erambu_suppaiahT.Sivapaluகலைஞர்கள் எமது சமுதாயத்தை இன்புற வைப்பவர்கள் என்னும் அடிப்படையில் பிறக்கும்போதே கலைமகளின் அருளைத் தமதாக்கிக்கொண்டு பிறக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக ஈழத்துக் கலைஞர்களும் திகழ்ந்துள்ளார்கள். சமுதாயத்தில் மிகப் பிரபலமானவர்களாகவும், மக்களால் மிகவம் மதிக்கப்பட்டவர்களாவும் அவர்கள் காணப்பட்டுள்ளனர். கலைரசிகர்களால் நன்கு காமுறப்பட்டவர்கள், பெருமைப் படுத்தப்பட்டவர்கள் நல்ல கலைஞர்கள். இசை, நடனக் கலை மரபில் ஈழத்தில் தலைசிறந்துவிளங்கிய கலைஞர்களுள் நடனக் கலை ஆசான் அமரர் ஏரம்பு சுப்பையா முக்கியமானவர். அவர் விடுத்துக் சென்ற கலை இன்றும் கொடிகட்டிப் பறக்கின்றது.

ஈழத்திருநாடு பன்நெடுங்காலமாக கலை இலக்கிய வளர்ச்சியில் தனக்கான ஒரு தனியிடத்தைப் பெற்றுவந்துள்ளது. பரதநாட்டியம், கிராமியக்கலைகள், நாட்டுக்கூத்துகள் என்பன தமிழரின் தனித்துவம் பேணப்பட்டுவந்துள்ளமையை வரலாறு எமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொலநறுவையில் உள்ள சிவன் ஆலயத்திலும், கந்தளாயில் இருந்து விஜயராஜ ஈஸ்வரத்திலும் தேவதாசியாட்டம் அல்லது சதுராட்டம் எனப்படும் நாட்டிய வகைகள் இறை பக்தர்கள் அல்லது தாசர்கள் எனப்படுவோரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன என்பதனை ஈழத்திற்கு வருகை தந்திருந்த மொறோக்கோ நாட்டுப் பயணியாகிய இபன்பட்டுட்டா 1244ல் குறிப்பிட்ட  வரலாற்றுக்குறிப்பு, மற்றும் இங்கு பதியப்பட்டுள்ள கல்வெட்டுக்களாலும் அறியமுடிகின்றது. இபன்பட்டுட்டாவின் குறிப்பில் 500க்கு மேற்பட்ட தேவரடியார்கள் இருந்துள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்கள இலக்கியங்களும் நடன, கலை நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்கள் இந்து ஆலயங்களில் இடம்பெற்றுள்ளமையை குறிப்பிட்டுள்ளன.

ஐரோப்பியர்களின் வருகையின்பின்னர் குறிப்பாக போர்த்துக்கீசர்காலத்தில் இந்து ஆலயங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் கோயில்களில் இடம்பெற்று ஆலயங்களால் வளர்க்கப்பட்டுவந்து கலைகள் கவனிப்பாரற்று அழிந்தொழிந்துபோகும் நிலை ஏற்பட்டது. புpன்னர் வந்த ஒல்லாந்தர் மற்றும் ஆங்கில அரசுகளின் காலத்தில் ஓரளவு மத சுதந்திரம் காணப்பட்டமையினால் ஆலங்கள் புத்துயிர் பெறத்தொடங்கின. இதனால் சதுராட்டம் எனப்படும் நடனங்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்படுவோரால் மேற்கொள்ளப்படும் நிலை உருவாகியது எனினும் நீண்ட கால இடைவேளைக்குப் பின்னர் இந்தியாவில் இருந்து கலைஞர்களை தருவிக்கவேண்டிய நிலைப்பாடு காணப்பட்டது.

