- பேராசிரியர் அ.ராமசாமியின்  'அ.ராமசாமி எழுத்துகள்'  வலைப்பதிவில் நாடகவியலாளர் ப்ரசன்னா ராமஸ்வாமி பற்றியதொரு அறிமுகக் கட்டுரை ' நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள்' என்னும் தலைப்பில்  வெளியாகியிருந்தது. (ஆகஸ்ட் 19, 2017 )  இக்கட்டுரையில் அவர் ப்ரசன்னா ராமஸ்வாமியைத் 'தமிழின் முக்கிய நாடக ஆளுமையான ப்ரசன்னா ராமஸ்வாமி' என்பார்.  அத்துடன் 'தமிழகப் பரப்பிலிருந்து தனது நாடகங்களில் வழியாக, அவற்றை இயக்கும்போது கடைப்பிடிக்கும் நவீன வெளிப்பாட்டு முறையின் வழியாக  இந்திய அளவிலும், சில நிகழ்வுகளின் வழியாகத் தேசங்கடந்த பார்வையாளர்களிடத்திலும் அறியப்பட்டவராக இருக்கிறார் ப்ரசன்னா ராமஸ்வாமி'  என்றும் கூறுவார்.

ப்ரசன்னா ராமஸ்வாமி அவர்களைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றேன். என் முகநூல் நண்பர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார்.  அண்மையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும். அத்துடன் துயரையும் அடைய வைத்திருக்கும்.  அதில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:

"வலி. இந்த வலியின் கொடுமையிலிருந்து விடுதலை என்று சாவை யாசிப்பது துயரமான நிலை. வாழ்க்கை போல மரணமும் இயல்பாக, விரைவில் நிகழ்ந்து விட அருள் புரிய வேண்டும் தெய்வமே."

ப்ரசன்னா ராமஸ்வாமி அவர்கள் விரைவில் பூரண நலத்துடன் மீண்டிட வேண்டுவதுடன், பேராசிரியர் அ.ராமசாமியின் மேற்படி கட்டுரையான 'நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள்' என்னும் கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்  ப்ரசன்னா ராமஸ்வாமி பற்றிய சுருக்கமானதோர் அறிமுகத்தையும் இக்கட்டுரையின் வரிகளூடு  அறிந்துகொள்ள முடியும் என்பதால் . -  வ.ந.கிரிதரன் -


 நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள்   - பேராசிரியர் அ.ராமசாமி -

2017, ஜூன், 19 அன்று பெங்களூருவில் நான் பார்த்த கன்னட நாடகம் “வர்த்தமானதெ சரிதே”. அந்நாடகத்திற்கு நான் அழைக்கப்பெற்ற சிறப்புப்பார்வையாளன். நான் மட்டுமல்ல; கர்நாடகாவிலிருந்து இருவர், தெலங்கானாவிலிருந்து, டெல்லியிலிருந்து தலா ஒருவர் என இன்னும் ஐந்து சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர்; பொதுப்பார்வையாளர்களும் இருந்தனர். அனைவரையும் இழுத்துவைத்துப் பார்த்து ரசிக்கச் செய்த நாடக நிகழ்வு அது.

ஹிந்தியில் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற (2011) பேரா.காசிநாத்சிங்கின் சிறுகதையான ‘கவுன் தக்வா நகரிய லூட ஹொ (Kaun thagwa Nagariya Luta ho)’ வின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து  நாடகமாகத் தழுவி, வடிவமைத்து இயக்கியவர் தமிழின் முக்கிய நாடக ஆளுமையான ப்ரசன்னா ராமஸ்வாமி. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளித்த நிகழ்வு அந்தநாள். ப்ரசன்னாவோடு அந்நாடகத்தில் மேடையிலும் பின்னரங்கிலும் பங்குபெற்றவர்கள் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிபேசும் 18 மாணாக்கர்கள்.  தொழில்முறை நாடகக்குழுவின் வழியாக இல்லாமல், பயிற்சிபெறும் நடிப்புக்கலை மாணவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்நாடகத்தை - அதன் வடிவத்தை - நிகழ்த்துமுறையை- அழகியல் உணர்வையெல்லாம் இணைத்து ஒரு விமரிசனச் சொற்றொடராகச் சொல்ல நினைத்தபோது தோன்றியதே நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல் என்ற சொற்றொடர்.

