காலமும் கணங்களும்: இலக்கிய உலகில் ஒரு யோகி கணேஷ்!எழுத்தாளர் முருகபூபதிபாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப்பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது” என்றாள். தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்தும் உழைப்பிலிருந்தும் பிறந்த உலகப் பிரசித்திபெற்ற பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக இலங்கைக்கு அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச்சுருக்கமாகச் சொல்லிவிட்டு, இயக்குநர் பாலா தமிழ்நாட்டில் தேயிலைத்தோட்டங்களில் கூலி அடிமைகளாக வேலைசெய்த மக்களுக்கு நேர்ந்த கொடுமையை சித்திரித்திருக்கிறார்” என்றேன். மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி இந்த காலமும் கணங்களும் தொடர் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.

உழைக்கின்ற மக்கள் நிலையோ தாழ்வு
உழைக்காத துரைமார்கள் சுகபோக வாழ்வு
மழைக்காற்று மதிக்காது வடிக்கின்ற மேல்நீர்
மனம்குளிர நாமுண்ணும் ஒரு கோப்பைத்தேநீர்

இந்தக்கவிதையை Picture Postcard இல் எழுதி 1988 ஆம் ஆண்டு எனக்கு அனுப்பியிருந்தார் நண்பர் கே.கணேஷ். இலங்கை மலையகத்தில் பெண்கள் கொழுந்து பறிக்கும் அழகியகாட்சி அந்த அட்டையில் பதிவாகியிருந்தது. சென்னையில் பல தசாப்தங்களுக்கு முன்னர் வெளியான லோகசக்தி இதழில் கணேஷ் எழுதிய கவிதை. நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் எனக்கு மாதம் ஒரு தடவை அவரிடமிருந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. மறைவு வரையில் எழுதிக்கொண்டேயிருந்தார். ஒவ்வொருகடிதத்திலும் ஏதாவது ஒரு இலக்கியப்புதினம் இருக்கும். சிலரது எதிர்பாராத மறைவு பற்றிய சோகச்செய்தி இருக்கும். இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலேயே தமிழ் இலக்கிய உலகில் கவனம்பெற்ற ஆக்கஇலக்கிய படைப்பாளி. கண்டி அம்பிட்டியாவில் 1920 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி பிறந்து, 05-06-2004 இல் கண்டி தலாத்து ஓயாவில் தமது 84 ஆவது வயதில் மறைந்தார்.

இறுதியாக அவரை 2002 இல் சந்தித்தேன். அப்பொழுது அவரது தலாத்துஓயா இல்லத்தில் தங்கியிருந்து நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் சற்று உடல்நலம் குன்றியிருந்தார். டொக்டர் ஞானசேகரனும் இராமனும் இணைந்து இலக்கிய வட்டத்தின் சார்பாக என்னையும் மனைவி மாலதியையும் வரவேற்று இலக்கியசந்திப்புடன் தேநீர்விருந்தும் வழங்கினார்கள். அச்சந்திப்பில் அந்தனிஜீவா, துரைமனோகரன், திருமதி ஞானம், ரூபராணி ஜோசப் உட்பட பலர் கலந்துகொண்டனர். கணேஷ் இல்லத்தில் முதல்நாள் இரவு தங்கியிருந்தோம். அன்று நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். மறுநாள் புறப்படும்தருவாயில் அவரிடமிருந்த பாரதி பற்றிய பெறுமதியான ஆவண நூல்கள் இரண்டை தனது ஞாபகார்த்தமாகத்தந்தார். அதனை அவர் என்னிடம்தரும்போது, “ பூபதி… இனி இது என்னிடமிருந்து பயன் இல்லை. நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். உங்களிடம் இருக்கட்டும். உங்களுக்குப் பயன்படும்” என்று நா தழுதழுக்கச்சொன்னார். நான் கலங்கிவிட்டேன். நானும் மனைவியும் விடைபெறும்போது அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டோம். இப்படி நான் காலில்விழுந்து ஆசிபெறுவது குறிப்பிட்ட சிலரிடமிருந்துதான். அவரிடம் ஒரு தந்தையின் பரிவைக்கண்டிருக்கிறேன். நண்பர் ராஜஸ்ரீகாந்தன் மறைந்தபின்னர் எழுதிய நூலை கே.கணேஷ் அவர்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளேன்.