இந்தியாவிலும் எமது பாரம்பரியக் கலைகளை அழியவிடாது பாதுகாக்கவேண்டும் என்னும் உத்வேகம் முளைவிடத்தொடங்கிய காலத்தில் பரத கலைமாமணி ருக்மணிதேவி அருண்டேல், திரு. கிருஷ்ண ஐயர் போன்றோர் பரதக்கலையை உயிர்ப்பிக்கப் பிரயத்தனங்கள் செய்தனர். இதன்விளைவாக அண்ணாமலைச் செட்டியார் போன்றோர் சதுராட்டம் என்பதனை மாற்றியமைத்து “பரத நாட்டியம்” என்னும் பெயர் இடப்பட்டது. ஆங்கில ஆட்சிக்காலத்தில் கண்டுகொள்ளப்படாமலும் வேண்டுமென்றே இழித்துரைக்கப்பட்டு வந்ததுமான நடனக் கலை புத்தியிர் பெற்றகாலத்தில்தான் திரு. ஏரம்பு சுப்பiயா அவர்கள் நடனத்தைக் கற்றுக்கொள்ள அடியெடுத்துவைத்தார். தந்தையின் வழி நாட்டுக்கூத்துக்கலையில் ஈடுபட்டு  பெண்வேடம் தரித்து நடித்துவந்த இவரிடம் இயல்பாக கலைத்திறன் மிளிர்வதனை கலைப்புலவர் க. நவரத்தினம், மகேஸ்வரி அம்மாவும் நன்கு அவதானித்து அவரை ஊக்குவித்துவந்தனர். அவரிடம் குடிகொண்டுள்ள திறமையினைக் கண்ணுற்ற பெற்றோர் அவரை தமிழகத்திற்கு அனுப்பி  நடனக் கலையைக் கற்றுக்கொள்ள அனுமதியளித்தனர். 1940இல் தமிழகம்சென்ற அவர் காரைக்குடி இராமகான சபாவிலே ஒரு நடிகராகப் பயிற்சிபெற்றார். திரு. மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமும் பின்னர் சென்னைக்குச் சென்று அங்கு கலாநிதி கோபிநாத்தின் நடன நிகேதனில் கேரளத்திற்குரிய பாரம்பரிய நடனமாகிய கதகளியையும் கிராமிய நடனத்தையும் கற்றார். இதனால் தமிழ்த் திரையுலகில் ஜெமினி படத்தயாரிப்பு நிறுவனத்தின் ‘சந்திரலேகா’, ‘சக்கரதாரி” போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இக்காலத்தில் ஸ்டண்ட் சோமுவிடம் வாட்பயிற்சியினையும் அவர் பெற்றுக்கொண்டார். பல்திறன் மிக்கவராக மிளிர்ந்த அவர் தான் கற்ற கலையை மாணாக்கருக்கு மிக நேர்த்தியாகக் கற்பிக்கும் திறனையும் ஆர்வத்தையும் கொண்டிருந்தார். ஈழத்தின் வடபாலமைந்த இசைஞான பூமி என வர்ணிக்கப்படும் இணுவில் பதியில் பாரம்பரிய இசைக்குடும்பத்தில் 13.02.1922இல் பிறந்தவர் கதிர்காமார் ஏரம்பு சுப்பiயா அவர்கள்.

கலை
 திருமதி சாந்தினி சிவநேசன் யாழ்ப்பாணத்தில் நடனக்கலை ஆர்வலர் வி.ஆர். இராசநாயகம் அவர்கள் 1948ல் ஒரு நடனக்கல்லூரியை ஆரம்பித்தார். அதில் சுப்பையா அவர்கள் சிலகாலம் கலைப்பணியாற்றினார். இதன்  காரணமாக வட இலங்கை  சங்கீத சபை இவருடைய சிறந்த ஆற்றலையும், கலைப்பணியையும் பாராட்டிச் சான்றிதழை வழங்கிக் கௌரவித்தது. மீண்டும் இந்தியா சென்று கலை நுட்பங்களைக் கற்றுத்தேறி மீண்ட அவர் கொக்குவில் கந்தையா சின்னப்பிள்ளை ஆகியோரின் மகள் பூரணத்தை திருமணம் செய்து கொக்குவிலில் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்.

