்தானியக் கட்டடக்கலை நிறுவனத்தின் சிறப்புத் தேர்வினை எடுப்பதற்கு ஒழுங்கு செய்தார். உலக யுத்தத்தின் பின் திரும்பிய மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வு அது.

 

Karunaratne House

இங்கிலாந்தில் கட்டடக்கலைத்துறைத் தேர்வில் சித்தியடைந்த அவரை அரசியல்வாதியான அவரது தந்தையார் சுதந்திரமடைந்த நாட்டுக்குத் திரும்பி அதற்குப்பங்களிக்குமாறு  வலியுறுத்தினார், அதற்காகவே நாடு திரும்பிய மினட் டி சில்வா கண்டியில் தனியாகக் கட்டடக்கலைத்துறையில் இறங்குகின்றார். போதிய நிதியற்ற நிலையில் சுயமாக அவர் கட்டடக்கலைஞராகத் தன் தொழிலை ஆரம்பிக்கின்றார். அவர் வடிவமைத்த முதலாவது கட்டடம் ஒரு வீடு. கண்டியில் உருவாக்கப்பட்ட கருணாரத்தின வீடு என்றழைக்கப்பட்ட வீடுதான் அவர் முதன் முதலாகக் கட்டடக்கலைஞராக வடிவமைத்த கட்டடம் (1949). அவரது பெற்றோரின் நண்பர்களான வழக்கறிஞரான அல்ஹி, மற்றும்  லெட்டி கருணாரத்தின ஆகியோர் தமக்காக ரூபா 40,000 செலவில் வீடொன்றினை அமைத்துத்தருமாறு அவரிடம் கேட்டனர். அதற்காக அவர் வடிவமைத்த வீடான 'கருணாரத்தின வீடு' பின்னாளில் புகழ்பெற்ற அவர் வடிவமைத்த கட்டடங்களிலொன்றானது.  மலைப்பிரதேசமான கண்டியில் , தளங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் (Split -Level) அவ்விதம் முதன் முதலில் அமைக்கப்பட்ட வீடு அதுதான். அதுவும் இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட வீடென்ற பெருமையும் அதற்குண்டு. ஆணாதிக்கம் மிகுந்த துறையொன்றில், ஆண் பங்காளர் எவருமின்றி, காலூன்றிய கட்டடக்கலை நிறுவனம் என்னும் பெயரற்ற நிலையில் அவர் தன் தொழிலை ஆரம்பித்தபோது அத்துறை சார்ந்த சகல வர்த்தக நிறுவனங்களுக்கும் நம்பிக்கையைத்தரவில்லை. ஆனால் அவர் அவ்வீட்டினை வடிவமைத்து வெற்றிகரமாக உருவாக்கியதும்  (1951) அவர்கள் கவனமெல்லாம் அவர்பால் திரும்பியது. அடுத்த பத்தாண்டு காலம் அவர் புகழ்பெற்ற  கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கினார் எனலாம். இக்காலகட்டத்தில் முப்பது கட்டடங்களை அவர் வடிவமைத்ததாக அறியப்படுகின்றது.

Karunaratne House Drawings

அறுபதுகளில் அவரது கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பில் வீழ்ச்சி நிலவியதென்றே குறிப்பிடலாம். அதற்கு அவரது தாயாரின் மறைவும் (1962) அதனைத் தொடர்ந்து அவரடைந்த மனத்தளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்பட்ட உடல்நலச்சீர்கேடும் முக்கிய காரணங்கள். இதனைத்தொடர்ந்து அவர் அதிக காலத்தை வெளிநாட்டுப் பயணங்களில் செல்வழித்தார், இதன் விளைவா அவரால் தன் கட்டடக்கலைத்தொழிலில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடியவில்லை/ அப்பயணங்களின்போது அவர் கிரேக்கம், ஈரான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார்.  இதன் பிறகு நாடு திரும்பிய அவர் கவனம் உல்லாசப் பயணிகளுக்கான பெரிய ஹொட்டல்களை அமைப்பதில் திரும்பியது.  அவரது கட்டடக்கலை பற்றியும் , வாழ்க்கை பற்றியும்  ஃபுளோரா சாமுவல் (. Flora Samuel) எழுதிய லெ கோபுசியே: கட்டடக்கலைஞரும் பெண்ணியவாதியும் (Le Corbusier: Architect and Feminist) என்னும் நூலில் விவாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சுக் கட்டடக்கலைஞரும், நகர அமைப்பு வல்லுநருமான லெ கொபுசியே அத்துறைகளில் அன்று உலகப்புகழ்பெற்றிருந்தாரென்பதும், பஞ்சாபின் சண்டிகார் நகரை வடிவமைத்தவர் அவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மினட் டி சில்வாவின் நெருங்கிய நண்பர்களிலொருவராக விளங்கியவர் என்பதும் நோக்கத்தக்கது.

