எழுத்தாளர் தேவகாந்தன்காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2017 டிசம்பரில் சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல்  வெளிவந்த காலப்  பகுதியிலேயே நூல் கையில் கிடைத்திருந்தும் அதை வாசிக்கத் தொடங்குவதற்கு நானெடுத்த  கால நீட்சியின் கழிவிரக்கத்தோடேயே  அதை அண்மையில் வாசித்து முடித்தேன்.

இந்திய சரித்திரத்தில்   மாபெரும் நிகழ்வுகளைக்கொண்டது  மொகலாய அரசர்களின் ஆட்சிக் காலம். அதில் பதினேழாம் நூற்றாண்டு மிகவும் தனித்துவமானது. மிக ஆழமாய் இன்றெனினும் அக் காலப் பகுதியின் சரித்திரம் வாசகனின் அறிதலில் தவறியிருக்க வாய்ப்பில்லை.  வெகுஜன வாசிப்பில்  பெரிதும் பேசப்பட்ட அனார்க்கலி – சலீம் காதல் அக்பர் கால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டது.  தீவிர வாசகர்களின் கவனத்தையும் அக்பர் காலம் வேறு காரணங்களில் வெகுவாக ஈர்த்திருந்தது. அக்பர் காலம் தொடங்கி ஜஹாங்கீர், ஷாஜகான் ஈறாக ஐந்து பேரரசர்களின் ஆட்சிபற்றிய விதந்துரைப்பில்லாத மொகலாய சரித்திரம் அதுகாலவரை எழுதப்பட்டிருக்கவில்லை; கதைகளும் தோன்றியிருக்கவில்லை. அத்தகு காலக் களத்தில் கதை விரித்த நாவல் ‘பெருவலி’.

இரண்டு பாகங்களாய் 167 பக்கங்களில் அமைந்த  இந் நாவலின் முதலாம் பாகம் ஷாஜகானின் ஆட்சியை மய்யப்படுத்தியது. அன்றைய அரசியல் நிலபரம் விளக்கமாகும்படி அக்பர் முதற்கொண்டு தொடர்ந்த பேரரசர்களின் ஆட்சியும், வாழ்வும்பற்றி அளவான விவரிப்பை நாவல் கொண்டிருப்பினும்,  அது ஷாஜகான் – மும்தாஜின் முதிர் காதலுக்கு குறிப்பாய் அழுத்தம் தந்திருக்கும்.

தக்காணத்து அரசதிகாரியாயிருந்த   ஷாஜகான் (அப்போது குர்ரம்) பதவியிலிருந்து நீக்கப்பட்டு அங்கேயே நிஜாம்சாஹியென்ற இடத்தில் தங்கவைக்கப்படுகிறார். அரசியல் சதுரங்கத்தின் காய் நகர்த்தல்களுடன் கதை அங்கிருந்துதான் ஹிஜ்ரா பானிபட்டின் பார்வையிலிருந்து  ஆரம்பிக்கிறது. கதைசொல்லியும் அவ்வப்போது அவனை இடைவெட்டி கதையை நகர்த்திச் செல்வார். எவரது பார்வையிலிருந்து கதை விரிகிறதென்ற மயக்கம் வாசகனுக்குத் தோன்றாதபடி கதையை நகர்த்தும் படைப்பாளியின் சாதுர்யம் சிறப்பு. நாவலில் ஒரு மீள்பார்வை நிகழ்கிறபோதுதான் இந்த கதைசொல்லிகளின் மாற்றம்கூட வாசகனுக்குப் புலனாகிறது.

 

இப் பாகம் ஷாஜகானை மய்யப்படுத்தியிருப்பினும் கதையெங்கும் நகர்ந்து திரியும் பாத்திரமாயிருக்கிறாள் ஷாஜகானின் அபிமானத்திற்குரிய மகளான ஜஹனாரா பேகம். அவளது விசுவாசமான பணியாள் பானிபட்டின் நீண்ட கால அரண்மனைச் சேவகத்தின் அனுபவங்கள் ஜஹனாராவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. அவளது அரசியல் ஆர்வமும் அது குறித்த நுட்பங்களின் புரிதலுமாக இப்பாகம் வளர்ந்துகொண்டு இருக்கையில், அவளது காதல் மனத்தையும் இப்பாகம் தெளிவாகப் புலப்படுத்தியிருக்கும்.