அயராத உழைப்பும் கலைக்காகவே வாழ்ந்து வந்த இவருக்கு ஈழத்துப் பிரபல கலை அபிமானிகள் ஆதரவுக் கரம் நீட்டினர். ஏன். புரம், கலையரசு சொர்ணலிங்கம், திருவாளர்கள். ஏ.பி. நடராஜா, டபிள்யு. என். குமாரசுவாமி, என். தம்பிரத்தினம், கலைப்புலவர் நவரத்தினம் திருமதி மகேஸ்வரிதேவி நவரத்தினம் என்போரைக் குறிப்பிடலாம்.  முதன் முதலில் அரசாங்கப் பாடசாலையின் கலை ஆசானாக நியமனம் பெற்றவர் ஏரம்பு சுப்பபையா என்றால் அவரின் கலை பிரபலமடைந்தமையே காரணமாககும். ‘கலாபவனம்’ எனப்பெயரிய நடன நிறுவனத்தை ஆரம்பித்து நடனக்கலையை பிரபலமடையச்செய்ததோடு பரதக்கலைபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் ஏரம்பு சுப்பையா அவர்கள். முதன்முதல் பரதக்கலை ஆசிரிய நியமனத்தை இலங்கையில் பெற்றுக்கொண்டவரும் அவரே. அவரது ஆற்றலையும் வித்துவத்தையும் பாராட்டி அவருக்கு “கலைச்செல்வன்” என்னும் பட்டத்தையும் “அபிநய அரசகேசரி” என்னும் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார் என்றால் அவரிடம் குடிகொண்டிருந்த கலைத்திறன் எத்தகையது என்பதனை உணர்ந்துகொள்ளமுடிகின்றது. தனக்குப்பின்னர் தனது கலைவாரிசாகத் தனது மூத்தபுதல்வி சாந்தினி சிவநேசனை இந்தியாவிற்கு அனுப்பி அடையார் லஷ்மண ஐயரிடம் பரதக்கலையையும், கலாநிதி கோபிநாத்திடம் கதகளியையும் பயிற்றுவித்து அரங்கேற்றமும் காணவைத்தார். சாந்தினி இன்று ஆசிரிய கலாசாலையில் நடன விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார். ஏனைய இரு புதல்விகளான நந்தினி கிரித்திகாயினி ஜெகதீஸ்வரன்,  குமுதினி ஸ்ரீகாந்தன் ஆகியோர் சாந்தினியால் நடனம் கற்பிக்கப்பட்டவர்கள் பின்னர் அடையார் லஷ்மண ஐயரிடமும் பயின்றவர்கள். தந்தை வழியில் கலையை வளர்க்கும் பணியில் கனடிய மண்ணில் தன்னடக்கத்தோடு செயற்பட்டுவரும் நடன ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சுதந்திரத்தை முன்னிட்டு வருகைதந்திருந்த எலிசபெத் மகாராணியாரினதும் அன்றை தேசாதிபதியாக இருந்த கொத்தலாவலையின் முன்னிலையிலும் கலைநிகழ்ச்சியைச் செய்துகாட்டி பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்ட ஒரு உன்னத கலைஞராக அவர் விளங்கியவர். நடன ஆசிரியராக அரசாங்கப்பாடசாலையில் நியமனம் பெற்ற சுப்பையா அவர்கள் முதன்முதலில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரிய பணியை ஆரம்பித்தார். பின்னர் இராமநாதன் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் நடன ஆசிரியராகப் பணியாற்றி பல்வேறு இளங்கலைஞர்களை உருவாக்கியுள்ளார். இவரிடம் நடனத்தைப் பயின்றுகொண்டு மாணவர்கள் நடன ஆசிரியர்களாக அரசாங்கப்பாடசாலைகளில் நியமனம் பெற்றுக்கொண்டனர். இராமநாதன் கல்லூரியில் இராமாயண நாட்டிய நாடகத்தை மேடையெற்றுவதற்கான பணியின் போது மரணதேவதை அவரை அழைத்துவிட்டாள். எதிர்பாராத அவரது இழப்பு ஏரம்பு சுப்பையாவின் குடும்பத்தை நிலைகுலைய வைத்திருந்தது. மூன்று பெண்பிள்ளைகளில் சாந்தினியைவிட மற்றையவர்கள் இருவருமே குழந்தைப்பருவத்தில் இருந்தபோது தந்தையின் இழப்பு அவர்களை மிகவும் பாதித்திருந்தது. அதற்குமேலாக ஏரம்பு சுப்பையா அவர்களை நம்பியிருந்த கலையுலகிற்கு ஒரு பேரிடியாகவே அவரது மறைவு ஈடுசெய்யமுடியாததாக அமைந்துவிட்டது. இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டுசென்று மேடையேற்றிப் புகழ்பரப்பி வாழந்த ஒரு உன்னத கலைஞனின் இழப்பை முழு இலங்கையுமே நினைவுகூர்ந்து மௌனித்துக்கொண்டது.

