சாதிய தீண்டாமைக் கொடுமைக்கெதிரான புரட்சிகரக் கலை இலக்கிய படைப்புகள் மலர்ந்து இலக்கிய வரலாற்றில் அழியா இடம்பெற்றனதீண்டாமைக்கு எதிரான போராட்ட இயக்கத்தை ஆரம்பிக்கும் வகையில் 1966 -ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (அன்று சீனச் சார்பு என அழைக்கப்பட்டது) ஓர் ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் வடபிரதேசத்தில் நடாத்துவதென தீர்மானித்தது.

அதற்கமைய 1966 அக்டோபர் 21-ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊர்வலம் நடாத்துவதற்கான தயாரிப்புகளைக் கட்சி மேற்கொண்டது. ஊர்வலத்திற்கான அனுமதி பொலிசாரிடம் கோரப்பட்ட போதிலும் அனுமதி மறுக்கப்பட்டது. வடபிரதேசத்தின் சகல பகுதிகளிலிருந்தும் கட்சி வாலிப இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் மற்றும் முற்போக்கு எண்ணங்கொண்ட பொதுமக்களும் பெருமளவில் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவென சுன்னாகத்தில் திரண்டனர்.
1966 அக்டோபர் 21-ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து ''சாதி அமைப்புத் தகரட்டும்..! சமத்துவ நீதி ஓங்கட்டும்..!!" என்ற செம்பதாகையை உயர்த்திப்பிடித்த வண்ணம் ஊர்வலம் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னணியில் தோழர்கள் கே. டானியல் - வீ. ஏ. கந்தசாமி - கே. ஏ. சுப்பிரமணியம் - டாக்டர் சு. வே. சீனிவாசகம் - எஸ். ரி. என் நாகரத்தினம் ஆகியோர் தலைமைகொடுத்துச் சென்றனர். அடுத்து கட்சி வாலிபர் இயக்கத்தைச் சேர்ந்த எம். ஏ. சி. இக்பால் - கு. சிவராசா - நா. யோகேந்திரநாதன் - கி. சிவஞானம் - கே. சுப்பையா ஆகியோர் அணிவகுத்துச்செல்லத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் அணியணியாக முன்னோக்கி விரைந்தனர். ஊர்வலம் பிரதான வீதியில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் பொலிசார் வீதிக்குக் குறுக்கே அணிவகுத்து நின்று ஊர்வலத்தைத் தடுத்தனர். ஊர்வலத்தினர் முன்னேற முயன்றபோது பொலிசாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தோழர்கள் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். அந்த இடம் போர்க்களம்போன்று காட்சியளித்தது. காயங்களுக்குள்ளான தலைமைத் தோழர்கள் சிலரை பொலிசார் இழுத்துச்சென்று பொலிஸ் நிலையத்தில் அடைத்தனர்.
இத்தனை இடர்கள் மத்தியிலும் ஊர்வலத்தினர் கலைந்துசெல்ல மறுத்து நின்றனர். நிலைமை மோசமாகுவதை உணர்ந்த பொலிஸ் உயரதிகாரிகள் முழக்கங்கள் இன்றி இருவர் - இருவர் என வரிசையாக யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல அனுமதித்தனர். நீண்ட ஊர்வலமாக முன்னேறத் தொடங்கியது.

ஊர்வலம் யாழ்நகரை வந்தடையும்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் டாக்டர் சு. வே. சீனிவாசகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் சிறப்புரையாற்றினார்.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டித் தலைமை தாங்குமென தோழர் நா. சண்முகதாசன் அறைகூவல் விடுத்தார். கே. டானியலும் உரையாற்றினார். அக்டோபர் 21 -ம் திகதி ஊர்வலம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் மீண்டும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் சுன்னாகம் சந்தை வளாகத்தில் 26 - 11 - 1966 அன்று நடைபெற்றது.  தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் - எஸ். டி. பண்டாரநாயக்கா - கே. டானியல் - வி. ஏ. கந்தசாமி - சுபைர் இளங்கீரன் உட்படப் பலர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து வடபகுதியெங்கும் பல ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.

1967 -ம் ஆண்டு மேதினம் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ''அடிமை குடிமை முறை ஒழியட்டும்..! ஆலயத் தேநீர்க்கடைப் பிரவேசம் தொடரட்டும்..!!" என்ற கொள்கை நிலைப்பாட்டை கட்சி முன்னெடுத்துப் பிரச்சாரங்களை மேற்கொண்டது. சங்கானையில் தேநீர்க்கடை பிரவேசத்தைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது. நிச்சாமம் கிராமம் சாதிவெறிக் குண்டர்களால் சுற்றி வளைக்கப்பட்டுத் தாக்குதலுக்குள்ளானது. பல வீடுகள் தீக்கிரையாகின. துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது. சங்கானை பட்டினசபையின் முன்னாள் தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சித் தோழருமான நா. முத்தையாவின் (மான்) வீடு குறிவைத்துத் தாக்கப்பட்டது.