கொழும்பில் இந்நூலின் வெளியீட்டுவிழா முடிந்த மறுநாள் நண்பர் உடுவை தில்லை நடராஜாவுடன் சென்று திருமதி கணேஷ் அவர்களை, அவர்களின் கொழும்பு இல்லத்தில் சந்தித்து அவர் கையில் அந்தநூலின் பிரதியை வழங்கினேன். அந்த அம்மா குறிப்பிட்ட நூலில் கணவரின் படத்தைப்பார்த்துவிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார். எனக்கும் கணேஷ் அவர்களுக்குமிடையே உணர்வுபூர்வமான வாஞ்சை தொடர்ந்தது. இந்திய எழுத்தாளர்களான முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ. அப்பாஸ் முதலானோருடனும் இலக்கிய உறவைப்பேணிய கணேஷ், 1947 இல் இலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தார். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் சுவாமி விபுலானந்தர். பிரபல சிங்கள எழுத்தாளர்கள் மார்டின் விக்கிரமசிங்கா, எதிரிவீர சரச்சந்திரா, பத்திரிகையாளர் கே. இராமநாதன் ஆகியோர் அங்கம்வகித்த குறிப்பிட்ட அமைப்பில் இணைச்செயலாளராக இயங்கியவர் கணேஷ். இந்த அமைப்பின் பரிணாம வளர்ச்சியாக 1954 இல் தோற்றம்பெற்றதே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இலங்கையில் முதல் முற்போக்கு இதழ் எனக்கருதப்படும் பாரதி இதழை கே.இராமநாதனுடன் இணைந்து வெளியிட்ட பெருமையும் இவரைச்சாரும். சில இதழ்கள் வெளியானபோதிலும் இன்றுவரையில் இதழியல் ஆய்வாளர்களினால் விதந்து குறிப்பிட்டுப்பேசப்படும் ஆய்வுக்குட்படுத்தப்படும் இதழ்தான் பாரதி. கணேஷ் ஆக்கஇலக்கியத்தில் பல்துறை ஆற்றல்மிக்கவர். மொழிபெயர்ப்பில் கடுமையாக உழைத்திருக்கிறார். சீன, வியட்நாமிய, சோவியத், ஹங்கேரிய, இந்திய(இந்தி) படைப்புகள் பலவற்றை உயிர்சிதையாமல் வழங்கிய வீரியமிக்க மொழிபெயர்ப்பாளராகவே இலக்கிய உலகில் போற்றப்பட்டவர். வியட்நாம் இலக்கிய மேதை ஹோஷிமின், சோவியத் கவிஞர் குப்ரியானோவ், உக்ரேனிய மகாகவி தராஸ் ஷெவ்சென்கோவ், ஹங்கேரிய கவிஞர் பெட்டோஃபி ஆகியோரின் படைப்புகளையும் சில பல்கேரிய கவிதைகளையும் முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ. அப்பாஸ் ஆகியோரின் சில படைப்புகளையும் தமிழுக்குத் தந்தவர் கணேஷ். பல உலகக்கவிதை விழாக்களில் பங்கேற்று இலங்கை தமிழ் இலக்கிய உலகிற்குப்பெருமை சேர்த்தவர். ஜப்பானிய சக்கரவர்த்தி ஹீரோஹட்டோவின் விருதும் பெற்றவர். உலக தமிழ் கலாசாரப்பேரவையின் நிறைவேற்றுக்குழு (1954-1963) உறுப்பினராகவும் இலங்கை கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனைச்சபையின் (1975-1977) உறுப்பினராகவும் இயங்கியவர். இவரது மொழிபெயர்ப்பில் சுமார் 22 நூல்கள் வெளியாகியிருப்பதாக தெரியவருகிறது. பலரும் வற்புறுத்தியதையடுத்து தனது 84 ஆவது வயதில் தனது சுயசரிதையை எழுதத்தொடங்கினார். ஆனால் அந்த நூலை நிறைவுசெய்யாமலேயே விடைபெற்றுவிட்டார். பிறமொழிப்படைப்பொன்றை மொழிபெயர்க்கும் முன்னர் குறிப்பிட்ட படைப்பை எழுதியவர் பற்றிய பூரண தகவல்ளை நூலகங்களுக்கு அலைந்தும், நூல்களை விலைகொடுத்து வாங்கியும் படித்து சேகரித்துகொள்ளுவார். இந்தக்காலம்போன்று கூகுளில் தேடி எடுக்கும் எளிதான முறை அன்றிருக்கவில்லை.