இக்காலகட்டத்தில் மினட் டி சில்வா வடிவமைத்த கட்டடங்களில் எண்ணிக்கை பதினொன்று (1960 -1974)

எழுபதுகளில் புதிதாகப் பதவியேற்ற சிறிமா பண்டாரநாயக்கவின் அரசின்மீது அதிருப்தியுற்ற மினட் டி சில்வா தன் கட்டடக்கலை நிறுவனத்தை மூடிவிட்டு இலண்டன் சென்றார். அங்கு ஃபிளாட் ஒன்றினை வாடகைக்கெடுத்து வசித்து வந்தார். அங்கு வசிக்கையில் அவரது கவனம் உலகக்கட்டடக்கலையின் வரலாறு பற்றித்திரும்பியது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கட்டடக்கலையின் வரலாறினைப் படிப்பவர்கள் பாவிக்கும் பிரதான நூல் பனிஸ்டர் ஃபிளெச்சரின் கட்டடக்கலையின் வரலாறு (Banister Fletcher's A History of Architecture) என்னும் நூலாகும்.  அந்நூலுக்கான 'தெற்காசியக் கட்டடக்கலை பற்றிய முழு அத்தியாயத்தையும் மினட் டி சில்வாவே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை எழுதியபோது இலண்டனில் வசித்த அக்காலகட்டத்தில்தான். கட்டடக்கலையின் வரலாறு பற்றிய அவரது ஆய்வுக்கட்டுரைப் பணி அவருக்கு ஹொங்ஹொங் பல்கலைகழகத்தின் கட்டடக்கலைப்பீடத்தில் ஆசியக்  கட்டடக்கலையின் வரலாறு பற்றிப் போதிக்கும் விரிவுரையாளர் பதவி அவருக்குக் கிடைக்க வழிவகுத்தது. அவர் அங்கு பணியாற்றியபோது (1975-1979) புதிய கோணத்தில் ஆசியக் கட்டடக்கலையைப் போதிக்கும் போக்கினை உருவாக்கினார். இவ்விதம் போதிப்பதில் அவரே முன்னோடியாகவும் விளங்குகின்றார்.

மீண்டும் 1979இல் நாடு திரும்பியதும் மீண்டும் தடைப்பட்டிருந்த தனது கட்டடக்கலைத் தொழிலை மீளுருவாக்கம் செய்ய முயற்சி செய்கின்றார். ஆனால் தகுதி வாய்ந்த இத்துறையில் பாண்டித்தியம் பெற்ற  பணியாளர்களைப்பெறுவதில் சிரமத்துக்குள்ளாகின்றார். இதுவே அவரது கட்டடக்கலைப் பங்களிப்பின் இறுதிக்காலகட்டமெனலாம். இக்காலகட்டத்தில் வடிவமைத்த முக்கியமான கட்டடங்கள் மூன்று, அவை: கண்டி கலை மையம் ( Kandy Arts Centre,சேகர் இல்லம் (Segar House, Ja-Ela -1991) & சிறிவர்தனா இல்லம் ( Siriwardene House, Colombo, 1992)

கண்டி கலை மையம்

கண்டி கலை மையம் பல மட்டங்களிலான கிடையான ஓட்டுக்கூரைகளையும், வாசல்களையும், திறந்த முற்றங்களையும் ,  மண்டபங்களையும், ஆடல் மற்றும் இசை அரங்கு மற்று கூட்டுவாழ்வுக்கான சுதேசிகளின் அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டடம். பொழுதுபோக்கையும் கட்டடக்கலையும் மனத்திலிருத்தி உருவாக்கப்பட்ட சிறந்த  கட்டடமே மின்ட டி சில்வாவின் கண்டிக் கலை மையம்.

இவ்விதமாக இலங்கைக் கட்டடக்கலைக்கு, உலகக் கட்டடக்கலைக்குப் பெரும்பங்காற்றியவர் மினட் டி சில்வா. கட்டடக்கலைஞரும் , நகரமைப்புத்திட்ட வல்லுநருமான  லெ கொபுசியே, நவீன ஓவியர் பிக்காசோ, எழுத்தாளர் முல்க்ராஜ்  ஆனந்த் போன்ற கலை,இலக்கிய ஆளுமைகளுடனெல்லாம் நட்பைப்பேணி  வந்தவர் மினட் டி சில்வா.

இவ்விதமாக உலகக்  கட்டிடக்கலைக்குப் பெருப் பங்காற்றிய  கட்டடக்கலைஞர்களிலொருவர் இலங்கையைச் சேர்ந்த மினட் டி சில்வா என்பதும் , அவர் 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' என்னும் கட்டடக்கலைப்பாணியை உருவாக்கிய முன்னோடியென்பதும் பெருமைப்படத்தக்கது. இவ்விதம் பெருமைக்குள்ளான மினட்  டி சில்வாவுக்கு  அவர் இறப்பதற்கு இரு வருடங்கள் முன்பு (1996) இலங்கைக் கட்டடக்கலைஞர்களுக்கான சங்கம் அவரது இலங்கைக் கட்டடக்கலைக்கான பங்களிப்புக்காகத் தங்க விருதினை வழங்கியது.

சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞர், இலங்கைக் கட்டடக்கலைஞர்களின் முன்னோடிகளிலொருவர்,  உலகக் கட்டடக்கலையின், தெற்காசியக் கட்டடக்கலைக்கு முக்கிய பங்களிப்பை  வழங்கியவர், முடிக்குரிய பிரித்தானிய கட்டடக்கலை நிறுவனத்தின் (Royal Institute of British Architects - RIBA)(தோழராகத் (Associate) தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டுப் பெண், பனிஸ்டர் ஃபிளெச்சரின் கட்டடக்கலையின் வரலாறு (Banister Fletcher's A History of Architecture)  நூலுக்கான 'தெற்காசியக் கட்டடக்கலை பற்றிய முழு அத்தியாயத்தையும் மினட் டி சில்வாவே எழுதியவர், மார்க் சஞ்சிகையின் கட்டடக்கலைபகுதி ஆசிரியர் , 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' ('regional modernism for the tropics') என்னும் கட்டடக்கலைப்போக்கின் முன்னோடி எனப்பல்வகைப் பங்களிப்புகளைச் செய்ததுடன், இலங்கையில் பல கட்டடங்களை வடிவமைத்துக் கட்டடக்கலைக்கு மிகுந்த பங்களிப்பினை வழங்கியவர் மினட் டி சில்வா.

அதே சமயம் இன்னுமொரு விடயத்திலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் தனித்து ஒரு பெண்ணாக , உறுதியாக நின்று சாதித்திருக்கின்றார். அது நிச்சயம் மதிக்கப்பட வேண்டியதொன்று. அதே இதனால் அவரது வாழ்க்கை இத்துறையிலோ எத்துறையிலோ நுழைந்து சாதிக்க விரும்பும் பெண்களுக்கு மாதிரியாகவிருக்கின்றது.


மினட் டி சில்வாவின் கட்டடக்கலைப்பங்களிப்பு!

1940s

Karunaratne House, Kandy (1947–51)

1950s

Jinaraja College, Gampola (1950–51)
Red Cross Hall, Kandy (1950) (Unbuilt)
Day Nursery Extension, Kandy (1950) (Unbuilt)
Pieris House I, Colombo (1952–6)
Daswani House, Kandy (1952)
House for buisnessman, Nawala (1952) (Never built)
Wickremaratna House, Colombo (1953)
Open Air Theatre for the Arts Council in Colombo, Colombo, (1953–54)[22]
C. H. Fernando House, Wellawatte (1954)[24]
Mrs. D. Wickremasinghe Flats, Colombo, (1954)
Senanayake Flats, Colombo, (1954–57)
Asoka Amarasinghe House, Kollupitiya (1954)
Dr. Chandra Amarasinghe Flats, Colombo, (1954–55)
Aluwihare Sports Pavilion, Police Park, Kandy (1955)
Bunnie Molamure House, Bolgoda, (1955)
Sri Rao House, Bangalore (1955) (Proposal)
Ivor Fernando Flats, Colombo, (1956)
V. Sachithanandam House, Colombo, (1956)
Mrs. N. De Saram House, Colombo, (1956–57)
Art Centre, Horana (1957) (Unbuilt)
Dr. Perera House, Colombo, (1957–58)
Watapuluwa Housing Scheme, Kandy (1958)
Amaduwa Game Reserve Lodges, Kandy (1958) (Proposal)
Sri Palee Open Air Theatre, University of Peradeniya, (1958–59)
Ceylon Match Factory (1958)[22]
General Habibullah Defence Academy Chief's House, India, (1958–59)
A. G. De Silva House, Cinnamon Gardens (1958–59)
Kalkudah Sea Side Resort, Kalkudah (1959)
Hikkaduwa Resr House, Hikkaduwa (1959) (Renovation)



1960s

Chandra Amarasinghe House, Colombo, (1960)
Dr. Hensman House, Ratmalana, (1960–61)
Dr. P. H. Amarasinghe House, Colombo, (1960)
Dr. Nadesan Villa, Kandy, (1960–61)
R. G. Senanayake House, (1960–61)(Unbuilt)
Keerthisinghe House, (1961)(Unbuilt)
Pieris House II, Colombo (1963)

1970s

Coomaraswamy Twin Houses, Colombo (1970)
Seneviratne House, Kandy, (1972)
Gamini Wickremasinghe Flat, Colombo, (1972)
Dr. and Mrs. PVJ Jayasekera House, Kandy, (1974)

1980s

Kandy Arts Centre, Kandy (1982–84)

1990s

Segar House, Ja-Ela (1991)
Siriwardene House, Colombo (1992)



உசாத்துணை:

1. நன்றி: விக்கிபீடியா ஆங்கிலப்பக்கம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here