இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா!

நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பல ஆரோக்கியமான முக்கியமான விடயங்களை நான் காண்கின்றேன். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அனுர குமார திசாநாயக்க இத்தேர்தலை ஆரோக்கியமாகக் கையாண்டுள்ளார். அவற்றைப் பட்டியலிட்டால் முக்கியமானவையாக நான் கருதுவது இவற்றைத்தான்.
1. முதன் முறையாகப் பிரதான தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்களத் தேசியம், இனவாதம் போன்ற மக்களை உணர்ச்சியிலாழ்த்தும் விடயங்களை முக்கிய பிரச்சாரமாகக் கைக்கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை.
2. அனுரா குமார திசாநாயக்கவின் சில உரைகளை நான் கேட்டேன். ஓர் உரையில் அவர் தோட்டத்தொழிலாளர்களின் நிலையினை , அவர்கள்தம் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தார்.
நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது, இதுவரை இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்த பாரம்பரிய அரசியல்வாதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிப்பொறுப்பை மார்க்சியச் சிந்தனைகள் மிக்க கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் 'தேசிய மக்கள் சக்தி' வேட்பாளரான அனுரா குமார திசாநாயக்கவிடம் கையளித்திருக்கின்றார்கள் மக்கள். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துகள்.
தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் ஏனைய சிறுபான்மையின மக்கள் மத்தியிலும் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. புதிய இளந்தலைமுறையினர் இவ்வின மக்களின் அரசியலைக் கையெடுக்கும் வேளை ஏற்பட்டிருக்கின்றது. அரசியல்வாதிகள் இன, மத, மொழி வாதங்கள் மூலம் தம் அரசியல் நலன்களுக்காக மக்களைப் பிரித்து வைத்ததே நாட்டின் சிறுபான்மையின மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்குக் காரணம். தனது பிரச்சாரங்களில் மத வாதம், இனவாதம் போன்ற பிரிவுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார் புதிய ஜனாதிபதி. அவர் அதனை நடைமுறைப் படுத்துவார் என்று எதிர்பார்ப்போம். சவால் நிறைந்த எதிர்காலம் அவருக்காகக் காத்திருக்கின்றது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றியடையவார் என்று நம்புவோம். வாழ்த்துகிறோம்.
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI - - 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் கேட்டுக் களிக்க
1. அலைந்து திரியும் அகதி மேகமே!
நாட்டுச் சூழல் காரணமாகப் புகலிடம் நாடி அகதியாக அலையும் ஓர் அகதி மேகத்தைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=k5ayU9KObjc
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
நாடு விட்டு நாடு நகர்கின்றாய்.
ஊரு விட்டு ஊரு செல்கின்றாய்.
இருப்பதற்கு ஒரு நாடு உனக்கும்
இல்லையோ மேகமே சொல்லுவாய் எனக்கு.
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
போரில் நீயும் குடும்பம் இழந்தாயோ?
இருந்த வீடும் இடிந்து போனதுவோ?
படையினர் உன் வீட்டை அபகரித்தனரோ?
புகலிடம் நாடி புலம் பெயர்ந்தாயோ?
அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.
இலங்கையில் முன்னர் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடங்களாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையில் இந்த வாரம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு கல்வி நிதியத்தின் அம்பாறை மாவட்ட தொடர்பாளர் அமைப்பான பாண்டிருப்பு மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் தலைவர் திரு. ந. கமலநாதன்( ஓய்வு நிலை அதிபர் ) அவர்களின் தலைமையில் இருதினங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பெறும் மாணவர்களும் அவர்களின் தாய்மாரும் நிறுவகத்தின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சமஷ்டி, சுயநிர்ணய உரிமை பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் பேசத் தயார் என்று தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. நமது அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேத்திக் குளிர் காய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தி.
தனி நாடு கேட்டு, அதாவது பிரிந்து தனி நாடு அமைப்பதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது 2009இல். இவ்விதமானதொரு சூழலில் இலங்கையில் எந்த அரசாவது சுயநிர்ணய உரிமையினை அதாவது நாடு பிரிந்து செல்லும் நிலையினை ஏற்றுக்கொள்ளுமா? தமிழரசுக் கட்சி பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையினைப் பற்றி இங்கு கூறுகிறதா அல்லது தமிழர்கள் சுயமாக ஒற்றமைக்குள் இருந்தவாறே, தம் காணி, பொலிஸ் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றதா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.
வலிமையான பாரதத்துடன் ஏற்படுத்திய 13 அம்ச ஒப்பந்தத்தையே இதுவரையில் நடைமுறைப் படுத்தாமல் இலங்கை அரசு இருக்கும் நிலையில், முதலில் செய்ய வேண்டியது அதனை நடைமுறைப்படுத்த வேண்டி வலியுறுத்துவதுதான். அவ்விதமானதொரு சூழல் எற்பட்டால், அத்திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டால், காலப்போக்கில் இலங்கையில் மாகாண சபைகள் நன்கு செயல்படத் தொடங்கினால், மாகாண சபைகளின் குறைபாடுகளை மேலும் நிவர்த்தி செய்யும் கோரிக்கைகளை வலியுறுத்தலாம். அடுத்த கட்டமாக மாகாண சபைகளை மாநில அரசுகளாக மாற்றும்படி , சமஷ்டி முறையிலான மாநில அரசுகளாக மாற்றும்படி வலியுறுத்தலாம்.