நாடகப்பள்ளி ஒன்றின் கற்கைமுறையின் பகுதியாகப் பயிற்சி நாடகமொன்றை வடிவமைத்து, இயக்கி மேடையேற்றவரும் விருந்து இயக்குநர்கள்(Guest Directors) பெரும்பாலும் பிரதியளவில் சோதனைகளில் ஈடுபடுவதில்லை. ஏற்கெனவே நன்கு அறியப்பெற்ற செவ்வியல் நாடகங்களையோ, நல்திறக்கட்டமைப்புக்கொண்ட ஐரோப்பியப் புதுச்செவ்வியல் நாடகங்களையோ, நவீனத்துவ நாடகங்களையோ தெரிவுசெய்து பயிற்சியளித்து மேடையேற்றிக் காட்டிவிடுவர். அத்தகைய மேடையேற்றங்கள், அறியப்பெற்ற நாடகப்பிரதியின் பலமான நாடகீயக் கூறுகளினாலேயே ஓரளவு வெற்றிக்கான உத்தரவாதத்தை உறுதிசெய்யும்.  இயக்குநர் தரும் பயிற்சிகளின் சிறப்புகளும் வேலைவாங்கும் திறனும், பிரதியின்மீது இயக்குநர் உருவாக்கும் புத்தாக்க விளக்கங்களும் சேர்ந்து,  முழுமையான வெற்றியை உறுதியாக்கும்;  பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றுவிடும். இந்தப் பொதுப்போக்கிலிருந்து விலகலை விரும்புகிறவர்களுக்கு ஒரு பொதுக்குணமுண்டு. அவர்கள் தங்கள் காலத்தைப் பற்றிய விமரிசனத்தைப் பார்வையாளர்களுக்குத் தரவேண்டுமென்ற விருப்பமுடையவர்கள்; அந்த நோக்கத்தோடு நாடகக் கலைஞர்களைப் பயிற்றுவிப்பவர்கள். ப்ரசன்னாவின் இந்த மேடையேற்றம் அத்தகைய விலகலைக் கொண்டிருந்தது. நன்கு அறியப்பட்ட நாடகாசியரால் எழுதப்பெற்ற நாடகப் பிரதியைத் தனது தயாரிப்புக்குத் தெரிவுசெய்யாமல்,  கதையொன்றிலிருந்து பிரதியுருவாக்கம் செய்யலாம் என்பதில் தொடங்கி, நடிப்புப் பயிற்சி, உடை, ஒப்பனை, இசைக்கோர்வைகள் என அனைத்திலும் மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளித்ததோடு தனது அரங்கியல் கோணத்திற்கேற்ப நாடகத்தை வடிவமைத்திருந்ததை நாடகமேடையேற்றத்தின்போது பார்க்கமுடிந்தது. அடுத்தநாள் நடந்த தேர்வுக்கான உரையாடல் நிலையில் மாணவர்கள் வெளிப்படுத்திய சொல்லாடல்களிலும் அவர் உருவாக்கியிருந்த புரிதலைக் கேட்க முடிந்தது.