அரசியலின் சூதும் பொய்யும் வஞ்சமும் இரண்டு பாகங்களிலுமே நிறைந்தபோய்க் கிடக்கின்றன. நிஜாம் சாஹியில் வீட்டுக் காவல்போன்ற நிலைமையிலிருந்து தப்பி ஆக்ரா வருவதற்கான ஷாஜகானின்  தந்திரத்துடன்தான் முதலாம் பாகமே தொடங்குகிறது. ஜஹாங்கிர் சுகவீனம் காரணமாய் டெல்லியில்  ஒதுக்கப்பட்டிருந்த சமயத்தில் சகல அரசியல் சக்திகளையும் ஒன்றுதிரட்டி  ஆட்சியை ஷாஜகான் கைப்பற்றுவது, சக்கரவர்த்தியாக முடிசூடுவது எல்லாமே சூழ்ச்சிகளாலன்றி நிறைவேறுவதில்லை.

மனங்களில் விஷமேறிய மனிதர்கள் அதை பிறரில் பாய்ச்சிவிட தருணம் பார்த்தலையும்  சூழ்ச்சிகளின் நிலைக் களமாகவே முதலாம் பாகம் ஆகியிருக்கிறது.

ஜஹாங்கிரின் மனைவி நூர் மஹல் ஒரு விஷமாகவே ஜஹனாராவுக்கு ஆரம்பத்திலிருந்து தோன்றிக்கொண்டிருக்கிறாள். ஜஹாங்கிரை தன் காதலின் போதையுள் அடக்கி சகல அதிகாரங்களையும் தன்  கையகப் படுத்தியிருந்த நூர் மஹலின் நடத்தைகளும் வேறுமாதிரி இருந்திருக்க முடியாது. அதிகாரம் ஒருவரைக் கெடுக்கிறதென்பதும், முழு அதிகாரம் முற்றாகக் கெடுக்கிறதென்பதும் அவள் வழியிலேயே தரிசனமாகின்றது. படைப்பாளியின் விவரணைகளும் அவளின் இந்த இயல்பை  தெளிவாய் வெளிப்படுத்தியபடியே  இருக்கின்றன.

‘சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்திருந்த நூர் மஹலை அவர்கள் பார்த்து பல மாதங்கள் ஆகியிருந்தன. எனவே எல்லோரும் ஒருமுறை பார்த்தவிடும் ஆவலில் திரைகளை விலக்க முண்டியடித்தார்கள். அந்தச் சிறு சலசலப்பு செவியில் விழுந்ததும் நூர் மஹல் நாகப் படம்போல தலையைத் திருப்பிப் பார்த்தார்’ (பக்:49) என ஒரு இடத்தில் வரும். ஒரு அசௌகரியத்தின்  வெளிப்பாடே ஒரு சர்ப்பத்தின் எச்சரிக்கையும் சினமும் கொள்ளுமளவான விவரணை நாவலில் உண்டு.  ஜஹனாராவின் தங்கை ரோஷனாரா அரண்மனையிலிருந்த இன்னொரு விஷம். அவுரங்கசீப்பின் அனைத்து வஞ்சச் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாயிருக்கிறவள் அவள். அவளது நடத்தைகள், பேச்சுக்கள், பார்வைகள்கூட விஷம் கக்குவனவாகவே இருக்கின்றன. இத்தனைக்கும் மேலாக ஜஹனாராவுமே ஒரு கட்டத்தில் பாம்பாகத் தோற்றம் எடுத்துவிடுகிறாள், பாம்புகளின் மத்தியில் வாழ்வதில் தொற்றிய பாம்புக் குணம்போல. ‘இதைச் சொல்லும்போது ஜஹனாராவின் முகம் குருதிச் செம்மையுடன் சிவந்தது. கண்கள் விரிந்தன. கன்னக் கதுப்புகள்  விரிந்து இறுகின. சினந்து நிற்கும் பாம்பின் படம்போலிருந்தது அப்போது அவள் முகம்’  என பக்கம் 15இல் வர்ணிக்கப்பட்டிருக்கும்.

