பதிவுகள் முகப்பு

அஞ்சலிக்குறிப்பு: நெடும்பயணத்தில், பாதி வழியில் விடைபெற்ற பேராசிரியர் செ. யோகராசா! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
07 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்டியிலிருந்து கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை என்னைத்தொடர்புகொண்ட எழுத்தாளர் நொயல் நடேசன், எங்கள் இலக்கிய நண்பர் பேராசிரியர் செ. யோகராசா மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார். உடனே கொழும்பிலிருக்கும் பேராசிரியை சித்திரலேகா மௌனகுருவை தொடர்புகொண்டு அந்தச்செய்தியை ஆழ்ந்த கவலையுடன் உறுதிப்படுத்தினேன். இரண்டு நாட்களுக்கு முன்னர், மகரகமக மருத்துவமனைக்குச்சென்று அவரைப் பார்த்ததாகவும், கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்ததாகவும் சித்திரலேகா சொன்னார்.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பயணத்தில் இணைந்து வந்திருக்கும் எமது அருமை நண்பர் செ. யோகராசாவின் அருமைத் துணைவியார் விஜயதிலகிக்கும் ஏகபுதல்வி சுவஸ்திகாவுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் துயரத்திலும் பங்கெடுத்து இந்த அஞ்சலிக்குறிப்பினை எழுதுகின்றேன்.

இலங்கையில் வடமராட்சி பிரதேசம் பல இலக்கிய ஆளுமைகளையும் கல்விமான்களையும் பெற்றெடுத்த மண். 1949 ஆம் ஆண்டு, கரணவாய் கிராமத்தில் செல்லையா – இலட்சுமி தம்பதியரின் செல்வப்புதல்வனாக பிறந்திருக்கும் யோகராசா, தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்தவர்.

மேலும் படிக்க ...

(முகநூல் பதிவு) மிக மிகத் துயரமான செய்தி பேராசிரியர் யோகாராசா காலமானார் - பேராசிரியர் சி.மெளனகுரு -

விவரங்கள்
- பேராசிரியர் சி.மெளனகுரு -
இலக்கியம்
07 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கருணை யோகன் என அழைக்கப்படும் பேராசிரியர் செ.யோகராஜா  இன்று மதியம் காலமானார். கேன்சர் நோய் என அறிய ப்பட்டு அவர் மகரம ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப் பட்டார். சென்ற மாதம் நான் மட்டக் களப்பு  சென்றபோது வீடு தேடி வந்து பல மணி நேரம் உரையாடிச் சென்றார். நோயாளியைப் போல தோற்றமளித்த.  அவரைப் பார்த்து 'உடனடியாக வைத்தியரிடம் செல்லுங்கள்" என்று கூறினேன்.
வழக்கம் போல சிரித்துக் கொண்டார்

மூன்று நாட்களுக்கு முன்னர் தான் நானும் சித்ரலேகாவும் அவரை. மகாறகம வைத்திய சாலையில்சென்று பார்த்து வந்தோம். மக்களோடு மக்களாக ஒரு கட்டிலிலேயே படுத்துக் கிடந்தார். அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவர் தலையைத் தடவிக் கையைப் பிடித்து ஆறுதல் கூறினேன். அவர் உடம்பில் சேர்லைன் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். என்னை கண்டதும்படபட படவென்று பேசத் தொடங்கினார்.  நான் அவரை கையமர்த்தி  "நீங்கள் பேசாமல் இருங்கள் நான் பேசுகிறேன்"  என்றேன். "வருத்தம் பற்றிப் பேசாமல் வேறு ஏதும் பேசுங்கள்"  என்றார். நோயின் தீவிரத்தை அவர் அறிந்திருந்தார். போலத் தெரிகிறது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: 'ஆய்வுத் தேடல்' மிக்க பேராசிரியர் செ.யோகராசா மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் மறைந்துவிட்டதாக முகநூல் மூலம் அறிந்தேன். மிகவும் துயர் தரும் செய்தி. நான் மதிக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் இவர். இவரது இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் முக்கியத்துவம் மிக்கவை.

இவரை நான் சந்தித்ததில்லை. இவரது படைப்புகளூடு மட்டுமே அறிந்திருக்கின்றேன். எனது 'அமெரிக்கா' நாவல் தனிப்பதிப்பாக, இலங்கையில் 'மகுடம்' பதிப்பாக வெளியானபோது அதற்கு சிறப்பானதோர் அணிந்துரையினை எழுதியிருந்தார். அதனை எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன்.

இவரைப்போன்ற ஆய்வுத்தேடல் மிக்க பேராசிரியர்களை மிகவும் அரிதாகவே காணமுடியும் சூழலில் இவரது மறைவு எதிர்பாராதது. இவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் 'பதிவுகள்' சார்பிலும், தனிப்பட்டரீதியிலும் ஆழ்ந்த இரங்கல்.