கொக்குவிலில் அமைந்துள்ள கலாபவனம் 1956ல் ஆரம்பிக்கப்பட்டபோது கலையரசு கே.சொர்ணலிங்கம், தி.சம்பந்தன் போன்ற நண்பர்களின் உதவியும் ஏ.ஜி.ஐயாக்கண்ணு தேசிகர், த. ராஜலிங்கம், ஏ.எஸ். இராமநாதன், எஸ். சோமஸ்கந்தசர்மா, பி.எஸ். ஆறுமகம்பிள்ளை, ஆர் விஸ்வநாத ஐயர் முதலிய பிரபல கலைஞர்கள் பங்குபற்றினர். நுடனக் கலையின் சிறந்த ஒரு மையமாகவே இது மிளிர்ந்தது. பாடசாலை நேரங்கள் தவிர்ந்த நேரங்களி; அவரது பணி “கலாபவனத்தோடு” ஒன்றித்திருந்தது. நடனக் கலையை வளர்ப்பதற்காக அல்லும்பகலும் பாடுபட்டு உழைத்துவந்தார். அவரின் மறைவுக்குப்பினர் அவரின் புதல்வி திருமதி சாந்தினி சிவநேசன் அப்பணியைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் பயிற்றுவித்து மேற்கொண்ட நிகழ்ச்சிகளில் இவரது மாணவிகள் முதலிடத்தைத் தட்டிக்கொண்டு பரிசில்களை வாங்கி பெருமையைக் குவித்துவந்தனர். 1956ல் கொழும்பில் நடந்த நிகழ்ச்சியைப் பார்த்த உணவு அமைச்சின் செயலாளராகவிருந்த திரு.கே.ஆழ்வாப்பிள்ளை இவருக்கு ஒரு தங்கப்பதக்கத்தை வழங்கிக்கௌரவித்தார். 1958ல் யுனஸ்கோ நடத்திய கிராமிய நடனப் போட்டியில் கனகரத்தினம் மகாவித்தியாலய மாணவர்கள் முதலிடமட் பெற்றனர். 1959ல் டெல்கியில் இடம்பெற்ற விவசாய பொருட்காட்சி விழாவில் ஆந்திர கிராமிய நடனக்குழுவினருடன் நடனமாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரால் வடிவமைக்கப்பட்டு மேடையேற்றிய நிகழ்ச்சிகள் அநேகம் அவற்றுள் சதி, அல்யா, சுகன்யா, பாமா விஜயம், ஊர்வசி, குறிஞ்சிக்குமரன், தம்பியர் மூவர், திருவெம்பாவை, பஸ்மாசரமோகினி, காணிநிலம், காம தகனம், யேசுபிறந்தது, சூடாமணி, போன்றன குறிப்பிடத்க்க நாட்டிய நிகழ்ச்சிகளாக மக்கள் மத்தியல் பிரபலமடைந்;திருந்தன. நடனம், நாட்டுக்கூத்து என்பனவற்றில் கைதேர்ந்திருந்த அவர் கண்டிப்புமிக்க ஒரு நடன ஆசானாகத் திகழ்ந்ததோடு சமுதாயத்தில் கீழ்நிலையில் வைத்துக்கணிக்கப்பட்ட நடனத்தை உயர்நிலைக்குக் கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறமை காரணமாக இலங்கையின் பிரபல பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தினபதி முதலியன செய்திகளைப் பிரசுரித்ததோடு இவரது நேர்முக உரையாடல்களையுமம் கட்டுரைகளுக்கும் முக்கியம் கொடுத்துவந்துள்ளன. கலைத்துறையில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்திருந்த நடன ஆசான் ஏரம்பு சுப்பையா அவர்களின் பணி கலையுலகம் உள்ளளவும் நினைவிற்கொள்ளத்தக்கது.  

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here