வீரகேசரி வாரவெளியீட்டிற்காக ஒரு பிறமொழி குறுநாவலை அவர் மொழிபெயர்த்துக்கொடுத்தார். கொழும்பு இல்லத்தில் அவரை நானே நேரில் சந்தித்து அதனைப் பெற்றுவந்து வாரவெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபாலிடம் கொடுத்தேன். சில வாரங்கள் அந்த மொழிபெயர்ப்பு வெளியாகி முற்றுப்பெற்றது. ஒரு அத்தியாயத்திற்கு பதினைந்து ரூபாய் வீதம் சொற்பதொகையை காசோலையாக நிருவாகம் கணேஷிற்கு தபாலில் அனுப்பியிருந்தது. அவர் அதனைப்பார்த்துவிட்டு விசனமுற்று என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கவலை தெரிவித்தார். அந்தக்குறுநாவலை மொழிபெயர்க்க (தகவல்களுக்காக) அவர் செலவிட்ட தொகையைவிட குறைந்த தொகையையே சன்மானமாக நிருவாகம் அனுப்பியிருந்தது. அதனைவிட அந்தமொழிபெயர்ப்புப்பணிக்காக அவர் செலவிட்ட நேரம், உழைப்புக்குரிய மரியாதையை நிருவாகம் தரவில்லை என்று வருத்தப்பட்டதுடன் நில்லாமல், அந்த சொற்பதொகை காசோலையுடன் புறப்பட்டுவந்து ஆசிரியபீடத்தில் வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியருடன் நீண்டநேரம் வாதிட்டார். அவர் பெரிய செல்வந்தர் இல்லையென்றாலும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர். தலாத்து ஓயாவில் மிளகு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர். கொழும்பில் வீடும் வர்த்தக ஸ்தாபனமும் இருந்தன. எனினும் ஒரு படைப்பாளிக்குரிய, மொழிபெயர்ப்பாளருக்குரிய மரியாதையை நிருவாகம் தரவில்லை என்று கோபப்பட்டார். அதில் நியாயம் இருந்தது. முழுப்பக்க விளம்பரத்திற்கு பத்திரிகை நிருவாகம் அறவிடும் ஆயிரக்கணக்கான ரூபாயுடன் ஒரு படைப்பாளியின் உழைப்புக்கு தரப்படும் சொற்ப சன்மானத்தை ஒப்பிட்டுப்பார்க்குமாறு அவர் வாதிட்டார். அந்த வாதத்தில் தர்மாவேசம் இழையோடியிருந்தது. அவர் தனக்காக வாதிடவில்லை. பத்திரிகைகளில் எழுதும் ஏனைய எழுத்தாளர்களுக்காகவே குரல்கொடுத்தார். தனக்கு வழங்கப்பட்ட அந்தக்காசோலையை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு திருப்பிக்கொடுத்தார். ஆசிரியர், நிருவாகத்துடன் இதுபற்றிப்பேசுவதாக அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். அந்த சம்பவத்தை மிகுந்த கவலையுடன் அவதானித்துக்கொண்டிருந்த நான், அவரை அலுவலக வாசல்வரையில் வந்து வழியனுப்பிவைத்தேன். இதுகுறித்து அலுவலகத்தில் நாம் சக பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டோம். ஆனால் நிருவாகத்திடம் இதுபற்றி பேசமுடியாத இயலாமை குற்ற உணர்வாகவே எம்மைத்தொடர்ந்தது.