அகவை எண்பது காணும் சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
07 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'சிந்தனைப்பூக்கள்' பத்மநாதன் என்று தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட உரையாளர், எழுத்தாளர் திரு. எஸ். பத்மநாதன் அவர்கள் இவ்வருடம் டிசெம்பர் மாதம் முத்து விழாக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பிராய் என்ற ஊரில் பிறந்தார். ஆரம்ப கல்வியை உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்திலும், அதைத் தொடர்ந்து உரும்பிராய் இந்துக் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, பேராதனை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.  பேராதனை பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புப் பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டமும் பெற்றவர். கனடாவில் ரொறன்ரோ வர்த்தகக் கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு ‘பிரயாணமும் உல்லாசப் பயணமும்’ என்னும் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.

இலங்கையின் மலையகத்தில் உள்ள பதுளை, நுவரெலியா, பண்டாரவளை மாவட்டங்களில் சமூகக்கல்வி பாடசேவைக்கால ஆலோசகராகவும், பாடவிதான அபிவிருத்தி சபையில் நூலாக்கக் குழுவிலும், ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியராகவும், கோப்பாய் அரசினர் பயிற்சிக் கல்லூரியில் சமூகக் கல்வி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவியல் அரங்கக் குழுவுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் மல்லிகை, வீரகேசரி, தினபதி, ஈழநாடு, தினக்குரல் ஆகிய ஊடகங்களில் கல்வி, புவியியல் சம்பந்தமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க ...

சென்னை வெள்ளம்: இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும்!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்னை மாநகர் மீண்டும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. மனிதரின் சூழல் விரோத நடவடிக்கைகளால் உலகக் காலநிலை பெரிதும் மாறுதலடைந்துகொண்டு வருவதன் விளைவுதான் இத்தகைய காலநிலைச்சீர்கேடுகள்.

இவ்விதமான காலநிலைச் சீர்குலைவுகள் ஏற்படுகையில் அதிலிருந்து தப்பும் வழியில் மனிதர் தாம் வசிக்கும் நகரங்களை வைத்திருக்க வேண்டும். அமைக்க வேண்டும்.

ஒரு காலத்தில் குகைகளில் வாழ்ந்த மனிதர் காலநிலையிலையிருந்து தப்புவதற்காக, பாதுகாப்புக்காக நகரங்களை, இருப்பிடங்களை அமைத்தனர். இன்றைய மனிதர் தாம் ஏற்படுத்திய காலநிலைச் சீர்குலைவுகளிலிருந்து தப்புவதற்காக மீண்டும் தம் நகர் அமைப்பு, இருப்பிட அமைப்பு போன்றவற்றை அமைப்பதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க ...

The Prime Minister, Justin Trudeau's statement on the National Day of Remembrance and Action on Violence Against Women:

விவரங்கள்
- PMO Media Relations -
அரசியல்
06 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Statement by the Prime Minister on the National Day of Remembrance and Action on Violence Against Women

December 6, 2023, Ottawa, Ontario

The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the National Day of Remembrance and Action on Violence Against Women:

“On this National Day of Remembrance and Action on Violence against Women, we remember the 14 young women who were senselessly murdered and the 13 others who were injured at the École Polytechnique de Montréal. Today, we pay tribute to their lives that were tragically cut short simply because they were women, and we reaffirm our commitment to eliminate gender-based violence.

“As we remember the victims of this hateful, cowardly act, we are also reminded that, for many women, girls, and gender-diverse people in Canada and around the world, the violent misogyny that led to this tragedy still exists. The risk of violence is even higher for Indigenous women and girls, racialized women, women living in rural and remote areas, people in 2SLGBTQI+ communities, and women with disabilities. That is why we have and continue to strengthen our laws and ensure supports for victims and survivors of gender-based violence.

மேலும் படிக்க ...

சிலுவை : சுப்ரபாரதிமணியன் நாவல் அறிமுகம் - சி. ஆர். ரவீந்திரன் -

விவரங்கள்
- சி. ஆர். ரவீந்திரன் -
நூல் அறிமுகம்
06 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

300 ஆண்டுகால  கொங்கு பகுதியின் சரித்திரமாகவும்   நாவல் அனுபவமாகவும் இந்த  நாவல் விளங்குகிறது. நெசவுத்தொழிலின் ஒரு  குறியீட்டுக்களமாக அமைந்த   சுப்ரபாரதிமணியன் புதிய நாவல் சிலுவை .

மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளாக இருப்பவை உணவு , உடை,  உறைவிடம் . இவைகளின் பின்னணியில் மனித உழைப்பு தவிர்க்க முடியாத படி இருக்கிறது. அதுதான் சமுதாயம் என்ற ஒரு அமைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது. .உழைப்பு சக்தியின் தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைந்து வரலாற்றை மனிதர்கள் வடிவமைக்கிறார்கள் .அந்த வரலாற்றின் உள்ளீடாக அமைந்துள்ள நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வாழ்க்கையில் வளர்ச்சியை புரிந்து கொண்டு அதை மதிப்பீடு செய்கிறோம்.

இந்த வகையான ஒரு புரிதலையும் அறிதலையும் உணவு பூர்வமாக உள்வாங்கிக் கொண்டு இந்த நாவலில்  கொங்கு பகுதியை முன் நிறுத்தி சுப்ரபாரதிமணியன் வடிவமைத்திருக்கிறார். அதை வாசிப்பின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க ...

