ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் ஞானம் சஞ்சிகையின் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்' சிறப்பிதழ் அறிமுக விழாஇன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான 'ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா 'டொராண்டோ'வில் நடைபெற்றது. கனடாத்தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான 'டொராண்டோ' தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள். நிகழ்வில் கலாநிதி சுப்பிரமணியன் அவர்கள் நீண்டதொரு , சிந்தனையைத்தூண்டும் உரையினை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது. அதிலவர் புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் கருப்பொருளாக அமைந்த பொருளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி  விரிவாக  அவற்றைப்பிரிவுகளாக்கி எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் வெளியான படைப்புகள் தாயகமண் பற்றிய கழிவிரக்கமாக அமைந்திருந்தன; அதன் பின்னர் ஈழம் மற்றும் புகலிடச்சூழல்களை உள்வாங்கியவையாக விளங்கின; அதன் பின்னர் புகலிடத்தில் காலூன்றியவர்கள், புகலிடத்தில் தம் தாயகத்தில் நிலவிய பண்பாட்டுச்சூழலை மீண்டும் உருவாக்க முனைவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதே சமயம் பெண்ணியம், சாதியம் போன்றவை புலம்பெயர் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையன என்பதுபற்றியும் அவரது உரை ஆராய்திட முற்பட்டது. இவ்விதமாகத்தனது நீண்ட உரையினை ஆற்றிய கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் இறுதியில் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றி எழுத்தாளர்களான  தேவகாந்தன் , ஜெயமோகன் ஆகியோர் முறையே 2000ஆம் ஆண்டிலும், 2010இலும் தெரிவித்த கருத்துகளையும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் எஸ்.பொ/ இந்திரா பார்த்தசாரதியால் தொகுத்து வெளியிடப்பட்ட 'பனியும், பனையும்' சிறுகதைத்தொகுப்பு பற்றியும் குறிப்பிட்டார். அத்தொகுப்பில் படைப்புகள் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று அன்றே குறிப்பிடப்பட்டிருந்ததை எடுத்துரைத்து, இன்று மீண்டும் அவ்விதமான பிரிவுகளை நோக்கித்தான் எமது புலம்பெயர் இலக்கியமும் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

உரைகளைத்தொடர்ந்து அவ்வுரைகள் பற்றிய தனது கருத்துகளை வைத்தியர் இ.லம்போதரன் அவர்கள் முன் வைத்தார். அதிலவர் முன் வைத்த கருத்தொன்று சிந்திக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. தற்போது நாட்டில் நிலவிய சூழலில் பாரிய மாற்றமேற்பட்டிருப்பதால், அங்கிலிருந்து பல்வேறு எதிர்பார்ப்புகளுடன், பல இலட்சங்களைக்கொடுத்து வரும் புதிய தமிழ்க்குடிவரவாளர்கள் இங்கு காலூன்றுவதற்காகப்படும் சிரமங்கள், துயரங்கள் பற்றிக்கூறிய அவர் முன்பு யுத்தக்காலகட்டத்தில் வந்தவர்கள் இவ்விதமான எதிர்பார்ப்புகளுடன் வரவில்லை. உயிர்தப்பினால் போதுமென்று வந்தவர்கள். ஆனால் புதியவர்கள் எதிர்பார்ப்புகளுடன் வந்தவர்கள். இது பற்றியும் கலாநிதி நா.சுப்பிரமணியன் வகுத்த பிரிவுகளுடன் இன்னுமொரு பிரிவினை உருவாக்கி ஆராய்வது நல்லதாகவிருக்கும் எனக்கூறினார்.

பீன்னர் நடைபெற்ற பார்வையாளர் கருத்தரங்கில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் 'துறைசார் விடயங்களை ஒட்டிய இலக்கியப்படைப்புகளும் வருவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.  தனது படைப்புகள் தன் அனுபவங்களை மையமாக வைத்தே உருவாகின என்றார்.

மொத்தத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய நல்லதொரு ஆவணப்பெறுமதிமிக்க தொகுப்பினை வழங்கிய ஞானம் சஞ்சிகை இதழும், அதன் ஸ்தாபகரும், ஆசிரியருமான  வைத்தியர் தி.ஞானசேகரன் பாராட்டுக்குரியவர். தொகுப்பின் நேர்த்தியும், படைப்புகளின் கனமும் என்னைப்பிரமிக்க வைத்தன. 950 பக்கங்களைக்கொண்ட இத்தொகுப்பினைச் சிறப்பிதழாகக்குறிப்பிடுவதை விட மலராகக்குறிப்பிடுவதே சரியானதென நிகழ்வில் உரையாற்றிய பலர் குறிப்பிட்டிருந்தனர். அதுவே அடியேனின் கருத்துமாகும்.