தக்காணப் படையெடுப்பில் சக்கரவர்த்தி ஷாஜகானுடன் பயணிக்கும் சுற்றத்தில்  நிறைமாதக் கர்ப்பிணியான அவரது மனைவி மும்தாஜும் இடம்பெற்றிருக்கிறாள். அவளது பதின்மூன்றாம் மகப் பேறு  போர்க்களத்தில்தான் நிகழ்கிறது. பன்னிரண்டு பேறுகளை சுலபமாகத் தாண்டிருந்தவளுக்கு அப்பேறு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தவிடுகிறது. மஹராஷ்டிரர்களுடனான அவ்யுத்தத்தில் வென்றுகொண்டிருந்தாலும் பேற்றுக் காலத்தில் உயிரிழக்கும் மும்தாஜின் சோகம் சக்கரவர்த்தியை வெகுவாகப் பாதித்துவிடும். கூடவிருந்து தாயாருக்கு அனுசரணை செய்யும்  ஜஹனாராவுக்கும் அச் சோகம் பெரிது. யுத்தத்தின் வெற்றியுடன் துக்கத்தையும் சுமந்தபடி  சக்கரவர்த்தி ஆக்ரா திரும்புவதுடன் நாவலின் முதலாம் பாகம் முடிவடைகிறது. அதிலிருந்து ஜஹனாராவின் பார்வையில் இரண்டாம் பாகம் விரிகிறது. அவளுக்கு மதம் சார்ந்த தெளிவுகள் ஏற்படுவதும், தன் சகோதரன் தாரா ஷிக்கோ போலவே காடிரியா சூபி மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதுமெல்லாம் இப்பாகத்திலேயே விரிவான பேசுபொருளாகின்றன.   கவிதையாய் இயங்கும் அவளது மனத்தின் மென்மையும் மேன்மையும் இப் பாகத்திலேயே அதிகமும் வெளிப்படுகின்றன. அவள் எழுதிய பதிவுகளினது ஆதாரத்தில் அப்பகுதி  மிக அவதானமாகக் கட்டியெழுப்பப்படுகையில் அசாதாரண கவனம் படைப்பாளியால் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை அவதானிக்க முடியும்.

ஷாஜகானின் சுகவீனம், தாரா ஷிக்கோ முடிக்குரியவனாக அங்கீகாரமாகுதல், அவுரங்கசீப்பின் எழுச்சி, சுயா மற்றும் முராத் ஆகியோர்களையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டு அவன் தொடுக்கும் போர்,  அப்போரை சக்கரவர்த்தி சார்பில் எதிர்கொள்ள தாரா ஷிக்கோ தலைமையில் சென்ற அரச தரப்புப் படையினர்க்கு விளைந்த பயங்கரமான தோல்வி, பின்வாங்கும் தாரா தொடர்ந்து நிகழ்ந்த  சாமுவார் போர்க் களத்தில் கைதியாதல், அவனது கொலைப்பாடு, கொலையின் கொடூரம், இறுதியில் அவுரங்கசீப் சக்கரவர்த்தியாய் முடிசூடுவதென  அனைத்தும் சரித்திரத்தை மீறாத நிகழ்வுகளாக துரோகத்தை விவரிக்கும் நாவலில் மிகவும் காத்திரமாகச் சொல்லப்பட்டுள்ளன.