புதுவை 75 : நித்தமும் கவிதை பூக்கும் நிலவு - செ. சுதர்சன் -

விவரங்கள்
- செ. சுதர்சன் -
கவிதை
04 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ ஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு (வரதலிங்கம் இரத்தினதுரை)  தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோரிடமுண்டு.  கவிதை, திறனாய்வு என அவரது இலக்கியப் பங்களிப்பு இருந்துள்ளது. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வரதபாக்கியான் என்னும் பெயரில்  கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் இவருமொருவர்.  முக்கியமான எழுத்தாளர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார்.  இந்நிலையில்  அவரைப்பற்றி  2012இல் திவயின சிங்களப் பத்திரிகை புதுவை இரத்தினதுரை  இலங்கை இராணுவத்தின் காவலிலுள்ளதாகச் செய்தி வெளியிட்டதாக   விக்கிபீடியாக் குறிப்பு கூறுகின்றது.  இது தவிர இதுவரை அவர் பற்றிய மேலதிகத் தகவல்கள் எவையுமில்லை - பதிவுகள்.காம் -]

அள்ளிடும் வாஞ்சை; அன்பை
ஆள்வதில் அரசு; நெஞ்சைத்
துள்ளவே வைக்கும் பாக்கள்
தூவிய நாக்கு; சின்னக்
கள்ளியில் கூட நேசம்;
கண்களில் கனவுத் தேசம்;
புள்ளி நீ எங்கே? எங்கள்
புதுவையே எழுபத்தைந்தா..!?

நிலமெலாம் திரிந்து பாட்டின்
நீளமாய் விரிந்தாய்; வீரர்
பலமெனப் படர்ந்து மண்ணின்
பாஷையாய் மலர்ந்தாய்; என்றும்
வலம்வரு காற்றில் குந்தி
வரிகளில் வாதை சொன்னாய்;
கலமெனப் பேனா ஏந்தி
களப்பணி வரித்து நின்றாய்!

விடுதலைப் பானை பொங்க...
வீறுகொள் அடுப்பை மூட்டும்
சுடுதணல் கவிகள் தந்தாய்!
சூழுமோர் பகையை உந்தன்
விடுகவி கொல்லும் என்றாய்!
விரிகதிர்ப் பொலிவை மண்ணில்
நடுமொளி வெல்லும் என்றாய்!
நாவிலே நாடு கொண்டாய்!

மேலும் படிக்க ...

புரிந்துணர்வைப் போதிக்கும் படைப்பு : சிவ ஆரூரனின் ஊமை மோகம் - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
கலாநிதி சு.குணேஸ்வரன் பக்கம்
04 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிமுகம்

சிவ ஆரூரன் சிறைக்குள்ளிருந்து இலக்கியம் படைத்தவர். தனது சிறைக்காலத்தை வாசிப்பு எழுத்து என மாற்றி நம்பிக்கையை விதைத்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். சமூக இயங்கியலை வெளிப்படுத்தும் பல நாவல்களைத் தந்தவர். சிறந்த நாவலுக்கான விருதுகளை மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றவர். ஜீவநதி வெளியீடாக 2022 இல் வெளிவந்த ‘ஊமை மோகம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

சிவ ஆரூரனின் வெளிவந்த ஏனைய நாவல்களில் இருந்து உள்ளடக்கத்தில் வேறுபட்டது ஊமை மோகம். பலரும் எழுதத் தயங்குகின்ற ஆண்பெண் உறவுநிலையில் ஏற்படுகின்ற சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது. தமிழ்ச்சூழலில் இவ்வகை எழுத்துக்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்நாவலின் உருவாக்கம் பற்றி ஆசிரியர் குறிப்பிடும்போது

“ஆண்பெண் உறவின் அதிருப்தி குறித்தும் புரிந்துணர்வு இன்மை குறித்தும் பலர் பேசியதை நான் செவிமடுத்த பிறகு அவற்றை என் மனவானில் உலவவிட்டவேளை என் மனம் உளைந்தது. என் நூலறிவின் துணை கொண்டு என் மனஉளைவிற்கு ஒரு கலைப்பெறுமதியைக் கொடுக்க முனைந்துள்ளேன். ஒழுக்க நெறியுடன் வாழநினைக்கும் யாழ் மண்ணின் கீழ்மத்தியதரக் குடும்பம் ஒன்றின் வாழ்வுக் கோலத்தையும் அதில் இழையோடிக் கிடக்கும் அபாக்கியமான ஊமை மோகத்தையும் இந்நாவல் பேசுகின்றது.” (தந்துரை, சிவ. ஆரூரன்) என்று குறிப்பிடுகின்றார்.

மேலும் படிக்க ...

ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஒரு காட்சி! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல் 'ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்!'. அதில் வரும் ஹென்றி மறக்க முடியாத மனிதன். மகத்தான மனிதன்.  விகடனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்' தொடராக வெளிவந்த காலத்திலேயே விரும்பி வாசித்திருக்கின்றேன். அதனால் இவ்வோவியமொரு காலக்கப்பல். என்னை என் பால்ய பருவத்திற்கே காவிச்செல்லும் காலக்கப்பல்.

ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். இதில்வரும் ஹென்றி பாத்திரம் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' பாபு, யமுனா' போல் மனத்தை ஈர்த்த பாத்திரம். நாவலில் தகப்பனின் கிராமத்துக்கு வரும் ஹென்றியின் அனுபவங்கள் மறக்க முடியாதவை. தந்தையுடன் 'பப்பா என்றழைத்து நடத்தும் உரையாடல்களை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை.

அவ்வுரையாடல்களை வாசிக்கையில் என் பால்ய காலத்தில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அப்பாவின் சாறத்தில் படுத்திருந்தபடி , அண்ணாந்து விண்ணைப்பார்த்தபடி  ,  எதிரே விரிந்திருக்கும் விண்ணில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப்பற்றி, கோடிழுக்கும் எரிநட்சத்திரங்களைப் பற்றி, அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைப் பற்றி உரையாடிய தருணங்களை என் மனம் அசை மீட்டிப் பார்க்கும்.  ஒரு நாவலின் வெற்றி இது போன்ற வாசக அனுபவங்களில்தாம் உள்ளது.

மேலும் படிக்க ...

மருதூர்க் கொத்தனின் "அதிமதுரம்" குறுநாவல் நூல்வெளியீட்டு விழா! - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
நிகழ்வுகள்
02 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் மற்றும் மலையக கலை கலாசாரச் சங்கம் இணைந்து நடத்தும் கலாநிதி செ. சுதர்சன், சிரேஷ்ட  ஊடவியலாளர் இக்பால் அலி ஆகியோர் பதிப்பில் முதற்பதிப்பாக வெளிவரும் மருதூர்க் கொத்தனின் "அதிமதுரம்" குறுநாவல் வெளியீட்டு விழா கண்டி டி.எஸ். சேனநாயக வீதியில் (கண்டி அசோகா வித்தியாலத்திற்கு  முன்னால்) அமைந்துள்ள செல்லத்துரை ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை  2.-12-2023 , பி.ப. 3.00 மணிக்கு,மலையகக் கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: 'கூற்று' பெண்களின் குரல் 25 வருடங்கள்! மனம்விட்டுப்பேசும் 'வெளிகள்' பெண்கள் மத்தியில் உருவாகவேண்டும்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
01 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                   - பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு -

கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் நான் இலங்கையில் நின்றபோது, கொழும்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களைச் சந்தித்தேன்.

இவருடனான சகோதர வாஞ்சையான உறவு எனக்கு 1970 களிலேயே தொடங்கிவிட்டது. பின்னாளில் எனது இலக்கிய நட்பு வட்டத்தில் இணைந்த பலரதும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், பேராசிரியையாகவும் திகழ்ந்த சித்திரலேகா பற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் தினத்தின்போது நான் வெளியிட்ட யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றியது ) நூலிலும் எழுதியிருக்கின்றேன்.

பல்கலைக்கழக பேராசிரியையாக மாத்திரம் இயங்காமல், இலக்கியவாதியாகவும், பெண்கள் தொடர்பான விழிப்புணர் நடவடிக்கைகளில் தன்னார்வத் தொண்டராகவும் விளங்கியிருக்கும் சித்திரலேகா, சில நூல்கள், மலர்களின் தொகுப்பாசிரியருமாவார்.

பல வருடங்களுக்கு முன்னர் இவர் தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள் கவிதை நூல் இன்றளவும் பேசப்படுகிறது.

இம்முறை இவரை நான் சந்தித்தபோது கூற்று என்ற ஆவணத்தொகுப்பு நூலை எனக்கு படிக்கத்தந்தார். 261 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இத்தொகுப்பினைப் பற்றிய அறிமுகத்தை எழுதுவதற்கு காலதாமதமாகிவிட்டது. நான் தொடர்ச்சியான பயணங்களில் இருந்தமையால், இந்தத் தாமதம் நிகழ்ந்தது.

மேலும் படிக்க ...

கனடாவில் 'மாவீரர் தினம்' - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
01 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விடுதலைப்புலிகளின் மாவீரருக்கான  அகவணக்க நிகழ்ச்சி கனடாவில் பல இடங்களிலும் சென்ற வாரம் இடம் பெற்றது. குறிப்பாக ‘மார்க்கம் பெயகிறவுண்ட்ஸ்’ திடலில் திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலைவரை ‘தமிழர் நினைவெவெழுச்சி நாள்’ . தமிழர்கள் பலர்  இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். குறிப்பாக இங்கு பிறந்து வளர்ந்த இளம் தலைமுறையினர் பலர் மிக ஆர்வத்தோடு இந்த நிகழ்வுகளில் இம்முறை கலந்து கொண்டது, எமது வரலாற்றை அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. முக்கிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து இளந்தலைமுறையினர் பலர் அகவணக்கப் பாடல்களுக்கு நடனமாடியதையும், அகவணக்கப் பாடல்களை உணர்வு பூர்வமாகப் பாடிச் சபையோரைக் கண்கலங்க வைத்ததையும் என்னால் அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் சுயநலம் கருதாத இந்தப் பிள்ளைகளின் பெற்றோருக்கும், நடன, சங்கீத ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.

ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரரில் சென்ற சனிக்கிழமை நடைபெற்ற மாவீரருக்கான அகவணக்க நிகழ்வு ஒன்றிக்கு என்னை உரையாற்ற அழைத்திருந்தனர். மாவீரருக்கான ஒரு பாடல் வெளியிடுவதாகவும், அந்தப்பாடலைக் கேட்டு அதைப் பற்றியும் எனது மதிப்புரையை வழங்கும்படியும் கேட்டிருந்தனர். எனவே அந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் அங்கு சென்றிருந்தேன்.

மேலும் படிக்க ...

மக்கள் எழுத்தாளன் இன்குலாப் நினைவாக... ( இது ஒரு மீள்பதிவு) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 டிசம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று டிசம்பர் 1 எழுத்தாளர் இன்குலாப் (எஸ். கே. எஸ். சாகுல் அமீது)  அவர்களின் நினைவு தினம். அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான  'ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்' என்னும் கவிதையையும், அவர் பற்றிய சிறு குறிப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

'சமயம் கடந்து மானுடம் கூடும்,
சுவரில்லாத சமவெளி தோறும்,
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்;
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்'

என்று பாடிய மக்கள் கவிஞன்.  அவன் தன் மானுட நேயம் மிக்க எழுத்துகளோடு என்றும் வாழ்வான்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழி வழங்கும் எழுத்தாளர் அரங்கம் 16

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
29 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 838 2346 8673 |Passcode: 2023

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சர்வதேச ஆண்கள் தினம் - 2023ம் ஆண்டின் கருப்பொருள்: ஆண் தற்கொலையை பூஜ்ஜியமாக்குதல்! - சிவம் வேலாயுதம் -

விவரங்கள்
- சிவம் வேலாயுதம் -
சமூகம்
28 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2023 ஆம் ஆண்டு, நவம்பர் 19 ஆம் தேதி, சர்வதேச ஆண்கள் தினமாகும் (International Men’s Day). இந்த அமைப்புடன் “ஆண்களின் குரல் 360 (Voice of Men 360)” அமைப்பும் இணைந்துள்ளது. இதன் செயற்பாடு, ஆண்களின் தற்கொலையினை பூஜ்ஜியமாக மாற்றமுறச் செய்தல் என்ற வகையில் நீள்கின்றது. இதன் நோக்கம், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு, குறிப்பாக பின்தங்கியவர்களுக்கு மிகவும் ஊட்டமளிக்கும் மற்றும் அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்க உதவுவதாகும்.

ஆண்களின் தற்கொலைக்கான காரணங்களை அடையாளம் காண்பதற்கு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் முதலியோர் உதவுகிறார்கள். இத்தகைய செயற்பாடுகள் வாயிலாக ஒரு விரைவான சிகிச்சையை அல்லது தீர்வை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் தேவை, தலையீடுகள், ஆலோசனை மற்றும் மத்தியஸ்தம் முதலியவை அடங்கும்.

மேலும் படிக்க ...

தற்கொலை வீதம் தமிழ் சமூகத்தில் அதிகரிப்பதற்கான காரணிகள் ! ? தீர்வுகள் எம்மிடமே இருக்கின்றன! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
சமூகம்
28 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில் “ என்ற பாடல் வரிகளை மறந்திருக்கமாட்டோம். வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்ற தொனிப்பொருளில்தான் இந்த வரிகள் அமைந்துள்ளன. ஏமாற்றம், துரோகம், வறுமை, அவமானம், தோல்வி, மன அழுத்தம், விரக்தி, இழப்பு, தனிமை , குடும்ப வன்முறை முதலான காரணங்களினால், எமது சமூகத்தில் தற்கொலைகள் நிகழுகின்றன. அடிப்படைக் காரணத்தை அறிந்து, அதற்கேற்ப உரிய தீர்வை கண்டுபிடிக்காமல், பலரும் விபரீதமான முடிவுகளையே கண்டடைகின்றனர். உலக அரங்கிலும் பல புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகளும் கூட தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள். அதற்கு நாம் அடல்ஃப் ஹிட்லர் முதல்கொண்டு பலரை உதாரணம் காண்பிக்க முடியும்.

மேலும் படிக்க ...

சிறுகதை: முப்பது ஆண்டுகள் பிந்தி பெய்த மழை! - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
சிறுகதை
27 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கூடத்துள் பாய் விரித்துப் படுத்திருந்த அல்லிராணியின் ஜன்னலூடு பாய்ந்த பார்வையில் வௌி கருமை திணிந்து கிடந்தது தெரிந்தது. ஒரு வெள்ளிகூட வானில் பூத்ததாய்க் காணக்கிடக்கவில்லை. முதல்நாள் தன் வீட்டு முற்றத்திலிருந்து அவள் பார்க்க நேர்ந்த இரவு, அதன் பாதியளவும் இருண்மை கொண்டிருக்கவில்லை என்பது ஞாபகமாக அவளுக்கு அதிசயம் பிறந்தது. மாலையில்கூட பார்த்தாளே, அம் மாதிரி இருண்ட பாதிக் கோளமாகும் முன் அறிகுறியேதும் அப்போதும் கண்டிருக்கவில்லைத்தான்.