மேலும் நிகழ்வில் எழுத்தாளர்கள் பலரைக்காண முடிந்தது. சிற்றுண்டி இடைவேளையில் எழுத்தாளர் குரு அரவிந்தனுடன் சிறிது உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வின் பின் எழுத்தாளர் தேவகாந்தனுடன் நீண்ட  நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. நிகழ்வினை நடாத்திய எழுத்தாளர் அகில், வைத்தியர் இ.லம்போதரன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். இவர்கள் 'டொராண்டோ' தமிழ்ச்சங்கம் வாயிலாக மாதாமாதம் நடாத்தும் கலை, இலக்கியக்கருத்தரங்குகளும் குறிப்பிடத்தக்கன. இவர்களுக்கு உறுதுணையாகக் கலாநிதி நா.சுப்பிரமணியன் போன்றவர்களிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


2. கனடா வாத்துகளின் இளவேனில் வருகை!

வாசிப்பும், யோசிப்பும் மார்ச் மாத வெப்பநிலை உயர்வுடன் , கனடா வாத்துகளும் டொராண்டோ நகருக்குத்திரும்பிவிட்டதைப் பார்க்க மகிழ்ச்சியாகவிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே கனடா வாத்துகளை அவதானித்து வருகின்றேன். அவற்றை அவதானிக்க, அவதானிக்க அவற்றின் மீதான மதிப்பும் , விருப்பும்தாம் அதிகரித்துச்செல்கின்றன.

இளவேனிற்காலம் டொராண்டோ நகருக்கு வரும் கனடா வாத்துகள் பெரும்பாலும் முன்பு எந்த இடத்தில் கூ...டுகள் கட்டி குஞ்சுகளைப் பொரித்தனவோ அந்த இடங்களுக்கே மீண்டும் வருகின்றன. கூட்டமாக வருகை தரும் அவை, கூடு கட்டி, குடும்பம் நடாத்தவுள்ள இடமருகில் சோடி, சோடியாகப்பிரிந்து விடுகின்றன.

இவ்விதம் பிரியும் , சோடி ஒவ்வொன்றும் , தமக்கென்று பிரதேசங்களைத்தெரிவு செய்து, அங்கு கூடு கட்டி, அதில் பெண் முட்டைகளை இடுகின்றது. அதன் பின் பெண் கனடா வாத்து அடை காக்கத்தொடங்க, ஆண் கனடா வாத்து கூட்டுக்குச்சற்று அருகாமையில் தன் இணையைப்பாதுகாக்கும்பொருட்டு காவலிருக்கத்தொடங்குகின்றது. இக்காலகட்டத்தில் யாரும் பெண் அடை காக்கும் கூட்டுக்கு அருகில் செல்வதைத்தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆண் மிகவும் மூர்க்கமாகத் தன் துணையைப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இக்காலகட்டத்தில் மேற்கொள்ளும். இதுபோல் முட்டைகள் பொரித்து , குஞ்சுகள் உருவாகியிருக்கும் ஆரம்பக்காலகட்டத்திலும் மிகவும் அவதானமாகவிருக்க வேண்டும். யாராவது தம் குஞ்சுகளுக்கு அருகில் வருகிறார்களென்று கண்டால், தாயும், தந்தையும் மிகவும் மூர்க்கமாகக் குஞ்சுகளைக்காப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்.

வருடா வருடம் இக்காலகட்டத்தில்தான் கனடா வாத்துகள் தம் பறக்கும் சிறகுகளை உதிர்க்கின்றன. அவை மீண்டும் முளைத்து வரும் சமயம், குஞ்சுகளும் வளர்ந்து பறக்கத்தயாராகிவிடுகின்றன.