ஆனால் அதில் காணாமல் போகும் பகுதி அவுரங்கசீப்பின் காலத்திலும் ஜஹனாரா வகித்த வலுவான அரசியல் பாத்திரம்.  தனது பாட்டியான நூர் மஹலைவிடவும்  அதி வல்லமை வாய்ந்த அரசதிகாரியாக விளங்கிய ஜஹனாராவாக அவள் நாவலில் இல்லை. சகோதர்களுக்கிடையிலான வேற்றுமைகளையும் பொறாமையினையும் களைவதற்காக சாம்ராஜ்யத்தையே நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றை  சகோதரர்களிடம் ஒப்படைக்கும் ஒரு திட்டத்தையும் அவள் ஒருபோது சமர்ப்பிக்கிறாள். வரலாற்றில் அது முக்கியமான ஒரு பகுதி. அதை அவுரங்கசீப் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, நாவலுமே அதை இலகுவாகக் கடந்து போய்விடுகிறது. தன்னை வரலாற்று நாவல் அல்லவெனச் சொல்லிக்கொள்ளும் ஒரு நூலில் இவ் விடுபடுதல்களைப் பொருட்படுத்தவேண்டியதும் இல்லைத்தான்.

ஷாஜகானின் சிறைப்பிடிப்பும், ஒன்பதாண்டுகள் நெடிய வீட்டுக் காவலும், ஜஹனாரா தன் அரசியல் அதிகாரங்களையெல்லாம் உதறி தந்தையின் இறுதிவரை உடனிருந்து உதவுவதும், ஷாஜகானின் மரணமும் நாவலில் அதிர்வெழும்படி சொல்லப்பட்டிருக்கும். தொடர்ந்து நிகழ்பவை சரித்திரத்தில் சோகத்தால் எழுதப்பட்டிருக்கின்றன. கல்வி கேள்விகளில் கலைகளில் கவிதையில் ஆன்ம விசாரத்திலென தன் துறைகளை மொகலாக சரித்திரத்தில் எந்த அரச குலப் பெண்ணுக்கும்  முடிந்திராத உன்னதவிடத்தை அடைந்திருந்த ஜஹனாரா சகலவற்றிலிருந்தும் ஒதுங்கி தனியனாய் வாழ்ந்து மடிகிறாள். அவ்வாறொரு முடிவு நேர்ந்திருக்கக் கூடாதெனவே வாசக மனம்  ஏங்குகிறது. வாசிப்பின் பின்னும் நினைவுகளில் இருந்துகொண்டு வாசகனைப் பெருவலி செய்கிறது.

நதிகளின் சமீபத்திலுள்ள தில்லி ஆக்கரா அரண்மனைகளில் இரவிலும் வெப்பம் தகித்துக்கொண்டிருக்கிறது. தைமூர் குடும்பத்தில் வேறு குல ஆண் கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அரண்மனைப் பெண்டிர் மணம் செய்வது அக்பர் காலத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பதால் மணமாகாத அரச குடிப் பெண்களின் காமத்தின் வெம்மை கனன்றெழுவதாகவே அரண்மனை இருந்திருக்க முடியும். மெஹருன்னிசாவின் கதை அதற்கொரு சின்ன உதாரணம். அரண்மனையில் விளைந்த வெம்மையின் மூலத்தை இங்கிருந்தே காணவேண்டும். இரவில் அதீத குளிரினதும், பகலில் கடு வெப்பத்தினதும் வதைப்பில் சூழலும் மனிதரும் வதைபடும் தட்ப வெப்ப நிலை வர்ணிப்பு நாவலில் க்ரிஷ்ம ருது சர்க்கம் மட்டும்கொண்ட இன்னொரு ‘ருது சம்ஹார’மாகவே இருக்கிறது.

இருள் பகலிலும் உறைந்துகிடப்பதாய்த் தோன்றும் நாட்களின் இரவுகள் தில்லி, ஆக்ரா அரண்மனைகளில் எப்படி இருந்திருக்கும்? முகலாய சாம்ராஜ்யத்தின் அழிவு அந்த இருண்மைக்குள்ளிருந்தே பிறக்கிறது. பகைவர்களுடனான யுத்தங்களில் வெற்றிகளைக் குவித்த பேரரசு, சோதரச் சண்டைகளால் அழிந்தே போகிறது. தைமூர் வமிசத்தின் ஆட்சியதிகாரம் தன் காலத்தில் அழிந்துபோக காரணமாகின்றான் அவுரங்கசீப். அதன் வலி ஜஹனாராவுக்கு மட்டுமில்லை, வாசகனுக்கும்  பெருவலியாய்ச் சேர்கிறது. அதனால் நாவலும் பொருத்தமாக ‘பெருவலி’ ஆயிற்று.