அடிபணியாத விட்டுக்கொடுக்காத மனத்தைரியத்தோடு கிராம மக்கள் ஒன்றிணைந்து சாதிவெறியர்களைப் பின்வாங்கச் செய்தனர்.  கட்சித் தோழர்கள் பல இடத்திலிருந்தும் சென்று ஆதரவு வழங்கி உறுதுணையாக இருந்தனர். இலங்கை பாராளுமன்றம் முதல் சீன வானொலிவரை இது பேசப்பட்டது. சாதிவெறியர்களின் துப்பாக்கிச் சு+ட்டில் சின்னர் கார்த்திகேசு (வயது 55) மரணமடைந்தார். பின்னர் வன்னியன் குமரேசு என்ற போராளியும் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினார். யாழ்ப்பாணம் முஸ்லீம் வட்டாரத்தில் மிகுந்த பலமுடையதாக விளங்கிய புரட்சிகர கம்யூஸ்ட் கட்சி வாலிப இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் முன்னணியில் நின்று செயற்பட்டார்கள். அன்று கட்சிப் பத்திரிகையான ''தொழிலாளி"யின் ஆசிரியராக தோழர் சுபைர் இளங்கீரன் பணிபுரிந்தார். தோழர்கள் எம். ஏ. சி. இக்பால் - சலீம் - காதர் - கன்சு+ர் - றசீன் - அஸீஸ் - கமால் உட்படப் பலர் முன்னணியில் இருந்து செயற்பட்டனர். சங்கானைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில்தான் 1967-ம் ஆண்டு ''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்" உருவாக்கப்பட்டது.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டித் தலைமை தாங்குமென தோழர் நா. சண்முகதாசன் அறைகூவல் விடுத்தார்

யாழ்ப்பாண மாநகரசபை மண்டபத்தில் சங்கானைப் போராட்டத்தின் முதல் தியாகி ''சின்னர் கார்த்திகேசு அரங்கில்" தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வெகுஜன இயக்கத்தின் அமைப்பாளராக கே. டானியல் (எழுத்தாளர்) - தலைவராக எஸ். ரி. என் நாகரத்தினம் - இணைச்செயலாளர்களாக அல்வாய் சி. கணேசன் - மட்டுவில் எம். சின்னையா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். உபதலைவர்களாக டாக்டர் சு. வே. சீனிவாசகம் - கே. ஏ. சுப்பிரமணியம் - நா. முத்தையா (மான்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மாவிட்டபுரம் - அச்சுவேலி - சாவகச்சேரி - கொடிகாமம் - மந்துவில் - மட்டுவில் - நெல்லியடி- கரவெட்டி - கன்பொல்லை -கோப்பாய் - மாதகல் - புன்னாலைக்கட்டுவன் ஆதியாம் இடங்கள் உட்படப் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வெற்றிகள் பெறப்பட்டது..!

சாதிய தீண்டாமைக் கொடுமைக்கெதிரான புரட்சிகரக் கலை இலக்கிய படைப்புகள் மலர்ந்து இலக்கிய வரலாற்றில் அழியா இடம்பெற்றன. நெல்லியடி அம்பலத்தடிகளின் "கந்தன் கருணை" நாடகம் கிராமங்கள் தோறும் அரங்கேறியது. சுபத்திரனின் ''சங்கானைக்கென் வணக்கம்" கவிதை அழியாப் புகழ் பெற்றது. டானியலின் சிறுகதைகளும் நாவல்களும் பெரும்புகழ் படைத்தன.

1969 -ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் இரண்டாவது மாநாடும் 1979 -ம் ஆண்டு இயக்கத்தின் மூன்றாவது மாநாடும் யாழ்ப்பாணத்தில் சிறப்புற நடைபெற்றன.

* புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை வழிகாட்டல்
* சாதியம் - தீண்டாமை குறித்த தெளிவான பார்வை
* போராட்ட வழிமுறை பற்றிய தெளிவு
* எதிரி யார் - நண்பர் யார் - என்ற கணிப்பு
* கட்டுப்பாடான முறையில் போராட்ட நடவடிக்கை
* சாதிவாதப் போராட்டமாகவன்றி அனைத்து மக்களினதும் முற்போக்கு சக்திகளினதும் ஆதரவைப் பெற்றுக்கொண்டமை.
இளங்கோவன்
இத்தகைய தன்மைகளால் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து தொடர்ந்த நீண்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சமத்துவ நீதியை நிலைநிறுத்தி வந்தமையையும் அதற்கு வழிகாட்டி தலைமைகொடுத்துச் செயற்பட்ட புரட்சிகர கம்யூஸ்ட் கட்சி வரலாற்றையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்