கணேஷ் அவர்களை நான் சந்தித்த காலப்பகுதியில் அவர் எழுதிக்கொண்டிருந்தபோதிலும் இலக்கிய அமைப்புகள், கூட்டங்கள், எழுத்தாளர் சந்திப்புகளில் ஒதுங்கியே இருந்தது எனக்கு சற்றுவியப்பாகவிருந்தது. “ஏன் ஐயா அப்படி?” என்று பலதடவை கேட்டிருக்கின்றேன். மௌனமான புன்னகையே அவரது பதிலாக அமைந்திருந்தது. எழுத்தாளர்களைக்கண்டால் எட்டத்தில் நிற்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு அவர் வந்திருக்கவேண்டும். ஆனால் அவரைத்தேடிவரும் எழுத்தாளர்களை இன்முகத்துடன் வரவேற்கத்தவறுவதில்லை. ஒரு எழுத்தாளரைப்பற்றி மற்றுமொரு எழுத்தாளரிடம் புறம்கூறும் பண்பும் அவரிடமிருந்ததில்லை. கிட்டத்தட்ட வானப்பிரஸ்த வாழ்வையே அவர் தொடர்ந்தார்.

1983 ஆரம்பத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தமிழகத்திலிருந்து பாரதி இயல் ஆய்வாளர்கள் பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன், சிதம்பர ரகுநாதன், படைப்பாளி ராஜம் கிருஷ்ணன் ஆகியோரை அழைத்திருந்தது. பாரதி நூற்றாண்டை முன்னிட்டு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தொடக்கநிகழ்வாக ஆய்வரங்கும் பாரதி நூல், இதழ் கண்காட்சியும் இலங்கை எழுத்தாளர் கலைஞர் ஒளிப்படக்கண்காட்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. நான் சில நாட்கள் அலுவலகத்தில் லீவு அனுமதி பெற்றுக்கொண்டு இரவுபகலாக நண்பர்களுடன் இணைந்து நூற்றாண்டு வேலைகளை கவனித்தேன்.

மண்டபத்தில் தொடக்க நிகழ்வு காலையிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அக்காலப்பகுதியில் பாராளுமன்ற சபாநாயகராக பதவியிலிருந்த பாக்கீர் மாக்கார் வருகைதந்து கண்காட்சியை திறந்துவைத்து உரையாற்றிவிட்டுப்போய்விட்டார். நிகழ்ச்சிகள் மாலைவரை தொடர்ந்து இளங்கிரன் எழுதி அந்தனிஜீவா இயக்கிய பாரதி நாடகத்தின் இரண்டாவது மேடையேற்றத்துடன் அன்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது. மாலைநேரம். மேடையிலிருந்த பேச்சாளர்கள் சற்று சோர்வடைந்திருப்பதை அவதானித்தேன். சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் என்னை அருகே அழைத்து பம்பலப்பிட்டி சந்தியிலிருக்கும் சைவஹோட்டலில் பால்கோப்பி வாங்கிவருமாறு அனுப்பிவைத்தார்.

ஒரு ஃபிளாஸ்கை எடுத்துக்கொண்டு கோப்பி வாங்கச்சென்றேன். பம்பலப்பிட்டி லோரன்ஸ் வீதி சந்தியில் அமைந்திருந்த அந்த ஹோட்டலில் கணேஷ் வடை சாப்பிட்டுவிட்டு கோப்பி அருந்திக்கொண்டிருந்தார். நான் சற்று திகைத்துவிட்டேன். அருகே சென்று, “ என்ன ஐயா, இங்கே இருக்கிறீர்கள்? அங்கே பாரதி நூற்றாண்டு நிகழ்வுகள் நடக்கின்றன. உங்கள் நண்பர்கள் வந்திருக்கிறார்கள். வரவில்லையா?” என்று கேட்டேன்.