பதினொரு மணிபோல் சாப்பிட்டுவிட்டு சிவம் தூங்கச் சென்ற அறையுள்ளிருந்து வெளிமூச்சில் எழுந்த மெல்லிய கீரொலி கேட்டது. தூங்கியிருப்பாரென எண்ணிக்கொண்டாள்.

மாலையில் விமானநிலையத்திலிருந்து வானில் வந்திறங்கியது கண்டபோதே கொஞ்சம் வயதாகிவிட்டார்போலவே சிவம் அவளுக்குத் தென்பட்டார். ஆயினும் தளர்ந்துபோனாரென்று சொல்லமுடியாதபடியே உடல்வாகு இருந்தது. கடைசியாக அவள் பார்த்திருந்தமாதிரி அல்லவென்றாலும், அதே சிரிப்பும் பேச்சும் கண்வெட்டுமாகத்தான் சிவம் இருந்தார். டென்மார்க்கிலிருந்து அவரின் மகள் கலாவதிதான், ‘வயது போயிட்டுதெல்லோ, ரண்டு மாசத்துக்கு முன்னால இஞ்ச பாத் றூமில சறுக்கி விழுந்தும்போனார், சொன்னாக் கேட்டாத்தான, ஊரைப் பாக்கத்தான் வேணுமிண்டு ஒரே அடம், நீங்கள் இருக்கிற துணிவிலதான் ரிக்கற்றைப் போட்டு அனுப்புறன், அசண்டையீனமாய் இருந்திடாதயுங்கோ, அக்கா, அய்யா கவனம்… கவனம்’ என பத்து தடவைக்கு மேலயாவது போனிலே சொல்லியிருந்ததில், அல்லிக்கே அவ்வாறாக அவரின் பலஹீனத் தோற்றம் மனதில் உருவாகிற்றோ தெரியவில்லை.

மேலும் படிக்க ...

நீர் நாடி வெடிக்கும் ஒரு புரட்சி! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
அரசியல்
26 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வேளாங்கண்ணி கடலுக்குத் தவழ்ந்து
மணலை அரித்துக் கொண்டு  ஓடும்
அரிச்சந்திரா நதி,

ஐப்பசி மாதத்தில் ஆற்றில் தண்ணீர்
காணாமல் வறண்டு கிடப்பது
ஆற்றின் விதியா?
ஆற்று நீரை நம்பி வாழும்
விவசாயி,
விளைச்சல் நிலம் வறண்டால்
விவசாயி வயிறும்
வறண்டு விடும் என்று தெரியாத
படுபாவி!

மேலும் படிக்க ...

கார்த்திகைக் குறிப்புகள் - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
26 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

01.

மழையோடு,
மாமழைக் கண்ணீரும் பொழிய...
ஓராயிரம் படையலிட்டோம்...!

தீவட்டியோடு..
மெழுகுவர்த்தியும்,
சிட்டியும்
மின்னியெழ...
ஓராயிரம் ஒளியேற்றினோம்..!

சிறுமாலைச் சரத்தோடு,
பெருமாலையும் சூட்டி...
ஓராயிரம் மலர் தூவினோம்...!

நீர் பேசவில்லை...!

எங்குள்ளீர்... எங்குள்ளீர்... என
எம் கண்ணீரைத் தூவினோம்..!

உம்மைப் புதைத்த கல்லறைகளை
உடைத்தெறிந்த பின்போ
தரிசு நிலமாயிற்றுத் தாய் மண்
என நினைந்தார் பாவியர்!

ஆயினும்...!
இனி யாரும் அழிக்கா,
மனக் கனவு நிலத்தில்
உமை விதைத்தேன்!
நீரோ...
முகங்காட்டி எழுகின்றீர்..!

அங்கே
புன்னகைக்கும் உங்கள் உதடுகளில்
வாசிக்கிறேன்...
நிஜமும் நிழலும் கலந்தொட்டிய
தீ உருவங்களாய் உங்களை என்றேன்...

ஒரு கார்த்திகைப் பூ மலர்ந்தது...!

மேலும் படிக்க ...

நாலடியார் கூறும் நிலையாமை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, (சுழற்சி 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, (சுழற்சி 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
25 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

உலக இலக்கியங்களின் தொன்மையும், சிறப்பும் வாய்ந்த நூல்கள் என போற்றப்படுபவை கடைச்சங்க நூல்களே ஆகும். அவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்பனவாகும். இப்பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று நாலடியார் எனும் நூலாகும்.