ஒரு காலத்தில் ஏரிகள் , நீர் நிலைகள் போன்ற இடங்களில் மட்டுமே இளவேனிற்காலத்தில் வந்திறங்கி, தம்மினம் பெருக்கி, மீண்டும் குளிர்காலத்தில் வெப்பமான இடங்களை நோக்கிச்செல்லும் கனடா வாத்துகள் தற்போது மானுடர்களின் நகர அபிவிருத்திக்கேற்ப தம் வாழ்க்கையையும் மாற்றி வாழ்வதில் வெற்றி பெற்றிருக்கின்றன. நகரப்பூங்காக்களில், வாகனத்தரிப்பிடங்களை அண்டிய பகுதிகளில், புல்வெளிகள் நிறைந்திருக்கும் பகுதிகளில், 'கோல்ஃப்' மைதானங்களை அண்டிய பகுதிகளிலென , அவை வாழப்பழகுவதில் வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் இப்பகுதிகளில் இயற்கையாக அவற்றுக்குள்ள எதிரிகள் இல்லாமலிருப்பதும், அவற்றின் இப்பகுதிகள் மீதான நாட்டத்துக்குக்காரணங்களிலொன்றாக அமைந்துவிட்டதெனலாம்.

தன் பெண் இணை அடைகாக்கும் தருணத்தில் ஆண் தன் துணையினைப்பாதுகாப்பதில் காட்டும் அக்கறை (கிடைக்கும் உணவினைக்கூட பெண்ணையே உண்ணவிட்டு ஆண் அருகில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்), குஞ்சுகள் பொரித்ததும் தாயும், தந்தையும் அவற்றின் வளர்ப்பில் காட்டும் அக்கறை இவை எல்லாம் என்னைப்பெரிதும் ஆச்சரியப்பட , அவற்றின் மீதான மதிப்பினை அதிகரிக்க வைத்தனவென்பேன்.

அத்துடன் கோடையில் டொராண்டோவுக்கு வருவதும், குளிர்காலங்களில் வெப்பம்மிக்க இடங்களுக்குச் செல்வதுமாக தம் வாழ்வினை அமைத்துக்கொண்ட அவற்றின் வாழ்க்கை முறை எனக்கு ஒருவிதத்தில் அவற்றின் மீது ஒருவித பொறாமை கலந்த உணர்வுகளை ஏற்படுத்துவதும் வழக்கம். அவை எவ்வளவு கொடுத்து வைத்தவை என்று அத்தருணங்களில் நினைத்துக்கொள்வேன்.

அவற்றின் இன்னுமொரு பண்பு, அல்லது திறமை என்னை வியப்படைய வைப்பதுண்டு. அது அவற்றின் பறக்கும் திறமை. நெடுந்தொலைவுகளை நாடி, அதி உயரத்தில் (29,000 அடி உயரத்தில் கூடி அவை பறப்பது அவதானிக்கப்பட்டுள்ளது) , நீண்ட தூரம் / நேரம் களைக்காமல் பறக்கும் அவற்றின் ஆற்றல்தானது.

கனடா வாத்துகள் மீதான எனது அவதானிப்பும், பாதிப்பும் காரணமாகக் கவிதையொன்றினைக்கூட எழுதியிருக்கின்றேன். அது:

 ஒரு பொறாமைமிக்க கவிஞன்!

- வ.ந.கிரிதரன் -

வாசிப்பும், யோசிப்பும் எனக்குப் பறவைகளின்மேல் பொறாமையாகவுள்ளது.

சிலநேரங்களில் என்னை அவற்றிடத்திலிருத்தியுள்ளவாறு
கனவு காண்கின்றேன்.

நிலமானது வசந்தத்தில் பூத்துக்குழுங்கும்போது
அவை இங்கு, வடக்குக்கு தெற்கிலிருந்து
வருகின்றன.

அவை களைப்பற்றுப் பறப்பவை.

இலைகள் மரங்களைவிட்டு நீங்கும்போது
அவையும் வடக்கிலிருந்து தெற்குநோக்கிச்
செல்லுகின்றன.
இடைப்பட்ட காலத்தில்
அவை இணைகின்றன,
முட்டைகளிடுகின்றன, மேலும்
முட்டைகள் பொரிக்கும்போது
அவைதம் சந்ததிகளை
அவை முழுமையாக இறகுகள்
முளைத்து பறக்கும் பறவைகளாகும் வரையில்,
சிறகுகளை அகல விரிக்கத் தயாராகும்வரையில்
பாதுகாக்கின்றன.

நான் குளிர்காலச் சூழலை எதிர்கொண்டிருக்கையில்
அவை வெப்பமான வானத்தை நோக்கி
மீண்டும் பறக்கின்றன.
அவை தெற்கு நோக்கிச்செல்லுகையில்
ஒருவிதமான சோகம் என்னைச் சூழுகிறது.

