எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் ...எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களின் 'ழகரம்' சஞ்சிகை தனது ஐந்தாவது இதழுடன் மீண்டும் தனது பயணத்தைப்பல வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பித்திருக்கின்றது. அரங்கு நிறைந்து நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்கள் பலரையும் (அ.யேசுராசா, ரதன், குரு அரவிந்தன், கற்சுறா, ப.ஶ்ரீகாந்தன், தேவகாந்தன், அருண்மொழிவர்மன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அவ்வை, கவிஞர் சேரன், பி.விக்கினேஸ்வரன், பொன்னையா விவேகானந்தன், தமிழ்நதி, ஞானம் இலம்பேட், கடல்புத்திரன் , சிவகுமார் (கட்டடக்கலைஞர்), கலா ஈஸ்வரன் (கட்டடக்கலைஞர்), திலீப்குமார், என்.கே.மகாலிங்கம் என்று பலரையும் காண முடிந்தது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், இறுதியிலும் சில நிமிடங்களே எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் உரையாடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் இயல்பாக, நீண்ட நாள் அறிந்தவர் ஒருவருடன் உரையாடியது போன்ற உணர்வினை அந்தச்சில நிமிடங்கள் தந்தன. நிகழ்வின் பிரதம பேச்சாளராக அவர் விளங்கினார். சஞ்சிகையின் அட்டைப்பட நாயகனாகவும் அவரே விளங்கினார்.

நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆரம்பத்தில்,  நிகழ்வினைத் தலைமை தாங்கி நடத்திய கவிஞரும் பேராசிரியருமான சேரன் வரச் சிறிது தாமதமாகி விட்டதால் அந்த இடத்தை எழுத்தாளர் கங்காதரன் நிரப்பினார். பின்னர் சேரன் வந்து பொறுப்பேற்றி நிகழ்வினைச் சிறப்பாக வழி நடத்தினார். பொன்னையா விவேகானந்தன், 'காலம்' செல்வம், உமை, ஞானம் இலம்பேட், என்று நிகழ்வில் உரையாற்றிய பலரும் சிற்றிதழ்கள் பற்றிய தமது எண்ணங்களைப்பகிர்ந்து கொண்டார்கள்.

நிகழ்வின் பிரதம பேச்சாளரான எழுத்தாளர் அ.யேசுராசா சிற்றிதழ்கள் பற்றிய தனது உரையில் தனது இலக்கியச் செயற்பாடுகள் பற்றி ஆரம்பத்திலிருந்து விரிவாகவே பல ஆரம்பகாலத்துச் சிற்றிதழ்கள் பற்றி எடுத்துரைத்து உரையினை நிகழ்த்தினார். எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எவ்விதம் 'தீபம்' சிற்றிதழினைத் தனித்துத் தொடங்கினார் என்பது பற்றியும், எவ்விதம் இவ்வகையான சிற்றிதழ்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன என்பது பற்றியும், இவற்றை பேரார்வத்துடன் வாசித்த தமது அனுபவங்களையெல்லாம் விபரித்தார்.
'அலை' பற்றிய தனது உரையில் எவ்விதம் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் ஆழத்தைச் சரியாக உணராமல் இருந்தனர் என்றும். தீண்டாமையை எதிர்த்த அவர்களால் இனப்பிரச்சினையைச் சரியாக உணர முடியவில்லையென்றும், அவ்விதம் தமிழர் தேசியப்பிரச்சினையை உயர்த்திப்பிடித்தவர்களை இனவாதிகளாக அவர்கள் உருவகித்தார்கள் என்றும், ஆனால் 'அலை' இந்த விடயத்தில் தெளிவாக இருந்தது என்பது பற்றியும் குறிப்பிட்டார்.

கணையாழி சஞ்சிகையில் சினிமா பற்றி வெளிவந்த கட்டுரைகளைச் சிலாகித்த யேசுராசாவின் 'தீபம்', 'எழுத்து' , 'கணையாழி' என்று பல் வகைச்சிற்றிதழ்கள் பற்றிய நனவிடை தோய்தல் மிகவும் பயனுள்ள நனவிடை தோய்தலாக அமைந்திருந்தது.

அத்துடன் யேசுராசா அவர்கள் தனது உரையில் ஓவியர் அ.மாற்கு பற்றி , அவரது பயன் கருதாப்பங்களிப்பு பற்றி விரிவாகவே நினைவு கூர்ந்தார். 'அலை' சஞ்சிகை ஓவியர் அ.மாற்குவின் ஓவியங்கள் பலவற்றைப்பிரசுரித்தது பற்றியும் அவர் நினைவு கூர்ந்தார். 'ழகரம் 5' சஞ்சிகையின் பின் அட்டைப்படமும் ஓவியர் மாற்குவின் ஓவியத்தைத்தாங்கி வெளிவந்திருப்பது பாராட்டுதற்குரியது. பொதுவாக விளம்பரம் வாங்கி அதனால் பின் அட்டையை நிரப்பியிருப்பார்கள். ஆனால் 'ழகரம்' அந்த வழக்கத்தை மாற்றி, ஓவியர் மாற்குவைக் கெளரவித்திருக்கின்றார்கள். வாழ்த்துகள்; பாராட்டுகள்.

விழாவின் இறுதியில் ஒரு சில கணங்களுக்குப் புகைப்படம் எடுக்க 'போஸ்' கொடுத்தார். ஆனால் பின்புறம் வெளிச்சமாக இருந்ததால் புகைப்படம் சரியாக வெளிவரவில்லை. நிச்சயம் இதனை எடுத்த நண்பர் சிவகுமார் (கட்டடக்கலைஞர்) அவர்களின் தவறல்ல இது. சிறிது 'ஸ்மார்ட்' குறைந்த எனது அலைபேசியினதும், புகைப்படம் எடுத்த இடமும்தாம் காரணங்கள். என்னால் இயன்றவரைச் சீராக்க முயன்று பார்த்தேன். இவ்வளவுக்குத்தான் முடிந்தது.

'ழகரம் 5' சஞ்சிகை மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கின்றது. சரியான அளவில் , சரியான வடிவமைப்பில் (ஓவியர் கருணாவின் கைவண்ணம் சஞ்சிகையின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது) வெளிவந்திருக்கின்றது. எழுத்தாளர் அ.யேசுராசா கனடா வந்திருக்கும் சமயத்தில், அவரைக்கெளரவிக்கும் வகையில் பொருத்தமாக 'ழகரம்' வெளியாகியிருக்கிறது. ஓரிலக்கிய மலரைப்போல் வெளிவந்திருக்கின்றது. அந்த வகையில் இந்த ஓரிதழ் கூட முக்கியமானதொரு நூலைப்போல் விளங்குகின்றது. அதனால் 'ழகரம் 5' தனியாக, ஓரிலக்கிய மலராகக் கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுகிறது. சஞ்சிகைக்குழுவினருக்கும், இதனைச்சாத்தியமாக்கிய எழுத்தாளர் அ.கந்தசாமிக்கும் வாழ்த்துகள்.

'ழகரம்' சஞ்சிகை பற்றிய தகவல்களை வெளியிட்டதற்காக நன்றி கூறுகையில் வழக்கம்போல் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி செலுத்திய கங்காதரன் 'பதிவுகள்' இணைய இதழினை மறந்து விட்டார். இது அவர் தவறல்ல. 'பதிவுகள்' இதழினை அவர் வாசிக்காதது அவர் குற்றமல்லவே.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்