நூல் அறிமுகம்: வடகோவை வரதராஜனின் 'ஆளப்போகும் வேர்கள்' - வ.ந.கிரிதரன் -

நேற்று நண்பரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்களின் சகோதரருமான யோகராஜா தியாகராஜாவிடமிருந்து (முகநூலில் யோக வளவன் தியா) வடகோவையாரின் அண்மையில் வெளிவந்த நூலான 'ஆளப்போகும் வேர்கள்' நூலின் பிரதியொன்றினைப் பெற்றுக்கொண்டேன். கிழக்கு மாகாணத்திலுள்ள ஏறாவூரிலிருந்து செயற்படும் கஸல் பதிப்பகம் அண்மைக்காலமாக மிகவும் சிறப்பான வடிவமைப்பில், தரமான நூல்களை வெளியிட்டு வருவதை அவதானித்திருக்கின்றேன். வடகோவையாரின் இந்நூலையும் மிகவும் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டிருக்கின்றார்கள். மேலும் இத்துறையில் அவர்கள் பல நூல்களை வெளியிட்டு இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்க வாழ்த்துகள்.
வடகோவையாரை முகநூலில் அறிவதற்கு முன்னரே என் பதின்ம வயதுகளிலேயே அறிந்திருக்கின்றேன். அவரது சிறுகதைகள் ஈழநாடு வாரமலர், சிரித்திரன் என்று அக்காலகட்டத்தில் நான் விரும்பி வாசித்த ஊடகங்களில் வெளிவந்திருந்தன. சிறுகதைப்போட்டிகளில் இவரது சிறுகதைகள் முதற் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. அப்போதே இவரது கதைகளில் அவ்வப்போது தென்படும் இயற்கையுடனான நேசிப்பை அவதானித்திருக்கின்றேன். ஆனால் அப்போது இவர் ஒரு விவசாயப் பட்டதாரி என்பதை அறிந்திருக்கவில்லை. முகநூலில்தான் இவரது பதிவுகளின் மூலம் இவரது கல்விப் பின்புலத்தை அறிந்துகொண்டேன்.





தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre மண்டபத்தில் ( 1, Karobran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.
தீவிர இலக்கியவாதியும் மின்னிதழாளரும் இருபத்தைந்து நூல்களைத் (மின்னூல்களையும் உள்ளடக்கி) தந்தவருமான வ.ந.கிரிதரனின் அண்மைக்கால நூலான ' வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ' , அழகிய அச்சமைப்போடு 'ஜீவநதி' பிரசுரமாக வெளிவந்துள்ளது.இத்தொகுப்பில் பதிநான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.கவனிப்புக்குரிய படைப்பாளிகள் பற்றியதாகவும் சர்ச்சைக்குரிய தலைப்புக்களைக் கொண்டதாகவும் இருப்பதனால் நிச்சயமாக இலக்கிய வாசகர்களை ஈர்க்கும்.







சிறுகதையொன்றின் கருவும் களமும் காலமும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளரின் மனம் செல்லும் வழியும் மொழியும் , அவரது எழுத்தின் ஊடாக வெளிப்படுகின்ற விதமே அப்படைப்பின் மேலான வாசகரது ஈடுபாட்டை உறுதி செய்கிறது. இலக்கியத்தின் எந்த ரூபத்திலும் எழுத்தாளரின் வெளிப்பாட்டு மொழிதான் வெற்றியைப் பெருமளவில் தீர்மானிக்கிறது. 








குழந்தைகளை அடிப்பது கொடூர வன்முறைச் செயல். காலத்திற்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சக குழந்தை அடிவாங்குவதைக் கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தை யும் மனரீதியாக பாதிப்படையும் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.
புதிதாய் பிறந்த வருடத்தின் ஆரம்பநாளில் பூமராங் எனும் காலாண்டு மின்னிதழ் வெளிவந்திருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இவ்விதழ், முதற்பார்வையிலேயே எமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. அட்டை வடிவமைப்பு இதழை ஆவலோடு புரட்ட வைக்கிறது.