புலம் பெயரும் மானுட சமுதாயம் ...- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -மக்கள் தொன்று தொட்டு தங்கள் வசித்து வந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லுதல் புலம் பெயர்வு எனப்படும். இயற்கை பேரிடர்களாலோ, மனிதனால் தோற்றுவிக்கப்படுகின்ற போர் முதலான செயற்கைப் பேரிடர்களாலோ, தங்களுக்கு (மக்களுக்கு) வாழக்கூடிய சூழல் நிலவாத பொழுதோ, உயிர்க்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் பொழுதோ, மக்கள் தங்கள் வசித்த புலங்களை விட்டு வேறு இடத்திற்குச் செல்கின்றனர். தற்காலத்தில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சிங்களவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போரின்போது பல இலட்சம் தமிழ் மக்கள் தங்களின் நாட்டை விட்டு பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். இவை போன்ற புலம் பெயர்வு சங்ககாலத் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. சங்க காலத்தில் புலம் பெயர்வு சங்ககால  மக்களின் புலம் பெயர்வானது, இயற்கைப் பேரிடர், ஆறலைக் கள்வரால் உயிர்க்கும் உடைமைக்கும் ஏற்பட்ட பாதிப்பு, அரசாதிக்கப் போரால் ஏற்பட்ட அழிவுகள் போன்றவற்றின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இயற்கைப் பேரிடரால்  புலம் பெயர்ந்த மக்கள்
நிலம், நெருப்பு, காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தன் நிலையிலிருந்து திரியும் பொழுது இயற்கைப் பேரிடர் ஏற்படுகின்றது. தொடர்ந்து பெய்யும் பெருமழையால் உருவான வெள்ளத்தினால் தம் கால்நடைகள் மற்றும் தமக்கு ஏற்படும் துன்பத்தினைக் கண்டு அஞ்சிய கோவலர்கள் தங்கள் பழகிய நிலத்தை விட்டு, வேறிடம் நோக்கிப் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் பொழுது தங்கள் நிலத்தை விட்டுப் பிரிய மனமின்றி உள்ளம் கலங்கியதை,

“புலம்பெயர் புலம்பொடு கலங்கி”                                             (நெடுநல். 5)

என்ற நெடுநல்வாடை வரி புலப்படுத்துகிறது. இவ்வாறு இயற்கைப் பேரிடர் ஏற்படும் சூழல்களில் சங்ககால மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். ஆறலைக் கள்வரால் ஏற்பட்ட அழிவுக்கு அஞ்சி புலம் பெயர்ந்த மக்கள் ஆறலைக் கள்வர்கள் வழிப்போவாரைக் கொன்று பொருள் கொள்வதோடு மட்டுமன்றி ஆயர் புலத்திற்குச் சென்று ஆநிரைகளையும் களவாடிச் சென்றுள்ளனர். தீக்கொள்ளியையும் நீண்டு திரண்ட அம்புகளையும் கையிற் கொண்டவராய், இரவு நேரத்தில் ஆயர்களின் ஊரினுள் புகுந்து, அவர்களைத் தாக்கி அழித்து, அங்கிருந்த ஆநிரைகளைக் கவர்ந்து வருகின்றபொழுது, எழுந்த ஆரவார ஒலி கொடிய சுரவழி எங்கும் மாறிமாறி ஒலித்தது என்பதனை, அகம். 239ஆம் பாடல் வழி அறியமுடிகிறது. இரவில் யாரும் அறியாமல் ஆநிரை கவர்ந்து வருகின்றபோது, அதை அறிந்த ஆயர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ஆரவாரத்துடன் அக்கள்வரின் பின்னே ஓடிச்சென்று பசுக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை,

“அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப்
பிற்படு பூசலின் வழிவழி யோடி”                                (அகம்.7:14-15)

