உயில் மற்றும் சித்தம் அழகியார் ஏற்பாட்டில் வ.ந.கிரிதரன் எழுதிய “குடிவரவாளன்” என்ற நாவலின் அறிமுக நிகழ்வு 15.05.2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. நிகழ்வுக்கு குப்பிழான் ஐ.சண்முகன் தலைமை வகித்தார். அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நூல் தொடர்பான உரையை வேல் நந்தகுமார், ஜி.ரி கேதாரநாதன் ஆகியோர்  நிகழ்த்தினர். நன்றியுரையை சித்திராதரன் நிகழ்த்தினார்

-  இன்று , மே 15, 2016, பருத்தித்துறை ஞானாலயத்தில் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலின் அறிமுக நிகழ்வும், கலந்துரையாடலும் நடைபெற்றது. அதனை மருத்துவர் திரு. எம்.கே.முருகானந்தன் தனது வலைப்பதிவில் பதிவு செய்திருந்தார் ( http://suvaithacinema.blogspot.ca/?view=classic ).  அதனைப் 'பதிவுகள்' வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். -  பதிவுகள் -


பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அவர்களது புதிய நூலான குடிவரவாளன் நாவலுக்கான அறிமுக நிகழ்வு இன்று ஞாயிறு மாலை (15.05.2016) பருத்தித்துறை ஞானாலயத்தில் நடைபெற்றது. நீண்ட கடும் வெக்கையின் பின்னரான மழை காரணமாக 3.30 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டம் சற்று தாமதமாகவே ஆரம்பித்தது.

குப்பிளான் சண்முகம் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மௌன அஞ்சலியின் பின் கூட்டம் ஆரம்பமானபோது திரு.சு.குணேஸ்வரன் நூல் அறிமுகவுரையை நிகழ்த்தினார். கிரிதரன் அவர்களின் படைப்புலகம் பற்றியதாகவும், அவரது இணைய இதழான பதிவுகள் பற்றியும் குணேஸ்வரன் விபரமாகக் கூறினார். கிரிதரனின் ஐந்து குறுநால்கள் பற்றிக் குறிப்பட்டு அவை ஒவ்வொன்றும் மிகவும் வித்தியாசமான படைப்புகள் என்று கூறினார். அதில் ஒன்று வவுனியா அருகான கிராமம் ஒன்றில் வாழும் ஒரு சிங்கள குடும்பத்துடனான தமிழ் குடும்பத்தின் நட்பு பற்றியும், அந்தக் சிங்கள குடும்பம் போராட்ட அமைப்பொன்றினால்  கொலை செய்யப்பட்ட கொடுரம் பற்றியும் பேசியதைக் குறிப்பிட்டு நூலாசிரியரின் பரந்த நோக்கை சிலாகித்தார். வன்னி மண்ணின் வளத்தை மிக விபரமாக சித்தரிப்பது மற்றொரு குறுநாவல் என்றும் குணேஸ்வரன் குறிப்பிட்டார். கிரிதரன் தான் முன்னர் எழுதிய அமெரிக்கா என்ற நூலின் தொடர்ச்சி போன்றதுதான் இந்த புதிய நாவல் என அதை அறிமுகப்படுத்தும் போது குறிப்பிட்டார்.

கிரிதரனின் பதிவுகள் இணையத் தளத்தின் விசாலித்த இலக்கியப் பரப்பு வெளி பற்றியும் 2000 ஆண்டு முதலான அதன் தொடர் வருகை பற்றியும் குறிப்பட்டபோது, இணையத்தில் எனது எழுத்துப் பயணம் பதிவுகள் தளத்திலேயே ஆரம்பித்ததை நினைத்ததும் அதற்கு கிரிதரன் வழங்கிய ஒத்துழைப்பையும் ஆதரவும் நினைத்து மகிழ்ந்தேன்.

குப்பிளான் சண்முகம் தனது தலைமையுரையில் தமிழ் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சி மற்றும் இன்றைய போக்குகள் பற்றி தொட்டுப் பேசினார். புலம் பெயர் அகதி வாழ்வின் இருண்டதும் சவால் மிக்கதுமான பக்கங்கள் பற்றிய கிரிதரனது நாவல் நுணுக்கமாகவும் விரிவாகவும் பேசுவதாக குறிப்பிட்டார்.

நூல் பற்றிய மதிப்புரையை திரு.வேல் நந்தகுமார் மிகவும் சிறப்பாக செய்திருந்தார். அவரது கணீரென்ற குரலும் தெளிவான உச்சரிப்பும் விரிவான மதிப்பீடும் குறிபிடத்தக்கதாக இருந்தது. கனடா செல்லும் கனவோடு புறப்பட்டவன் அமெரிக்காவில் இறக்கப்பட்டு படும் அவஸ்தைகளையும் அங்கு தொழில் பாரக்க முயன்ற போது சந்தித்த சவால்களையும், பாரபட்சங்களுக்கு ஆளாவதையும் அனுபவபூர்வமாக சித்திரித்து இருப்பதாகக் கூறினார்.