பல வருடங்களுக்கு முன்னர்
இந்தப் பறவைகளைப்போல்
நான் என் பிறந்த நிலத்தைவிட்டு
விலகினேன்.
ஒரு குடிவரவாளனாக,
ஓர் அகதியாக
இங்கு வந்ததிலிருந்து
நான் விலகிவந்த என்
நிலத்தைப்பற்றி கனவு
கண்டுகொண்டுதானிருக்கின்றேன்.
விலகிய நிலத்திலும்,
அடைந்த நிலத்திலும்
என் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வது
பற்றி
நான் இன்னும் கனவு காண்கையில்,
கனடிய வாத்துகளோ என் கனவினை
வருடா வருடம் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

வாழ்வினைப் பிரித்திடும் ,
ஈருலகங்களில் நல்லவற்றை உள்வாங்கும் அவற்றின்
செய்கைக்காக
எனக்கு அவற்றின்மீது
பொறாமையாகவுள்ளது.

A Jealous Poet!

By V.N.Giritharan

வாசிப்பும், யோசிப்பும் I am jealous of birds.

Some times I dream of
placing myself
in their shoes.

When the ground blooms
in the spring,
They arrive here, the North
from the South.

They are tireless flyers.

When the leaves leave the trees
They too leave from the North to the South.
In between,
they mate,
they lay eggs, and
when the eggs hatch,
they look after their offspring
until they become full fledged birds;
until they are ready
to spread their wings.

As I face the wintery environment,
they fly back to the warmer sky.
As they leave for the South,
A kind of sadness envelopes me.

Many years ago,
I left my home land
like these birds.
Since my arrival here
as an immigrant,
as a refugee,
I have been dreaming about
the land I left.
While, I am still dreaming
about sharing my life
in between the land I left
and the land I reach,
the Canadian Geese
live my dream
year after year.

I am jealous of them
for the way they divide
their life;
for the way
they accomodate
the best from both worlds.


3. நட்சத்திரன் செவ்விந்தியனின் 'ஷெல் குத்துதல்

வாசிப்பும், யோசிப்பும் புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த கவிஞர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனையும் நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். அண்மைக்காலமாக இவர் எழுதிவரும் கட்டுரைகள் பலவற்றில் பாவிக்கப்படும் மொழியில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அதற்காகப்புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கான இவரது பங்களிப்பினை மறைத்து / மறந்து  விடுதற்கில்லை. இவரது கவிதைத்தொகுப்பொன்று எழுத்தாளர் நவத்தின் 'நான்காம் பரிமாணம்' (கனடா) பதிப்பகத்தால் 'வசந்தம் 91' என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. 'எப்போதாவது ஒரு நாள்' என்னும் இவரது இரண்டாவது கவிதைத்தொகுதி தமிழகத்தில் தாமரைச்செல்வி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 'வசந்தம் 91' தொகுப்பிலுள்ள இக்கவிதை சரிநிகர் பத்திரிகையின் நவம்பர் 1991 பிரதியிலும் வெளியாகியுள்ளது.  இக்கவிதையினை வெளியிட்ட சரிநிகர் பத்திரிகை இந்தக் கவிதையைப்பற்றி தனது  கவிதை பற்றிய கருத்தினையும் வெளியிட்டிருந்தது. அது வருமாறு:

[ 'எப்போதோ படித்த அரபுக்கவிதை ஒன்று பின்வருமாறு கேட்டதாக ஞாபகம்.

"இருண்ட காலங்களில்
பாடலும் கவிதையும்  இருக்குமா?"

பதிலும் கவிதையிலேயே வருகிறது.

"ஆம் இருண்ட காலங்களிலும்
பாடலும் கவிதையும் இருக்கும்.
ஆனால்
இருண்ட காலங்களைப்பற்றி இருக்கும்."

அண்மையில் "சரிநிகர்" அலுவலகத்துக்கு வந்திருந்த ஒரு இளம் கவியுடைய கவிதைகளைப் படிக்கிறபோது இந்த அரபுக்கவிதை ஞாபகம் வந்தது. எண்பதுகளில்  எதிர்ப்பிலக்கியமாக வெடித்த கவிதை தொண்ணூறுகளில் மேலும் பரிணாமம் பெற்று ஆழமான மனித நேயத்தை வற்புறுத்துகிறது.  மனித உறவுகள், உணர்வுகள் எவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் பேணப்படுகிறது.  பேணப்படலாம் என்பது இன்றைய கவிதை சுதந்திரமாக விகசிக்கும் ஒரு அம்சம்.  - [சரிநிகர், நவம்பர் 1991) -]

நட்சத்திரன் செவ்விந்தியனின் அந்தக் கவிதையின் தலைப்பு 'ஷெல் குத்துதல்'; கவிதை கீழே:

ஷெல் குத்துதல்

இரவில் தானே எல்லாம் களைகட்டுகிறது
இன்று பகலில்
ஷெல் பட்டிறந்த குடும்பத்தை
சவப் பெட்டிகளில் காவிச்சென்றோம்
எனக்கு அழுகை வரவில்லை

இரவில் தானே எல்லாம் களைகட்டுகிறது
மேசையில் இருந்தால் ஷெல் கூவும் பயம்
ஆண்டவரே!
இன்றுதான் உம்மை வேண்டுகிறேன்
என்று தோப்புக்கரணம் போட்டேன்
பாயில் கிடந்தேன். நித்திரை வரவில்லை.

