தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்தொல்காப்பியம் இலக்கியநிலையிலும் வழக்குநிலையினையும் எடுத்து இயம்பும் ஒப்பற்ற இலக்கணமாக விளங்குகின்றது. இத்தகைய இலக்கணத்தினை மக்களிடம் பரவவிட்டவர்கள் உரையாசிரியர்கள் எனலாம். இதற்கு அவர்கள் மேற்கொண்ட உரைமுறைகளும் ஒன்றாகும். அவ்வாறு உரைகூறும் பொழுது, உரையாசிரியர்கள் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுகின்றனர். இவ்வாறான விளக்கத்தின் மூலம் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளியினை உரையாசிரியர்கள் வளர்த்துள்ளனர். இத்தகையப் பணியில் குறிப்பிடத்தகுந்தவர் தெய்வச்சிலையார். இவரின் உரையினைத் தொடரியல் நோக்கில் அமைத்துள்ளார். எனவே, இவர் பயன்படுத்திய இலக்கிய மேற்கோள்களில் தொடரியல் சிந்தனையைக் காணும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

எச்சங்கள்

எஞ்சி நிற்பன எல்லாம் எச்சம் எனலாம். வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம். பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம். வினையியலில் கூறப்படும் எச்சங்கள் வினையெச்சம் என்றும் பெயரெச்சம் என்றும் இருவகைப்படும். வினையைக்கொண்டு முடிவன எல்லாம் வினையெச்சம் இல்லை. குறிப்பிட்ட இலக்க அமைப்பிற்கு உட்பட்டுவருவன மட்டும் வினையெச்சம் எனப்படும்.

எச்சம் என்ற சொல் இலக்கண உலகில் இருபொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சொல் மற்றொரு சொல்லை எஞ்சிநிற்பது அல்லது அவாவி நிற்பது. மற்றொன்று ஒன்றைக் கூற இன்னொன்று எஞ்சி நிற்பது. வினையியலில் கூறப்படும் எச்சம் முதல் பொருளிலேயே வந்துள்ளது. ஒன்று தொடாpயல் அடிப்படையாகக்கொண்டது மற்றது பொருண்மையியலோடு தொடர்புடையது  (அகத்தியலிங்கம்.ச : 2001 : 201) என்று  ச.அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

வினையெஞ்சு கிளவி

வினையெச்சமாவது ஒரு வினைச்சொல் எஞ்சிநிற்பது

(தெய்வச்சிலையார் : 1984 : 244)

என்று தெய்வச்சிலையார் விளக்கம் தருகிறார். மேலும்,

வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும்

நினையத் தோன்று முடிபா கும்மே

ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே” (தொல்.தெய்வ.424)

என்ற நூற்பாவிற்கு,

வினையெச்சமாகவுடைய சொல்லிற்கு வினையும், வினைக்குறிப்பும் நினையத் தோன்றிய முடிபாகும். ஆண்டு, வினைக் குறிப்பு ஆக்கச் சொல்லோடு அடுத்துவரும் என்றுகூறி, இதற்கு,

“அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்

வழுக்கியுங் கேடீன் பது”  (குறள்.165)

என்ற குறளினை மேற்கோளாகக் காட்டி,

கேடுபயத்தற்கு அழுக்காறு தானே அமையும், பகைவர் கெடுக்குதல் தப்பியும்…… வேண்டுதலின், வரும் என்பது எஞ்சி நின்றது. மேலும் ஓர் சான்றில்,

“அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி” (குறள்.22)

என்பதற்குப் பொருள் வைத்தற்கு இடம் பெற்றான் ஆம் என உரைக்க வேண்டுதலின், ஆமென்னும் வினைக்குறிப்பு எஞ்சி நின்றது (தெய்வச்சிலையார்:1984:244) என்று விளக்கம் தருகிறார்.

பெயரெஞ்சு கிளவி

உண்ணும் சாத்தன், உண்ட சாத்தன் என்ற சான்றுகளையே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் தந்துள்ளனர். இளம்பூரணர் வினையியல் நூற்பாவிற்கும் இதற்கும் வேறுபாடு காட்ட முயன்றுள்ளார். மாறாக, தெய்வச்சிலையார் செய்யுளில் பெயர்ச்சொல் கெட்டு வந்ததை உதாரணமாகக் காட்டியுள்ளார்.