பதினெண்கீழ்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் நீதிநூல் நாலடியார். உலகப்பொதுமறையான திருக்குறளில் நிலையாமை பற்றி ஒரு அதிகாரம் மட்டும் காணப்பட, நாலடியாரில் மூன்று அதிகாரங்களில் நிலையாமை அமைந்துள்ளதால் நாலடியாரை நிலையாமையை வலியுறுத்தும் நூல் என்று அழைக்கலாம். நிலையாமையை முதலில் வைத்து வற்புறுத்தும் பாட்டுக்களும் சொல்லோவியங்களாய் இலக்கியச் சுவையோடு அமைந்துள்ளமை இந்நூலின் சிறப்பியல்பாகும். இந்த புவியில் கண்ணில் காணும் அனைத்தும் நிலையில்லாதவை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிலையற்ற தன்மையை நாலடியார் வழி எடுத்துகூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிலையாமை – விளக்கம்

நிலையாமை என்பதற்கு உறுதியற்றதன்மை என்று கோனார் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

வாழ்கின்ற காலத்தில் நாம் வாங்கிய மாடுகளும். கட்டிய வீடுகளும், மனைவி, மக்கள், உறவினர்களும், வாங்கிய தங்கம், வெள்ளி போன்ற அனைத்தும் அழிந்துவிடும் தன்மை கொண்டதால் அழியாத சிவகதி என்ற பரகதியைச் சேர வேண்டும்.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கிறோம்: திரௌபதையின் மரணவாக்குமூலம் கதையாகும் விந்தை ! ( அமரர் சை. பீர் முகம்மதுவின் பயஸ்கோப்காரனும் வான்கோழிகளும் !! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இளம்பராயத்தில் தாடிக்காரர்களைத்தேடிய ஒருவர், வாசிப்புப்பழக்கம் ஏற்பட்டதும் தாடிக்காரர்களின் நூல்களை நூலகத்தில் தேடித்தேடி படித்தவர், காலப்போக்கில் ஒரு எழுத்தாளனாகவே தன்னை நிலைப்படுத்திக்கொண்டவர்.

அவர் இலங்கையரோ தமிழகத்தவரோ அல்ல. அவர்தான் மலேசிய தமிழ் இலக்கியத்தை உலகப்பார்வைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்கோடு அயராமல் இயங்கிய சை.பீர்முகம்மது. கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்துவிட்டார்.

அவரை பல வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் சந்தித்தேன். அந்த பட்டிமன்றத்தில் ஒரு மலேசிய பேச்சாளர், அவரது பெயரில் பீரும் இருக்கிறது மதுவும் இருக்கிறது என்று வேடிக்கையாகச்சொல்லி சபையை கலகலப்பாக்கினார்.

எனது வீட்டுக்கு அழைத்து விருந்துகொடுத்தேன். அவர் இலக்கியவிருந்து படைத்து விடைபெற்றார். அன்று முதல் எனது இலக்கிய நண்பர்கள் பட்டியலில் இணைந்தார். மலேசியாவுக்கு நான் அவரது விருந்தினராகச்சென்றபோது நீண்டபொழுதுகள் அவருடன் இலக்கியம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், என விரிவான உரையாடலுக்கு உகந்த படைப்பாளி. வெறும் படைப்பாளியாக மாத்திரம் திகழாமல் இலக்கிய யாத்ரீகனாகவும் அலைந்தவர். 1942 இல் கோலாலம்பூரில் பிறந்த பீர்முகம்மது, 1959 முதல் எழுதினார்.

மேலும் படிக்க ...

முதலாவது சந்திப்பு 50: உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் ‘ பதிவுகள் ‘ கிரிதரன் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் முருகபூபதி , யாழ் மாவட்டத்திலிருந்து  வெளியாகும் 'தீம்புனல்' வாரப் பத்திரிகையின் நவம்பர் 20, 2023 பதிப்பில் 'முதலாவது சந்திப்பு' தொடரில் 'உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் பதிவுகள்  கிரிதரன்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை. பதிவுகள் இணைய இதழ் பற்றியும் என்னைப்பற்றியும் அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி. - வ.ந.கி -


எழுத்துலகம் விசித்திரமானது. ஒரு எழுத்தாளரை மற்றும் ஒரு எழுத்தாளர் எளிதில் அங்கீகரித்துவிடமாட்டார். புராணத்தில் வரும் சிவனுக்கும் அரசவைப் புலவர் நக்கீரனுக்குமிடையே நிகழ்ந்த வாதம் பற்றி அறிவீர்கள்.

“ ஒரு பெண்ணின் கூந்தலின் மணம் எவ்வாறிருந்தால்தான் என்ன..? அதற்காக வாதப்பிரதிவாதமா..? அதற்காக நெற்றிக்கண்ணால் சுட்டு பொசுக்க வேண்டுமா..? இதுவும் வன்முறைதானே ! “ என்று இன்றைய எமது குழந்தைகள் வினா தொடுக்கிறார்கள். அடுத்துவந்த, கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் மத்தியில் நிகழ்ந்த வாதங்களும் பேசப்பட்டுள்ளன. மொத்தத்தில் எழுத்துலகம் விமர்சனம், அவதூறு, மோதல், எதிர்வினை, தாக்குதல் எனத்தொடருகின்றது. முகநூல் அறிமுகமானதன் பின்னர், நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. இந்தப்பின்னணிகளுடன்தான், கனடாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் இணைய இதழை தங்கு தடையின்றி நடத்திவரும் வ. ந. கிரிதரன் அவர்களை அவதானிக்கின்றேன்.

மேலும் படிக்க ...