தெரிந்த வரலாற்றில் தெரியாத ஊடுகள் வழி கட்டமைந்து வாசிப்பின் பின்னரும் துயர்ப்படுத்தும் இந்நாவல், பின்னுரையில் சொல்லப்படுவதுபோல் சமகால அரசியலில் எங்கே பொருந்துமென்று புள்ளி வைத்ததுபோல் சொல்ல இயலவில்லை.  சூழ்ச்சியும், அதிகாரத்துக்கான யுத்தங்களும் கொடுமைகளும் வரலாற்றில் எங்கேதான் இருக்கவில்லையென இது குறித்து சமாதானம்தான் பட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த நாவலின் பலஹீனமான ஓரம்சத்தையும் இங்கே சுட்டிக்காட்டுவது அவசியம். நாவல் விரிந்து வருகையில் ஒரு சம்பவத்தின் பின்விளைவை வாசக அனுமானமாக விடாமல், அதையொரு பூடகத்தில் முன்னரே அறிவித்துவிடுவதாக நாவலில் பல இடங்கள்  வருகின்றன. உதாரணமாக, தாரா ஷிக்கோவின் தலைமையில் அவுரங்கசீப்பின் படைகளுக்கெதிராகச் செல்லும் அரச படைகளை வர்ணிக்கும் இடத்தைச் சொல்லலாம். ‘முகலாய ராணுவமும் ரஜபுத்திர சேனையும் சாமந்தர்களின் படையும் முன்னேறிச் சென்றன. அணிவகுப்பையும் படைவீரர்களின் வேகத்தையும் கண்டபோது வெற்றி எளிது என்றுதான் தோன்றியது. ஆனால் விதி தாராவுக்கு ஆயத்தமாக்கி வைத்திருந்தது வேறொன்று’ என வரும்போது தாரா ஷீக்கோவுக்கு வெற்றி கிடைக்கவில்லையென்பது வெகு முன்னதாகவே வாசகன் முன் வைக்கப்பட்டுவிடுகிறது. அதுவே மாற்ற முடியாத வரலாற்று நிகழ்வாக  வாசக ஞாபகத்தில் இருந்திருப்பினும் அவ்வகையான முற்கூறல் சரித்திர நிகழ்வுகளை மறப்பதின் வழி ஒரு நாவலாக பிரதியினுள் நுழைந்துகொண்டிருக்கும் வாசகனுக்கு அது உவப்பாக இருப்பதில்லை.

மற்றப்படி நாவல் களத்தை அருமையாக விரித்து, பாத்திரங்களை செப்பமாக வார்த்து ஜஹனாராவின் ஆன்ம தரிசனமாகவும், அதிகார போதையில் சோதரர்களிடையே சூதும் வஞ்சமும் துரோகமுமாய் நடந்து முடியும் ஒரு யுத்த காண்டமுமாய் நாவல் முடிவடைகிறது. அதற்காக படைப்பாளி கையாளும் மொழிநடை மிகுந்த முக்கியத்துவமுடையது. வரலாற்றுக் காலத்தினுடையதும், சமகாலத்ததுமான நிகழ்வுகள் வேறுவேறு நடையை  வேண்டிநிற்பவை. அவற்றை விலக்கி ஒரு மீறலாய்  விவரணத் தன்மையும், அறிவார்ந்த உணர்வுச் சிக்கல்களை விளக்குவதற்கான தன்மையும் கொண்ட ஒரு புதிய நடையை படைப்பாளி இந்த நாவலில் கையாண்டிருப்பது விசேஷம்.

நாவல் கதை விரித்த சரித்திர காலம் விசாலமானது. சற்றொப்ப 55 \ 60 ஆண்டுகள். அது விசாலித்துச் சென்ற நிலவெளியும் பெரிது. ஆயினும் அதை குறைந்தளவு பக்கங்களில்  தன்னைக் கட்டிறுக்கமாக அமைத்துக்கொண்டுள்ள  நாவல் வாசக அவதானத்தை  வலுவாகக் கோரி நிற்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here