எழுநா குழுமம் தன் முகநூற் பதிவில் ஊடகவியலாளரும், முன்னாட் போராளியும், வவுனியா பிரசைகள் குழுவின் ஊடகப்பேச்சாளரும்,, எழுநா ஆவணப்பட வரிசைப் பொறுப்பாளருமான இசைப்பிரியன் என்று அறியப்பட்ட அ.சேகுவேராவின் மறைவுச் செய்தியினை அறிவித்திருந்தது. ஆழ்ந்த இரங்கல்.
அ.சேகுவேரா என்ற பெயரைக்கேட்டதும் உடனடியாக நினைவுக்கு வந்தது பதிவுகள் இணைய இதழுக்கு இவர் அனுப்பிய கவிதைகள், கட்டுரைகள்தாம். wetamizhar@live.in என்னும் மின்னஞ்சலிலிருந்து தன் படைப்புகளை அனுப்புவார். சில வேளைகளில் yathumaki@Live.com என்னும் மின்னஞ்சலிலிருந்தும் அனுப்புவார். அவரது கவிதைகள், கட்டுரைகள் சமுதாயப் பிரக்ஞை மிக்க அவரது ஆளுமையை வெளிப்படுத்தின. அதனால் அவற்றைப் பதிவுகள் பிரசுரித்தது.
படைப்புகளூடு மட்டுமே எனக்கு இவருடனான தொடர்பிருந்தது. நேரடியாக நான் அறிந்திருக்கவில்லை. எழுநா குழுமத்தின் இவரது மறைவுச் செய்தி பற்றிய பதிவே எனக்கு இவரைப்பற்றிய நினைவுகள் மீள் ஏற்படுத்தின. இவரது நினைவாக இவர் அனுப்பிப் பதிவுகளில் வெளியான கட்டுரைகளை,கவிதைகளை மீளப்பதிவிடுகின்றேன். ஒரு வகையில் இவை ஆவணப்பதிவுகளாகவும் இருக்கும் என்பதால் முக்கியத்துவம் மிக்கவை.
எழுத்தாளர் அ.சேகுவேராவின் பதிவுகள் இணைய இதழில் வெளியான படைப்புகள்:
1. 08 மார்ச் 2014 - “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.” - இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு ஒரு திறந்த மடல்! - அ.ஈழம் சேகுவேரா (இளம் ஊடகவியலாளர்-இலங்கை.) -
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 21வது கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடன், சூடான வாதப்பிரதிவாதங்களுடன் ஆரம்பித்திருக்கிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை, அதிருப்தியை சர்வதேச நாடுகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள்-ஆர்வலர்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா அரசால் இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், சித்திரவதைகள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், அரசியலுரிமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், அனைத்துலக மனித உரிமைச்சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டுள்ளமை தொடர்பாகவும், காத்திரமான அனைத்துல விசாரணைகள் நடத்தப்பட்டு, இலங்கை ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் சகாக்கள் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உயிர் வலிக்கும் ரணங்களோடும், கணங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தரப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரின் போது அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்களுக்கு இலங்கையைச்சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அ.ஈழம் சேகுவேரா மனு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். “களம் ஓய்ந்திருக்கிறதே ஒழிய, காரணங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.” எனும் இலங்கையின் சமகால நிலைவரங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை முன்னிறுத்தி, காலப்பதிவாக அதன் முழு விவரமும் இங்கு பிரசுரமாகிறது. குறித்த மனு தொடர்பான உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை wetamizhar@live.in எனும் மின்னஞ்சல் முகவரியூடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
தென்னிலங்கை அரசியல்வாதிகளில் மார்க்சியச் சிந்தனையாளர்களில் ஒருவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தொடர்ச்சியாக இலங்கையின் அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்தவர். தனது கொள்கைகளில் தெளிவுடனிருந்தவர். திடத்துடனிருந்தார். நாடு இனவாதச் சேற்றில் மூழ்கியிருக்கையில் அதற்கெதிராகச் செயற்பட்டவர். நடைபெற்ற யுத்தத்திற்கு ஒருபோதுமே நிதிப்பங்களிப்பு செய்ய மாட்டேனென்று அவர் மேல் மாகாண சபையில் ஆற்றிய உரை முக்கியத்துவம் மிக்கது.
இலங்கையின் சிறுபான்மை மக்களின், குறிப்பாகத் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் பற்றி, அவர்கள் அடைந்த இன்னல்கள் விடயத்தில் தெளிவுடனிருந்தவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின. எப்பொழுதும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர். தனது உறுதியான , தெளிவான அவரது அரசியல் செயற்பாட்டால், நோக்கால் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் பல. பதவி இழந்தார். தலை மறைவாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இவற்றாலெல்லாம் அவர் கலங்கி அடிபணியாமல் தான் கொண்ட கொள்கையில், சிந்தனைகளில் உறுதியுடன் இருந்தார். இதுவே அவரது மிக முக்கியமான ஆளுமை அம்சம்.