என்ற பாடலின் வழி அறியலாம். இவ்வாநிரை கவர்தல் மற்றும் மீட்டலின் போது ஆயருக்கும் அந்தக் கள்வருக்குமிடையே வன்முறை நிகழ்ந்துள்ளதை உணரமுடிகிறது. இக்கள்வரின் பகைக்கு அஞ்சிய மக்கள், தங்கள் வாழ்ந்திருந்த இடத்தை விட்டு வேறு இடம் நோக்கி புலம் பெயர்ந்து போயினர். அதனால் முன்பு ஊர் இருந்த இடத்தில் பீர்க்கங் கொடிகள் படர்ந்து பாழ்பட்டு போயிருந்ததை அகம். 167ஆம் பாடல் காட்டுகின்றது. வணிகச் சாத்துகள் வராத பொழுது ஊரினுள் புகுந்து மக்களைத் தாக்கியும் அவர்களின் உடைமைகளைக் கைப்பற்றிக் கொண்டும் போயிருக்க வேண்டும். எனவேதான் அவ்வூரிலுள்ள மக்கள் எல்லாம் வேறு இடம் நோக்கிப் புலம்பெயர்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம். ஆறலைக் கள்வரின மறவர்களின் வன்முறைக்கஞ்சி மக்கள் புலம்பெயர்ந்ததை,

“………………………... மறவர்
பல்லூழ் புக்குப் பயனிரை கவரக்
கொழுங்குடி போகிய பெரும்பாழ் மன்றத்து”           (அகம்.377:4-6)

என்பதிலிருந்து அறியலாம். மறவர்கள் ஊரினுள் புகுந்து பசுக்கூட்டங்களைக் களவாடிச் செல்லுகிறபோது  மறவர் - ஆயர் இடையே வன்முறை எழுகிறது. ஆயர்களின் செல்வமான கால்நடைகள்  கொள்ளையிடப்படுதலோடு ஆறலைக் கள்வர்களால் ஆயர்களின் உயிர்க்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, வளமிக்க ஊரில் வசித்து வந்த மக்கள் (ஆயர்கள்) தங்களது சொந்த இடத்தை விட்டு விலகி வேறுபுலம் பெயர்ந்து சென்றனர். அதனால், அவ்வூரிலிருந்த மன்றங்கள் பாழடைந்து விட்டமையையும் அறியமுடிகிறது. அரசாதிக்கப் போரால் ஏற்படும் அழிவுகளுக்கு அஞ்சி  புலம் பெயர்ந்த மக்கள் அரசர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துதல் வேண்டி நிகழ்த்திய போரினால் பாதிப்படைந்த மக்கள் தாம் வாழ்ந்த இடத்தை விட்டு வேறிடம் நோக்கி புலம்பெயர்ந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. வேந்தர், வேளிர் முதலானோர் பெருஞ்சேரலிரும்பொறையின் ஆதிக்கத்தை ஏற்று கீழ் பணிந்து நடக்கவில்லையானால் வளமிக்க மருதநிலத்தை விட்டு வரகும் கொள்ளும் விளையும் வன்புலத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதனை,

“ வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
நின்வழிப் படாஅ ராயி னென்மிக்(கு)
……………………………………………
……………………………………………
பாடல் சான்ற வைப்பின்
நாடுட னாடல் யாவண தவர்க்கே”                       (ப.ப. 75:4-14)

என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.

பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் ஆதிக்கப் போர் காரணமாகப் பகை மன்னனின் நாட்டிலுள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டனர். மருதநில வளங்களோடு சிறப்புற்றிருந்த பகைவரின் நிலங்கள் மறுசீரமைப்பு செய்தால்கூட சீராக்க முடியாத அளவிற்கு பாழ்பட்டுப் போயிருந்தன. இதனைப் பதிற்றுப்பத்துப் பாடல் 19:16-27 எடுத்தியம்புகின்றது. நீர்நிலைகளிலெல்லாம் தாமரைகளும் ஆம்பல்களும் மலர்ந்து, நெல்வயல்களில் நெய்தல் மலர்ந்து, வளமிக்க வயல்களையும் கரும்புகளையும் கொண்டிருந்த ஊரானது நெடுஞ்சேரலாதனின் படையெடுப்பிற்குப்பின் ஊரிலுள்ள மக்களெல்லாம் உயிருக்குப் பயந்து தம் ஆநிரைகளையும் கலப்பைகளையும் விட்டு விட்டு வேற்று இடத்திற்குப் புலம் பெயர்வு மேற்கொள்ளுமளவிற்கு அரசாதிக்க போர் இருந்துள்ளமையைக் காணமுடிகின்றது.