“ உட்காருங்கள். ஏதும் சாப்பிடுகிறீர்களா?” என்று என்னை அமரச்செய்துவிட்டு ஒரு சர்வரை அழைத்து, “ தம்பி… இவருக்கும் ஒரு கோப்பி கொண்டுவாருங்கள்.” என்றார்.

நான் கேட்டகேள்விக்கும் எனது அழைப்பிற்கும் அவரது பதில் அவரது உபசரிப்பாகத்தான் இருந்ததேயன்றி, தான் ஏன் அந்த நிகழ்வை புறக்கணித்தேன் என்பதாக அமையாதது எனக்கு வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.

“ ஐயா,.. நான் பேச்சாளர்களுக்கு கோப்பி வாங்க வந்தேன். சொல்லுங்கள். பாரதிநூற்றாண்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ் உங்களுக்கு வரவில்லையா?” என்று கேட்டேன்.

சிரித்துக்கொண்டு “நன்றாக நடத்துங்கள்” என்று மாத்திரமே சொன்னார்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கண்டியில் அந்தனிஜீவா ஒழுங்குசெய்திருந்த அவரது மலையக கலைஇலக்கியப்பேரவையின் மாநாட்டுக்குச்சென்றிருந்தேன்.

கண்டியிலிருந்து சில மைல்தூரமே வசித்துவந்த கணேஷ் அந்த மாநாட்டிற்கும் வரவில்லை.

என்னுடன் வந்திருந்த நண்பர் ராஜஸ்ரீகாந்தனை அழைத்துக்கொண்டு, அன்று மாலை கணேஷைப்பார்க்கச்சென்றேன்.

எமது முற்போக்கு இலக்கிய முகாமிடமிருந்து அந்நியப்பட்டிருந்தார். அதற்கான காரணத்தையும் அவர் என்னிடம் சொல்லவில்லை. பொதுவாகவே இலக்கியக்கூட்டங்களை அவர் புறக்கணித்தார். யாழ்ப்பாணத்தில் தம்பையா அண்ணரின் கடலில் கலந்தது கண்ணீர் சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டில் அவரும் பேசுவதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் வரவில்லை. சிலர் சில தீர்மானங்களுக்கு தீர்க்கமாக வந்துவிட்டால் மரணிக்கும் வரையில் தீர்மானத்தை மாற்றமாட்டார்கள். கணேஷ் அவர்களும் அப்படித்தான்.

இலங்கையில் மல்லிகை, கொழுந்து, ஞானம், கனடாவில் காலம் ஆகிய இதழ்கள் கணேஷ் அவர்களை அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளன. ஏற்கனவே இலக்கிய மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக விருதுகளும் பட்டங்களும் பெற்றவர் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல்விருதும் பெற்றார். கணேஷ் ஒரு காலத்தில் தீவிர இடதுசாரியாக வாழ்ந்தவர். இலங்கையிலும் தமிழகத்திலும் பல மேலைத்தேய நாடுகளிலும் இடதுசாரிச் சிந்தனைகொண்ட ஏராளமான படைப்பாளிகள், பத்திரிகையாளர்களுடன் தொடர்ச்சியாக தோழமையையும் கடிதத்தொடர்புகளையும் கொண்டிருந்தவர். நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்பு அவருக்கும் எனக்கும் தங்குதடையின்றி கடிதத்தொடர்புகள் நீடித்தன. அவர் எனக்கு எழுதிய கடிதங்களை பொக்கிஷம்போன்று இன்றுவரையில் காத்துவருகின்றேன். அவற்றைத் தொகுத்து தனிநூலாக்கவேண்டும் என்ற விருப்பம்தான் இன்னமும் நிறைவேறவில்லை. எனக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் இப்படித்தான் ஆரம்பமாகும்:- ‘ அன்புசால் அன்பர் பூபதிக்கு அரங்கநாதன் திருவருள் என்றும் காப்பதாக….’ நான் இன்னமும் அந்த அரங்கநாதனை தரிசித்ததில்லை. ஆனால், கணேஷ் என்ற யோகியுடன் அவர் மறையும்வரையில் தொடர்பிலிருந்தேன் என்பதே எனக்குள்ள மனநிறைவு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here