“பெயரெஞ்சு கிளவி பெயரோடு முடியுமே” (தொல்.தெய்வ.425)

என்ற நூற்பாவிற்கு,

“துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்

தொடர்வரை வெற்பன் துறக்குவன் அல்லன்

தொடர்புள் இனையவை தோன்றின்” (கலி.41)

‘உயர்த்திணை என்மனார் மக்கட் சுட்டே’ (கிளவி)

“மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே

அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்

பெருந்தோள் நுணுகிய நுசப்பிற்

கல்கெழு கானவன் நல்குறு மகளே” (குறுந்.71)

மேற்கண்ட மேற்கோள்களைக்காட்டி,

இதனுள் எனக்கு என வேண்டுதலின் வேற்றுமை ஏற்ற பெயர் எஞ்சி நின்றது. இவை தெய்வச்சிலையார் கொடுத்த கூடுதல் உதாரணங்கள். உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே என்ற தொல்காப்பியச் சூத்திரத்தில், என்மனார் ஆசிhpயர் என வேண்டுதலின், ஆசிhpயர் என்னும் பெயர் எஞ்சி நின்றது. மற்றுமோர் குறுந்தொகைப்பாடலில், இதனுள் எனக்கென வேண்டுதலின், வேற்றுமையேற்ற பெயர் எஞ்சி நின்றது  (தெய்வச்சிலையார்:1984:245-46) என்று உரை கூறுகின்றார்.

மேற்கண்ட சான்றுகள் தொடரியல் நோக்கில் அணுகக் கூடியவையாகும். வெற்பன் துறக்குவன் அல்லன் என்று கூறிவிட்டு, தொடர்புள் என்ற பெயரில் அடையாக - அவன் என்பது ஊகிக்கக் கூடியதாகும். இங்குப் பெயர் கொடுத்தது யாப்புக்காக இருக்கலாமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. மேலும், இரண்டாவது மேற்கோளில் என்மனார் என்ற வினைமுற்றுக்கு உரிய எழுவாய் இல்லை. இலக்கணம் ஆதலின், ஆசிரியர் என்ற பெயர்ச்சொல் எழுவாயாகக் கொள்ளப்பட்டது. மூன்றாவது சான்றில் ‘நல்குறு மகள் மருந்து’ என்பதே வாக்கியம். எனவே இன்னதற்கு இன்னாருக்கு என்ற தொழில்  முதனிலை கெட்டுள்ளது. எனவே அதை எமக்கு என்ற சொல்வருவித்து ஈடுகட்டுகிறோம். குறுந்தொகைப் பாடலைப் பொருத்தவரையில், எமக்கு என்ற நான்காம் வேற்றுமை கெட்டிருப்பது உடைமை உணர்ச்சி  இல்லாததைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

பிரிநிலையில்லா பெயரெச்சத் தொடர்

பெயரெச்சங்கள் இரண்டு வகைப்படும். பிரிநிலைப் பெயரெச்சம், பிரிநிலையில்லாப் பெயரெச்சம் என்பவையாகும். இத்தகைய பெயரெச்சங்கள்,

ஒன்றை மற்றொன்றில் இருந்து பிரித்துக்காட்டும் பெயரெச்சம் பிரிநிலைப் பெயரெச்சம். அவ்வாறு இல்லாமல் ஒன்றின் பண்பைக் கூறுவது பிரிநிலையில்லாப் பெயரெச்சம் (அகத்தியலிங்கம்.ச:2001:219) என்று ச.அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

“இனச் சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை

வழக்கா றல்ல செய்யு ளாறே” (தொல்.தெய்வ.18)

என்ற நூற்பாவிற்கு விளக்கம் தரும்பொழுது, புறநானூற்றுப் பாடலையும், அகநானூற்றுப் பாடலையும்  மேற்கோளாகத் தெய்வச்சிலையார் காட்டியுள்ளார்.

மாக்கட னிவந்தெழு செஞ்ஞாயிற்றுக் கவினை (புறம்.4)

நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே (அகம்.2)