வேந்தர்களின் படையெடுப்பிற்கு அஞ்சி ஊரில் உள்ள மக்கள் அனைவரும் தம் ஊரைவிட்டு வேறிடம் சென்றுவிட்டதால் ஊர் பாழடைந்துள்ள நிலையினை,

“…………………………… விறற்போர்
வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேரூர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே”                             (நற்.153:7-10)

என்ற நற்றிணைப் பாடலடிகள் விளக்குகின்றன. பகை மன்னர்கள் படையெடுத்து வந்து நாட்டிலுள்ள வளங்கள் அனைத்தையும் கவர்ந்து, அழித்துப் போனதால் அங்கு மக்கள் வாழும் தகுதியின்றி வேறிடம் சென்றுவிட்டதால், பாழ்நிலத்தில் தானே விளைந்து உதிர்ந்த நெற்கதிர்களைப் பெற்ற ஆண்புறா தன் பெடைக்குக் கொடுக்கும் காட்சியினை,

“………………………………… மன்னர்
முனைகவர் முதுபாழ் உகுநெற் பெறூஉம்”              (நற்.384:4-5)

என்பதன் மூலம் அறியமுடிகிறது. மேலும்,

“முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப்
பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய்
வினையழி பாவையின் உலறி
மனையொழிந் திருத்தல் வல்லு வோர்க்கே”                 (அகம்.157:11-14)

என்ற பாடலின் வழி அரசாதிக்கத்தால் நடைபெற்ற போரினால் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றமையையும் அதனால் ஊர் பாழ்பட்டு ஊர்ப் பொதுமன்றத்திலே உள்ள பாவை தன் அழகை இழந்துள்ளதும் தெரியவருகிறது. சோழன் நலங்கிள்ளியின் அரசாதிக்கத்திற்கு பயந்து, பகைவர்கள் சேவல் துயில் எழுப்பும் தினைப்புனக் காட்டிற்குப் புலம்பெயர்ந்து சென்றமையை,

“வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போ ருணர்த்திய கூஉம்
கானத் தோர்நின் றெவ்வர்………”                                 (புறம்.28:8-10)

என்ற பாடலின் மூலம் அறியலாம். மக்கள் தங்களின் வாழ்விடத்தை விட்டு நீங்கி காட்டிற்குள் புலம் பெயருமளவிற்கு நலங்கிள்ளியின் அரசாதிக்கப் போர் இருந்துள்ளதையே இப்பாடல் புலப்படுத்துகின்றது.

மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில், இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட சூழல், ஆறலைக் கள்வரின் வன்முறைக்கஞ்சிய சூழல், அரசர்கள் தங்களின் ஆதிக்கத்தை பிற வேந்தர், மன்னர் முதலானோர் ஏற்க மறுக்கும் போது போர் மேற்கொண்டு பகைநாட்டு மக்களின் பொருட்களைக் கொள்ளையிடுதல், நீர், நில வளங்களை அழித்தொழித்தல் போன்ற வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இவ்வன்முறைக்கு அஞ்சிய சூழல்களில் தங்கள் வாழ்ந்த வளமிக்க ஊரினையும் தம் செல்வமான கால்நடைகள் முதலாயினவற்றையும் துறந்து வேற்றுப்புலம் நோக்கிப் புலம்பெயரும் அவலநிலைக்குச் சங்ககால மக்கள்  ஆளாகியுள்ளதைக் காணமுடிகின்றது.

துணை நின்ற நூல்கள்
1.    அகநானூறு, கழகவெளியீடு, 2008, 2009
2.    நற்றிணை, கழகவெளியீடு, 2007
3.    பத்துப்பாட்டு பகுதி-2, கழகவெளியீடு, 2008
4.    பதிற்றுப்பத்து, பூம்புகார் பதிப்பகம், 2010
5.    புறநானூறு, கழகவெளியீடு, 2007

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்