தொழில்மயமாதல், நகரியமாதல் என்பதை வளர்ச்சியாகக்கருதி உருவாக்கப்பெற்ற பொருளாதார நடைமுறைகள், 1990 -களில் நுழைந்த தாராளமயமாதல், தனியார் மயமாதல், உலகமயமாதல் போன்றவற்றால் பெருவீக்கங்களை உருவாக்கியுள்ளன.  நகரங்களாக இருந்தவை பெருநகரங்களாகவும், பெருநகரங்கள் மாநகரங்களாகவும் வளர்ந்து கிராமங்களை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருக்கின்றன. கிராமத்து மனிதர்களை நகரங்களின் பெருவயிற்றுக்குள் இழுத்துச் சக்கையாக்கிப் பிழிகின்றன. எளிய வாழ்க்கைமுறைமைகளைச் சிதைத்துவிட்ட நகரியப்பிருமாண்டங்களால் தொலைந்துபோனவற்றுள் முதன்மையானது சுற்றுச் சூழல். பிருமாண்டங்களால் மட்டுமல்லாமல், நாகரிகம், பொழுதுபோக்கு, கூட்டத்தோடு இணைதல் போன்றவற்றின் பெயரால் திசை திருப்பப்படும் மக்கள், தங்களின் அடிப்படை ஆதாரங்களான நிலம் நீர் காற்று காடு என அனைத்தையும் இழந்து நிற்கின்றனர்.  அதன் விளைவால் அவர்களது வாழ்க்கையின் நகர்வுகள் நகரங்களை நோக்கியதாகிவிட்டன என்பது இந்தியா சமூகத்தின் நிகழ்கால இயங்குநிலை. இந்த இயங்குநிலையில் பலன்பெறும் அரசியல் சக்திகளை அம்பலப்படுத்துவதை  வர்த்தமானதெ சரிதெ நாடகம் முதன்மையாகக் கொண்டிருந்தது. அரசு என்ற அமைப்பின் மீதான விமரிசனத்தை வெளிப்படையாக முன்வைக்கும் நாடகம், அந்த அமைப்பைக் கைப்பற்றுபவர்களின் -அரசியல் கட்சிகளின் - உள்நோக்கங்களையும் அவர்களைப் பின்னின்று இயக்கும் பன்னாட்டு நிதிமூலதனக் குழுமங்கள், அவற்றின் உற்பத்திப் பொருட்களின் வழியாகக் கிடைக்கும் கொள்ளை லாபம், அதனைப் பங்கிட்டுக்கொள்வதின் வழியாக நடைபெறும் சுரண்டல் என விரிவாகப்பேசுகிறது.
 இதையெல்லாம் பேசும் நாடகங்களை எளிமையான தெருநாடகங்கள் அல்லது பிரச்சார நாடகங்கள் என்று வகைப்படுத்திக் கண்டுகொள்ளாமல் ஒதுக்குவதுண்டு. தினசரித் தாள்களில் வாசிக்கப்படும்  செய்திகளைக் கொஞ்சம் உரத்த குரலில் வாசித்துக்காட்டுவதுபோல நடிகனின் குரலை மட்டும் பயன்படுத்திச் சொல்லும் நாடகங்கள் பலவற்றைப் பார்த்தவர்கள் அப்படி ஒதுக்குவதைக் குறையென்று சொல்லவும் மாட்டார்கள். அன்றாட நடப்புகளை -அரசியலைச் சொல்வதுமட்டுமே முதன்மையான நோக்கம்; அதை நிறைவேற்றினால் போதும் என்ற அளவில் நிகழ்த்தப்படும் நாடகங்களை அப்படி ஒதுக்கியதில் எனக்கு வருத்தம் இல்லை; உடன்பாடே. அத்தகைய நிகழ்வுகளை எப்படித் தனது அரங்கேற்றங்களில் சுலபமாகக் கடக்கிறார் என்பதற்குப் ப்ரசன்னாவின் நாடகப் பார்வையைக் கவனித்து அறியவேண்டும். அப்படிக் கடப்பதற்காகப் பலநேரங்களில் கவிதை, ஓவியம், இசையொழுங்கு போன்றவற்றின் உதவியை நாடுகிறார். அத்தோடு சடங்குகளோடு தொடர்புடைய அடவுகளின் அசைவுகளையும் அதன்வழியாகக் கடந்துவரும் மெய்ப்பாடுகளின் நீட்சியையும் பயன்படுத்துகிறார்.

பாத்திரங்களின் சந்திப்பால் அல்லது முரண்பாட்டால் உருவாகக்கூடியவை காட்சிகள்; அக்காட்சிகளின் தொகுப்பு அங்கம். அங்கங்களின் இணைவே நாடகப்பிரதி என்பது அடிப்படையான அறியப்பெற்ற வடிவம். இந்த வடிவம் பாத்திரங்களின் ஏற்ற இறக்கங்களின் தொடர்ச்சியால் நகர்த்தப்படும். மரபான இந்த வடிவம் சமகால வாழ்வையோ, அரசியலின் உள்ளோடும் ஏமாற்றுத்தனங்களையோ முன்வைக்க ஏற்றவையல்ல என்பதைச் சொன்னவர்களின் முதன்மையானவர் ஜெர்மானிய நாடகக்கோட்பாளர் பெர்ட்டோல்ட் ப்ரக்ட். எல்லா நிகழ்வுகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றாலும் அதன் ஒரு ஏற்றத்தோடு இன்னொன்று தொடர்ச்சி காணவேண்டுமென்பதில்லை. தொடங்கிய சிறு ஏற்றத்திலேயே அதன் முடிவும் நிகழ்ந்துவிடுவதுதான் நமது காலத்தின் அமைப்பு. பெரும்பாலும் தற்காலிகத் தன்மைகொண்டவை அவை. தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகளைக் கவனித்தாலே அதன் சலிப்பான போக்கும் அதற்குள் செயல்படும் தொல்படிவக்கூறுகளும் புலப்படும். ஒவ்வொருநாளும் நமது தொலைக்காட்சி ஊடகங்கள் நடத்தும் அரசியல் விவாதங்களை நாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஏற்கெனவே வெகுமக்கள் மனதிற்குள் பதிந்துகிடக்கும்   தேசபக்தி, சமூகநீதி, எதிர்காலம்,புரட்சி, வறுமையொழிப்பு போன்ற மரபான சொற்றொடர்களின் தொன்மத்தன்மையையும்,   அண்ணா, அம்மா, தலைவர், தளபதி, சிந்தனையாளர், காவலர், குன்று, போன்ற பெயர்ச்சொற்களின் வழியாகக் கட்டமைக்கப்படும் தொல்படிவங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றைக் கீறிக் காட்டும் சொல்லாடல்கள் நிகழ்வுகளாக்கப்படவேண்டிய காலமிது. இதனைச் சரியான வழியில் நிகழ்த்திக்காட்ட கீழ்த்திசை நாடுகளின் நாட்டார் நாடக வடிவங்களில் காணப்படும் சொல்லுதல் -நிகழ்த்துதல் -அடிக்கோடிடுதல் என்பதான வடிவமுறை ஏற்றது. குரல்மொழியால் சொல்லுதலையும், உடல்மொழியால் நிகழ்விப்புகளையும், இசை, ஒப்பனை, ஒளிக்கோர்வை போன்றவற்றால் அடிக்கோடிடுதலையும் சம அளவில் கலக்கும் உத்தியைக் கையாளும் ஓர் இயக்குநரால் பிரச்சார நாடகம் அழகியலும் கோட்பாடும்கொண்ட நாடகமாக ஆகிவிடும். பிரெக்டிய காவ்யபாணி அரங்கின் அழகியல் சிறப்பு அது.