எல்லா
இராக்கால நேரமும்
எழும்பி எழும்பி
ஆண்டவரே என்று தோப்புக்கரணம் போட்டேன்.
வயல்வெளி முருகன் கோயிலுக்கு
50 சதம் நினைத்தேன்
போர்வையைப் போர்த்திக்கொண்டு
போர்வை இழுபட இழுபட
பயத்தோடு திரிந்தேன்
முற்றத்தில் வெகுநேரம்
ஒரு ஷெல் குத்தும் சத்தத்தை எதிர்பார்த்துக்கொண்டு
அலைந்தேன்

சிதறிப்போன அந்த உடல்கள் வந்து போகின்றன
மாலை முகம் கழுவும் போது
சவங்களின் விதைகளும் யோனிமடல்களும்
நள்ளிரவில் சவங்கள் என்முன்
எழுந்து நின்றன
கால்கள் இல்லாது குறியில் தாங்கி நடந்தன
தன் துயரத்தையும் வேதனையையும்
வாய்திறந்து காட்டியது
ரத்தத்தைப் பற்றி நீ கனவு காண்கிறாய் என்றது

பகலுக்கு என்ன தெரியும். 

- 1991


4. டால்ஸ்டாயின் நாவலிதுதான்: 'புத்துயிர்ப்பு' (Ressurection).

வாசிப்பும், யோசிப்பும் எனக்கு மிகவும் பிடித்த டால்ஸ்டாயின் நாவலிதுதான்: 'புத்துயிர்ப்பு' (Ressurection). அதற்கு முக்கியமான காரணங்களில் சில: ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில், விடுதலைப்போரில் குதித்த இளைஞர்களில் பலர் வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் மட்டும் குதித்தவர்களல்லர். பலர் சமுதாயம், வரலாற்றில் சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியின் பங்கு, மானுட சமுதாயத்தில் வர்க்கங்களின் தோற்றமும், அவை பற்றிய அ...றிதலும் , புரிதலும், பிளவுகளால் பிளவுண்டு கிடக்கும் மானுடரின் இருப்பில் இன்பமேற்றுவதெவ்விதம், புரட்சிகள் அவசியம்தானா என்றெல்லாம் ஆழமாகச்சிந்தித்தார்கள். அவை பற்றிய நூல்களைத்தேடித்தேடி வாசித்தார்கள். இவ்விதமான இளைஞர்கள் பலர் காணாமல் போனார்கள்; சிறைகளில் வதையுண்டார்கள். இவர்களில் பலர் உன்னதமான இலட்சியக்கனவுகள் கண்டார்கள். இந்த நாவலை எப்பொழுது வாசிக்கும் போதும் , இதில் வரும் பாத்திரங்கள் பலவற்றின் சிந்தனைகள், அவர்களுக்கேற்பட்ட நிலைமைகள் இவற்றை உணரும்பொழுதும், இவ்விதமான இலட்சிக்கனவுகள் கண்டவர்களின், காண்பவர்களின் நினைவுகள் எழுவது வழக்கம். அவை சிந்தனையை மீண்டும் தூண்டுவது வழக்கம். இவையும் இந்நூல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்களில் சில. அத்துடன் எழுத்தாளர் டால்ஸ்டாயின் எழுத்து நடை, சிந்தனை (அவரது மதம் பற்றிய சிந்தனைகள் என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை. ஆனால் அவை ஒருபோதுமே அவரது எழுத்துகளை அணுகுவதற்கு தடைகளாக இருந்ததில்லை; பாரதியின் எழுத்துகளைப்போல.) என்னைக்கவர்ந்தவை. இந்நாவலைப்பற்றி எண்ணியதுமே என் ஞாபகத்துக்கு வரும் இன்னுமொரு நாவல்: தத்யயேவ்ஸ்கியின் 'குற்றமும், தண்டனையும்'

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

 
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here