இதற்கு விளக்கம் தருகின்ற பொழுது,

இனச்சுட்டில்லாத பொருளாவன:- ஞாயிறு, திங்கள், தீயென்பன என்று கூறி, மேற்கண்ட எடுத்துக்காட்டினைக் கூறி, இவை வழக்கின்கண் வரின் கருஞாயிறும், கருந்திங்களும், தண்ணரியும் உளபோலத் தோன்றும். ஆயினும் செய்யுட்கண் அமையும் என்றவாறு. செம்போத்து என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், அப்பொருட்கு அது பெயரென்க. பெருவண்ணான், பெருங்கொல்லன் என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், பண்பாவது தமக்குள்ள தோரியல்பு: ஈண்டப்பெருமையியல் பன்மையான், அஃது உயர்த்துச் சொல்லுதற்கண் வந்ததென்க. பண்புகொள் பெயர் என்று விசேடித்தமையால், ஏனைப்பெயர்கள் இருவகை வழக்கினும் இனஞ்சுட்டாது வரப்பெறுமெனக் கொள்க (தெய்வச்சிலையார்:1984:21) என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட கூற்றினைக் காணும்பொழுது, ஞாயிற்றிலிருந்து செஞ்ஞாயிற்றைப் பிரிக்கவில்லை என்பதும், திங்களிலிருந்து வெண்திங்களைப் பிரிக்கவில்லை என்பதும், இதுபோன்று வானில் பவனிவரும் ஞாயிறு என்றோ திங்கள் என்றோ கூறி, வானில் பவனிவராத ஞாயிறுகளையும் திங்களையும் பிரிக்காமல் இருப்பது வெளிப்படையாகத் தரிகிறது என்பதும் புலப்படுகின்றன. எனவே இங்கு வருகின்ற பெயரெச்சத்தொடர் பிரிநிலையில்லாப் பெயரெச்சத் தொடர் என விளக்கியுள்ளார் எனலாம்.

எதிர்மறை எச்சம்

எதிர்மறைப் பொருள் எஞ்சி நிற்பதாகும். இதனை,

“எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின” (தொல்.தெய்வ.427)

என்ற தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். இதற்கு, எதிர்மறை எச்சமாவது ஒருபொருளைக் கூறியவழி, அதனின் மாறுபட்ட பொருண்மையும் அதனானே உணரநிற்பது (தெய்வச்சிலையார்:1984:244) என்று தெய்வச்சிலையார் குறிப்பிட்டுள்ளார்.

“இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள்” (குறள்.)

என்ற குறளைக்காட்டி,

மறுபிறப்புப் பிரிவேம் என நினைத்துக் கண்ணிறை நீர்கொண்டனள் எனப் பொருளுரைக்க வேண்டுதலின், எதிர்மறை, எஞ்சிநின்றனள் எதிர்மறைப் பொருளொடு முடிந்தவாறு (தெய்வச்சிலையார்:1984:246) என்று உரைத்துள்ளார்.

 

சொல்லெச்சம்

சொல்லெச்சமாவது ஒரு சொல்லின்னான் ஒரு பொருளை விதந்தோதியவழி, அவ்விதப்பினானே பிறிது பொருளைக் கொள்ளுமாறு நிற்பது (தெய்வச்சிலையார்:1984:244) என்று குறிப்பிடுகிறார்.

“நெடும்புனலுள் வெல்லு முதலை

கடும்புனலி னீங்கி னதனைப் பிற”(குறள்.495)

“காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா

வேலாண் முகத்த களிறு” (குறள்.500)

போன்றசான்றுகளைத் தந்து,

என்றவழித் தமது நிலத்தில் எளியவர் நின்றாலும் பிறரது நிலத்தில் வலியாரும் எளியாராவர் என்னும் பொருண்மை இச்சொற்றானே யுணர்த்துதலிற் சொல்லெச்சமாயிற்று (தெய்வச்சிலையார்:1984:244) என்கிறார்.

நிறைவாக,

தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்களைக் காணும் பொழுது, பெயர், வினை, சொல் என்று எஞ்சி வருகிறது. இனச்சுட்டு என்பது அதன் இனத்தினைக் குறிப்பாக உணர்த்துவதாகும். இங்கு பிரிநிலையில்லா பெயரெச்சம் என்பது இலக்கிய வழக்குகளிலே காணப்படுகின்றது. எனவே, இலக்கிய ஆசிரியர்கள் எச்சக்கிளவிகளை இலக்கிய நயம் கருதிப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அறியமுடிகிறது.

துணைநின்றவை

1.தெய்வச்சிலையார் (உ.ஆ.) தொல்காப்பியம் – சொல்லதிகாரம்

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு,

நிழற்படப்பதிப்பு, 1984

தஞ்சை-01.

அகத்தியலிங்கம் ச. தமிழ்மொழி அமைப்பியல்

மணிவாசகர் பதிப்பு ,சிதம்பரம்.,

சண்முகம் செ வை தொல்காப்பியத் தொடரியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2004 சென்னை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்