 இந்த வடிவத்தில் திரும்பத் திரும்பச் சொல்வதுபோன்ற தன்மை இருந்தாலும், வாழ்க்கையின் அலுப்பை, அதன் ஆழத்திற்குள் இருக்கும் ஏமாற்றுத்தனங்களை அதன்வழியாகவே தான் சொல்லவேண்டியுள்ளது. இதனைத் தனது அரங்கியல் அழகியலாக - இயக்குநர் பார்வையாகக் கொண்டவராகத் தொடர்ந்து வெளிப்படுகிறார் ப்ரசன்னா ராமஸ்வாமி. 90 நிமிடங்கள் நிகழ்த்தப்பெற்ற வர்த்தமானதெ சரிதெவிலும் திரும்பவரல் கூறும், நடிகர்களின் அசைவுகளும் அதனால் உண்டாகும் கோடுகளும் பார்வையாளர்களைத் திசைதிருப்பும் வாய்ப்பை உருவாக்கின. அப்படி உருவாகும்போது இசைக் கோர்வைகளாலும் ஒளியமைப்பின் வழியாக உருவாக்கப்படும் உணர்வூட்டல் வழியாகவும் மேடையை இன்னொரு தளத்திற்கு நகர்த்த முடியும். அந்நகர்த்தல் இந்நாடகத்தில் முழுமையாக நடக்கவில்லை. மஞ்சள், பளிச்சிடும் வெண்மை போன்றவற்றின் வழியாக உருவாக்கப்பட்ட குறியீடும், பலவண்ணங்களைத் தாங்கிய கைப்பொருட்களின் வழியாகச் சொல்ல முயன்ற அர்த்தங்களும் குரல்மொழியோடு இணைந்து புரிதலைச் சரியாகவே வெளிப்படுத்தியதைப் பார்வையாளர்களின் ரசிப்புக்கான சலனங்கள் வழியாக உணரமுடிந்தது.

தமிழகப் பரப்பிலிருந்து தனது நாடகங்களில் வழியாக, அவற்றை இயக்கும்போது கடைப்பிடிக்கும் நவீன வெளிப்பாட்டு முறையின் வழியாக  இந்திய அளவிலும், சில நிகழ்வுகளின் வழியாகத் தேசங்கடந்த பார்வையாளர்களிடத்திலும் அறியப்பட்டவராக இருக்கிறார் ப்ரசன்னா ராமஸ்வாமி. அப்படி அறியப்படக் காரணமாக இருப்பது அவரது நாடகங்களில் வெளிப்படும் கலையியல்கோட்பாட்டோடும் அரசியல் புரிதலும் என்பதை உறுதியாகக் கூறலாம். அந்தப் புரிதலோடு, தமிழின் நாடக இயக்குநர்களில் நிகழ்கால அரசியலையும், அதன் இயங்கியலையும், அதற்குள் செயல்படும் வெகுமக்களுக்கெதிரான போக்கையும் சுட்டிக்காட்டும் அரங்கியல் ஆளுமை ப்ரசன்னா ராமஸ்வாமி என உறுதியாகக் கூறுவேன். அவரது இயக்கத்தில் மேடையேற்றப்பெற்ற ஒன்றிரண்டு நாடகங்களைப் பார்த்துவிட்டு இப்படிச்சொல்லவில்லை. இதுவரை அவர் இயக்கியுள்ள 25 நாடகங்களில் பாதிக்கும் மேற்பட்ட நாடகங்களைப்  பார்த்தவன் என்ற நிலையில் இதனை உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு நாடக இயக்குநரின் பார்வைக்கோணமும், அரங்கியல் அழகியலும், நவீன வெளிப்பாட்டு முறைகளும் ஒன்றோடொன்று இணைந்து வெளிப்படும் அவரது மேடையேற்றங்களைப் பார்த்தவர்கள் யாரும் இதனை ஒத்துக்கொள்ளவே செய்வர்.

https://ramasamywritings.blogspot.com/2017/08/blog-post_19.html


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here