எழுத்தாளர் குணேஸ்வரன் நூல் அறிமுக உரை.

83 கலவரத்தின் போது கொழும்பு மாநகரில் அரங்கேறிய இனக்கொலை கொடுரங்கள் பற்றிய குறிப்புகள், அந்த நேரத்தில் பிறந்தே இருக்காத தனக்கு புதியவையாக இருந்தன என்றும் புலவற்றை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்ததாகவும் கூறினார். மிகவும் விரிவாக எழுதியிருப்பது சொந்த வரலாற்றை சொல்வது போல அமைந்தாலும் பழமொழிகள், கவிதைகள், எடுத்துக்காட்டல்கள் என வித்தியாசமான படைப்பாக இருந்தது என்றார்.

ஒரு ஊடகவியலாளன் அல்லது பத்திரிகையான் போல புலம்பெயர் அகதி வாழ்வு பற்றிய பல தகவல்களை மிகவும் விரிவாகவும் அனுபவ பூர்வமாகவும் கிரிதரன் தனது நாவலில் சொல்லியிருப்பதாக ஜி.ரி.கேதாரநான் தனது கருத்துரையின் போது குறிப்பட்டார். ஆயினும் நாவல் என்ற வகையில் பார்க்கும்போது அதன் மொழிநடையும் விஸ்தரிப்பு முறைமையும் செழுமைப்படுத்த வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார்.

நிகழ்வு: வ.ந.கிரிதரனின் "குடிவரவாளன்" நூல் அறிமுக நிகழ்வு!

 

இதைத் தொடர்ந்த கலந்துரையாடல் மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது. நூலை ஏற்கனவே படித்திருந்த சித்ராதரன், குப்பிளான் சண்முகம், குணேஸ்வரன், தமிழினி புகழ் ஜெயக்குமரன் ஆகியோர் காத்திரமான பல கருத்துக்களை முன் வைத்தனர்.

வேல் நந்தகுமார் 83 ஜீலை கலவரம் பற்றிய சித்தரிப்பு சிறப்பாக இருந்ததாக குறிப்பட்ட போதும்,  அது அவரது அனுபவத்தின் ஊடாக மட்டுமே பார்க்ப்பட்டதாகவே இருக்கிறது. இதைவிட வேறு பல படைப்புகள் 83 இனக் கலவரம் பற்றிய விரிவானதும்  கலாபூர்வமானதுமான பல படைப்புகள் வந்திருப்பதை பலரும் சுட்டிக் காட்டினார்கள்

ஜெயக்குமரன் முக்கிய ஒரு கருத்தை முன் வைத்தார். அமெரிக்க புகலிடம் கோருபவர்களை இரண்டாம் தர நிலையில் அடக்கி வைக்க முனைகிறது என இளங்கோ கருதி கனடா புறப்படுகிறான். ஆனால் பல்வேறு நாடுகளை சேர்ந்து அகதிகளாக வந்தவர்கள் அமெரிக்காவில் கடுமையான உழைப்பின் பின்னர் உயர் நிலைகளை அடைந்திருக்கிறார்கள். உயர் பதவிகைள எட்டிப் பிடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இளங்கோ கனடா போக முடிவெடுக்கும்போது அவனது நண்பனான அருள்ராசா அமெரிக்கரிவிலேயே தங்கியிருக்க முடிவு செய்கிறான். எனவே அமெரிக்கா மாற்று கருத்துக்களையும் அந்நாட்டில் எதிர்காலம் பற்றிய மாற்று சாத்தியங்களும் இருப்பதைக் காட்டுவதற்கான குறியீடாக இருக்கலாமா என்ற கேள்வியை எழுப்பினார்.

நிகழ்வு: வ.ந.கிரிதரனின் "குடிவரவாளன்" நூல் அறிமுக நிகழ்வு!

அந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காகவே கிரிதரன் அருள்ராசா என்ற கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கியிருக்கறார் என்று எடுத்துக் கொண்டால் அது கிரிதரனின் படைப்பாற்றலின் உச்சம் எனக் கூறலாம். வாசகனுக்கு புதிய கற்பனை சாத்தியங்களை திறந்துவிடுகிறது என்றார் கேதாரநாதன்.

மழை காரணமாக  கூட்டத்திற்கு வந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சிறப்பான பேச்சுக்களும் தொடர்ந்த கனதியான கலந்துரையாடலுமாக இந்த ஞாயிறு மாலை ஒரு பயனுள்ள பொழுதாகக் கழிந்தது.

நன்றி: http://suvaithacinema.blogspot.ca/?view=classic


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                             


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்