உலகறிந்த கலைஞராக, எழுத்தாளராகக் கோவிலூர் செல்வராஜன் திகழ்கிறார்..! - அசலகேசரி -

விவரங்கள்
- அசலகேசரி -
நிகழ்வுகள்
23 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'ஈழத்துக் கலை இலக்கியத்துறையில் நன்கறியப்பட்டவரான 'பல்துறைக் கலைஞர்" கோவிலூர் செல்வராஜன் இன்று உலகறிந்த தமிழ்க் கலைஞராக விளங்குகிறார். அவரது பொன்விழா சிறப்பு மலரில் உலகெங்குமுள்ள எம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்களின் கட்டுரைகள்,  வாழ்த்துகள் நிரம்பியுள்ளன. எல்லோருக்கும் அறிமுகமான,  பிடித்தமான படைப்பாளியாக அவர் விளங்குகிறார். வானொலிக் கலைஞராகஇ எழுத்தாளராக,  பாடலாசிரியராகப்,  பாடகராக,  நடிகராக அவர் பணி தொடர்கிறது. இன்று அவரது பொன்விழா பாரிஸ் மாநகரில் நடைபெறுவதும்,  அவரது நூல்கள் இங்கு வெளியிடுப்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. நூல்களை அச்சிட்டு வெளியிடுவதும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இன்று மிகவும் செலவுகரமான விடயமாகவுள்ளது."

மேலும் படிக்க ...

கனடா எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
23 நவம்பர் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவம்பர் மாதம் 19 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடா எழுத்தாளர் வ. ந. கிரிதரன் அவர்களின் மூன்று நூல்கள் கனடா, ரெறன்ரோவில் மிகவும் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றன. ரொறன்ரோ கிங்ஸ்டன் வீதியில் உள்ள ஸ்காபரோ விலேஜ் கொம்யூனிட்டி மண்டபத்தில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி, அகவணக்ம், முதற்குடிமக்களுக்கு நன்றி சொல்லல் போன்ற நிகழ்வுகள் முதலில் இடம் பெற்றன. கனடா தேடகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு திரு. பா.அ. ஜயகரன் அவர்கள் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார்.

தலைவர் உரையில் எழுத்தாளர் வ. ந. கிரிதரன் அவர்கள் தமிழ் இலக்கியத் துறையில் படைத்த சாதனைகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், நண்பர் வ.ந. கிரிதரன் அவர்கள் எழுத்தாளர் மட்டுமல்ல பழகுவதற்குச் சிறந்த நண்பர் என்பதையும் மேலும் குறிப்பிட்டார். தலைவர் உரையைத் தொடர்ந்து நிகழ்வில் ‘வ.ந.கிரிதரன் கட்டுரைகள்’ பற்றி எழுத்தாளர் திரு. அருண்மொழிவர்மன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 166 பக்கங்களைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுப்பு ஜீவநதி வெளியீடாக வந்திருக்கின்றது.

தொடர்ந்து 23 அத்தியாயங்களைக் கொண்ட  ‘நவீன விக்கிரமாதித்தன்’ என்ற நாவல் பற்றி  சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான திரு. சிவா முருகுப்பிள்ளை அவர்கள் உரையாற்றினார்கள். வதிலைபிரபாவால் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டு, ஓவியா பதிப்பக வெளியீடாக வந்த இந்தப்புதினம் 152 பக்கங்களைக் கொண்டது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. டொமினிக் ஜீவாவின் கதைக்களம்! - முனைவர் கி. ராம்கணேஷ், உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி - 642 107 -
  2. 'சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?' - முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் (பாரதிசந்திரன்) , திருநின்றவூர் -
  3. வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை முன் வைத்து.... - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
  4. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - என்.கே.மகாலிங்கம் -
  5. எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்களின் வெளியீடும், உரையாற்றியவர்களும் & சிறப்புப் பிரதிகள் பெற்றவர்களும்!
  6. அஞ்சலி: Elham Farah
  7. சீர்மியத்தொண்டராகவும் இயங்கும் இலக்கியவாதி கோகிலா மகேந்திரன்! நவம்பர் 17 அவரது பிறந்ததினம்! - முருகபூபதி -
  8. அன்பான நினைவூட்டல்: கனடாவில் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீடு (நவம்பர் 19, 2023)
  9. அஞ்சலிக்குறிப்பு : ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்க உதவிய தியாகராஜா ஶ்ரீஸ்கந்தராஜா - முருகபூபதி -
  10. தாயகத்தில் ஆங்கிலக் கல்வியின் அவசியமும் ஸ்டெம் கல்வியின் பங்கும் - கலா ஸ்ரீரஞ்சன் -UK -
  11. படித்தோம் சொல்கின்றோம்: அருந்ததியின் ஆண்பால் உலகு நாவல்! ஆணாதிக்கத்தினால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் உண்மைக் கதை ! - முருகபூபதி -
  12. இசைக்குயில் பி.சுசீலா! - ஊர்க்குருவி -
  13. இலக்கியவெளி நடத்தும் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு
  14. கனடா ‘கிராமத்து வதனம்’ முன்னெடுத்த நவராத்திரி விழா - குரு அரவிந்தன் -
பக்கம் 56 / 126
  • முதல்
  • முந்தைய
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • அடுத்த
  • கடைசி